<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>jeyamogan &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/jeyamogan/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "jeyamogan"</description>
	<pubDate>Fri, 29 Aug 2008 19:17:12 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[சுட்ட மொழி - சன்னாசி on ஜெயமோகன் vs விகடன்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4039</link>
<pubDate>Fri, 14 Mar 2008 21:25:24 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4039</guid>
<description><![CDATA[தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்த]]></description>
<content:encoded><![CDATA[<p>தான் புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்தவொரு விஷயத்தையும், சமகாலத்தின் மிக முக்கியமான, <font color="#ff0000">நிராகரிக்க இயலாத ஒரு போக்காக பில்டப் </font>கொடுத்து நிறுவ முயல்வதைப் படிக்கநேர்வது கடுப்பேற்றும் விஷயம்.</p>
<p>பெரியார் குறித்து எழுதியிருந்த வாசகருக்கு எழுதியிருந்த பதிலிலும், பல காலம் முன்பு தங்கமணிக்கு கீதை குறித்து எழுதியிருந்த பதிலிலும், பதிலைத் தொடங்குமுன்பே, 'இதுகுறித்து நாகரிகமாகக் கேள்வி எழுப்பியதற்கு நன்றி' என்ற ஆழ்நீரோட்டத்துடன் தான் பதில் தொடங்கியிருக்கும். இதுதான் இந்த <font color="#ff0000">சுயபிரஸ்தாப </font>இலக்கிய ஜல்லி லாரி, தனது பிரசங்கத்தைத் தொடங்குமுன்பே தன்னுடன் உரையாடுபவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்ராயம்.</p>
<p>எவ்வளவு நாசூக்கான உத்தி - சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவது அல்ல; விஷ்ணுபுரம் சுஜாதாவைத் தாண்டியது என்ற வெகு தெளிவான பிரக்ஞையோடு, சுஜாதாவின் முன் அதை வைத்து 'உன்னால் இதற்கு முன்னுரையாவது எழுதமுடியுமா' என்று தான் அவரைத் <font color="#ff0000">'தாண்டிவிட்டதை' பஸ்மாசுரன் போல </font>உணர்த்துவது!! பள்ளியில், நான் சென்ட்டம் நான் சென்ட்டம் என்று பரீட்சைக்குப் பரீட்சை பேப்பரை ஆட்டிக்கொண்டு திரிந்து, நீ எவ்வளவு நீ எவ்வளவு என்று கேட்டுக்கொண்டு திரியும் <font color="#ff0000">முதல்பெஞ்சுப் பயல்களின் </font>சல்லித்தனம் போன்றதைத் தாண்டி இதில் வேறேதும் இல்லை.</p>
<p>அங்கதம் என்ற போர்வை போர்த்தினாலும், தன்னை மீறியவர்களுக்கு செக் வைக்க பொதுவாக உபயோகிக்கப்படும் உத்தி இது என்பதும், அங்கதத்தை விமர்சனத்துக்காக உபயோகிக்காமல் ஒரு <font color="#ff0000">escape/defense mechanism</font>ஆக உபயோகிக்கிறவர்கள் கையில் இது கிடைக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பதையும் இதுமாதிரிப் பத்திகளைப் படிக்கும்போது உணரமுடிவது பிறருக்கும் சாத்தியமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.</p>
<p>அவரது பத்திகளின் he said she said anecdotes பெரும்பாலானவை தினமலர் பாணியிலான '<font color="#ff0000">என்று மக்கள் நினைக்கிறார்கள்</font>' பாணியிலானவை என்பதுதான் என்பது என் ஊகம்.</p>
<p>மெக்கென்னாஸ் கோல்டு காலத்து கிழடுகள் (மரியாதைக்குறைவாக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்) எவற்றிடம் அந்தப் படம் பற்றிக் கேட்டாலும் மெக்கென்னாஸ் கோல்டா, அந்த பருந்து(கழுகு) வர்ற சீன் தானே? என்பார்கள் - ரஜினின்னா யாரு, இந்த சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில பிடிப்பானே, அவந்தானே என்று இங்கே சந்தித்த ஒரு போன தலைமுறை மலையாளி என்னிடம் கேட்டது போல.</p>
<p>இன்றைக்கு சுஜாதாவைத் தனது முன்னோடியாகக் கொண்டிருப்பதை தமிழ் இலக்கிய உலகில் ஒரு பெரிய புரட்சியாகச் சித்தரிப்பது போல, ஜி.கே.செஸ்டர்டனையும் அவரது 'Father Brown' கதைகளையும் போர்ஹேஸ் முன்னோடியாகக் கொண்டிருப்பதையும், புனைபெயரில் ராஜேஷ்குமார் ஸ்டைலில் துப்பறியும் கதைகளை எழுதியதையும் ஒரு 'புரட்சி' யாக போர்ஹேஸ் சுயதம்பட்டமடித்து எழுதி நான் படித்ததில்லை!!</p>
<ul>
<li>மண், வேர், வெங்காயம் என்று பேசுபவனை தல்ஸ்தோயும் தாஸ்தாயெவ்ஸ்கியும் படித்திருக்கவேண்டும் என்று மடக்கலாம்.</li>
<li>குமுதம் விகடன் படித்து வருபவனை, சிறுபத்திரிகைகளில் நடப்பது குறித்த எந்த அறிவுமற்றவர்கள் என்று மடக்கலாம்,</li>
<li>கொஸாக்குகளையும் பனியையும் கற்பனை செய்துகொண்டு, ராதுகா பப்ளிஷர்ஸ் புத்தகங்களில் மட்டுமே அபாக்கியமாகத் தனது தொடக்கத்தைக் கொண்டுவிட்டவர்களிடம், அவர்களுக்கு வெகுஜன இலக்கியம், pulp குறித்த புரிதல் எப்படி இல்லை என்று அவனையும் மடக்கி அடிக்கலாம்.</li>
<li>பல்ப்பையும் படித்து சிறுபத்திரிகையையும் படித்தவனாக இருந்தால் ஆன்மீக, தத்துவ விசாரமும் விளக்கெண்ணெயும் இருக்க வேண்டும் என்று டபுள் இம்பாக்ட் கொடுக்கலாம்.</li>
</ul>
<p>வெளிப்படையாகப் பேசாத பாண்டிகளால் 'காலை'க் கழுவுது என்றுதான் சொல்ல முடியும்; குண்டியைக் கழுவுது என்று வெளிப்படையாகச் சொல்ல <font color="#ff0000">வெக்கப்படமாட்டானா பாண்டி</font>?</p>
<p>தனது Order of thingsன் முன்னுரையில், இந்தப் புத்தகத்தைப் படிக்குமளவு முயற்சியெடுக்கும் வாசகன் இதை எப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம் என்று நன்றியுடன் கூறுகிறேன் என்னும் எழுத்தாளர்கள் எங்கே, என் உலகம் வெளியே உள்ளதைவிட பெரியது,ஆழமானது. இந்த விவாதங்களை எழுதுபவர்கள் யார்? அவர்களுக்கு என்ன முகம் உள்ளது? என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன படித்திருக்கிறார்கள்?தங்க¨ளையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர்கள். யார் ஏற்றாலும் இல்லையாயினும் நான் தமிழ் வரலாற்றில் என்றும் இடம்பெறும் ஆளுமை. என்னுடன் உரையாடவும் என்னைப்பற்றி பொருட்படுத்தும்படி எதையாவது எழுதவும்கூட ஒருவருக்கு அதற்கான தகுதி வேண்டும்  என்று எழுதும் இந்த சல்லிப்பயல்கள் எங்கே.</p>
<p>தமிழ் எழுத்தாளர்களின் முதன்முதலில் பாத்டப்பைப் பார்த்தது சுந்தர ராமசாமி வீட்டில்தான் என்றும் 'பதிந்து' வைத்துவிட்டால், பொருந்தவேண்டிய இடத்தில் தானாக அது பொருந்திக்கொள்ளும்.</p>
<p>பாண்டிப்பயல்களின் மொழியில் pubic hairக்கு வார்த்தை இல்லை என்று அங்கதப் பத்தி எழுதும் இவரின் 'மலம்' கதையில், கதை முழுக்க மலம் மலம் மலம் மலமோ மலம்தான். மருந்துக்குக்கூட 'பீ' கிடையாது, பொறவு என்ன? அவ்வளவு அக்கறை இருந்தால் pubic hairக்கு வார்த்தை கேட்ட மூத்த எழுத்தாளருக்கு நாஞ்சில் பாசையில் சிதிமயிர் என்று எடுத்துக் கொடுத்திருப்பதுதானே. ஓ, அதை நாங்களெல்லாம் செய்யமாட்டோம் திராவிட இயக்கத்தில் ஊறி வந்த பாண்டிக்குஞ்சுகள்தான் செய்யும், இல்லையா.</p>
<p>பாண்டிகள்தான் கேவலம். பாண்டிப் படங்களில் நடிக்கும் ஆர்யா என்ற பையனும் கூட 'பாய்' பையந்தான் (இன்சைடர் இன்பர்மேசன்). பாண்டிகள் பேரிலிருந்து ஜாதியைக் கழற்றி வைத்துவிட்டார்கள். புதிய தலைமுறை ஜாதியை முற்றிலும் கழற்றப் பார்க்கிறது, அடுத்த தலைமுறையில் மீதி இருப்பதும் காணாமல் போகவேண்டுமென்றுதான் நம்பிக்கை வைக்கவேண்டும்.</p>
<p>கேரளத்தை விட ஜனத்தொகை அதிகமுள்ள தமிழ்நாட்டில் பிரச்னைகளும் அதிகமாகத்தான் இருக்கும். கர்நாடகா ஆந்திராவில், ஏன் கேரளத்திலும் இருப்பது போல ஒன்றிரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்திலா மொத்த மாநிலத்தின் அரசியலும் இருக்கிறது? லிங்காயத்துகள், கம்மாக்கள் ரெட்டிகளைத் தாண்டி ஆந்திரா கர்நாடகாவில் யாருடைய ஆதிக்கமாவது (பிரதிநிதித்துவமாவது) இருக்கிறதா?</p>
