<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>வைரமுத்து &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/வைரமுத்து/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "வைரமுத்து"</description>
	<pubDate>Mon, 08 Sep 2008 06:14:43 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு: பாடல் வரிகள்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4292</link>
<pubDate>Mon, 30 Jun 2008 20:20:42 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4292</guid>
<description><![CDATA[இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமு]]></description>
<content:encoded><![CDATA[<blockquote><p><span style="color:#ff0000;"><em>இசை</em></span>: <strong>வித்யாசாகர்</strong></p>
<p><span style="color:#ff0000;"><em>பாடலாசிரியர்</em></span>: <strong>வைரமுத்து</strong></p>
<p><span style="color:#ff0000;"><em>இயக்கம்: </em></span><strong>திருமுருகன்</strong></p></blockquote>
<p><em>ஆண்</em>:<br />
<span style="color:#0000ff;">கட்டிப்பிடிக்கும் கரடிய நம்புங்க<br />
எட்டிமிதிக்கும் யானைய நம்புங்க</span></p>
<p><span style="color:#0000ff;">ஸ்டிக்கர் பொட்டுக்காரிகள நம்பாதீங்க<br />
அப்புறம் சீரழிஞ்சு பிஞ்சிலேயே வெம்பாதீங்க</span></p>
<p><span style="color:#0000ff;">கண்ணால காதல் கொடுப்பா<br />
ஒரு நேரம் வந்தா காதலுக்கே கடுக்கா கொடுப்பா</span></p>
<p><span style="color:#0000ff;">முந்தான தந்தியடிப்பா<br />
நீ கிட்ட வந்தா மூஞ்சியிலே எட்டியுதைப்பா</span></p>
<p><em>பெண்</em>:<br />
ஒட்டிக் கெடக்கும் செங்கல நம்புங்க<br />
...???... கூரைய நம்புங்க</p>
<p>கட்சி மாறும் ஆம்புளைய நம்பாதீங்க<br />
பிறகு கத்திரியில் ...???... வெம்பாதீங்க</p>
<p>சீனி முட்டா வாங்கிக் கொடுப்பான்<br />
அத முடிச்சதுமே சீமத்தண்ணி ஊத்தியடிப்பான்</p>
<p>ராமனப் போல் நல்லா நடிப்பான்<br />
உன்ன ஒறங்கவிட்டு காமனுக்கு தந்தியடிப்பான்</p>
<p><em>ஆண்:<br />
</em><span style="color:#0000ff;">கொளத்துல மீனிருந்தா<br />
கொத்தவரும் கொக்கு வரும்</span></p>
<p><span style="color:#0000ff;">வெக்கயில தண்ணி கொறஞ்சா<br />
கொளத்த மாத்தி றெக்கையடிக்கும்</span></p>
<p><span style="color:#0000ff;">பொம்பளையும் கொக்கு<br />
இதப் புரிஞ்சுக்காதவன் மக்கு</span></p>
<p><em>பெண்:<br />
</em>பொட்டிபணம் உள்ளவரைக்கும்<br />
பொம்பளயக் காலப்பிடிப்பான்</p>
<p>ரொக்கமுள்ள முண்டச்சி கண்டா<br />
வெக்கம் விட்டு சீலத் துவைப்பான்</p>
<p>ஆம்பளதான் பொறுக்கி<br />
இத அறியாதவ சிறுக்கி</p>
<p><em>ஆண்:<br />
</em><span style="color:#0000ff;">சத்தியமும் செஞ்சு கொடுப்பா<br />
சமயம் பாத்து சாமத்துல கழுத்த அறுப்பா</span></p>
<p><span style="color:#0000ff;">சட்டிப்பானை எல்லாம் மறைப்பா<br />
ஒன்ன உறங்கவிட்டு தாந்தின்னியா தின்னு தீர்ப்பா</span></p>
<p><em>பெண்</em>:<br />
தாலி தந்த பொம்பளையோட<br />
தலகாணியில் ஒட்டிக் கெடப்பான்</p>
<p>கோழி கூவும் சாமத்துல<br />
கொழுந்தியாளக் கட்டிப் பிடிப்பான்</p>
<p>கொரங்கு மனசுக்காரன்<br />
அவன் குடிகெடுப்பதில் சூரன்</p>
<p><em>ஆண்:</em><br />
<span style="color:#0000ff;"> கடலெல்லாம் பொங்கி வரட்டும்<br />
காதல் மட்டும் மூழ்காதப்பா</span></p>
<p><span style="color:#0000ff;">பெத்தவுங்க கண்ணீர் சொட்டில்<br />
மொத்தத்தையும் மூழ்கடிப்பா</span></p>
<p><span style="color:#0000ff;">பெரிய நடிப்புக்காரி<br />
அவ பேச்சில்லாத லாரி</span></p>
<p><em>பெண்:</em><br />
ஆம்பளைக்கு வருத்தமெல்லாம் ...???...<br />
பொம்பளைக்கு வருத்தமெல்லாம் இந்த மண்ணவிட்டு போகுற காலம்வரைக்கும்</p>
<p><span style="color:#ff0000;"><em>பாடலைக் கேட்க: </em></span><a href="http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.9805">Kattipidikkum Karadiya :: Muniyandi Vilangiyal Moondramandu</a></p>
<blockquote><p><em>ஒத்த முந்தைய பாடல்: </em><a href="http://www.rakkamma.com/filmsongdetails.phtml?filmid=394&#38;songid=1672">மண்வாசனை :: பாட்டுக்கு பாட்டெடுத்தேன்</a></p>
<p><em>தொடர்புள்ள எசப்பாட்டு இடுகை: </em><a href="http://ninaivu.blogspot.com/2004/11/11.html">வே.சபாநாயகம் :: புதுமைப்பித்தன், ஒட்டக்கூத்தர், கம்பர், ஔவை</a></p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நண்பர்களை சம்பாதிப்பதே பெரிது-ரஜினி]]></title>
<link>http://carthickeyan.wordpress.com/?p=66</link>
<pubDate>Mon, 23 Jun 2008 11:25:42 +0000</pubDate>
<dc:creator>carthickeyan</dc:creator>
<guid>http://carthickeyan.wordpress.com/?p=66</guid>
<description><![CDATA[வைரமுத்து மகன் மதன் கார்க்கி-நந்தினி]]></description>
<content:encoded><![CDATA[<p>வைரமுத்து மகன் மதன் கார்க்கி-நந்தினி திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி ரஜினிகாந்த் பேசியதாவது: </p>
<p>கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடே வராது என்று யாரேனும் கூறினால் அதை நம்பாதீர்கள். நிச்சயம் எல்லா தம்பதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரும். திருமதி ரஜினிகாந்த் உள்பட!.</p>
<p>கருத்து வேறுபாடுகளே இல்லை என்று சொல்பவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு ஊரையும் ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.</p>
<p>இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. விட்டுக் கொடுத்து அனுசரித்துப்போக வேண்டும். விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதால் வாழ்க்கை கசந்து போகாமல் இருக்கும். இதை என் அனுபத்திலிருந்தே மணமக்களுக்குச் சொல்கிறேன்.</p>
<p>பணம், பெயர், புகழைவிட நண்பர்களை சம்பாதிப்பது மிகப் பெரிய விஷயம். இவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் கவிஞர் வைரமுத்து நண்பர்களை சம்பாதித்து இருப்பதை கண்டு பெருமிதம் கொள்கிறேன், ரஜினி.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[வைரமுத்துவின் கவிதைகள் MP3 வடிவில்]]></title>
<link>http://barthee.wordpress.com/?p=380</link>
<pubDate>Mon, 02 Jun 2008 06:01:26 +0000</pubDate>
<dc:creator>barthee</dc:creator>
<guid>http://barthee.wordpress.com/?p=380</guid>
<description><![CDATA[
ஓ நாயகரா
சோலைக்குப் பிறந்தவளே
