<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>ஹதீத் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/ஹதீத்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "ஹதீத்"</description>
	<pubDate>Sat, 19 Jul 2008 18:01:32 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=33</link>
<pubDate>Wed, 16 Apr 2008 19:49:34 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=33</guid>
<description><![CDATA[பகுதி ஒன்று
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த]]></description>
<content:encoded><![CDATA[<h3>பகுதி <a href="http://iniyaislam.wordpress.com/2008/04/04/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4/">ஒன்று</a></h3>
<h3>அஸ்ஸலாமு அலைக்கும்,</h3>
<h3>இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் போலல்ல.</h3>
<h3>இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: <em>"<span style="color:#0000ff;">குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். அலீஃப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலீஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும். மீம் என்பது ஒரு எழுத்தாகும்.</span></em>" (ஆதாரம்: திர்மிதி)</h3>
<h3>எனவே ஒவ்வொரு எழுத்தையும் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் மட்டுமே முஹம்மது நபி (ஸல்) சொல்லுகின்ற வெகுமதிகளை அல்லாஹ்விடம் கோர முடியும். இன்ஷா அல்லாஹ். இனி, ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் விதத்தை காண்போம்.</h3>
<h1 style="text-align:center;"><span style="color:#ff0000;"><span style="text-decoration:underline;">மக்ரஜ்</span></span></h1>
<h3>அரபியில் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பின் பிறப்பிடத்தை குறிக்க மக்ரஜ் (Makhraj) என்னும் சொல்லை உபயோகிப்பார்கள். மக்ரஜ் என்னும் சொல்லின் மூலச்சொல், கரஜ (Kha-Ra-Ja) அல்லது யக்ருஜு(Ya-Kh-Ru-Ju) ஆகும். கரஜ  அல்லது யக்ருஜு என்றால், "வெளியில் செல்வது" என்பது பொருளாகும். இங்கு அதன் பொருளானது, உச்சரிப்பு வெளிக்கிளம்பும் விதம் எனக் கொள்ளலாம்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>உலெமாக்களின் கூற்று:</strong></span></span></h3>
<h3>மக்ரஜ் என்றால், ஒரு எழுத்தின் உச்சரிப்பு பிறக்கும் இடம், அல்லது அந்த எழுத்தின் ஒலி உருவாகும் இடம். தஜ்வீத் உலெமாக்கள் இதனை அல்‍=மகாரிஜ் என குறிப்பிடுகின்றார்கள். அல்=மகாரிஜ் என்பது, மக்ரஜ் என்னும் சொல்லின் பன்மையாகும்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்தின் வித்தியாசங்கள்:</strong></span></span></h3>
<h3>ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பும் வேறு விதமானாலும், சில எழுத்துக்களின் ஒலி ஒரே இடத்தில் இருந்து வெளியாவதும் உண்டு.  உதாரணத்திற்கு "பா" மற்றும் "மீம்", இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பும் உதடுகளிலிருந்து உருவாகின்றன. ஆனால் உச்சரிக்கும் விதம் வேறானதாகும். இவ்வாறு ஒரே இடத்திலிருந்து உருவானாலும் அதன் உச்சரிக்கும் விதம், அவ்வெழுத்தின் குணம் ஆகியன மாறுபடும். ஒவ்வொரு எழுத்தின் இயல்புக் குணத்தை குறிக்கும் சொல்லே ஸிஃபா என‌ப்படும்.ஸிஃபா என்றால் 'அரபி எழுத்தின் இயல்புக்குணம்' என்று பொருள். என்வே ஒரே மக்ரஜைக் கொண்ட எழுத்துக்களை வேறுபடுத்த ஸிஃபா (அஸ்ஸிஃபாத்‍ பன்மை) உபயோகப் படுகின்றது.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>அரபி எழுத்</strong></span><span style="text-decoration:underline;"><strong>து</strong></span></span><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>க்களின் ஒலி:</strong></span></span></h3>