<p>கல்லூரியில் படிக்கும்போது தெற்கிலிருந்து வரும் நாடார் பையன்களை பொதுவாக 'பனையேறி கொட்டை தேஞ்சு போன' கோஷ்டிகள் என்று இன்னொரு கும்பல் (குறிப்பாக, இதுவுமே ஒரு தென்தமிழகக் கும்பல்) கிண்டலடிக்கும் - ஆக, இதிலுள்ள 'அங்கத' உணர்வை ரசிப்போமா நாம்? தோழர்களுக்கு நடுவில் என்றால் சரி, அது தான் கிண்டலடிக்கும் மற்றவனுடனான சௌஜன்யத்தைப் பொறுத்தது. அதைத் தாண்டி, பொதுவில் எழுதும்போது 'நாடார்கள் பனையேறிப் பனையேறி கொட்டை தேஞ்சுபோன கோஷ்டிகள்' என்று மற்றொரு தமிழன் எழுதுவதற்கும் 'கறுப்பர்களுக்கு சாமான் வளர்ந்துள்ள அளவு மூளை வளர்ந்திருக்கலாம்' என்று ஒரு வெள்ளைக்காரன் எழுதுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை - இரண்டும் அங்கதம் அல்ல - <font color="#ff0000">கேவலமான ரசனை</font>.</p>
<p>- <a href="http://andaiayal.blogspot.com/2008/02/flush-lit.html#comment-2675620972291816483">சன்னாசி</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Jeyamohan vs Anandha Vikadan - Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=3959</link>
<pubDate>Sat, 16 Feb 2008 19:47:09 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=3959</guid>
<description><![CDATA[எல்லாப் புகழும் ஜெயமோகனுக்கே - புள்ள]]></description>
<content:encoded><![CDATA[<h3>எல்லாப் புகழும் ஜெயமோகனுக்கே - புள்ளிவிவரப் புலிக்கணக்கு</h3>
<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/02/snap_judge_stats_jeyamohan.jpg" title="Thoppi MGR &#38; Thilagam Sivaji - Posts in Gilli on Nadigar Thilakam Shivaji Ganesan &#38; Makkal Thilakam MG Ramachandran"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/02/snap_judge_stats_jeyamohan.thumbnail.jpg" alt="Thoppi MGR &#38; Thilagam Sivaji - Posts in Gilli on Nadigar Thilakam Shivaji Ganesan &#38; Makkal Thilakam MG Ramachandran" align="right" /></a>வலைஞர்கள் ஜெயமோகனை ஆர்வமாகத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களின் வலையில் <a href="http://snapjudge.wordpress.com/">ஸ்னாப்ஜட்ஜ் </a>விழ, வருகையாளர் கணக்கு எகிற ஆரம்பித்திருக்கிறது. அப்படி வந்து விழுபவர்களுக்காக சில பின்னணிப் பதிவுகள்:</p>
<p>1.<font color="#ff0000"> எம்.ஜி.ஆரைக் </font>குறித்தும், <font color="#0000ff">சிவாஜியை </font>குறித்தும் ஜெமோ என்ன எழுதினார்? இங்கே கிடைக்கிறது: <a href="http://gilli.in/jeyamohan-nadigar-thilagam-sivaji-ganesan-makkal-thilagam-mgr/">கில்லி - Gilli » Blog Archive » Jeyamohan - Nadigar Thilagam Sivaji Ganesan &#38; Makkal Thilagam MGR</a></p>
<p>2. <b>இப்போது ஏன் இது புகழ் பெற்றது</b>: <a href="http://gilli.in/">கில்லியில்</a> பாலாஜியின் குசும்பை விட, விகடனின் வியாபாரம் பெரிதினும் பெரிது - <a href="http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_16.html">IdlyVadai - இட்லிவடை</a>: "விகடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா"</p>
<p>3. <b>அதற்கப்புறம் என்ன ஆச்சு</b>: மேலும் மேலும் விற்பனை - <a href="http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_9001.html">IdlyVadai - இட்லிவடை</a>: "விகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கனும்."</p>
<p>4. சரி... ஜெயமொகனார் <b>இதற்கெல்லாம் என்ன சொல்கிறார்</b>? - <a href="http://jeyamohan.in/?p=256">jeyamohan.in » Blog Archive » ஆனந்தவிகடனின் அவதூறு</a></p>
<p>5. அந்த <b>ஆனந்த விகடன் கட்டுரை </b>எங்கே கிடைக்கிறது? - <a href="http://kundavai.wordpress.com/2008/02/15/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%87%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/">காப்பி பேஸ்ட் செய்து கொடுக்கிறார் மோகந்தாஸ்</a></p>
<p>6. இதைப் பற்றியெல்லாம் பிறர் என்ன எழுதி இருக்கிறார்கள்:</p>
<ol></ol>
<ul>
<li><a href="http://urakkacholven.wordpress.com/2008/02/15/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%86%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%95%e0%af%8a/">ஆனந்த விகடனா ஆயத்துலா கொமேனியா? - <b>கண்ணன் </b>(உரக்கச் சொல்வேன்)</a></li>
<li><a href="http://jeyamohan.in/?p=257">jeyamohan.in » Blog Archive » ஆனந்த விகடன் கண்டனம்</a>: "் இரு கடிதங்கள்"</li>
<li><a href="http://jataayu.blogspot.com/2008/02/blog-post_15.html"><b>ஜடாயு </b>எண்ணங்கள்: ஜெயமோகன் பதிவும், ஆனந்த விகடனும்</a></li>
<li><a href="http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html">கடலையூர்: நானும் ஜெயமோஹனும் ஒன்றுதான்!!!</a> - <b>செல்வம்</b></li>
<li><a href="http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_17.html">கடலையூர்: ஜெயமோஹனும், சாதியும்!!! என்ன கொடுமை சார் இது?</a> - <b>செல்வம்</b></li>
<li><a href="http://mathy.kandasamy.net/musings/archives/2008/02/18/842">என்னையே வெட்கி கூசிச்சுருங்கும் சிற்றுயிர் நான்!!</a> - <b>மதி கந்தசாமி</b></li>
<li><a href="http://nayanam.blogspot.com/2008/02/blog-post_5409.html">நயனம் - nayanam</a>: "சரோசாதேவியின் நடிப்பை........."</li>
<li><a href="http://nayanam.blogspot.com/2008/02/blog-post_20.html">நயனம் - nayanam</a>: "சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?" - <b>நாக.இளங்கோவன்</b></li>
<li><a href="http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_9085.html">"சாத்தான்"குளத்து வேதம்</a>: "போலி டோண்டு = ஜெயமோகன்????! !!!!!" - <b>ஆசிப் மீரான்</b></li>
<li><a href="http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_18.html">"சாத்தான்"குளத்து வேதம்</a>: "வெற்றி மோகனும் தனி மொழியும்" - <b>ஆசிப் மீரான்</b></li>
<li><a href="http://pethusamy.blogspot.com/2008_02_17_archive.html#5748301894038677494">பெத்துசாமியின் உலகம்: 2/17/08 - 2/24/08</a>: "ஜெயமோகனும் - தமிழர்களும் - பாகம் II" - <b>செந்தாரப்பட்டி பெத்துசாமி</b></li>
<li><a href="http://madippakkam.blogspot.com/2008/02/20-02-08.html">:-): கூட்டாஞ்சோறு (20-02-08)</a> - <b>லக்கிலுக்</b></li>
<li><a href="http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_19.html">என் பயணத்தின் பிம்பங்கள்...!: ஒதுங்கிக் கொள்வது நன்று!</a> - <b>இரா. வசந்த குமார்</b></li>
<li><a href="http://valpaiyan.blogspot.com/2008/02/blog-post_14.html">வால் பையன்: தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் ஓட்டை விழுந்து விட்டதா?</a></li>
<li><a href="http://kaiman-alavu.blogspot.com/2008/02/blog-post.html">கைமண் அளவு: நகைச்சுவைக்குள்  பதுங்கும் மேட்டிமைத்தனம்</a> - <b>ஜெகத்</b></li>
<li><a href="http://www.kuralvalai.com/2008/02/blog-post_21.html">குரல்வலை: சிரிப்பு போலீஸ்!</a> - <b>எம்.எஸ்.வி. முத்து</b></li>
<li><a href="http://raasaa.blogspot.com/2008/02/blog-post.html">ராசபார்வை...: கேப்பில் ஏரோப்பிளேன் ஓட்டுதல்</a> - <b>கொங்கு ராசா</b></li>
<li><a href="http://penathal.blogspot.com/2008/02/18-feb-08.html">பினாத்தல்கள்: அவியல் - 18 Feb 08</a> - <b>சுரேஷ்</b></li>
<li><a href="http://kichu.cyberbrahma.com/archives/221">உள்ளங்கை » Blog Archive » அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்!</a> - <b>எஸ்.கே</b></li>
<li><a href="http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_14.html">திணை... இசை.... சமிக்ஞை..... நாகார்ஜுனன்......:</a> - ஆனந்த விகடன் செயலுக்குக் கண்டனம்</li>
<li><a href="http://dharumi.blogspot.com/2008/02/250.html">தருமி: 250. சுடச் சுட ஆ.வி.</a></li>
<li><a href="http://selections.wordpress.com/2008/02/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-moral-policing/">விகடனின் Moral Policing! « selections</a></li>