விறகு ]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://thoughtsintamil.blogspot.com/images/200502/vairamuththu.jpg" alt="" /></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Oh%20Niagara.mp3">ஓ நாயகரா</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Solaikku%20Piranthavalea.mp3">சோலைக்குப் பிறந்தவளே</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Viraku%20Avan.mp3">விறகு அவன்</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Rathiri%20Ragam.mp3">ராத்திரி ராகங்கள்</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Oru%20Maji%20Manthiri.mp3">ஒரு மாஜி மந்திரி</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Nathijodu%20Utaijadi.mp3">நதியோடு உரையாடி</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Kathalithu%20Paar.mp3">காதலித்துப் பார்</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Kathal%20Chithan.mp3">காதல் ஜித்தன்</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/&#38;file=Kadaisi%20Pagal.mp3">கடைசிப் பகல்</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/Irakka%20Mudiya.mp3">இறக்க முடியாத</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/index.php?dir=Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/">என்னடி அம்மா</a></p>
<p><a href="http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20Audio%20Books/Kavi%20Vairamuthu%20Varigal/Anthi%20Yaar%20Ankea.mp3">அந்தி</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பொறுத்தது போதும்]]></title>
<link>http://vijaygopalswami.wordpress.com/?p=7</link>
<pubDate>Sun, 06 Apr 2008 05:50:41 +0000</pubDate>
<dc:creator>vijaygopalswami</dc:creator>
<guid>http://vijaygopalswami.wordpress.com/?p=7</guid>
<description><![CDATA[தமிழன் அடிபட்டது மட்டுமே தலைப்பு செய]]></description>
<content:encoded><![CDATA[<p>தமிழன் அடிபட்டது மட்டுமே தலைப்பு செய்தியாய்ப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருந்த என் நெஞ்சு, தமிழன் திருப்பி அடித்ததைப் பார்த்து குளிர்ந்த்து போனது இப்போதுதான். நண்பர்கள் நேரிலும் தொலைபேசியிலும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.</p>
<p>சங்கீதா குழும உணவகங்கள், டாடா உடுப்பி உணவகங்கள், கன்னட சங்கப் பள்ளிக்கூடம் ஆகியவை தாக்கப்பட்டதை அறிந்தபோது தமிழனுக்கு சொரணை வந்துவிட்டது என்று மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தவறுதான் ஆனாலும் தமிழன் எத்தனை காலம் தான் அடி வாங்கிக்கொண்டே இருப்பது. இப்படியாவது எதிர்வினை காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.</p>
<p>இப்போது அடித்துவிடலாம், உதைத்துவிடலாம் என்று பேசி இருக்கிறார் கன்னடத்து சூப்பர் ஸ்டார். இதே சூப்பர் ஸ்டார் தமிழ்நாட்டில் விளையாடிய  விளையாட்டுகளையும் மறந்த்துவிடக் கூடாதல்லவா.</p>
<p>உடுப்பி ஓட்டலில் விழுந்த அடி போயஸ் கார்டனில் இருந்த சூப்பர் ஸ்டாரை பேண்ட்டில் ஒன்னுக்கு இருக்க வைத்ததா இல்லையா? இல்லையென்றால் வந்திருப்பாரா உண்னாவிரதத்துக்கு? இதே போல திரை உலகம் நெய்வேலியில் போராடிய போது என்ன செய்தார் நமது கன்னடத்து சூப்பர் ஸ்டார். தனியாக சென்னையில் உண்னாவிரதம் இருக்கிறேன் என்று சில்லரை அரசியல் செய்தார்.</p>
<p>சூப்பர் ஸ்டாரின் தனி ஆவர்தனத்துக்கு எஸ்.எம். கிருஷ்னாவிடமிருந்து பாராட்டு மழை வந்தது. உண்மையாய் போராடிய சத்தியராஜ், பாரதிராஜா ஆகியோர் உயிரோடு இருந்த போதே தெவசம் நடத்தினார்கள். வாயைத் திறந்து ஒரு வார்தை கண்டித்தாரா இந்த சூப்பர் ஸ்டார்.</p>
<p>இப்போது பல பேரைப் புருவம் உயர்த்த வைக்கும் கேள்வி, எந்த தைரியத்தில் சூப்பர் ஸ்டார் இந்த உண்னாவிரதத்தில் கலந்து கொண்டார் என்பது தான். பதில் மிக எளிமையானது. இரண்டே விஷயங்கள் தான். ஒன்று, தியாகராய நகருக்கு கல்லையும் கட்டையையும் எடுத்துக் கொண்டு போனவர்கள் போயஸ் தோட்டத்துக்கும் வந்துவிடுவார்களோ என்ற பயம். இன்னொன்று, தான் தனியாக உண்னாவிரதம் இருந்த போது பாராட்டியதைப் போலவே, இப்போதும் போராட்டத்தில் கலந்து கொண்டாலும் கன்னடர்கள் தன்னைப் பாராட்டுவார்கள் என்று எண்ணியிருக்கலாம். அல்லது தன்னுடைய படங்களுக்கு லன்டன், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட அகில உலக மார்க்கெட் இருக்கும் போது கர்நாடகா மாநிலம் கைவிட்டுப் போனால் ஒன்றும் குடிமுழுகி விடாது என்ற வியாபாரக் கணக்காகக் கூட இருக்கலாம்.</p>
<p>இதற்கு சிவாஜி படத்தின் புள்ளி விபரங்களே சாட்சி. தமிழ் நாட்டை விடவும் ஆந்திராவுக்கு ஐந்து பிரிண்ட்டுகள் அதிகம். ஆங்கிலப் படங்களுடன் போட்டியிட்டு முதல் பத்து இடங்களுக்குள் இடம் பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம் சிவாஜி. நூறு கோடியை நெருங்கிய சிவாஜி படத்தின் வியாபாரம், ஆகியவை தந்த தெம்பு தான் சூப்பர் ஸ்டாரை உண்னாவிரத மேடை வரை அழைத்து வந்தது.</p>
<p>”அவ்வளவு உணர்ச்சி மயமாக பேசினாரே சூப்பர் ஸ்டார்” என்று கேட்கிற அப்பாவி ஜந்துக்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகிறேன், சூப்பர் ஸ்டார் ஒரு சிறந்த வியாபாரி, அதை விடவும் சிறந்த நடிகர். ஆறிலிருந்து அறுபது வரை, நல்லவனுக்கு நல்லவன் போன்ற ஒரு சில படங்களை மட்டுமே சூப்பர் ஸ்டாரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்களே ஆனால், youtube மற்றும் google videosல் தேடிப் பாருங்கள். ஏப்ரல் நாலாம் தேதி சேப்பாகத்தில் பதிவு செய்யப்பட்ட அவருடைய சிறந்த நடிப்பு காணக் கிடைக்கும்.</p>
<p>சத்தியராஜ், வைரமுத்து போன்றவர்களின் பேச்சு கவனிக்கத் தக்கதாக அமைந்திருந்தது. சத்தியராஜின் பேச்சில் நகைச்சுவை இருந்தாலும், அங்கே அவரது வலியையும் உணர முடிந்தது. பெரியாராகவே நடித்தவர் பெரியாரைப் போலவே மற்றவர்கள் தொடப் பயப்படும் விஷயங்களையும் தைரியமாகவே தொட்டுப் பேசினார். வைரமுத்துவின் பேச்சு வரலாற்று ஆதாரங்களுடன் சமகால ஆதாரங்களையும் எடுத்துக் காட்டியாது. சூப்பர் ஸ்டாரை தூக்கிப் பிடிக்கிற வேலை உங்களுக்கு எதற்க்கு கவிஞரே. உறுத்துகிறது. சூப்பர் ஸ்டார் படத்தில் பாட்டெழுதினால் தான் உங்களை நாங்கள் மதிப்போமா? தாயாக, பாட்டியாக உணர்ச்சிமயமாக நடிக்கக் கூடிய மனோரமா அவர்கள் நடிப்பில்லாமல் பேசிவிட்டுப் போனார். பேச்சின் இடையே, கன்னடத்துப் பைங்கிளி என்று தமிழர்கள் அன்போடு அழைக்கும் சரோஜா தேவிக்கு நேர்ந்த அவமானத்தையும் கண்டித்தார். இது தான் தமிழனின் உள்ளம், தமிழச்சியின் உள்ளம் என்று அவர்களும் புரிந்து கொள்ளட்டும்.</p>
<p>”கம்யூனிஸ்ட்டுகளைப் போல் நீங்களும் போராட வேண்டிய காலம் வந்துவிட்டது” என்று கலைஞருக்கு சரத்குமார் விடுத்த அழைப்பு வரவேற்கத் தக்கது. ஏற்பதும் மறுப்பதும் கலைஞர் கையில். மனோரமா, சரத்குமார் போன்றோர் சூப்பர் ஸ்டாருக்கு அந்த “ஒரு கோடி” ஸ்டண்ட்டை நினைவுபடுத்தியதும் பாராட்டத் தக்கது.</p>