<h3>அடிப்படையில் அரபியில் 28 வகையான ஒலிகள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விதமான ஒலி. ஆனால், சில தஜ்வீத் உலெமாக்கள் "அலிஃப்" என்னும் எழுத்தும் "ஹம்ஜா" என்னும் எழுத்தும் ஒரே வகையான ஒலியைக் கொண்டவையே என்று வாதிடுகின்றனர். அவ்வாறு நோக்கின், 27 வகையான ஒலிகளே அரபியில் உள்ளன.</h3>
<h3>இனி மக்ரஜைப் பற்றி விரிவாக காண்போம்.</h3>
<h2><strong><span style="text-decoration:underline;"><span style="color:#993300;">மக்ரஜின் எண்ணிக்கை:</span></span></strong></h2>
<h3>அல்லாமா அல் இமாம் ஷேக் உல் குர்ரா அல் இமாம் அல் ஜஜரி (புகழ் பெற்ற காரி){Al Imaam Shaykhul Qurraa Al Jazari} தன்னுடைய "முகத்திமதுல் இமாமல் ஜஜரி"  என்னும் புத்தகத்தில் 17 வகையான மக்ரஜ் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 28 வகை எழுத்துக்கள் இருப்பினும் மக்ரஜ் (ஒலி உருவாகும் இடம்) 17 வகையே. தஜ்வீத் உலெமாக்களிடையே இந்த தொகையைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் உண்டு. அல் இமாம் ஷாஃபீஈ 16 வகையான மக்ரஜ் உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் பல உலெமாக்கள் 14 வகையான மக்ரஜே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இமாம் அல்ஜ்ஜரி{Al Jazari} தன்னுடைய வாதத்தை பல்வேறு துறைகளைச் சார்ந்த உலெமாக்களை (இலக்கணம், கிராஅத், நஹ்வ்...) சந்தித்து அவர்களின் வாத‌ங்களை ஆராய்ந்த பின்னரே 17 வகை என முன் வைக்கிறார்.</h3>
<h3>இனி வரும் பகுதிகளில் மக்ரஜ்ஜின் அடிப்படைகளைப் பற்றியும், இன்னும் விரிவான மக்ரஜ்ஜையும் காண்போம் இன்ஷா அல்லாஹ்.</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இல்மும், இஸ்லாத்தின் மறுமலர்ச்சியும்]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=26</link>
<pubDate>Wed, 26 Mar 2008 22:50:30 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=26</guid>
<description><![CDATA[&#8220;இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண]]></description>
<content:encoded><![CDATA[<h3><span style="color:#993366;">"இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்."</span>,</h3>
<h3>என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.</h3>
<h3>[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நம்பிக்கையாளனின் மேன்மை]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=23</link>
<pubDate>Sat, 22 Mar 2008 17:25:50 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=23</guid>
<description><![CDATA[ஸஹல் பின் ஸா&#8217;த், ஜாபிர் பின் அப்தில்]]></description>
<content:encoded><![CDATA[<h3>ஸஹல் பின் ஸா'த், ஜாபிர் பின் அப்தில்லாஹ், மற்றும் அலீ பின் அபி தாலிப் (<em>ரதியல்லாஹுஅன்ஹு</em>ம்) அறிவிக்கிறார்கள் : நபி முஹம்மது (<em>ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்</em>) கூறினார்கள் , " ஜிப்ரீல் (<em>அலைஹிஸ்ஸலாம்</em>) என்னிடத்தில் வந்து,</h3>
<blockquote>
<h3>' முஹம்மதே, நீங்கள் விரும்புகின்ற வரை வாழ்ந்து கொள்ளுங்கள், ஏனெனில், கண்டிப்பாக நீங்கள் மரணிப்பீர்கள்;<br />