</ul>
<ol></ol>
<p>6. (அ) இதற்கெல்லாம் முன்பே, ஜெயமொகனின் பதிவில் உள்ள பிழைகளை <b>ஆசாத் </b>சுட்டியுள்ளார்: <a href="http://ennam.blogspot.com/2008/01/blog-post_2912.html">எண்ணம்: ஜெயமோகன் அய்யா சொல்லிய தவறான தகவல்</a> - எம்.ஜி.ஆர். பாடலில்" (இங்கு இருக்கும் <b><a href="http://www.blogger.com/comment.g?blogID=7426875&#38;postID=2445028870724064677">மறுமொழி விவாதமும்</a></b> குறிப்பிடத்தக்கது)</p>
<p>7. கேள்வி - பதில்: <a href="http://jeyamohan.in/?p=233">jeyamohan.in » Blog Archive » இதழ்களும் மதிப்பீடுகளும்</a>: "நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?"</p>
<p>8. இந்த மாதிரி 'போட்டுத்தாக்கு'விற்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகள் கூட காரணமாக இருக்கலாம்: <a href="http://jeyamohan.in/?p=231">jeyamohan.in » Blog Archive » கனிமொழி வணக்கம்</a> (<i>இதற்கான பதில்</i>: <a href="http://pksivakumar.blogspot.com/2008/02/blog-post.html">பி.கே. சிவகுமார்</a>: "அன்புள்ள ஜெயமோகன்")</p>
<p>9. அல்லது எப்போதுமே எதிர்வினைகளை இயல்பாக உருவாக்குபவர் என்பதாகக் கூட இருக்கலாம்: <a href="http://padamkadal.blogspot.com/2008/01/blog-post_11.html">டிசே தமிழன்</a>: "இயல் விருதின் நவீன தேவதூதுவர் ஜெயமோகனிற்கு..."</p>
<p>10. எது எப்படி போனாலும், ஜெய மோகனின் வாசகர்கள் அவரைத் தொடரும் குரல்கள்: <a href="http://pesalaam.blogspot.com/2008/01/blog-post_24.html">பேசலாம்: ஜெயமோகனோடு ஐந்து நிமிடங்கள்</a> (<i>இதற்கான பதில்</i>: <a href="http://ayyanaarv.blogspot.com/2008/01/blog-post_25.html">தனிமையின் இசை: தமிழச்சி,ஜெயமோகன் இன்ன பிற கடுப்புகள்</a> - அய்யனார் )</p>
<p>11. எல்லாவற்றுக்கும் <b>செயமோகனின் </b>பதில்: <a href="http://jeyamohan.in/?p=160">jeyamohan.in » Blog Archive » விகடனை எண்ணும்போது…</a></p>
<p>12. <b>சாரு நிவேதிதாவின் பதில் தாக்குதல்</b>: ஜெயமோகனின் சுயமோகம்: கொலைவெறி - <a href="http://www.charuonline.com/kp247.html">Thappu Thalangal 246</a>: மம்மி ரிடர்ன்ஸ் (பகுதி ஒன்று)</p>
<p><b>பார்ட் டூ </b>- <a href="http://www.charuonline.com/kp248.html">Thappu Thalangal 246</a></p>
<p>13. <a href="http://vinaiaanathogai.blogspot.com/2008/02/blog-post_21.html">வினையான தொகை</a>: "ஜெயமோகனின் திருட்டு - ஒரு சான்றாதாரம்" - சொல் புதிதுவில் வெளிவந்த வடிவம் <b>எஸ். அருண்மொழி நங்கையின் </b>'தமிழிசை - ஒரு பின்னோக்கிய பார்வை' &#38; 'மனோரமா இயர் புக்' இல் வெளிவந்த மூலக் கட்டுரை - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இசைத்துறையின் முனைவர் இ. அங்கயற்கண்ணி எழுதிய 'காலந்தோறும் தமிழிசை' (கவிதாசரண் சனவரி - பிப்ரவரி 2004.)</p>
<p>14. <b>லக்கிலுக் </b>- <a href="http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_05.html">:-): ஜெயமோகன் வணக்கம்!</a> &#38; சுருக்கமாக அறிய, நச்சோ நச் பதிவு: <a href="http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_6009.html">:-): ஆவி - ஜெமோ  விவகாரம்! என்னதான் நடக்கும்?</a></p>
<p>15. <b>பைத்தியக்காரன் </b>- <a href="http://naayakan.blogspot.com/2008/02/blog-post_15.html">சிதைவுகள்...</a>: "ஜெயமோகன், ஆனந்தவிகடன், நாகார்ஜுனன் மற்றும் கருத்து கந்தசாமி"</p>
<p>16. <a href="http://suguna2896.blogspot.com/2008/02/blog-post_20.html">சின்னஞ்சிறுகதைகள் பேசி....: அந்நியன், ஜெமோ, அம்பி</a> - <b>சுகுணா திவாகர்</b></p>
<p>17. <a href="http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/20779688df9c0179?hl=ta">செயமோகனின் டவுசர கிழிக்கும் சாருநிவேதிதா</a> - <b>பண்புடன் </b>&#124; Google Groups</p>
<hr /> <b>இதெல்லாம் ஏற்கனவே படித்தறிந்தவர்களுக்கான வலைப்பதிவு டிப்ஸ்:</b></p>
<ul>
<li>எக்காரணம் கொன்டும் Category &#38; Tags- ஐ மறக்க வேண்டாம். குறிச்சொல்லிடவும்.</li>
<li>தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றும்போது பெயர் குழப்பம சகஜம். எனவே Jeyamohan &#38; Jayamogan போன்ற அனைத்தையும் பயன்படுத்தவும்.</li>
<li>இடுகை நடுவிலும் தேடலில் பயன்படுத்தும் சொற்களை நுழைக்கவும். அதாவது திடீரென்று Jayamohan ஆங்காங்கே வந்திருக்க வேண்டும்.</li>
<li>இம்புட்டும் இருந்து மேட்டர் எனப்படும் content இல்லாவிட்டால், Splog ஆகும் அபாயம் இருப்பதால், ஒழுங்காக உள்ளடக்கத்தை நிறைவாக வைத்திருக்கவும்.</li>
<li>எப்பொழுது எந்த வார்த்தை சூடாகும் என்று வருங்காலம் தெரியாததால், நமீத, த்ரிஷா குறித்த பதிவுகள் நடுவே, இலக்கியத்தையும் எழுதி தமிழ்த்தொண்டாற்ற அழைக்கிறேன்.</li>
</ul>
<hr>
<strong>தொப்பி</strong></p>
<blockquote><p>January 11, 2008 – 7:19 pm</p></blockquote>
<p>எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”.</p>
<p>பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார். அவரது சரீர அமைப்பே அதற்கு வாகாகத்தான் வடிவம் கொடிருக்கிறது. கண்கள் மூக்கு உதடுகள் எல்லாமே.. அவரது பொழுதுபோக்கே அதுதான் என்றார்கள். சிரிக்கத் தோதாக ஏதுமில்லாதபோது சாரு நிவேதிதாவை நினைத்துக் கொள்வாராம். வேண்டாம், புரையேறிவிடும் என்று மனைவி சொல்லி விலக்கினாலும் அதை தவிர்க்க முடிவதில்லை.</p>
<p>நாஞ்சில்நாடனுக்கு என்றால் அறுபதிலும் தலையில் முழுக்க மயிர். அறுபதாம் விழாவில் ஆசீர்வாதம்செய்துபோட்ட அட்சதைகளை பேன்சீப்பு போட்டு சீவி எடுக்கவேண்டும். மாறாக எஸ்.ராமகிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும்போதே தலையில் முடியில்லாமலிருந்தார் என்று தகவல். அவரது அறுபதாம் கல்யாணத்தின்போது கற்பனைசெய்யவே கஷ்டமாக இருக்கிறது.</p>
<p>மூவருக்கும் இடையே என்ன ஒற்றுமை? ஒன்றே. மூவரும் அந்தக்கால எம்.ஜி.ஆர் ரசிகர்கள். நாஞ்சில்நாடன் வடசேரி தங்கம் திரையரங்குக்கு அதிகாலையிலேயே வந்து காவல்கிடந்து ‘அடிமைப்பெண்’ முதல்நாள் முதல்காட்சி பார்த்திருக்கிறார். நெல்லைவரை ரயிலில் வரும் ‘பொட்டி’யும் அந்நேரம்தான் கிளம்புமாம். ‘பொட்டி வந்தாச்சா?’ என்ற எதிர்பார்ப்பு. ”வள்ளியூர் தாண்டியாச்சுலே” என்று ஒரு குரல். நாஞ்சில்நாடன் அதற்கே விசில் அடித்து எம்பிக்குதிப்பாராம். பெட்டி நாகரம்மன் கோயில் போயிருக்கிறது என்ற அடுத்த செய்தி.”நாகரம்மோ எல்லாம் நல்லபடியா நடக்கணும்!” என்று நெக்குருகிப் பிரார்த்தனை. பெட்டி நுழைகையில் தலைவரையே நேரில் பார்த்த பரவசம்.</p>
<p>கலாப்ரியா எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். கூழ் காய்ச்சுதல், இரவெல்லாம் தெருவில் அலைந்து போஸ்டர் ஒட்டுதல்.சிவாஜி படம் மீது சாணி அடித்தல். சிவாஜி ரசிகர்களை வசைபாடுதல் போன்ற தீவிர மன்றப்பணிகள். எஸ்.ராமகிருஷ்ணனின் ஆர்வம் தலைவர்மீதா நாயகிகள்மீதா என்று அவர் சென்னை அம்பிகா எம்பயர் ஓட்டலில் என் அறையில் இரவெல்லாம் பரவசமடைந்து கொண்டிருந்த போது என்னால் ஊகிக்க முடியவில்லை. ஒருவேளை தலைவர் தன் தலைவியரை கையாளும் ‘விதம்’ மீதான பற்றாக இருக்கலாம். அம்மை அப்பன் என்றுதானே உலகு தொழுகிறது?</p>
<p>எங்களூரில் காந்தராவ், கிருஷ்ணா போன்ற தெலுங்குநடிகர்களுக்குத்தான் செல்வாக்கு. குலசேகரத்தில் இரண்டே தியேட்டர்கள், ஒன்றில் மலையாளப்படம் என்பதனால் எம்.ஜி.ஆர் வேறுவழியில்லாமல் ரசிக்கப்பட்டார். செல்லப்பெயர் தொப்பி. அவர் முதுமையை மறைக்க முகத்தின்மீது பச்சைப்பப்படம் ஒட்டுவதாக கணியான் சங்கரன் சொல்லி எங்களூரில் பரவலாக நம்ப்பபட்டது. ஆகவே பச்சைப்பப்படம் என்ற பேரும் சில இடங்களில் புழக்கத்திலிருந்தது.</p>