<p>தமிழ் நடிகர்களின் உண்னாவிரதத்திற்குப் போட்டியாக கன்னட நடிகர்களும் போராட்டம் அறிவித்திருந்த போதும் (போராட்டம் தோல்வியடைந்தது வேறு விஷயம்), கர்நாடகாவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், முரளி, அர்ஜுன் போன்றோரும் இந்த உண்னாவிரத மேடைக்கு வந்திருந்தது பாராட்டத் தக்கது.</p>
<p>இதே தமிழ்த் திரைஉலகைக் குறித்து எனக்கு ஒரு கோபமும் உண்டு. மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் அங்கே கலை நிகழ்ச்சி நடத்தச் சென்றது தான் அது. இந்த போராட்டத்திற்காக அந்த முட்டாள்தனத்தை தமிழர்கள் மன்னிப்பார்களாக.</p>
<p>தமிழன் கர்நாடகாவில் அடிபட்டால் மட்டுமல்ல, இலங்கையில் அடிபட்டாலும், மலேசியாவில் அடிபட்டாலும், இதே போன்ற ஓற்றுமையைக் காட்ட வேண்டும். கன்னடர்கள் வாலாட்டும் ஒவ்வொரு முறையும் இதே ஒற்றுமை தொடர வேண்டும்.  இதுவரை நாம் பொறுத்தது போதும் . . .</p>
<blockquote><p>இப்பதிவு சனிக்கிழமை மாலை பதிவேற்றம் செய்யப் பட்டது. திங்கட்கிழமை என் கருத்துக்கு வலுவூட்டும் விதமாக சூப்பர் ஸ்டாரே ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டார். அவருடைய படங்கள் கர்நாடகத்தில் ஓடவில்லையென்றால் அவருக்கு ஒரு நஷ்டமும் இல்லையாம்.</p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் ]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4060</link>
<pubDate>Fri, 21 Mar 2008 04:04:51 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4060</guid>
<description><![CDATA[ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்]]></description>
<content:encoded><![CDATA[<p>ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? <a href="http://uspresident08.wordpress.com/2008/03/02/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/">மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்</a>; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?</p>
<p><font color="#ff0000">ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் </font></p>
<p>1. 'அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க' - <font color="#0000ff">அழகே உன்னை ஆராதிக்கிறேன்</font></p>
<p>2. 'செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா' கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்'</p>
<p>3. 'வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!' - <font color="#0000ff">செம்பருத்தி </font></p>
<p>4. 'போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி' - <font color="#0000ff">சிங்காரவேலன்</font></p>
<p>5. 'கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு': <font color="#0000ff">ஒரு தலை ராகம்;</font> ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப 'அட பொன்னான மனசே பூவான மனசே' என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.</p>
<p>6. 'எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?' - எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய <a href="http://snapjudge.wordpress.com/2008/01/16/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-disaster-lyricism/">காளை 'குட்டிப் பிசாசே'</a>வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.</p>
<p>7. 'தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்' - <font color="#0000ff">சிந்துபைரவி</font></p>
<p>8. 'காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம' - <font color="#0000ff">பாலைவன ரோஜாக்கள்</font></p>
<p>9. 'ஆசை நூறு வகை' (அசல்): <font color="#0000ff">அடுத்த வாரிசு</font></p>
<p>10. 'கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!' - <font color="#0000ff">முந்தானை முடிச்சு</font></p>
<blockquote><p><i>தொடர்புள்ள பதிவுகளில் சில</i>:</p>
<ul>
<li><a href="http://snapjudge.wordpress.com/2005/10/25/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/">பத்து பாட்டு « Snap Judgment</a></li>
<li><a href="http://snapjudge.wordpress.com/2004/01/06/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/">எனக்குப் பிடித்த பாடல்கள் « Snap Judgment</a></li>
<li><a href="http://jeyamohan.in/?p=320">jeyamohan.in » Blog Archive » குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்</a></li>
<li><a href="http://halwacity.com/blogs/?p=195">போட்டுத் தாக்கு!!! » Blog Archive » இதுக்கு எடமிருக்கா?</a></li>
<li><a href="http://thenkinnam.blogspot.com/">தேன் கிண்ணம்</a></li>
</ul>
</blockquote>
<p><font color="#ff0000"><b>பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்...</b></font></p>
<p>1. 'கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!' - <font color="#008000">உள்ளம் கொள்ளை போகுதே</font></p>
<p>2. 'தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது' - <font color="#008000">மகாநதி</font></p>
<p>3. 'காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்' - <font color="#008000">தம்பிக்கு எந்த ஊரு</font></p>
<p>4. 'மன்றம் வந்த தென்றலுக்கு' - <font color="#008000">மௌன ராகம்</font></p>
<p>5. 'கொஞ்ச நாள் பொறு தலைவா' - <font color="#008000">ஆசை</font></p>
<p>6. 'வசீகரா' - <font color="#008000">மின்னலே</font></p>
<p>7. 'பச்சை நிறமே' - <font color="#008000">அலைபாயுதே</font></p>
<p>8. 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... ஒற்றை நாணயம்' - <font color="#008000">ஆனந்தம்</font></p>
<p>9. 'மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே' - <font color="#008000">ரோஜாக்கூட்டம்</font></p>
<p>10. 'குறுக்கு சிறுத்தவளே' - <font color="#008000">முதல்வன் </font></p>
<p><i>சிறப்பு கொசுறு</i>: 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' - <font color="#008000">ஆட்டோகிராப்</font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காளை &amp; Disaster Lyricism]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2008/01/16/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-disaster-lyricism/</link>
<pubDate>Wed, 16 Jan 2008 22:26:35 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2008/01/16/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-disaster-lyricism/</guid>
<description><![CDATA[ ஆண்: குட்டிப் பிசாசே