யாரை வேண்டுமானாலும் நேசியுங்கள், ஏனெனில், கண்டிப்பாக அவரை நீங்கள் பிரிவீர்கள்;<br />
எந்த காரியமாகிலும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக அதற்குண்டான தீர்ப்பை சந்திப்பீர்கள்;<br />
மேலும் தெரிந்து கொள்ளுங்கள் ‍ ஒரு நம்பிக்கையாளனின் மேன்மை, அவனின் இரவு வணக்கத்தில் / ஃகியாமில் உள்ளது, மற்றும் அவனது கண்ணியம், அவன் பொருளுதவிக்காக மற்றவர்களை எதிர்பாராமல் வாழ்வதில் உள்ளது'</h3>
</blockquote>
<h3>என்று கூறினார்".</h3>
<h3>[ அத் தபரானி அவர்கள் 'அல் அஸ்வத்'தில் பதிவு செய்துள்ளார். பைஹகீயின் நூலிலும், இன்னும் பலரின் நூலிலும் உள்ளது. அல்பானீ அவர்கள் தன்னுடைய 'அஸ் ஸஹீஹாஹ்' நூலில் (பக்கம்-831) 'ஹஸன்' தரமுள்ளது என பதிவு செய்துள்ளனர்]</h3>
<h3>இந்த ஹதீத்தை <a href="http://blessedmuslimah.wordpress.com" target="_blank">இங்கிருந்து </a>தமிழில் பதிவு செய்துள்ளேன். தமிழாக்கத்தில் எந்த தவறு இருந்தாலும், சுட்டிக் காட்டவும். நன்றி.</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பெண்ணின் பொறுப்பு]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=22</link>
<pubDate>Wed, 19 Mar 2008 03:19:28 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=22</guid>
<description><![CDATA[அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அ]]></description>
<content:encoded><![CDATA[<h3>அப்துல்லாஹ் இப்னு உமர் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்,</h3>
<blockquote>
<h3><span style="color:#333399;">" நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். <span style="color:#ff0000;">பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். </span>அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்."</span></h3>
</blockquote>
<h3>மேலும் நபியவர்கள் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறியதாக நான் எண்ணுவதாவது,</h3>
<blockquote>
<h3><span style="color:#333399;">" ஒரு மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான். அவனே அதைப் பாதுகாப்பவனும் ஆவான். எனவே நீங்கள் அனைவரும் தமக்கு கீழுள்ள குழந்தைகளுக்கும், செல்வத்திற்கும் பொறுப்பாளி ஆவீர்கள்"</span> (புகாரி தொகுதி : 3, புத்தகம் : 41, எண் : 592)</h3>
</blockquote>
<h3>சகோதரிகளே, கவனிக்க வேண்டிய விடையம் இது. நம்மில் எவ்வளவு பேர் தொலைக்காட்சியிலும், கதை புத்தகங்களிலும் இன்னும் பிற அனாச்சரங்களிலும் நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் குழந்தை வளர்ப்பு விடையத்திலும், வீட்டை பராமரிப்பதிலும், வயது வந்த மகன்/மகளின் இஸ்லாமிய பழக்க வழக்கங்களை கவனிப்பதிலும் அசட்டையாகவே இருந்து விடுகிறோம். இது கவனிக்கப்பட வேண்டிய விடையம் இல்லையா? பிள்ளைகளை காஃபிர்களின் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தொலைக்காட்சியில் மூழ்குகின்றோம். பிள்ளைகளை மதரஸாவிற்கு அனுப்பி விட்டு நாம் தொழக்கூட நேரமில்லாமல் வம்பளப்பதிலும், புறம் பேசுவதிலும் நேரம் செலவிடுகின்றோம். இவையெல்லாம் கேள்வி கணக்கில் வராதா? அல்லது நாம் வயதானபின் குர்ஆன் படித்தோ, ஹஜ்ஜிற்கு சென்றோ இப்பாவங்களை விலை பேசிவிடலாம் என்றோ முடிவு செய்திருக்கின்றீர்களா? நினைவில் கொள்ளுங்கள், அல்லாஹு சுபஹானஹு வத ஆலா நாடாமல், அவன் கிருபை இல்லாமல் நாம் மறுமை நாளில் வெற்றியடைய இயலாது. அல்லாஹ்வின் அருகாமை கிட்ட மிக முக்கிய செயல் அவன் நம் பொறுப்பில் இட்டதை செவ்வனே செயலாற்றுவதே. அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியில் உள்ளவர்களாக்குவானாக. அவனின் கோபத்திலிருந்தும், நிராகரிப்பிலிருந்தும் நம்மை காத்தருள்வானாக. ஆமீன்.</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[உன்னைப் பற்றி கவலைப் படு...]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=16</link>