<p>அவர் இரு லேகியங்களை தவறாமல் உண்பதுண்டாம். ஒன்று தங்க பஸ்பம். நிறம் மங்காமலிருப்பதற்காக. இன்னொன்று சிட்டுக்குருவி லேகியம், வீரியத்துக்காக. ஆண் சிட்டுக்குருவிகள் எந்நேரமும் பெண்புடைசூழ இருக்குமாம். ஆயிரக்கணக்கில் ஆண்சிட்டுக்குருவிகளைக் கொண்டு செய்யப்படும் சிட்டுக்குருவிலேகியம் சாப்பிடுவதனால் எம்.ஜி.ஆர் வெளிப்புற படப்பிடிப்பில் இருந்தால் அவரை மொய்க்கும் பெண் சிட்டுக்குருவிகளை விரட்ட தலைக்குமேல் வலையைகட்டி ஜஸ்டின் தலைமையில் ஒரு குழு தயாராக இருக்குமாம். வதந்திதான்.</p>
<p>லேகியத்தின் பலன்களை நாம் சினிமாவிலும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் காதல்காட்சிகளில் மூன்றுவகை நடிப்புகளை வெளிப்படுத்துவார். நெளிந்து நின்று கீழுதட்டை கடித்து அரைப்புன்னகையுடன் மேலும் கீழும் பார்ப்பது [பறித்தாலும் துணிபோட்டு மறைத்தாலும் பெண்ணே…] கதாநாயகியின் பின்னால் வந்து நின்று அவள் இரு புஜங்களிலும் பிடித்து சரேலென்று ஒருபக்கமாக விலக்கி காமிராவைப்பார்த்து உதட்டைச் சுழிப்பது. இடையை ஒசித்து ஒசித்து செல்லும் [ஷாட் முடிந்தபின் சரோஜாதேவிக்கு இடுப்பில் எண்ணைபோட்டு சுளுக்கு எடுப்பார்களாமே] கதாநாயகிக்கு பின்னால் துள்ளி ஓடுவது. இதைத்தவிரவும் பல சிட்டுக்குருவித்தனங்கள். சிறிய மேடுகளில் இருந்தும் பெஞ்சுகளில் இருந்தும் விருட் விருட் என்று எம்பிக்குதிப்பது. ஓடும்போதே சுழன்று வருவது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தாவுவது.</p>
<p>வயலில் மேயும் எருமையைக் கண்டு பதறிக்கூப்பிடுவதுபோல எம்.ஜி.ஆர் கைநீட்டி நீட்டி பாடும் ஒற்றையாள் பாட்டுகள் எங்களூரில் ரசிக்கப்படவில்லை. ‘என்ன நீக்கம்புக்கு கைய நீட்டுதான்…பாடணுமானா ஒரு பாகத்தில அனங்காம இருந்து தொடையில தாளமிட்டா போராதா?” என்று தங்கையன் மெம்பர் அபிப்பிராயப்பட்டார். மேலும் எங்களூரில் ‘சத்தியமான ஆவிக்குரிய சுவிசேஷ எழுப்புதல்’ கூட்டத்துக்கு வரும் வெள்ளைக்காரப் பாதிரிமார்களும் ‘ஓ ஸின்னர்ஸ்!’ என்று கூவும்போது அப்படித்தான் கைகளை நீட்டிக் காட்டுகிறார்கள். [அருகே நிற்கும் உள்ளூர் உபதேசியாரின் தமிழாக்கம்: கர்த்தாவை மறந்து நித்ய நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும், நெறியும் விலையும் கெட்ட அவிசுவாசிகளான , கோயிலுக்கு தசம பாகம் கொடுக்க கணக்கு பார்க்கக்கூடியவர்களான, விரியன் பாம்புக்குட்டிகளே!] எம்.ஜி.ஆர் ‘அதோ அந்த பறவை போல வாழவேண்டும்’ என்று பாடும்போது ‘அதோ ஏசு மேகங்களுடனே வருகிறார்!’ என்றுதான் நானெல்லாம் கேட்டு பரவசமடைவேன்.</p>
<p>அத்துடன் மழையில் நனைந்து பாடுவதையும் எங்களூர்க்காரர்கள் விரும்பவில்லை. தென்குமரிநாட்டில் வருஷத்தில் ஏழுமாசம் மழை. ‘எளவெடுத்த மழையாலே பிள்ளைய பெருத்துப்போய் பிளைக்கவும் பளுதில்லியே’ என்று நொந்துபோயிருக்கும் மக்களுக்கு மழையில் எம்.ஜி.ஆர் ‘இளமை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி’ என்று பாடும் ஜெயலலிதாவுடன் சேற்றில் குதித்து ஆடுவது கடுப்பேற்றியது. ”அந்த பட்டத்திக் குட்டிக்கு பிராந்துண்ணா இவனுக்கு எங்க போச்சு புத்தி? ஒரு நாலு நல்லவாக்கு சொல்லி எடுத்து உள்ள கூட்டிட்டுபோயி சுக்குவெள்ளமோ மற்றோ குடுக்கப்பிடாதா? வல்ல நீர்தோசமோ மற்றோ பிடிச்சா பின்ன இவன்லா வச்சு பாக்கணும்?”</p>
<p>எம்ஜிஆரின் நடிப்பு சீரானது. அவரது கை இடுப்பில் இருந்தால் அவர் நகைச்சுவையாக நடிக்கிறார் என்று பொருள். அவர் சுவரை நோக்கி திரும்பிக் கொண்டால் அழுகிறார். முகவாயை தடவினால் கிண்டல் செய்கிறார்- அனேகமாக காதலியை. அவர் என்றுதெரியாமல் அவள் ‘யோவ்’ என்று கூப்பிடும்போது குறிப்பாக. [அடி போடிக்கண்ணு எல்லாம் தெரியுமடீ எனக்கு முன்னாலே] சிரித்தபடி லேசாக குலுங்கினால் வில்லன்களை அடிக்கப்போகிறார். ஒரு கிழவி தள்ளாடி நடந்துபோனால் எக்கணமும் எம்.ஜி.ஆர் வெட்டுக்கிளி போல பின்னாலிருந்து தாவி வரப்போகிறார். கனத்த எடையை இழுக்கும் ரிக்ஷாக்காரருக்கு கண்டிப்பாக அஞ்சேகால் நொடிக்கு அவர் இழுத்து உதவிசெய்வார். எங்களூர் ரசிகர்களுக்கு இது குழப்பமில்லாத நடிப்பாக இருந்தது. சிவாஜி மாதிரி , கொஞ்சம் மழை பெய்கிற படத்தை டெண்டுகொட்டகையில் ஒலியின் உதவியை மட்டும் கொண்டு பார்க்கும்போது குலுங்கிச் சிரிக்கிறாரா குலுங்கி அழுகிறாரா என்ற குழப்பமெல்லாம் வருவதில்லை.</p>
<p>நம்பியார் நடிப்பும் அதேபோல கச்சிதம். உள்ளங்கையில் இன்னொருகை முஷ்டியை சுருட்டி குத்திக் கொண்டு ‘ஜ்ஜ்ஜ்ஜக்கூ’ என்று உறுமினாரென்றால் பந்தம் கண்ட பெருச்சாளி போல விழித்தபடி ஜஸ்டின் வருவதும் அடுத்த காட்சியில் அடிதடியும் உறுதி. மாறுகண்ணோ என்ற ஐயம் வரும்வரை இரு கண்களையும் உருட்டிக்கொண்டாரென்றால் நம்பியார் சதி செய்கிறார். மீனை விழுங்கும் பறவை போல அண்ணாந்து சிரித்தாரென்றால் எதிரே எம்.ஜி.ஆரின் அப்பா அம்மா அல்லது அண்ணி அண்ணா இருவரும் கட்டுண்டு கிடக்கிறார்கள். இருபக்கமும் தலையை திருப்பி திருப்பி ,சூடான டீயை வாயில் விட்டுக்கொண்டவர் போல கழுத்துச்சதைகள் அதிர சிரித்தாரென்றால் கதாநாயகியின் ஜாக்கெட்டை தோள் பகுதியில் மட்டும் கச்சிதமாகக் கிழித்து கற்பழிக்க முயற்சி செய்கிறார் என்று பொருள். குருசாமிக்கு உண்மையான கற்பழிப்பு நோக்கமெல்லாம் கிடையாது என்பது அவர் இறுக்கமான கால்சட்டை, சட்டை அதன்மேல் எல்லா பித்தானும்போடப்பட்ட கோட்டு , ஷ¥க்கள்,எல்லாம் போட்டபடியே பாய்வதிலிருந்து தெரியவரும். சமயங்களில் டையைகூட அவர் கழற்றுவதில்லை.</p>
<p>எம்ஜிஆர் தமிழ்ப் பண்பாடும் தவறுவதில்லை. [ இப்படித்தான் இருக்கவேண்டும் பொம்பிளை…] பாட்டில் கதாநாயகியை புல்தரையிலும் மணலிலும் போட்டு புரட்டி எடுத்து , மெல்லிசான சேலை உடுத்திருந்தாளென்ரால் மழையில் நனைய வைத்து, காமிரா பக்கவாட்டில் இருக்கிறதென்றால் முந்தானையை பிடித்து இழுத்து, உதட்டைக் கடித்தபடி பின்னால் துள்ளி ஓடி இடைபிடித்து இழுத்து அணைத்து, அவள் கால்கள் நடுவே காலை நுழைத்து ராமன் வில்லை வளைப்பதுபோல வளைத்து, அவளை பூச்செடிகளுக்கு பின்னால் இட்டுச்சென்று இரு பூக்களை ஒன்றோடொன்று உரச வைத்து, பாறைமேல் படுக்கவைத்து மேலேறிப்படுத்து நாஸ்தி செய்தாலும் பாட்டு இல்லாதபோது பண்பாக ”அதெல்லாம் கையானதுக்கு அப்பம். நீ இப்ப வீத்துக்கு போ” என்றுதானே அவர் சொல்கிறார்? [ராதா சலூஜாவை அவர் மேலாடை களைந்து குளிப்பாட்டின காட்சியில் மெய்மறந்து விட்டு வீடு திரும்பும்போது என்னிடம் எட்டான் கேட்டான்.”ஏம் மக்கா, இதாக்கும் இல்லியா இந்த இதயக்கனீண்ணு செல்லுகது?]</p>
<p>கடைசியாக, சண்டைக்காட்சிகள். அவற்றைச் சின்னக் குழந்தைகூட பார்க்கலாம். ரத்தம் கிடையாது. மரணம் இல்லை. கௌரவமான இடங்களில்தான் அடி. அம்பாசிடர் காரில் எம்ஜிஆர் வரும்போது ஜஸ்டின் எதிரே தன் ஆட்களுடன் வந்தால் என்ன செய்வார்? காரை அப்படியே தலைக்குமேல் தூக்கி சிலம்புக்கம்புகளை தடுப்பார். மேலும் ஆட்கள் மரியாதை தெரிந்தவர்கள். தலைவர் கால்மடக்கி அமர்ந்து தலைக்குமேல் தூக்கிய காரால் நூற்றி என்பத்தியாறு சிலம்புகளை தடுத்து புஜம் புடைக்கும்போது ஒருவருக்கும் ஒரு சிலம்பை உருவி அவர் கணுக்காலில் ஒன்றுபோட்டாலென்ன என்று தோன்றாது. எங்களூர்க்காரர்கள்தான் ”ஏலே வலத்தால உருவி சொளட்டி வாங்கி அடிலே…ஏல மீச, நீ நிண்ணு உருவி எடம் வந்து அடில…நிக்கானுக பாரு அறுப்புக்கு சூடடிக்குத லெச்சணமாட்டு…”என்று கூவுவார்கள். தெலுங்குப்படச் சண்டைகளில் யார் எங்கே எவரை அடிக்கிறார்கள் என்று தெரியாமல் ஒரே ‘பாஸ்ட் ·பார்வேட்’ துள்ளலாக இருக்கும் என்பதனால் எங்களூரில் அவற்றுக்கு மவுசு அதிகம். ‘அடிச்சா அந்தமாதிரி அடிச்சணும்லே மக்கா.கிருஷ்ணாவை பாத்தியா குண்டியிலே கரண்டடிச்சவன் மாதிரில்லா துள்ளுகான்?”</p>
<p>எம்ஜிஆர் சண்டைக்காட்சிகளை கோயில் பூசாரி கேசவன் போற்றி ‘பிரசாதம் வெளம்புதல்’ என்று அனுபவத்தால் வகுத்தார். கொஞ்சம் நெரிசல் இருந்தாலும் அடிவாங்குகிறவர்கள் வரிசையாகத்தான் வருவார்கள்.அடி வாங்கிக்கொண்டு பின்னால் சென்று அதை சாப்பிட்டு கையைத் துடைத்தபின்னர்தான் மீண்டும் வருவார்கள். ஒருவரோடொருவர் முட்டிக் கொள்வதில்லை. ஒருவருக்கொருவர் வாங்குவதில் தள்ளுமுள்ளும் இல்லை. அடி முடிந்தபின் எம்.ஜி.ஆர் சுண்டல் தீர்ந்த போற்றியைப்போலவே கையை தட்டுவதும் உண்டு.</p>