குட்டிப் பிசாசே
]]></description>
<content:encoded><![CDATA[<p> <i><font color="#999999">ஆண்</font></i>: குட்டிப் பிசாசே<br />
குட்டிப் பிசாசே<br />
உன் தொல்ல தாங்கலே</p>
<p><i><font color="#999999">பெண்</font></i>: சுட்டிப் பிசாசே<br />
சுட்டிப் பிசாசே<br />
உன்னால தூங்கலே</p>
<p><i><font color="#999999">ஆண்</font></i>:  <font color="#ff0000">ட்வின் டவர் மேல ஏர்க்ராஃப்ட் போல</font><br />
<font color="#ff0000"> என் மேல மோதுனா என்னாவது?</font></p>
<p><i><font color="#999999">பெண்</font></i>: ஹ்ம்ம்<br />
<font color="#ff0000"> உன்மேல மோதி<br />
உற்சாகம் கோடி<br />
உண்டாகத்தானே<br />
</font> நான் மே மாசம் பெண்ணானது</p>
<p>தொடர்புடைய <a href="http://xavi.wordpress.com/2008/01/07/charu/"><b>சேவியரின் பதிவு</b></a>:</p>
<blockquote><p>கட்டிக் கொண்டு கையாடச் சொன்னது காமச் சாமியோ<br />
நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீதான் சுனாமியோ ? </p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புத்தம் புது பூமி வேண்டும்...]]></title>
<link>http://srinig.wordpress.com/2007/11/20/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf/</link>
<pubDate>Tue, 20 Nov 2007 15:27:56 +0000</pubDate>
<dc:creator>ஸ்ரீநிவாசன்</dc:creator>
<guid>http://srinig.wordpress.com/2007/11/20/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%bf/</guid>
<description><![CDATA[&#8220;திருடா திருடா&#8221; திரைப்படத்தில் எ]]></description>
<content:encoded><![CDATA[<p>"திருடா திருடா" திரைப்படத்தில் எனக்குப் மிகவும் பிடித்த பாடல் ஒன்றின் வரிகள்...</p>
<blockquote><p>புத்தம் புது பூமி வேண்டும்<br />
நித்தம் ஒரு வானம் வேண்டும்<br />
தங்க மழை பெய்ய வேண்டும்<br />
தமிழில் குயில் பாட வேண்டும்</p>
<p>......</p>
<p>சொந்த ஆகாயம் வேண்டும்<br />
ஜோடி நிலவொன்று வேண்டும்<br />
நெற்றி வேர்க்கின்ற போது<br />
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்</p>
<p>வண்ண விண்மீன்கள் வேண்டும்<br />
மலர்கள் வாய் பேச வேண்டும்<br />
வண்டு உட்காரும் பூ மேலே<br />
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்</p>
<p><strong>கடவுளே கொஞ்சம் வழி விடு<br />
உன் அருகிலே ஓர் இடம் கொடு<br />
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு<br />
பூமியில் சில மாறுதல் தனை வர விடு</strong></p>
<p>......</p>
<p><strong>யுத்தம் இல்லாத பூமி<br />
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்<br />
மரணம் காணாத மனித இனம்<br />
இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்</strong></p>
<p><strong>பஞ்சம் பசி போக்க வேண்டும்<br />
பாலைவனம் பூக்க வேண்டும்<br />
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்<br />
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்</strong></p>
<p><strong>போனவை அட போகட்டும்<br />
வந்தவை இனி வாழட்டும்<br />
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்<br />
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்</strong></p>
</blockquote>
<p>பாடல் முழதுமே எனக்குப் பிடித்தது தான், அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை bold செய்திருக்கிறேன். <em>"புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு"</em>, மற்றும் அந்த கடைசி இரண்டு வரிகள், இதிலெல்லாம் வெளிப்படும் கருத்துகள் எத்தனை ஆழம்! எத்தனை அழகு!</p>
<p>இந்த திரைப்படம் வந்த போது நான் சின்னப் பையன். ரஹ்மானின் இசைக்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு அறிவு கிடையாது. இடைப்பட்ட காலத்திலும் போகிற போக்கில் அப்பப்போது இப்பாடலை கேட்டிருக்கிறேன்... புரிந்தாலும் பெரிதாக ஒன்றும் விளங்கியதில்லை. இப்போதும் கூட கவிதைகளையெல்லாம் ரசிக்கத் தெரிவதில்லை எனக்கு. ஆனால் நேற்றிரவு பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஒரு அழகான பிரார்த்தனை, இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு affirmation போலல்லவா இருக்கிறது. வைரமுத்துவுக்கு ஒரு சபாஷ்!</p>
<p>இதோ அந்தப் பாடல், நீங்கள் கேட்டு(ம் பார்த்தும்) ரசிப்பதற்கு...<br />
<span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/o7NVkHetqLo'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/o7NVkHetqLo&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
<p>இதே படத்தில் வரும்  "ராசாத்தி..." பாடலும் எனக்குப் மிகவும் பிடித்த ஒன்று. வைரமுத்துவின் வரிகளுக்காக என்பதை விட ஷாகுல் ஹமீதின் குரலுக்காக (<em>"என் உயிரு என்னுதில்லை"</em> என்று பாடிய அவரது உயிர் இளமையிலேயே பிரிந்தது ஒரு பெரிய இழப்பு). ரஹ்மானின் இசையில் அந்தப் பாடலுக்கு இன்னொரு தனிச்சிறப்பும் உண்டு, என்ன அது? பெரிய சிதம்பர ரகசியமெல்லாம் இல்லை, நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்.... தெரியாதவங்க கீழே இருக்கும் வீடியோவை பார்த்து (கேட்டு) கண்டுபிடிச்சு மறுமொழியா சொல்லுங்க. அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு நான் அப்புறமா சொல்றேன். </p>
<p><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/R-_LFu8tRHw'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/R-_LFu8tRHw&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நெஞ்சினிலே...]]></title>
<link>http://sivasongs.wordpress.com/2007/07/09/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/</link>
<pubDate>Mon, 09 Jul 2007 12:47:07 +0000</pubDate>
<dc:creator>sivaramang</dc:creator>
<guid>http://sivasongs.wordpress.com/2007/07/09/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87/</guid>
<description><![CDATA[நான் சேரதேசத்தில் பிறந்தவள். மலைவளமு]]></description>
<content:encoded><![CDATA[<p>நான் சேரதேசத்தில் பிறந்தவள். மலைவளமும், நீர்வளமும்,அடர்ந்த கானகவனமும் கொண்ட தேசமும் போலவே நானும், வடிவும் வனப்பும் கொண்டு உனக்காக காத்திருப்பவள். நீ கைப்பிடிக்கும் நாள் எண்ணி நோன்பிருப்பவள்.</p>
<p style="text-align:center;"><img border="0" width="450" src="http://i158.photobucket.com/albums/t97/sgs_raman/dilse.jpg?t=1183987183" height="232" /></p>
<p>ஆசைகளை உயிரென்னும் கயிர் கட்டி உன் ஓரப்பார்வை பட்டு அவிழட்டும் என விட்டுவைத்திருப்பவள். அவிழ்த்து என்னை அரவணைக்க வா! தங்கமாய் வடித்திருக்கிறான் என்னைப்படைத்த என் தேவன். உன் உதடுகள் பட்டு தங்கங்கள் உருகி நம் உடலுக்கும் உயிருக்கும் ஆபரணங்கள் வடிக்கட்டும் வா!</p>