<pubDate>Mon, 17 Mar 2008 17:45:53 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=16</guid>
<description><![CDATA[அப்துல்லாஹ் இப்னு மஸூத் (ரதியல்லாஹு ]]></description>
<content:encoded><![CDATA[<h3>அப்துல்லாஹ் இப்னு மஸூத் (ரதியல்லாஹு அன்ஹு) அவர்கள், முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக கூறினார்கள்,</h3>
<h3>"உண்மையில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான பேச்சு எதுவெனில், அவனின் அடியான்,"<span style="color:#993366;"> யா அல்லாஹ், புகழனைத்தும் உனக்கே, பாராட்டுக்களும் உனக்கே, உன் பெயரே சாந்தியுடையது, உன் கம்பீரமே மேன்மையானது, மேலும் உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறு எவருமிலர்</span>" என்று கூறுவது.  [சுபஹான கல்லாஹும்ம வபி ஹம்திக் வத பார கஸ்முக் வத'ஆல ஜத்துக் வலா இலாஹ ஃகைருக்]</h3>
<h3>மேலும் அல்லாஹ் மிகவும் வெறுக்கும் பேச்சு எதுவெனில், ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து,<span style="color:#993366;">" அல்லாஹ்வை அஞ்சுவாயாக" <span style="color:#000000;">என்று கூற அம் மனிதனோ பதிலிற்கு,</span> "நீ உன்னைப் பற்றி கவலைப் படு" </span>என்று கூறுவது "</h3>
<h3>மூலம்: சில்சிலாத் அல் ‍ அஹதீத் அஸ் ஸஹீஹா :#2598</h3>
<h3>::ஆங்கிலத்தில் <a href="http://ia341027.us.archive.org/1/items/benefit_vol2_issue2/vol2_issue2.pdf">இங்கே </a>படிக்க‌::</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இமாம் நவாவியின் நபிமொழி நாற்பது -1]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=10</link>
<pubDate>Wed, 12 Mar 2008 22:23:14 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=10</guid>
<description><![CDATA[
அமீருல் மு&#8217;மி்னீன், அபூ ஹஃப்ஸ் உமர்]]></description>
<content:encoded><![CDATA[<h3><img src="http://fortyhadith.iiu.edu.my/images/hadith01arabic.gif" alt="" width="405" height="390" /></h3>
<h3>அமீருல் மு'மி்னீன், அபூ ஹஃப்ஸ் உமர் பின் அல் கத்தாப் கூறியதாவது: "<span style="color:#993366;">செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே எவருடைய ஹிஜ்ரத் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் கட்டளைக்கேற்ப அமையுமோ அவரின் ஹிஜ்ரத்தை அவ்வாறே அல்லாஹ் கருதுவான். மேலும் ஒருவரின் ஹிஜ்ரத் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணந்து கொள்வார். எனவே இவர்களின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அதுவாகவே அமைந்து விடுகிறது</span>" என்று நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சஹீஹ் புஹாரி மற்றும் முஸ்லிம்)</h3>
<h3><span style="text-decoration:underline;"><strong>பின்னணி:</strong></span></h3>
<h3>முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், அல்லாஹ் ஹிஜ்ரத் செய்ய அனுமதி அளித்ததும் மு'மி்ன்கள் அனைவரும் இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் செய்தனர், ஒருவரைத் தவிர. அவரின் நோக்கம் ஒரு பெண்ணை கல்யாணம் செய்வதற்காகவே அமைந்தது. இச்சம்பவத்தின் அடிப்படையில் நபியவர்கள் (ஸல்) மேற்கண்டவாறு கூறினார்கள்.</h3>