<p>கடைசிக்காட்சியில் நம்பியார் மனம் திருந்துவது எங்களூரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’தொழிலாளி’ படத்தில் எம்ஜிஆர் அடித்து இடுப்பை உடைத்துபோட யானைமேலிருந்து விழுந்தவர்கள் போல வில்லன் கோஷ்டி ஆங்காங்கே சிதறிக்கிடக்க ”ராஜா!’ என்று அதுவரை கட்டில் கிடந்த அம்மா ஆனந்தக் கன்ணிருடன் வந்து கட்டிக் கொண்டு கதாநாயகியை நோக்கி ”வாம்மா” என்று அழைத்து தலையை தடவிக் கொண்டிருக்கும்போதுதான் போலீஸ் சைரன். குறுக்குப்பட்டை அணிந்து அமெச்சூர் முழி கொண்ட இன்ஸ்பெக்டர் படைகளுடன் உள்ளே வந்து ”மிஸ்டர் கபாலி யூ ஆர் அண்டர் அரெஸ்ட்” என்று சொல்லி பின்னால் கையை சுழற்றி பிடித்து நம்பியாரை எழுப்பி எம்.ஜி.ஆரிடம் ”வெல்டன் மிஸ்டர் ராஜா…உங்களைப்பத்தி நாங்க எங்க மேலிடத்திலே சொல்றதா இருக்கோம்” என்று சொல்கையில் நம்பியார் தலைகலைய குனிந்து உதட்டை இறுக்கமாக வைத்துக் கொண்டு ”நான் வரென் மிஸ்டர் ராஜா. நீங்க உருவாக்குற புதிய சமுதாயத்திலே என்னை மாதிரி புல்லுருவிகளுக்கு இடமில்லை” என்று சொல்லும்போது குலசேகரம் செண்ட்ரல் தியேட்டரில் ”பின்ன என்ன மயித்துக்குலே நீ நடிக்கதுக்கு அட்வான்ஸ் வேங்கினே?”என்ற ஆவேசக் குரல் கேட்டது.</p>
<p>ஆனால் எம்.ஜி.ஆர் படத்தில் பாடல்கள் அர்த்தமுள்ளவை. ‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி..அவனுக்கு நானொரு தொழிலாளி!’ அப்படியென்றால் ஏமாற்றலாம். கூலி கேட்டு வையலாம். போஸ்டர் ஒட்டி நாறடிக்கலாம். இது இப்போதைய சிந்தை. அன்றெல்லாம் பாட்டு புரிவதில்லை. ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று…” காஞ்சி என்றால் என்ன? தொடுவட்டியில் வாங்கின சாணித்தாள் பாட்டுபுத்தகத்தில் பொதுவாக பிழைகள் அதிகம். ஆகவே உள்ளூர் தமிழறிஞரான நான் அதை ‘கஞ்சியிலே’ என்று திருத்தினேன். அப்படியானால் ‘படித்தேன்’ தவறுதானே. குடித்தேன் என்று ஆக்கியபோது சுமாராக வந்தது. தேவாசீர்வாதம் புலவர் ”அது செரிதேண்டே மக்கா.. கஞ்சித்தலைவன்னுகூட ஒரு பழைய படம் வந்திட்டுண்டு. ஏழைகளுக்க அமிருதம்லா கஞ்சி? பதார்த்த குணசிந்தாமணியிலே என்ன சொல்லியுருக்குண்ணாக்க… ” என்றார். ஆனால் பள்ளியில் என் நண்பன் கோலப்பன் ஆசாரி அதை பாட முடியவில்லை. ‘தம் -பீ…. ‘என அவன் இழுத்தபோதே பையன்கள் மூக்கைப்பிடித்துக் கொண்டு ‘லே! லே!” என்று கூவி அமரவைத்துவிட்டார்கள். அதன்பின் அவன் ‘தன்பீ ‘ கோலப்பன் என்று அழைக்கப்படலானான்.</p>
<p>எம்.ஜி.ஆர் படத்தின் காதல்பாடல்கள் பதின்பருவத்தில் எனக்கு முகப்பரு போலவே தொட்டால் தீராத, விடவும் முடியாத சிக்கலாக இருந்திருக்கின்றன. ‘இதுதான் முதல் ராத்திரீ..ஈஈ…அன்புக்காதலீ..ஈஈ–ஈஈ என்னை ஆதரீஈஈ…” காதலி முதல் ராத்திரியில் ஆதரவு கொடுக்க வேண்டுமா? ஏதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகுமா? நிபந்தனையுடன் ஆதரவு, வெளியிலிருந்து ஆதரவு என பலவகை உண்டு என்று தெரிய மேலும் பத்து பதினைந்துவருடம் ஆகியது. அதைவிட குழப்பம், என்னதான் இலக்கிய நயமென்றாலும் காதலியை ஈ என்று அழைக்கலாமா? சுற்றிச்சுற்றிவருவதனாலா? இல்லை, காதருகே பாடிக்கொண்டே இருப்பாளோ? பிடி கிடைக்காமல் இருப்பதனால்கூட இருக்கலாம். நெடுநாள் ஐயம் சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோ போனபோது தீர்ந்தது. பலநூறு டீ கோப்பைகள் வைக்கபட்டு வைக்கப்பட்டு வாலி எழுதும்போது அப்பிராந்தியமெங்கும் ஈ பறந்திருகலாம். பாட்டு முழுக்க ஈ தான். ”அடி¨மைஈஈ இந்த சுந்தரீஈஈ..”</p>
<p>எம்ஜியாரின் பேச்சு வேறு எங்களுக்கு புரிவதில்லை. தீப்பொறி ஆறுமுகம் மேடையில் சொல்லும் நகைச்சுவை ஒன்று உண்டு. ஆசிரியர்கள் போராட்டம் நடந்தபோது அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த எம்.ஜி.ஆர் சொன்னாராம் ”உங்களுக்கெல்லாம் பைப்பு இருக்கு பம்பு இல்லை”. ஆசிரியர்கள் திக்பிரமை அடித்துபோய் பேச்சுவார்த்தை முறிந்தே போயிற்று. தலைவர் சொன்னது படிப்பு இருக்கிறது பண்பு இல்லை என்று. குலசேகரத்தில் பல வசனங்களை நாங்கள் கேட்டு அடைந்த கதையும், பெற்ற நெகிழ்ச்சிகளுமே வேறு. ” அம்மா, உங்க மகன் எப்பியாவது பயிச்சு பெய்யவனாய் அந்த பாயிகளை பாய் வாங்குவேன்…”. நம்பியார் ஜமக்காள வியாபாரியாதலினால்தான் பாய்வாங்குவதை தடுக்க முயல்கிறாரா?</p>
<p>அதேபோல காதல் வசனங்கள். ”கமலா, நீ என்னை தப்பா புழிஞ்சுக்கிட்டே…[அடிப்பாவி] என்னை கயமை அய்க்குது. எங்கம்மாவுக்கு நான் ஒரு சத்தியம் செஞ்சு குதித்திருக்கேன்….” பொன்மொழிகளும் சிக்கலானவை ”தேய்ஞ்சு செஞ்சா தவழு. தேயாம செஞ்சா தப்பு”. தப்புக்கு தவழ வேண்டாம், பெஞ்சுமேல் ஏறினால் போதுமா? உணர்ச்சிகரமான காட்சிகளில் நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோமென்பதனால் எங்களூருக்கு எம்ஜிஆர் படங்களையே கொடுக்கமாட்டோமென்று சொல்லப்பட்டது.”…அம்மா அப்பி சொல்லாதீங்கம்மா. தை செஞ்சு அப்பி சொல்லாதீங்க…உங்க மகன் ஒருநாளும் அப்பி செய்யமாட்டான்” எங்களூரில் அப்பி என்றால் சின்னப்பிள்ளை கொல்லைக்குபோவது என்றொரு பொருள் உண்டு.</p>
<p>ஆனால் ஒரு ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. இருபதாண்டுகளுக்குப் பின்னால் என்னால் இப்போது ஒரு பழந்தமிழ் படத்தைக்கூட பத்துநிமிடம் பார்க்க முடியவில்லை. ஆனால் எம்ஜிஆர் படங்களை பெரும்பாலும் கடைசிவரை பார்க்க முடிகிறது — அம்புலிமாமா கதை படிக்கும் ஆர்வத்துடன். திரைக்கதை பற்றி கற்ற பின் இந்த இரண்டாண்டுகளில் கச்சிதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்ட படங்கள் என்று கணிசமான எம்ஜிஆர் படங்களைப்பற்றி என்ணத்தோன்றுகிறது. தமிழில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த வணிகத்திரைக்கதை ‘எங்கவீட்டுப்பிள்ளை’தான்.</p>
<hr>
<strong>திலகம்</strong></p>
<blockquote><p>January 10, 2008 – 8:26 pm</p></blockquote>
<p>பிள்ளைகளுக்கு நகைச்சுவை சினிமாக்கள் மேல் மெத்த ஆசை. நாகேஷைப் பிடிக்கும். சார்லி சாப்லின் படங்களை பலமுறை பார்த்திருப்பார்கள்.ஆனால் அன்று கேட்ட சிரிப்பொலி போல எப்போதுமே கேட்டதில்லை. வெடியோசை ,பீரிடலோசை, உடைந்து சிதறும் ஓசை, தாங்கமுடியாத கேவல்கள், ‘யம்மா முடியல்லியே’ என்பதுபோன்ற கதறல்கள்… அப்படி என்னபடம் என்று வியந்து நான் என் எழுத்தறை கதவைத்திறந்து பார்த்தேன். ‘திருவிளையாடல்’. தாட்சாயணியை சிவபெருமான் எரிக்கும் இடம்.</p>
<p>அடுப்புத்தீயை ஊதும்போது சிவாஜிக்கு குளோசப் வைத்திருந்தார்கள். செக்கச்சிவந்த முகத்தில் உதடுகள் கூம்பி கன்னம் துடிக்க ஊதினார். தீ எரியவில்லை போலும். மாறி சாவித்ரி ஊதினார். எரியவில்லை. கோபமாக ‘உலகில் இனி நாமே தனித்து இயங்கிக் கொள்வோம்’ என்றார். உடைந்த குரலில் சாவித்ரி ”சுவாமீ” என்றார். கைலாய மலைமுகடுகள் பின்பக்கம் நீலமும் வெண்மையும் கலந்து பெரிய கோன் ஐஸ்கிரீம்போல காணப்பட்டன. குளிருக்கு நன்றாக தின்று– அமுதமாக இருக்குமோ?– மலைமகளுக்கு நல்ல வளப்பமான தொப்பை. அப்பன் மட்டுமென்ன சளைத்தவனா? ”சக்தி இல்லையேல் சிவம் இல்லை!”</p>
<p>சட்டென்று சற்றும் எதிர்பாராமல் பார்வதி அம்மாள் ‘அஹ்ஹஹா!’ என்று நகைத்து தொப்பையுடன் சூலமெந்தி ஆடினார் ஒரு நாட்டியம், கஞ்சித்தண்ணி காலில் விழுந்ததுபோல. ”அப்பா ஆ·ப் பண்ணிரு அப்பா ….”என்று கண்ணிருடன் பையன் கூவினான். நான் சிவாஜி ஆடமாட்டாரென்று எதிர்பார்த்தேன். என்ன இருந்தாலும்–</p>
<p>ஆடினார். வென்னீர் குண்டாவை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடிவருகிறார். கடிக்கும் நாயை உதறி விலகுகிறார். எறும்புப்புற்றை மிதித்து விட்டுத் துள்ளுகிறார். நடுவே உள்ளே கட்டிய ஜட்டி நாடா அவிழ்ந்துவிட்டது என்பதுபோல ஒரு நெளிந்த நடை. குளோசப் காட்சியில் தொட்டி மீன் போல உதட்டை பிதுக்கிப் பிதுக்கி கன்னச்சதைகளை தனித்தனியாக அதிரவிட்டார். கன்னத்தை மட்டும் சிவாஜி அதிரவிட்டால் போதும் கழுத்துச்சதை தானாகவே அதிரும். தானாடாவிட்டாலும் சதை ஆடும்.</p>