<p>இசையின் வகைகள் ஈராயிரம் கேட்டிருக்கிறேன். உயிரின் ஓசை கேட்க எனக்கு ஆசை. ஊர் ஓசை அடங்கியதும் உயிரின் ஓசை கேட்போம் விரைந்து வா. உன் வருகையினால் நிகழப்போகும் வசந்த கால வாசனைகளுக்கு முன்னோட்டமாய் மஞ்சள் பூசிக் குளித்திருந்தேன். நல்ல கெட்டியான பட்டு அது. உன் நிறத்தை ஞாபகப் படுத்தும் செந்நிற பட்டு. மிகவும் சிரத்தை எடுத்து மடிப்பு கலையாமல் உடுத்திக்கொள்கிறேன், அணைக்கும் உனது கைகள் பட்டு கசங்குப்போகும் நினைவுகள் என் மஞ்சள் அத்தனையையும் சிகப்பாக்கிப்போயின.</p>
<p>கூந்தல் முழுதும் பதியும் வண்ணம் மலர்சூட்டி வைத்திருக்கிறேன். கூந்தல் முழுதும் மலர்வாசம். நீ வந்து சேரும் இரவு முடிந்ததும் எல்லாவற்றிலும் உன் வாசமே வீசும். மலர்கள் எல்லாம் கட்டிலில் நசுங்கி இனி சோகமாகவே பேசும்.</p>
<p>வானிலும் இல்லை. மண்ணிலும் இல்லை. நிலவிலும் இல்லை. வெக்கை, வெளி,ஆறு, காடு என எங்கேயும் கிடைக்காத ஏதோ ஒன்று, ஏகாந்தமான ஏதோ ஒன்று உனக்குள் நானும், எனக்குள் நீயும் தேட விரைந்து வா. அணையட்டும் என் இல்லத்தின் அனைத்து தீபங்களும். வெளிச்சத்தில் கிடைக்காத ஏகாந்தம் இந்த கும்மிருளில் நமக்கு வாய்க்கட்டும்.</p>
<p>எத்தனையோ காமங்களை வெட்கமின்றி பார்த்துவிட்ட நிலவுக்கும் நாணம் விளைவிக்கும் வண்ணம் - மேகப்போர்வை உடுத்தி தூங்கும் வண்ணம் கூடலாம் வா!</p>
<p>பாடல் : நெஞ்சினிலே..நெஞ்சினிலே</p>
<p>இயற்றியவர் : வைரமுத்து</p>
<p>இசை : A.R.ரஹ்மான்</p>
<p>பாடியவர் : S.ஜானகி.</p>
<table border="0" cellPadding="4" cellSpacing="0" style="font-size:11px;color:#000;font-family:Arial, Helvetica, sans-serif;background-color:#ffffff;border:#cccccc 1px solid;padding:0;">
<tr>
<td align="center"></td>
</tr>
<tr>
<td align="center" vAlign="bottom" style="font-size:11px;"><a href="http://www.esnips.com/doc/337a5e3e-0004-4d93-a8f7-5be52862c777/Nenjinile/?widget=flash_player_guitar">Nenjinile.mp3</a></td>
</tr>
</table>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கம்பனுக்கு ஒரு கேள்வி]]></title>
<link>http://kundavai.wordpress.com/2007/01/20/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/</link>
<pubDate>Sat, 20 Jan 2007 03:37:00 +0000</pubDate>
<dc:creator>kundavai</dc:creator>
<guid>http://kundavai.wordpress.com/2007/01/20/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/</guid>
<description><![CDATA[டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது ]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://djthamilan.blogspot.com/2007/01/blog-post_116844761137538733.html">டிசே</a>வின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.</p>
<p>நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன். (என்னை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பதிவர்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். மூடிருந்தால் சொல்கிறேன் அன்று.)</p>
<p>மற்றபடிக்கு இன்றைக்கு கடேசி பதிவு இதுதான் என்று வாக்களிக்கிறேன். இதுவரை ஒருவழியாக நாளொன்றைக்கு ஒரு பதிவு போடாவிட்டாலும் கொஞ்சம் மீள்பதிவு கொஞ்சம் சுயபதிவு என்று ப்ளாக் உலகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று. இனி கவிதை.</p>
<p>ராப்பகலாய் பாட்டெழுதி<br />ராசகவி ஆனவனே<br />தமிழென்னும் கடலுக்குள்<br />தரைவரைக்கும் போனவனே</p>
<p>சூத்திரம்போல பாட்டெழுதும்<br />சுகக்கவியே நான் உனக்கு<br />மனுஷப்பூ மாலையிட்டா<br />மரியாதை ஆகாது</p>
<p>இந்திர லோகத்து<br />இளசுளை தேவரெல்லாம்<br />மோகக் கிறுக்கெடுத்து<br />முந்நூறு முத்தமிட<br />முத்தமிடுங் கூத்துகளை<br />மூத்தநிலா பார்த்துவிட</p>
<p>இட்ட முத்தத்து<br />எச்சில் கரையழிக்க<br />வட்டில் அமுதெடுத்து<br />வாய்கழுவ வாய்கழுவ</p>
<p>வாய்கழுவும் அமுதமெல்லாம்<br />வாய்கால் வழியோடி <br />கற்பக மரங்களுக்கு<br />கால்கழுவக் கால் கழுவ</p>
<p>கால்கழுவும் சுகவெறியில் <br />கற்பக மரமபூக்க<br />அந்த பூவையெல்லாம்<br />அரும்போடு கிள்ளிவந்து<br />வானவில்லில் நார்கிழித்து<br />வகையாக மாலைகட்டி<br />சொல்லரசே நான் உனக்குச்<br />சூட்டிவிட வேணுமல்லோ</p>
<p>நான் உனக்கு<br />மனுஷப்பூ மாலையிட்டா <br />மரியாதை ஆகாது</p>
<p>சொல்லுக்குள் வாக்கியத்தை <br />சுருக்கிவச்ச கவிப்புலவா</p>
<p>உன்னை இதுவரைக்கும்<br />ஒருகேள்வி கேட்கலையா</p>
<p>தினம்வடிச்ச கண்ணீரால்<br />தீவுக்குள் கடல்வளர்த்து</p>
<p>அசோகவனத்திருந்து சீதை<br />அழுதாளே அவளை நீ<br />கண்ணால் பார்க்கலையே<br />கவிமட்டும் சொன்னாயே<br />அம்பிகா பதியிழந்து<br />அமரா வதியுனது<br />காதுக்குள் அழுதாளே</p>
<p>ஊமை வெயிலுக்கே<br />உருகிவிட்ட வெண்ணெய் நீ<br />அக்கினி மழையிலே<br />அடடாவோ உருகலையே</p>
<p>கடவுள் காதலைநீ<br />கதைகதையாய் பாடினையே<br />மனுஷக் காதலைநீ<br />மரியாதை செய்யலையே</p>
<p>இந்தக்கேள்வியை, ஓ<br />எங்குபோய் நான்கேட்க<br />பாடிவச்ச கவிஇல்லே<br />படிச்சவுக சொல்லுங்க.</p>
<p>- எழுதினது வைரமுத்து, வைரமுத்து இன்னுமொறு முறை வைரமுத்து.(வேணும்னா இப்படியும் எழுதினது நானில்லை...)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பெயர் சொல்ல மாட்டேன் - வைரமுத்து]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/12/13/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0/</link>
<pubDate>Wed, 13 Dec 2006 08:35:37 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/12/13/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%b0/</guid>
<description><![CDATA[அமர்களம் படத்தில் வரும் &#8216;சத்தம் இல]]></description>
<content:encoded><![CDATA[<p>அமர்களம் படத்தில் வரும் 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' &#38; 'மேகங்கள் எனைத் தொட்டுப்போனதுண்டு' என்ற இரு பாடல்களும் வைரமுத்துவின் 'தமிழுக்கு நிறம் உண்டு' என்ற தொகுப்பில் இருக்கும் 'கேள் மனமே கேள்' &#38; 'பெயர் சொல்ல மாட்டேன்' கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில வரிகளாகும். இவ்விரு கவிதைகளில் எனை மிகவும் கவர்ந்தது 'பெயர் சொல்ல மாட்டேன்'.</p>
<p>பெயர் சொல்ல மாட்டேன்<br />
----------------------------------</p>
<p>மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சில<br />
    மின்னல்கள் எனை உரசிப் போனதுண்டு<br />
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்<br />
    சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டு<br />
மோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்<br />
    மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை<br />
ஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரி<br />
    அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை</p>
<p>கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்<br />
    கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்<br />
பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்<br />
    பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்<br />
விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்<br />
    வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்<br />
பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்<br />
    பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன் </p>
<p>விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளி<br />
    விந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்<br />
சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒரு<br />
    தாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்<br />
சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறு<br />
    சிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்<br />
கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்<br />
    கண்ணோடு தொடங்குதடி எனது பாடல் </p>
<p>உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அது<br />
    உள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்<br />
உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அது<br />
    உதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்<br />
உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அது<br />
    உடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்<br />
உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்<br />
    உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும் </p>
<p>செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி<br />
    தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்<br />
செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது<br />
    தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?<br />
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி<br />
    எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்<br />
இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்<br />
    இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்</p>
<p>பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்<br />
    பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்<br />
சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்<br />
    சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்<br />
எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்<br />
    இளமைக்குத் தீயிட்டே எரிக்க  மாட்டேன்<br />
மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்<br />
    வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்</p>
<p>கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்<br />
    காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்<br />
துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடி<br />
    தூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்<br />
பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுக<br />
    பூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்<br />
கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்<br />
    கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்</p>
<p>கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்<br />
    குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்<br />
கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளி<br />
    குறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்<br />
மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணை<br />
    முட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சி<br />
ஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்<br />
    உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி </p>
<p>- வைரமுத்து (தொகுப்பு - தமிழுக்கு நிறம் உண்டு) </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இதனால் சகலமானவர்களுக்கும் - ரசித்த வரிகள் ]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/12/11/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-/</link>
<pubDate>Mon, 11 Dec 2006 08:12:38 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/12/11/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-/</guid>
<description><![CDATA[இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் ]]></description>
<content:encoded><![CDATA[<p>இந்தப் பிரபஞ்சம் முழுக்கக் கொட்டிக் கிடக்கும் வாழ்க்கை அவனைக்கூப்பிடுகிறது.  ஆனால், வாழ்க்கைக்கு எதிரான திசையிலேயே அவன் உதிரம் கசியும் கால்களோடு ஓடிக்கொண்டேயிருக்கிறான்.  தேன் கொள்ளப் போகும் ஈக்களுக்குத் தேனே சமாதியாகிவிடுவது மாதிரி, இந்த நூற்றாண்டுமனிதன் தன் தேவைகளைத் தேடுவதிலேயே ஆயுளைத் தீர்த்து விடுகிறான். <br />
*****<br />
ஞானத்தின் உச்சம் பேரின்பமென்றால்,<br />
அறியாமையின் உச்சமும் அதுவேதானோ?<br />
*****<br />
அடுத்த கிரகங்களின் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டோமே....<br />
பூமியில் எல்லாம் பார்த்தாகிவிட்டதா? <br />
இன்னும் பார்க்கப்படாத பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.<br />
*****<br />
சட்டங்களைச் சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன;<br />
தர்மங்களை மனோநிலைகள் தீர்மானிக்கின்றன.<br />
*****<br />
இளமையைக் கல்விக் கூடங்களில் தொலைத்துவிட்டு<br />
இதயத்தை விரக்தியில் தொலைத்துவிட்டு<br />
பகலை பூமியில் தொலைத்துவிட்டு<br />
இரவை வானத்தில் தொலைத்துவிட்டு<br />
சின்னச் சின்னக் கனவுகளை<br />
சிகரெட் புகையில் தொலைத்துவிட்டு,<br />
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு<br />
வாழ்ந்து கொண்டிருக்கிறது ஒரு வாலிபர் கூட்டம். <br />
*****<br />
அறிவு தன் முயற்சியை நிறுத்திவிட்ட இடத்தில்தான்<br />