<h3>இஸ்லாத்தின் மி்கச் சிறந்த நபிமொழிகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.</h3>
<h3>இமாம் ஷாஃபியீ அவர்கள் கூறினார்கள், " <span style="color:#0033ff;"><em>இஸ்லாத்தின் மூன்றில் ஒரு பகுதி ஞானம் இந்த ஹதீத்திலேயே அடங்கிவிடுகின்றது. ஃபிக்'ஹின் 70 விஷயங்கள் இதில் உள்ளடங்குகின்றன.</em></span>"</h3>
<h3>இமாம் அஹ்மது (இமாம் ஷாஃபியீ அவர்களின் கூற்றை குறிப்பிட்டு கூறுகையில்)  அவர்கள் கூறினார்கள், " <span style="color:#0033ff;"><em>இஸ்லாம் மூன்று அடிப்படை விஷயங்களின் மேல் அமைந்துள்ளது.</em></span> " (மூன்று விஷயங்களும் நாற்பது நபிமொழிகளில் உள்ளவை.)</h3>
<h3><strong>1. ஹதீத் (1) :</strong> மேற்காணும் ஹதீத்<br />
<strong>2. ஹதீத் (5) : </strong>' எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்திற்கு ஒவ்வாத எந்த ஒரு விஷயத்தையும் இஸ்லாத்தில் புகுத்த முயன்றால் அது நிராகரிக்கப்படும்."<br />
<strong>3. ஹதீத் (6) :</strong> " <em>நிச்சயமாக, அனுமதிக்கப்பட்டது தெளிவாகிவிட்டது, அனுமதிக்கப்படாததும் தெளிவாகிவிட்டது, இவை இரண்டுக்கும் இடையில் உள்ள சந்தேகத்துக்கிடமான விஷயங்களைப் பற்றி மக்கள்...</em>"</h3>
<h3>(இம் மூன்று ஹதீதுக்களும் சஹீஹ் புகாரி- முஸ்லிமி்ல் உள்ளன)</h3>
<h3>ஒரு முஸ்லிம் தன் அன்றாட வாழ்வில் 'இபாதத்' என்னும் சொல்லை உபயோகிக்கும் பொழுது, அவனின் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிடும் அளவுகோலாக இம் மூன்று ஹதீதுக்களும் செயல்படுகின்றன.</h3>
<h3><strong>ஹதீத் 1: </strong>தத்தம் உள்ளத்தின் செயல்களை அளவிடவும், மதிப்பிடவும்.<br />
<strong> ஹதீத் 5:</strong> தத்தம் அவயங்களின் செயல்களை அளவிடவும், மதிப்பிடவும்.<br />
<strong> ஹதீத் 6: </strong>'மு'மலாத்' அல்லது ஒரு முஸ்லிம் மற்றெவரோடும் செயல்படும் விதத்தை அளவிடவும், மதிப்பிடவும்.</h3>
<h3><strong>'நிய்'யத்'</strong> எனும் சொல் இரண்டு பொருள் கொண்டது:</h3>
<h3>1. ஒரு இபாதத் செய்யும் முன்னர் உள்ள நோக்கம்.<br />
2. அதை செயல்படுத்துவதில் உள்ள மன உறுதி.<br />
இவற்றில் இரண்டாவதாக உள்ள பொருளையே இந்த ஹதீத் குறிப்பிடுகிறது.</h3>
<h3>*==*==*==*==*==*==*==*==*==*==*==*==*</h3>
<h3></h3>
<h3>இனி இந்த ஹதீத் கூறும் பாடங்களை காண்போம்.</h3>
<h3>முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதை துவங்கும் பொழுது அடிப்படைக் கோட்பாட்டை ('செயல்கள் எண்ணத்தை பொறுத்தே அமைகின்றன') முதலில் கூறிய பின்னரே அதற்கு உதாரணம் கூறுகிறார். இஃதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். இந்த உதாரணங்கள் மக்களுக்கு அடிப்படை கோட்பாட்டை எளிதாக விளங்கிக் கொள்ளவும், இதையொத்த மற்ற சந்தர்ப்பங்களில் இந்த கோட்பாட்டை பயன்படுத்தவும் உதவுகின்றன. ஒரு நன்மை பயக்கும் உள் நோக்கமும் (அல்லாஹ்விற்கும், அவனது ரசூலிற்காகவும் ஹிஜ்ரத் செய்வது), இரு தீமை பயக்கும் உள்நோக்கங்களும் (உலக ஆதாயத்திற்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ ஹிஜ்ரத் செய்வது) இந்த மூன்று ஹதீதுக்களிலும் உள்ளடங்கியுள்ளன.</h3>
<div>
<h3>‍=======================</h3>
</div>