<p>நடுவே ஒரு சான்ட்விச் நாலாகப் பிளந்தது. ஒரு பூவாணம் எரிந்தது. ”அது என்னடா என்னமோ கீழ விழுந்து ஒடையுது?” ‘என்றேன். ”அப்பா அது பூகம்பம் எரிமலை….நீ வேற சிரிப்பு மூட்டாதே…” என்றாள் கண்ணீர் வழியச் சிரித்த சைதன்யா. ஆட்டம் முடிந்து சிவாஜி நெளிந்து நிற்க நெற்றியிலிருந்து ஒரு ராக்கெட் கிளம்பி சென்று சாவித்ரியை எரித்தது. ”அப்பா ரியலிசமே இல்ல பாத்தியா? நெற்றியிலேருந்து ஜெட் எஞ்சின் மாதிரி கெளம்புது…அப்ப சிவாஜி அதே வேகத்தில மறுபக்கமா போகணும்ல?” .நான் விளக்கினேன்.”டேய் இது சிவபெருமான்…அவர் காலத்தில ஜெட் எஞ்சின்லாம் கெடையாது” பெண் புரிந்துகொண்டுவிட்டாலும் பையனுக்கு அது சரியான பதிலா என்று சந்தேகம்.</p>
<p>சிரிப்பு தொடர்ந்தது. சிவாஜி கடலில் பாய்ந்து மீனுடன் போராடுகிறார். அதன் பின் கரையில் கே.ஆர்.விஜயாவை நோக்கி பின்னழகு எம்பிநிற்க பன்னிப்பன்னி ஒரு மென்னடை . பையன் ”ஒரு ஆலயமாகும் மங்கை மனதூ…”என்று பாடினான். ”அப்பா இவனைப் பாருப்பா”என்று சைதன்யா கத்த ”என்னடா அது?” என்றேன். ”அந்தப்பாட்டிலே சீ·ப் மினிஸ்டர் ஜெயலலிதா இப்டியெதான் அப்பா நடந்து போவாங்க…” அதற்குமேல் அங்கே நிற்க மனம் வரவில்லை.</p>
<p>ஆனால் எங்களூரில் புகழ்பெற்ற ஒரு பழமொழியின் ஊற்றுமுகம் அப்போதுதான் புரிந்தது. ”நாலுநாளாட்டு தேகத்துக்கு ஒரு பெலக்கொறவு. சக்தியே இல்ல கேட்டியளா? சக்தி இல்லேண்ணா சீவன் இல்லேல்லா?”</p>
<p>சிவாஜியை எங்களூரில் ஆசாரிமார் தவிர்த்து பிறருக்குப் பிடிக்காது. வேறுயாருக்காவது பிடித்திருந்தாலும் மதிப்பான நாயர், நாடார் பட்டங்களை இழக்க விரும்பாமல் அமைதி காத்தார்கள். கணபதி ஆசாரி சிவாஜியைப்பார்க்க சென்னை சென்று வந்தவர். புதியபறவை சிவாஜி போல இறுக்கமான டெரிலின் சட்டை - எதிர்காற்றடித்தால் சட்டைக்குமேல் தொப்புள்குழி உருவாகும், ஆற்றுமணலில் சுழி பிறப்பதுபோல. முலைக்கண்களின் புள்ளிகள் தெரியும்– அணிந்து இறுக்கமான காற்சட்டையுடன் சினிமாவுக்கு தொடுவட்டி நாகர்கோயில் என்று கிளம்பிச் செல்வார். தலைமயிர் நெற்றியில் ஒரு குருவிக்கூடுபோல நிற்கும். சிவாஜியின் நடிப்பின் மைய இடம் கீழுதடு என அவர் அறிந்திருந்ததனால் ”அம்மச்சியே இது மாந்தடி தானே….? கறை இருக்குமே…. சேருக்கு போட்டா ஒட்டுமில்லையா?” என்று சிம்மக்குரலில் கேட்கும்போது கீழுதடு சி.டி டிரைவ் வெளியே வருவதுபோல வந்தபடியே இருக்கும். அதனாலேயே அவருக்கு ‘சுண்டன் ஆசாரி’ [சுண்டு-உதடு]] என்று ஊரில் பெயர்.</p>
<p>சிவாஜியின் உதடுகளுக்கு ஒரு மர்மமான பொருள் இருந்திருக்கிறது என்பதை சின்னவயதில் நான் அறிந்ததில்லை. மொத்தக்கூட்டத்தில் பாதி பக்கவாட்டில் அவர் பாடும் காட்சிக்காக காத்திருந்து அது வந்ததும் ”டேய்…டேய்ய்…”என்றும் ”ஊ… ஊ…” என்றும் ஒலியெழுப்பி மகிழ்வதைக் கண்டிருக்கிறேன். இதற்காகவே சிவாஜி படம்பார்க்கப் போகிறவர்கள் உண்டு.</p>
<p>பொதுவாக முக்கிய கட்டங்களில் பாடித்தொலைக்கிறவர் என்ற குற்றச்சாட்டு பரவல். ”என்னமாம் கேட்டா தாயளி சிவாஜி மாதிரி ஒடனே ஒப்பாரில்லா எடுக்கான்?”என்று சொல்லப்படும். தங்கை கல்யாணமாகிப்போகும் நேரம் வாசலில் டாக்ஸி காத்திருக்க, விருந்தினர் பஸ்ஸைப் பிடிக்கும் அவசரத்தில் நிற்க, பாசம் பீரிட அவர் பாடுவார். நெஞ்சடைக்க பாடாமல் சாக மாட்டார். அன்றெல்லாம் சிவாஜிக்கு காஸ்ட்யூம் அமைக்கும்போதெ கக்குவதற்கு கால் லிட்டர் சிவப்பு மையும் தயாராக வைத்திருப்பார்கள்.</p>
<p>‘தியாகம்’ படத்தில் சிவாஜியை வில்லன்கள் அடி அடி அடியென அரை ரீலுக்கு அடித்து ரத்தக் கோராமையாக்கி தூக்கி கடாசிவிட்டு போக, அவர் தரைவந்த மீன் என வாயை திறந்து தவிக்க, குலசேகரம் ‘ஸ்ரீபத்மநாபா’ தியேட்டரில் ஒரு ரசிகன் குரல். ”சொயம்பு அடி. நல்லா சதைச்சாச்சு…இனி அப்டியே தூக்கி தோலை உரிச்சு தலைகீழாட்டு தூக்குங்கலே…தொடைக்கறிக்கு கொள்ளாம்” இன்னொரு குரல் ”அண்ணா ஆடறுக்குத முன்னே புடுக்கு சுட நிக்காதே… படம் இனியும் உண்டு…”</p>
<p>அதையெல்லாம் மன்னித்த பாடகச்சேரி அன்பையன் வைத்தியர் ‘அண்ணன் ஒரு கோயி ‘லில் சுஜாதாவுடன் காட்டில் ஒரு நாலுக்கு மூன்று குழியில் தலைமாடு கால்மாடாக நெருங்கிப்படுத்துக் கொண்டு தலைக்குமேல் அடியாட்கள் தாவிப்பறக்கும் நேரத்திலும் அவர் ”நாலுபக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு காதல்…இன்பக் காதல்..”என்று பாடிய கொடுமையைத் தாங்க முடியாமல் ”யார்ல இவன், கேணையனுக்கு கோமணம் அவுத்தவனாட்டுல்லா இருக்கான்? பாடுத நேரத்தப்பாரு…ஏலே நாணு, கோரா, வாருங்கலே போவோம். இனி ஒரு நிமிசம் இந்த சுண்டப்பயலுக்க படத்த நாம பாக்கப்பிடாது” என்று கையில் எட்டுகட்டை டார்ச்சும் முண்டாசுமாக வீட்டுக்குக் கிளம்பிவிட்டார்.</p>
<p>சிவாஜிபடங்களின் நகைச்சுவையின் உச்சம் சண்டைக்காட்சிகள்தான். ‘அவன்தான் மனிதன்’ என்றபடத்தில் அவர் சண்டைக்காட்சியில் நடித்தபோது நாக்கைக் கடித்தபடி கையை வெடுக் வெடுக் என்று முன்னால் நீட்டி பின்னால் இழுப்பார். அடுத்தக் கணம் வேறு எங்கோ ஒரு ஆசாமி எம்பிக்குதித்து சுழன்றடித்து துள்ளி மறிந்து சண்டைபோடுவான். மீண்டும் சிவாஜியின் கைகள், கடிக்கப்பட்ட நாக்கு. ”வைக்கோலு பிடுங்குகான்” என்று அப்பி தாமோதரன் சொல்ல அது சிவாஜிப்பட சண்டைக்கான சொல் ஆகியது. ”சுண்டன் படம் எப்பிடி மச்சினா?” ”நாலு வைக்கோலு இருக்குலே..அது கொள்ளாம், சிரிக்க வகையுண்டு…பின்ன கடசீ சீனிலெ மசி துப்பி சாவுதாரு. அங்கிணயும் மனசு தெறந்து சிரிக்கிலாம்… ஒருமாதிரி கொள்ளாம் கேட்டியா?”</p>
<p>ஆனால் அது ‘தர்மராஜா’ வரும்வரைத்தான். அதில் சிவாஜி குண்டான உடல் மீது வெள்ளைக் கிமோனோ அணிந்து கராத்தே நிபுணராக நடித்தார். அன்னியர் பால் கறக்க முற்பட்டால் எருமை காலைத்தூக்கி உதறுவது போல குங்·பு சண்டை போடுவார். ஆகவே ‘கறப்பு’ என்று ஆகியது அக்கலைச்சொல். பிற்காலத்தில் எல்லா படத்திலும் டபிள் பிரஸ்ட் கோட்டு அணிய முற்பட்டார்– ‘லாரி டிரைவர் ராஜாக்கண்ணு’வாக நடித்தபோதும் கூட. ‘மன்னவன் வந்தானடி’ படத்தில் ஒரு கழுதைமீது ஏறி ‘நான் நாட்டை ஆளப்போறேன்.அந்த கோட்டையைபிடிக்கப் போறேன்..’ என்று பாடிச்செல்வார். டென்னிசன் என்னிடம் ”லே மக்கா, சித்ரா பவுர்ணமி படத்திலயும் இதேமாதிரி ஒரு சீன் உண்டுல்லா?”என்றான். சிவாஜி தலையில் வைக்கோலால் ஆன விக் வைத்து நடித்த சித்ரா பௌர்ணமி ஒரு தேசி-டார்ஜான் படம். ”லே,அது குதிரை…”என்றேன் கடுப்புடன்.”ரெண்டிலயும் ஒரேமாதிரித்தானே இவரு போறாரு?”</p>
<p>பொதுவாக எங்களூர்க்காரர்கள் யதார்த்தமானவர்கள். ஜெனரல் சக்ரவர்த்தி படத்தில் சிவாஜியின் பெண் கர்ப்பம். அவர் அலைந்து திரிந்து மகளின் காதலனைக் கண்டுபிடித்து கரம்பிடிக்கச் செய்கிறார். கடைசிக்காட்சியில் வீடு திரும்பினால் மனைவி கே.ஆர்.விஜயாவும் கர்ப்பம். சிவாஜி மொத்த திரைச்சீலையை ஆக்ரமித்து சட்டையை மடித்து கையை முண்டா பிடித்து தசையைக் காட்டுகிறார். ராஜப்பன் சொன்னான் ”சோலி தீந்து மக்கா…. சுண்டன் அவள போட்டுத் தள்ளிருவான்…” .நான் பதற்றத்துடன் ”ஏம்லே?” என்றேன். ”பின்ன அவருக்கு வயசு காலம்லா? பெஞ்சாதி கெர்ப்பமா வந்து நிண்ணா கொல்லமாட்டாரா? அதாக்கும் கையை காட்டுதாரு”</p>
<p>ஆனால் கையுடன் படம் முடிந்துவிட்டது. ஒன்றும்புரியவில்லை. கொன்றாரா இல்லையா? ”பின்ன? தட்டுவாணிய சும்மா விடுகதா?”என்று ராஜப்பன். கர்ப்பத்துக்கு அவர்தான் காரணம் ,ஏற்கனவே ”ஹலோ மை டியர் டாக்டர், சுகமில்லை டாக்டர்”என்று பாடினாரா இல்லையா என்றேன். ”அதுபின்ன வயசானா சுகக்கேடு வராதா? சும்மா கெடலே”. தன் குழந்தை என்று மகிழ்ந்து ஏன் சிவாஜி புஜத்தை காட்டியிருக்கக் கூடாது? ”ஆருலே இவன்? கோட்டிக்காரனா இருக்கான்? கைய வச்சா கெர்ப்பம் உண்டாகுது? பேசாம வா” அந்த ஐயம் எனக்கு பத்துவருடம் நீடித்தது.</p>