மூட நம்பிக்கை முளைக்கிறது.<br />
*****<br />
எந்தக் கலை வாழ்க்கையிலிருந்து வரிக்கப்பட்டதோ<br />
அது ஜீவனுள்ளதாய் பிறக்கும்.<br />
அல்லது,<br />
எந்தக்கலை ஜீவனுள்ளதாய் பிறக்கிறதோ<br />
அது வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டதாய் இருக்கும்..<br />
*****<br />
காதல் கவிதைகள் ஒரு மொழியின் சிறகுகள்.<br />
எந்த மொழியிலும் காதல் கவிதையைத் தொட்டால் மட்டும் அதன் உயிர் கைகளில் ஒட்டிக் கொள்கிறது.<br />
காரணம் -<br />
வாழும் காதலர்கள் வாழ்ந்த காதலர்களுக்கு ரத்ததானம் வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.<br />
*****<br />
தனக்குள் இருக்கும் ஒன்றைத் தனக்கு வெளியே தேடும் தேடல்தான் காதல்.<br />
*****<br />
வாழ்க்கையின் வெற்றிடத்தைக் காதலால் நிரப்புங்கள்.<br />
வாழ்க்கை என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைக் காதல் அகராதியில் கண்டுபிடியுங்கள்.<br />
காதலியின் உள்ளங்கையில் கவிதை எழுதுங்கள்.<br />
காதல் கவிதைகளால் தமிழின் எடையை அதிகரியுங்கள்,<br />
காதல் மனிதனின் வரமல்லவா?<br />
கவிதை மொழியின் உரமல்லவா?<br />
*****<br />
சப்தம் கடந்த சங்கீதம் காண<br />
வார்த்தை கடந்த கவிதைத்தேட<br />
வர்ணம் கடந்த ஓவியம் பேண<br />
மனசை ஆற்றுப்படுத்துங்கள். </p>
<p>- வைரமுத்து</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இதனால் சகலமானவர்களுக்கும் - வைரமுத்து]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/12/09/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</link>
<pubDate>Sat, 09 Dec 2006 08:47:07 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/12/09/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/</guid>
<description><![CDATA[நூல் - இதனால் சகலமானவர்களுக்கும் (கட்]]></description>
<content:encoded><![CDATA[<p>நூல் - இதனால் சகலமானவர்களுக்கும் (கட்டுரை தொகுப்பு)<br />
ஆசிரியர் - வைரமுத்து<br />
முதற்பதிப்பு - 1992</p>
<p>வாசித்த வைரமுத்துவின் கட்டுரை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது 'இதனால் சகலமானவர்களுக்கும்'.  அதன் முன்னுரை...</p>
<p>மனிதர்களே!</p>
<p>இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.<br />
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.<br />
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.</p>
<p>உதிரும் பழமைகள் உதிரட்டும்.<br />
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.<br />
ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள். </p>
<p>உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.</p>
<p>எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.<br />
பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.</p>
<p>துயரங்களை ஜீரணித்துவிடுங்கள். <br />
தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள். </p>
<p>அவசரப்படாதீர்கள்<br />
அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.<br />
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.<br />
வேர்கள் வெளிவருவதேயில்லை</p>
<p>தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.<br />
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.</p>
<p>சுறுசுறுப்பாயிருங்கள்.<br />
ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.</p>
<p>எல்லோரையும் மதியுங்கள்.<br />
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ -<br />
எவருக்குத் தெரியும்.</p>
<p>உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.<br />
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.</p>
<p>இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது. <br />
மகிழ்ச்சி...மகிழ்ச்சி...மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.</p>
<p>துன்பம் என்பது அறியாமை.<br />
துன்பம் என்பது அறிவின்மை.</p>
<p>அறிவில் நிமிருங்கள்.<br />
அன்பில் நெகிழுங்கள்.<br />
உழைப்பில் உயருங்கள்.</p>
<p>பிறகு பாருங்கள்.</p>
<p>இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.</p>
<p>- வைரமுத்து</p>
<p>ரசித்த வரிகள் அடுத்த பதிவில் தொடரும். </p>
<p>நதியலை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ - வைரமுத்து]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/11/28/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a/</link>
<pubDate>Tue, 28 Nov 2006 05:28:52 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/11/28/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a/</guid>
<description><![CDATA[&#8216;பெய்யெனப் பெய்யும் மழை&#8217; தொகுப்ப]]></description>
<content:encoded><![CDATA[<p>'பெய்யெனப் பெய்யும் மழை' தொகுப்பில் ரசித்த கவிவரிகள்...</p>
<p>ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ<br />
****<br />
வாழ்வெனும் கடலை<br />
மூச்சுமுட்டக் குடி</p>
<p>ஊன் உருக்கு<br />
உள்ளொளி பெருக்கு</p>
<p>மெய்ப்பதம் தேடு<br />
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை</p>
<p>உலகம் உன்மீது திணித்த<br />
முன் முடிபுகள் அழி<br />
****<br />
நீயென்று கருதிய<br />
நீயழிந்தொழிய<br />
நீயல்லாத நீதான் நீ<br />
****<br />
மலையைப் பறித்துக் கடலில் எறிந்தது<br />
மலை பறித்த பள்ளத்தில்<br />
கடல் அள்ளி ஊற்றியது<br />
பூகோளம் தெரியாத பூகம்பம்!<br />
****<br />
ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்<br />
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்</p>
<p>வார்த்தை மாறினால்<br />
வாழ்க்கை மாறும்</p>
<p>முதலில்<br />
வாழ்க்கையிலிருந்து<br />
வார்த்தையை மீட்போம்<br />
பின்னர்<br />
அர்த்தத்திலிருந்து<br />
வார்த்தையை மீட்போம்</p>
<p>வாழ்வின் நீள அகலம் கருதி<br />
வார்த்தைகளிலும் நாம்<br />
மழித்தல் நீட்டல் செய்வோம்</p>
<p>எதிர்மறை வார்த்தைகள்<br />
உதிர்ந்து போகட்டும்</p>
<p>உடன்பாட்டு மொழிகள்<br />
உயிர் கொண்டெழட்டும்</p>
<p>பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்<br />
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்</p>
<p>புளித்த வார்த்தைகள் மாறும்போது<br />
சலித்த வாழ்க்கையும்<br />
சட்டென்று மாறும்<br />
****<br />
எப்போதெல்லாம் நான்<br />
சாகவில்லையென்பதற்குச்<br />
சாட்சி கோரப்படுகிறதோ</p>
<p>அப்போதெல்லாம்<br />
எழுதத் தோன்றும்<br />
****<br />
உடைந்தகுடம் வழியே<br />
வழிந்தோடும் தண்ணீர்<br />
வாழ்வு<br />
ஒவ்வொரு சொட்டும்<br />