<h3>இந்த ஹதீத் '<em><strong>இக்லாஸை</strong></em>' வலியுறுத்துகிறது. (<em><strong>இக்லாஸ் </strong></em>என்றால், அல்லாஹ்விடம் உண்மையுடனும் நேர்மையுடனும் இருப்பது, அல்லாஹ்விற்காக, அவன் திருப்திக்காக மட்டுமே அமல்கள் செய்வது, அவ்வாறு செய்யும்போது அல்லாஹ்வை மட்டுமே சாட்சியாக்குவது)  நல்‍‍‍ அமல்கள் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட 'இக்லாஸ்' ஒரு தலையாய நிபந்தனையாகும். மற்றுமோர் நிபந்தனை என்னவெனில், அமல்கள் 'ஷரீ‍ அத்தின்' சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். (இந்த நிபந்தனை 5வது ஹதீத்தில் விவரிக்கப்பட்டுள்ளது)</h3>
<h3>இந்த நிபந்தனைகளை '<em><strong>ஷஹாதத்</strong></em>'திலும் காணலாம்:</h3>
<ol>
<li>
<h3>' நான் அல்லாஹ் மட்டுமே இறைவன், அவனை தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு சாட்சி கூறுகிறேன்.' ‍‍--&#62; இது இக்லாஸ், அல்லாஹ்விற்காக மட்டுமே, அவன் திருப்திக்காக மட்டுமே நம் செயல்கள் அமையவேண்டும் என்பது.</h3>
</li>
<li>
<h3>'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்' --&#62; நபிவழி / சுன்னத் என்பது குர்'ஆனை தெளிவுற வெளிக்காட்டுகின்ற செயல்முறையாகும். இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தலை சிறந்த முன் மாதிரி ஆவார்கள். அவரையே நாம் பின்பற்ற கடமைப் பட்டுள்ளோம். நம்முடைய இபாதத்தில், நம்முடைய நன்னெறிகளில், நம்முடைய கொடுக்கல்=வாங்கல்களில் சுன்னத்தை பின் பற்றுவது என்பதே ஷரீ'அத்தை நாம் பின்பற்றுகிறோம் என்பதன் சாட்சியாகும்.</h3>
</li>
</ol>
<h3>இவ்வாறே, <em><strong>ஷஹாதத்‍ </strong></em>நம்முடைய அமல்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும், எவ்வாறு இருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கும் நிபந்தனைகளை தெளிவு படுத்துகிறது.</h3>
<ul>
<li>
<h3>அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அமல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே அமைய வேண்டும்.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3>அமல்கள் ஷரீ'அத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாய் அமைய வேண்டும்.</h3>
</li>
</ul>
<div>
<h3>===========</h3>
</div>
<h3>இக்லாஸை அடைய நாம் '<em><strong>ஷிர்க்</strong></em>'கை தவிர்க்க வேண்டும். (<em><strong>ஷிர்க்</strong></em>= அல்லாஹ்விற்கு இணை வைப்பது, அதன் மூலம் நம் உள்ளத்தூய்மையையும், நேர்மையையும் தவறுவது) அல் இமாம் அல் ஹராவி அவர்கள்," சுய விருப்பத்தை முன்னிறுத்துவதே ஷிர்க்கிற்கு ஆணிவேராகும்' என்று கூறினார்கள். எனவே எந்த ஒரு செயலும் சுய விருப்பத்திற்காக செய்யப்படக் கூடாது.</h3>
<h3>அல் இமாம் அல் ஹராவி 7 வகையான சுய விருப்பங்கள் உள்ளதாக கூறுகிறார்கள்:</h3>
<h3>1. மற்றவர் உள்ளத்தில் தன்னை சிறந்தவனாக பதிய விரும்புதல்.<br />
2. மற்றவரின் முகஸ்துதிக்கு ஏங்குதல்.<br />
3. மற்றவர் தம்மை பழி சுமத்துவதை தவிர்த்தல்.<br />
4. மற்றவர் தம்மை புகழ்ந்து பேச‌ முயற்சி செய்தல்.<br />
5. மற்றவரின் செல்வத்திற்கோ, பணத்திற்கோ ஆசைப் படுதல்.<br />
6. மற்றவர்களின் அன்பிற்கோ சேவைக்கோ ஆசைப்படுதல்.<br />
7. தமக்கென பிறர் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொள்ளல்.</h3>
<div>
<h3>==============</h3>
</div>
<h3><span style="text-decoration:underline;">இக்லாஸை அடையும் வழிமுறைகள்:</span></h3>
<h3><strong>1. நல் அமல்களை செய்யுங்கள்: </strong>அல்லாஹ்விற்கென அதிக அமல்கள் செய்வதும், அல்லாஹ்வின் அருகாமையைப் பெறுவதும், நம் உள்ளத்தூய்மைக்கு வழி வகுக்கும்.</h3>