<p>உச்சம் ‘திரிசூலம்’. அதில் மூன்று நடிப்பு. மும்மடங்கு. இரு கதாபாத்திரங்கள் முழுக்கமுழுக்க நகைச்சுவை. கிழ சிவாஜிக்கு பக்கவாட்டில் பார்த்தால் தலைகீழ் தேங்காய்மூடி போலத்தெரியும் தாடி. அவர் கே.ஆர்.விஜயாவை பிரிந்திருப்பார். பிரிவுத்துயர் தாங்காமல் தினம் இரண்டு லார்ஜ் ஏற்றிக் கொண்டு [சிவாஜி காங்கிரஸ்காரர் ஆதலினால் படத்தில் இக்காட்சியை காட்டமாட்டார்கள். ஊகம்தான்] சாட்டையால் தன்னைத்தானே பளார் பளார் என அடிப்பார். அப்போது எதிர்பார்க்கப்படுவதுபோலவே உதடுகள் துடிக்கும்,கன்னம் அதிரும்.</p>
<p>நடுவே அந்த அம்மாள் ·போனில் இவரைக் கூப்பிட உணர்ச்சிப்பரவசப் பெருவெள்ளம். அரங்கில் அமர முடியாது. போனிலேயே பாட்டு. ”அம்மாடி உன் மேனி பால்வெண்மையோ அழகான உன்பிள்ளை தேன்கிண்ணமோ?” அக்கால வழக்கப்படி டெலி·போன் ஆபரேடர் நடுவே நுழைந்து ”த்ரீ மினிட்ஸ் ஓவர் ப்ளீஸ்” என்று சொல்லியிருப்பார். சிவாஜி ,நடிகர்திலகம். அசருவாரா? அழுதபடியே ”எக்ஸ்டன்ஷன் ப்ளீஸ்”என்று சொல்லியிருப்பார். அந்தம்மா ஈடுகொடுத்து ‘வாங்கி நடிக்கும்’ வல்லமை கொண்டவர். ”என்னங்க? ஏங்க…?” அதற்கு இவர் ” அம்மா, டெலிபோனுக்குச் சொன்னேனம்மா….” என்று ஏங்க, உடனே டெலி·போன் ஆபரேட்டர் ”டூ மினிட்ஸ் மோர் ப்ளீஸ்..”. ”என்னங்க, மிச்சத்தையும் பாடீடுங்க” விம்மல், கேவல். ”அம்மாடி உன்மேனி…”</p>
<p>ஆனால் சின்ன சிவாஜி பெரிசை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு தாம்பூலமும் போட்டுவிடுவார். நூற்று இருபதுகிலோ எடையும், சிவப்பு டபிள் பிரஸ்ட் கோட்டும், வெள்ளை பாண்டும், பூரான்கோடுமீசையும் கொண்ட கல்லூரி மாணவர்! எப்போதும் நடனம் வேறு. காதலியை சந்தித்த முதல்காட்சியிலேயே நடனமாடியபடி அவளிடம் வம்பு செய்து காதலிக்கப்பெறுகிறார். வில்லன்களை அடித்து அவர்கள் எழுந்துவரும் நேரம்வரை நடனமாடுகிறார். ‘கா-தல் ரா-ணி ! அ-கட்டிக்கிடக்க ! அ-கட்டில் இருக்கு! அ-கட்டழகுச் சிலையே வா !’ என்ற அதிவேக பாடல். ‘அ-புனைவு’, ‘அ-விமரிசனம்’ போன்ற சொற்களை விமரிசகர் நாகார்ஜுனன் இப்படத்தை சின்ன அம்பியாக சென்னை தியேட்டரொன்றில் பார்த்தபோதே உருவாக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.</p>
<p>கோடவுன் இல்லாமல் வில்லன் இல்லை. வாஸ்துப்படி அதிலே ‘அப்பாஅம்மாத் தூண்’ என்று ஒரு தூண் நடுவே இருக்கும். அதில்தான் கதாநாயகனின் அப்பா அம்மாவைக் கட்டவேண்டும். கட்டுவதற்கு ஒருவன் இருப்பான். அவனுக்குத்தான் ‘கிளைமாக்ஸ்கட்டு’ என்ற பிரத்யேக முடிச்சு முறை தெரியும். கதாநாயகன் வந்துசேரும்வரை வில்லன் அட்டஹாசமாக சிரிக்க பலவித அடியாட்கள் பலவிதமாக உருட்டி முழிக்க அப்பா அம்மாக்கள்– சிலசமயம் காதலிகளும் உண்டு– உடலை அசக்கி அசக்கி முயன்றாலும் அது அவிழாது. கதாநாயகன் உள்ளே நுழைந்து பறந்து பறந்து பசங்களுக்கு நாலு அடிபோட்டு ”அம்மா!”என்று ஓடிவந்து அதை தொட்டதுமே பொலபொலவென அவிழ்ந்து போகும்.</p>
<p>திரிசூலத்திலே அப்பா அம்மாவைக் காப்பாற்ற இரு சிவாஜிகளும் ஒரு சினிமா தியேட்டருக்குள் ஓடாத காரில் அமர்ந்திருக்கிறார்கள். பின்பக்கம் திரையில் மலைப்பாதையின் காட்சிகள் பின்னோக்கி ஓடுகின்றன. பாட்டு. ”இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்!” அண்ணா சிவாஜி உதடையும் வேண்டிய அளவுக்கு பயன்படுத்தி ஸ்டீரிங்கை கண்டபடி சுழற்றுகிறார். சின்ன சிவாஜிக்கு அப்பாமெல் என்ன கோபமோ ‘நல்லா வேணும் கிழத்துக்கு’ என்ற உற்சாகத்தில் மௌத் ஆர்கனை வாசிக்கிறார். நடுவே நூற்று இருபதுகிலோ எடையுடன் அண்ணா தோளில் ஏறி அமர்ந்தும் வாசிக்கிறார். அண்ணா முகத்தில் நவரஸங்களுடன் மூச்சுத்திணறலும் தெரியும்.</p>
<p>உச்சகட்ட நடிப்பு ”பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன!” என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. தென்னாட்டு மார்லன் பிராண்டோ என்று சிவாஜியை இதன்பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Quotes - Jeyamohan on Historical Archives (Book Reader)]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2007/08/01/quotes-jeyamohan-on-historical-archives-book-reader/</link>
<pubDate>Wed, 01 Aug 2007 14:40:35 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2007/08/01/quotes-jeyamohan-on-historical-archives-book-reader/</guid>
<description><![CDATA[1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1 - மதுரை நாட]]></description>
<content:encoded><![CDATA[<p>1. <a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60707054&#38;format=html">Thinnai</a>: <font color="#ff0000">சில வரலாற்று நூல்கள் 1</font> - <strong>மதுரை</strong> நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: <font color="#008000">ஜெயமோகன் </font><font color="#0000ff">[The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]</font></p>
<p>2. <a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60707265&#38;format=html">Thinnai</a>: <font color="#ff0000">சில வரலாற்று நூல்கள் </font>2 - <strong>திருநெல்வேலி </strong>மாவட்ட ஆவணப்பதிவு - ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: <font color="#008000">ஜெயமோகன் </font><font color="#0000ff">[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]</font></p>
<p>ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட <strong>சிறப்புகள் </strong>உடையவை.<br />
1. தெளிவான செறிவான நடை<br />
2. ஏராளமான தகவல்கள்<br />
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்<br />
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.<br />
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு</p>
<p>அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட <strong>குறைகளும் </strong>உண்டு<br />
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்<br />
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்<br />
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.</p>
<p><font color="#ff0000"><strong>கட்டப்பொம்மு </strong></font>நாயக்கனும் <font color="#ff0000"><strong>பூலித்தேவனும் </strong></font>நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.</p>
<p>பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.</p>
<p>கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.</p>
<hr /> 3. <a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60708026&#38;format=html">Thinnai</a>: <font color="#ff0000">சில வரலாற்று நூல்கள் - 3 </font>-<strong>மதுரை நாயக்கர் </strong>வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: <font color="#008000">ஜெயமோகன் </font>[<font color="#0000ff">பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018</font>]</p>
<ul>
<li>விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான <font color="#ff0000">கிருஷ்ண தேவராயர் </font>இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். [<strong><font color="#0000ff">நான் கிருஷ்ண தேவராயன் </font></strong>என்ற பேரில் <font color="#ff0000">ரா.கி.ரங்கராஜன் </font>ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]</li>
<li>அவர் தன் தளபதி<font color="#ff0000"> நாகம நாயக்கனை </font>மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் <font color="#ff0000">விஸ்வநாத நாயக்கனின்</font> தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது <font color="#ff6600"><em>என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் </em></font>என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் <em>உனக்கு என்ன பரிசு வேண்டும் </em>என்று ராயர் கேட்டபோது அவன் <em>தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் </em>ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை <font color="#ff0000">அகிலன் </font>'<font color="#0000ff"><strong>வெற்றித்திருநகர்</strong></font>' என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]</li>
<li>இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் <font color="#ff0000">மங்கம்மாள் </font>போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்-- இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [<font color="#ff0000">நா பார்த்தசாரதி </font><font color="#0000ff"><strong>ராணிமங்கம்மாள் </strong></font>என்ற நாவலை எழுதியிருக்கிறார்]</li>
</ul>
<p><a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;amp;story_id=60708091&#38;amp;format=html">4. Thinnai</a>: <font color="#ff0000">சில வரலாற்று நூல்கள் <u><strong>4</strong></u></font> - தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: <strong>கெ.ராஜையன் </strong>:: <font color="#008000">ஜெயமோகன் </font>[<font color="#0000ff">Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974</font>]</p>
<ul></ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[This Week's Jeyamohan quota]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2007/04/10/this-weeks-jeyamohan-quota/</link>
<pubDate>Tue, 10 Apr 2007 14:08:58 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2007/04/10/this-weeks-jeyamohan-quota/</guid>
<description><![CDATA[அழிவிலாத கண்ணீர் - கண்மணி குணசேகரனின]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60704055&#38;format=html">அழிவிலாத கண்ணீர் - கண்மணி குணசேகரனின் 'அஞ்சலை' :: ஜெயமோகன்</a></p>
<ul>
<li>கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் 'இல்லாமலேயே' நிகழும் கூறல் அது. <strong>உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது</strong>.</li>
</ul>
<ul>
<li>புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே <strong>அந்தரங்கம் </strong>என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.</li>
</ul>
<ul>
<li>ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, <strong>தன் விதி மீதான வன்மம்</strong>. ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.</li>
</ul>
<ul>
<li>ஒருவரின் சிறு மகிழ்ச்சி கூட பிறரிடமிருந்து பறிக்கவேண்டிய ஒன்றாக அமையுமளவுக்கு <strong>வறுமையும் போட்டியும் நிலவும் உலகம் </strong>அது. அத்துடன் மீட்பு கண்ணுக்குத்தெரியாத கொடிய வறுமை மூலம் உருவான முரட்டுத்தனமும் குரூரமும் அவர்களை ஆள்கிறது.</li>
</ul>
<ul>
<li>துயரமே வாழ்க்கையாக உள்ள அந்தச் சூழலில் ஒவ்வொருவரும் பிறருக்கு முடிந்தவரை தீங்கிழைத்து தங்களுக்கு விதிக்கப்பட்ட கொடிய வாழ்க்கையை மேலும் மேலும் துயரம் மிக்கதாக ஆக்கிக் கொள்கிறார்கள். அந்தச் சூழலின் ஒவ்வொருவருமே அதே நரகத்தில்தான் வாழ்கிறார்கள் என்று தெரிகிறது. ஒவ்வொரு நாளும் தெருவில் சண்டை நடக்கிறது. <strong>உள்ளங்கள் குத்தி</strong> கிழிக்கப்படுகின்றன. எளியமுறையிலான வாழ்க்கையைக்கூட <strong>பக்கத்துவீட்டாரை வதைத்துத்தான் </strong>வாழவேண்டியுள்ளது, அல்லது பக்கத்து வீட்டாரை அஞ்சி வாழவேண்டியுள்ளது.</li>
</ul>
<ul>
<li>கொஞ்சம் கூலி அதிகம் கிடைப்பதற்காக பக்கத்து தெருவுடன் வேலைக்குப் போனால் சிக்கல் உருவாகிறது. பக்கத்து தெருவினர் இந்ததெருவுக்கு ஜென்ம எதிரிகளாக இருக்கின்றனர்.</li>
</ul>
<ul>
<li>ஒரு <strong>பழங்குடிச் சமூகத்தில் </strong>தனிமனித சிந்தனை, தனி வாழ்க்கை என்பதற்கே இடமில்லை. பழங்குடி சமூகமென்பது ஓர் உடல் போல ஒற்றைஅமைப்பு. அதன் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் இறுக்கமாகப் பிணைந்துள்ளது. ஆகவே ஒருவரை அவர் சமூகமே ஒவ்வொரு கணமும் <strong>கண்காணிக்கிறது. கட்டுப்படுத்துகிறது</strong>. பழங்குடிச் சமூகங்களில் சமூகக் கட்டுப்பாடுகள், சடங்குமுறைகள், நம்பிக்கைகள் மற்றும் குடித்தலைவனின் ஆணைகள் கிட்டத்தட்ட இயற்கையின் மாறாவிதிகள் போன்றவை. ஒன்றாகவே சிந்தித்து ஒன்றாகவே வாழும்வரை அது இயல்பாக இருக்கிறது. ஒருவர் சிறிதளவு மீற ஆரம்பித்தால்கூட மொத்தச் சமூகத்தின் அழுத்தமும் மாபெரும் வன்முறையாக அவர் மீது கவிகிறது</li>
</ul>
<ul>
<li>இருபதாம் நூற்றாண்டில் பழங்குடிச் சமூகங்களில் கல்வி ,மதமாற்றம், இடம்பெயர்தல் ஆகியவை நிகழ ஆரம்பித்ததுமே பெரும்பாலான பழங்குடி சமூகங்கள் வன்மூறை மிக்கதாக ஆகிவிட்டன. ஊர்விலக்கு, சமூக விலக்கு முதல் ஊர்க்கொலைகள் வரை நடக்க ஆரம்பித்தன. நம் சமூகத்தின் அடித்தட்டு மக்களிடையே பழங்குடிவாழ்க்கையே தொடர்கிறது என்பதைக் காணலாம்.</li>
</ul>
<ul>
<li>பழங்குடிவாழ்க்கையின் இரு கூறுகள், இறுக்கமான சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்பிரிவினைகள்.</li>
</ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Tamil Quotes to chew]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2007/04/04/tamil-quotes-to-chew/</link>
<pubDate>Wed, 04 Apr 2007 13:06:46 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2007/04/04/tamil-quotes-to-chew/</guid>
<description><![CDATA[ஜெயமோகன்  (நித்ய சைதன்ய யதி நினைவு)
உண]]></description>
<content:encoded><![CDATA[<p><strong>ஜெயமோகன்  </strong>(<a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60703293&#38;format=html"><em>நித்ய சைதன்ய யதி நினைவு</em></a>)</p>
<p>உண்மையை தனக்குத்தானே ஒப்புக்கொள்ள மறுத்தார். அதை என்னால் நுட்பமாக உணர முடிகிறது. அவரே உருவாக்கிய கனவு. அதன் சரிவை இல்லை என கற்பனைசெய்ய அவர் விரும்பினார். சரியாகிவிடும், இதெல்லாம் சிறு பிசிறுகள் மட்டுமே என சமாதானம் செய்துகொள்ள முயன்றார். உண்மையைக் காண்பதை அவர் கடைசி நிமிடம் வரை ஒத்திப்போட்டார்.</p>
<p>காரணம் உண்மை அவ்வளவு கொடூரமானது. அவரது உடலை கூறுபோடும் வாள் போன்றது அவ்வுண்மை. அவரது அதுநாள் வரையிலான வாழ்க்கையே ஒரு பெரிய பிழை என்று சொல்லக்கூடியது அவ்வுண்மை. அவர் தன் மொத்த வாழ்க்கையை தன் படைப்புகளை மொத்தமாக நிராகரிக்கவேண்டியிருக்கும். அவ்வேதனையை அவர் அஞ்சினார். அவ்வெறுமையை அவர் தவிர்க்க முயன்றார்.</p>
<p><strong>ஜெயமோகன்  </strong>(<a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60703292&#38;format=html"><em>பேராசிரியர் ஜேசுதாசன் நினைவு</em></a>)</p>
<p>சான்றோர் <em>(திறனாய்வாளர்கள்</em>) நான்கு அம்சங்களைக் கொண்டவராக இருப்பார்.</p>
<ol>
<li>கல்வி</li>
<li>அழகியல் உணர்வு</li>
<li>அறச்சார்பு</li>
<li>நயத்தக்க நாகரீகம்.</li>
</ol>
<p><strong>பாவண்ணன் </strong>(<a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=607032911&#38;format=html"><em>உயிர்க்கோடுகள் . கே.எம்.ஆதிமூலம், கி.ராஜநாராயணன். தொகுப்பு: புதுவை இளவேனில். அகரம் பதிப்பகம்</em></a>)</p>
<p>மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத அரசு நிர்வாகம் அந்தச் சோர்வின் பின்னணியில் உள்ளது. மக்களுக்காக உழைப்பதற்காக உருவாகும் (<em>அரசு</em>)<em> </em>நிர்வாகம் தன் வளர்ச்சிப்போக்கில் ஏதோ ஒரு கட்டத்தில் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கத் தெரியாத அகங்காரம் நிறைந்த உறுப்பாக மாறிவிடுகிறது. அது வழங்கும் கசப்புகளை விழுங்கும் (<em>விவசாயியின்</em>) முகத்தில் சோர்வைத் தவிர வேறு எதைப் பார்க்கமுடியும்?</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