<h3><strong>2. எந்த செயலையும் செய்யும் முன்னர் அதற்கான இல்மை(அறிவை) பெற வேண்டும்: </strong>அந்த இல்மானது, நம் அமல்கள் ஷரீ'அத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உள்ளதா என்பதை வெளிச்சமிட்டுக் காட்டும்.</h3>
<h3><strong>3. தவறான எண்ணங்களுக்கு வழி வகுக்காதீர்கள் :</strong> மற்றவர்கள் நாம் நற்செயல் புரிந்த்தாய் எண்ணிகொண்டிருக்க, அச்செயல் முறைகேடாய் இருப்பது.</h3>
<h3>4. அல் இமாம் அஹ்மது கூறினார்கள்,"<strong> எந்த ஒரு செயலையும் செய்யும் முன்னர் அதற்கான உள் நோக்கத்தை மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.</strong> செயல்படும் முன்னர் தமக்கு தாமே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள், " அல்லாஹ்வின் திருப்தி பெற வேண்டியா இந்த செயல்?"</h3>
<div>
<h3>=============</h3>
</div>
<h3>இப்னுல் கய்யூம் கூறுகிறார்கள்: நம்முடைய ஒவ்வொரு செயலையும் மூன்று குறைகள் சூழ்ந்துள்ளன.<br />
1. நம் காரியங்களை மற்றவர்கள் கவனித்துக் கொண்டுள்ளார்கள் என்னும் எண்ணம்.<br />
2. எந்த ஒரு செயலுக்கும் சன்மானத்தை / பயனை எதிர் பார்ப்பது.<br />
3. நாமே நம் செயலைக் கொண்டு திருப்தி கொள்வது.<br />
<span style="text-decoration:underline;">உதாரணம்:</span></h3>
<ul>
<li>
<h3>தொழுகைக்கென மஸ்ஜிது சென்று, இமாமிற்கு முன்னர் நாம் வந்திருப்பதைக் கண்டும், முதல் ஸர்ஃபில் இடம் கிடைத்ததைக் கொண்டும், நம்மை நாமே புகழவோ, பிறரைவிட நாம் சிறந்தவர்களாக எண்ணிக் கொள்வதோ கூடாது. மாறாக நம்மை எந்த ஒரு துன்பமும் நேராமல் தொழுகைக்கு வர வழி வகுத்த அல்லாஹ்விற்கே புகழ் கூற வேண்டும்.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3>ஒவ்வொரு தொழுகைக்கு பின்னரும், அடுத்த முறை தொழும் பொழுது இன்னும் அதை விட அழகாக செய்யவும், இன்னும் முன்னேறவும் எண்ண வேண்டும்.</h3>
</li>
</ul>
<div>
<h3>================</h3>
</div>
<h3>இதுவரையில் சரி, ஆனால் நாம் ஒரு செயலை செய்து கொண்டிருக்கும்பொழுது நம் நிய்யத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது??</h3>
<h3>இப்னு ரஜப் அவர்களின் கூற்று என்னவெனில், உலெமாக்களைப் பொறுத்தவரை ஒரு செயலை செய்து முடித்த பின் உள்ள உள்‍-நோக்கமும், அந்த செயலை தொடங்கும் பொழுது இருந்த உள்-நோக்கமும் சமமாக அல்லது ஒன்றாகவே இருந்தால், இடையில் வந்த எந்தவொரு மாற்றமும் மன்னிக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். எனினும், செயலின் இறுதியில் உள்ள உள்-நோக்கமும், தொடக்கத்தில் இருந்த உள்நோக்கமும் ஒன்றாக இல்லையெனில், (நம் செயல் / அமல் அல்லாஹ்வின் திருப்திக்காக இல்லாமல் வேறொருவரின் திருப்திக்காக வேண்டி அமைந்து விட்டால்...)  நாம் உடனே தவ்பா செய்தாக வேண்டும்.</h3>
<h3>======================</h3>
<h3>நான்கு விடையங்கள் இக்லாஸிற்கு முரணானவை:</h3>
<h3><strong>மாஸி'யத்</strong> - பாவங்கள் செய்வது - இச்செயல்கள் இக்லாஸை பலவீனமானதாக ஆக்கி விடும்.<br />
<strong> ஷிர்க்</strong> - அல்லாஹ்விற்கு இணை வைப்பது.<br />
<strong> அர் ரியா</strong> - மற்றவரின் மதிப்பில் உயர்வதற்காக செயல்கள் செய்வது.<br />
<strong> நிஃபாக் / முனாஃப்பீக்குத்தனம்</strong> - வேஷதாரி</h3>
<h3>நம்முடைய ஒவ்வொரு செயலின் உள்-நோக்கமும் இக்லாஸை பொருந்திக் கொண்டுள்ளதா என சோதிக்க வேண்டும் என்றாலும், சில அமல்கள் தானாகவே நல் அமல்களாக கருதப் படுகின்றன / ஆகிவிடுகின்றன. உதாரணமாக, இஸ்லாத்தின் இல்மை கற்பது / கற்க‌ முயற்சி செய்வது , சமூகத்திற்கு உதவுவது, தா'வா செய்வது...ஆகியவை.</h3>
<h3>========================</h3>
<h3>உலெமாக்கள் / இஸ்லாமிய அறிஞர்கள் இந்த ஹதீத்திலிருந்து வெளிக்கொணர்ந்த பாடங்கள் யாவையெனில்</h3>
<ul>
<li>
<h3>யாரொருவர் அடிக்கடி "<em><strong>வல்லாஹி</strong></em>" / "அல்லாஹ்வின் மீது ஆணையாக" என்று கூறுகிறாரோ, உண்மையில் அவரின் உள் நோக்கம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதல்ல. பழக்கதோஷத்திலேயே அவ்வாறு கூறுகிறார். இடைவிடா பழக்கத்தினாலேயே அவரின் வாயை விட்டும் அவ்வாறு வந்து விடுகின்றது. என‌வே அதனால் ஒரு தீங்குமில்லை. எனினும், ஒவ்வொரு முஸ்லிமும் அவ்வாறு கூறுவதை தவிர்க்க வேண்டும்.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3>யாரேனும் ஒருவர் சத்தியம் செய்ய கடமைப்பட்டால், அவரின் வாய் வார்த்தையை விட்டும் அவரின் உள்நோக்கமே கணக்கில் கொள்ளப்படும்.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3>ஒன்றுக்கு மேற்பட்ட உள்நோக்கங்கள் / நிய்யத்துக்கள் ஒரு செயலில் அமையலாம். உதாரணமாக ஒரு வணக்கத்தை அல்லாஹ்விற்கென செய்யும் அதே வேளையில், பிறருக்கு கற்பிக்கும் நோக்கமும் கொள்ளலாம். இதன் முன்மாதிரி யாதெனில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்யும்போது, அவர்களின் நிய்யத் அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே இருந்த போதிலும், அந்த செயலே சஹாபாக்களுக்கு(அல்லாஹ் அவர்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வானாக) ஹஜ் எவ்வாறு செய்ய வேண்டும் என கற்பித்தது.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3>ஒரு மனிதன் தன் மனைவியை எழுத்தின் மூலமாகவோ அல்லது சட்டமன்றத்தின் மூலமாகவோ விவாகரத்து செய்தாலும், அதை செய்யும் போது அவனின் உள் நோக்கம் / நிய்யத் என்ன என்பதே கணக்கில் கொள்ளப்படும்.</h3>
</li>
</ul>
<ul>
<li>
<h3><em><strong>கிபா</strong></em>வாக வெளியில் தெரிந்தாலும், உண்மையில் அது ஒரு விட்டாகவோ / து'ஆ ஆகவோ அமைவது.  (<em><strong>கிபா</strong></em> = மற்றவரைப் பற்றி அவர் அவ்விடத்தில் இல்லாத பட்சத்தில், உண்மையாக இருந்தாலும் அவரின் தவறை / இயலாமையை குறைகூறுவது)  அவ்வாறு மற்றவரைப் பற்றி பேசிடும் போது பேசுபவரின் உள்நோக்கம் என்னவோ அதுவே அச்செயல் கிபாவா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.</h3>
</li>
</ul>
<h3><span style="text-decoration:underline;"><strong>முடிவுரை</strong></span>:</h3>
<h3>நம் செயல்கள் அனைத்தும் நம் நிய்யத்துக்களைக் கொண்டே (அவை நல்லெண்ணங்களா அல்லது தீமையானவையா) மதிப்பிடப்படுகின்றன. நம் அமல்கள் அல்லாஹ்வினிடத்தில் அங்கீகரிக்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நிய்யத்துக்களைக் கொண்டே அமைகின்றன.  எனவே எந்த ஒரு செயலை செய்யும் முன்னரும் அல்லது ஒரு சொல்லை கூறும் முன்னரும் நாம் நமது நிய்யத்துக்களை சரி பார்க்க வேண்டும். நம் செயல்க‌ள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்தி பெற மட்டுமே அமையவும், அவனிடத்தில் நற்கூலி பெற்றுத் தரக் கூடியவையாக‌ அமையவும் நாம் து'ஆ செய்வோம், இன்ஷா அல்லாஹ்.</h3>
<h3>இன்ஷா அல்லாஹ் மேலும் வளரும்...</h3>
<h3>To read in English:<a href="http://fortyhadith.iiu.edu.my/hadith01.htm" target="_blank"> http://fortyhadith.iiu.edu.my/hadith01.htm</a></h3>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