உறிஞ்சற்பாலது<br />
****<br />
மொழியாய் முதிர்ந்தது ஒலி<br />
கவியாய் முதிர்ந்தது மொழி<br />
என்னவாய் முதிரும் கவி?</p>
<p>கண்காணாக் கடவுள்<br />
தான்தோன்றியாகுமெனின்<br />
கண்காணும் பிரபஞ்சம்<br />
தான்தோன்றியாகாதா?</p>
<p>உணர்வுள்ள காலை<br />
மரணம்வரப் போவதில்லை<br />
மரணமுற்ற காலை<br />
உணர்விருக்கப் போவதில்லை<br />
சாவுகுறித்தஞ்சுவதேன் சகோதரா?</p>
<p>உண்டாக்கும் அனைத்தையும்<br />
உள்வாங்கும் பூமிக்குத்<br />
தாயெனும் பட்டம் தகுமா?</p>
<p>கேள்விகள் நல்லவை<br />
சூன்யத்தில் பூப்பூப்பவை<br />
வாழ்வைச் சலிக்கவிடாதவை<br />
****<br />
தயிருக்கு வெளியே<br />
வெண்ணெய் திரளாது<br />
வாழ்வுக்கு வெளியே<br />
ஞானம் பிறவாது<br />
****<br />
அடைத்துக்கிடக்கும் ஐம்பூதங்களைத்<br />
திறக்கத்தானே ஐம்புலன்கள்<br />
சாவிகளுக்கே பூட்டுகளிட்டால்<br />
சாத்தியப்படுமா அனுபூதி?<br />
****<br />
ஆளை வீழ்த்தும் பள்ளங்கள் - பல<br />
அவமானங்கள் காயங்கள்<br />
நாளை வருமென அறிந்தாலும் - என்<br />
நடையின் வேகம் நான் குறையேன்</p>
<p>ஞாலம் கருதினும் கைகூடும் - அடி<br />
நானும் அவனும் ஒருகட்சி<br />
காலம் ஒருநாள் சொல்லட்டும் - நான்<br />
கடலை எரித்த தீக்குச்சி<br />
****</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பூக்களும் காயம் செய்யும் - வைரமுத்து]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/11/22/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Wed, 22 Nov 2006 07:51:27 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/11/22/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடை
ம]]></description>
<content:encoded><![CDATA[<p>போடி போடி கல்நெஞ்சி!</p>
<p>மார்புக்கு ஆடை<br />
மனசுக்கு பூட்டு </p>
<p>ஒரே பொழுதில்<br />
இரண்டும் தரித்தவளே!</p>
<p>காதல் தானடி<br />
என்மீதுனக்கு?</p>
<p>பிறகேன்<br />
வல்லரசின்<br />
ராணுவ ரகசியம்போல்<br />
வெளியிட மறுத்தாய்?</p>
<p>தூக்குக்கைதியின்<br />
கடைசி ஆசைபோல்<br />
பிரியும்போது ஏன்<br />
பிரியம் உரைத்தாய்?</p>
<p>நஞ்சு வைத்திருக்கும்<br />
சாகாத நாகம்போல்<br />
இத்தனை காதல் வைத்து<br />
எப்படி உயிர் தரித்தாய்?</p>
<p>இப்போதும் கூட<br />
நீயாய்ச் சொல்லவில்லை<br />
நானாய்க் கண்டறிந்தேன்</p>
<p>இமைகளின் தாழ்வில் -<br />
உடைகளின் தளர்வில் - </p>
<p>என்னோடு பேசமட்டும்<br />
குயிலாகும் உன்குரலில் - </p>
<p>வாக்கியம் உட்காரும்<br />
நீளத்தில் -<br />
வார்த்தைகளுக்குள் விட்ட<br />
இடைவெளியில் - </p>
<p>சிருங்காரம் சுட்ட<br />
பெருமூச்சில் </p>
<p>வறண்ட உதட்டின்<br />
வரிப்பள்ளங்களில் - </p>
<p>நானாய்த்தான் கண்டறிந்தேன்<br />
காதல் மசக்கையில்<br />
கசங்கும் உன் இதயத்தை.</p>
<p>சேமித்த கற்பு<br />
சிந்தியா போயிருக்கும்?</p>
<p>நீயாக கேட்டிருந்தால்<br />
நெஞ்சு மலர்ந்திருப்பேன் </p>
<p>உண்டென்றால்<br />
உண்டென்பேன்<br />
இல்லையென்றால்<br />
இல்லையென்பேன் </p>
<p>இப்போதும் கூட<br />
தேசத்துரோகமென்பதை<br />
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி </p>
<p>உள்ளாடும் காதலை<br />
ஒளிக்கவே பார்க்கிறாய் </p>
<p>காதலில்<br />
தயக்கம் தண்டனைக்குரியது<br />
வினாடி கூட<br />
விரயமாதல் கூடாது </p>
<p>காலப் பெருங்கடலில்<br />
நழுவி விழும் கணங்களை<br />
மீண்டும் சேகரிக்க<br />
ஒண்ணுமா உன்னால் </p>
<p>இந்தியப் பெண்ணே!<br />
இதுவுன்<br />
பலவீனமான பலமா?<br />
பலமான பலவீனமா?</p>
<p>என்<br />
வாத்தியக்கூடம்வரை<br />
வந்தவளே </p>
<p>உன் விரல்கள்<br />
என் வீணைதடவ வந்தனவா?</p>
<p>இல்லை<br />
புல்லாங்குழல் துளைகளைப்<br />
பொத்திப்போக வந்தனவா?</p>
<p>என் நந்தவனத்தைக்<br />
கிழித்துக்கொண்டோடிச்<br />
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ</p>
<p>உன் காதலறிந்த கணத்தில்<br />
என் பூமி பூக்களால் குலுங்கியது </p>
<p>நீ வணங்கிப் பிரிந்தவேளை<br />
என் இரவு நடுங்கியது </p>
<p>பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே<br />
காதலையே அறிவித்தாய் </p>
<p>இருபதா?  முப்பதா?<br />
எத்தனை நிமிடம்?<br />
என் மார்பு தோய்ந்து நீ<br />
அழுததும் தொழுததும் </p>
<p>என் பாதியில்<br />
நீ நிறையவும்<br />
உன் பாதியில்<br />
நான் நிறையவும்<br />
வினாடித்துகள் ஒன்று<br />
போதுமே சிநேகிதி</p>
<p>நேரம் தூரம் என்ற<br />
தத்துவம் தகர்த்தோம் </p>
<p>நிமிஷத்தின் புட்டிகளில்<br />
யுகங்களை அடைத்தோம் </p>
<p>ஆலிங்கனத்தில்<br />
அசைவற்றோம் </p>
<p>உணர்ச்சி பழையது<br />
உற்றது புதியது </p>
<p>இப்போது<br />
குவிந்த உதடுகள்<br />
குவிந்தபடி<br />
முத்தமிட நீயில்லை </p>
<p>தழுவிய கைகள்<br />
தழுவியபடி<br />
சாய்ந்து கொள்ள நீயில்லை </p>
<p>என் மார்புக்கு வெளியே<br />
ஆடும் என் இதயம்<br />
என் பொத்தானில் சுற்றிய<br />
உன் ஒற்றை முடியில் </p>
<p>உன் ஞாபக வெள்ளம்<br />
தேங்கி நிற்குது<br />
முட்டி அழுத்தி நீ<br />
முகம்பதித்த பள்ளத்தில் </p>
<p>தோட்டத்துப் பூவிலெல்லாம்<br />
நீ விட்டுப்போன வாசம் </p>
<p>புல்லோடு பனித்துளிகள்<br />
நீவந்துபோன அடையாளமாய்க்<br />
கொட்டிக் கிடக்கும்<br />
கொலுசுமணிகள் </p>
<p>நம் கார்காலம்<br />
தூறலோடு தொடங்கியது<br />
வானவில்லோடு நின்றுவிட்டது </p>
<p>உன் வரவால்<br />
என் உயிரில் கொஞ்சம்<br />
செலவழிந்து விட்டது </p>
<p>இந்த உறவின் மிச்சம்<br />
சொல்லக்கூடாத<br />
சில நினைவுகளும் </p>
<p>சொல்லக்கூடிய<br />
ஒரு கவிதையும்.</p>
<p>- வைரமுத்து</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து]]></title>
<link>http://nathiyalai.wordpress.com/2006/11/27/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%8/</link>
<pubDate>Mon, 27 Nov 2006 09:36:17 +0000</pubDate>
<dc:creator>nathiyalai</dc:creator>
<guid>http://nathiyalai.wordpress.com/2006/11/27/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%86%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%b5%e0%af%8/</guid>
<description><![CDATA[நூல் : பெய்யெனப் பெய்யும் மழை
கவிஞர் : ]]></description>
<content:encoded><![CDATA[<p>நூல் : பெய்யெனப் பெய்யும் மழை<br />
கவிஞர் : வைரமுத்து<br />
முதற்பதிப்பு : 1999</p>
<p>நான் படித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்புகளில் எனக்கு மிகவும் பிடித்தது 'பெய்யெனப் பெய்யும் மழை'. மொத்தம் 54 கவிதைகள் உள்ளன. எல்லாக்கவிதைகளுமே அருமையான கவிதைகள். இதில் உள்ள சில கவிதைவரிகள் திரையிசைப்பாடலாகவும் வந்திருக்கிறது.</p>
<p>முன்னுரையிலிருந்து ரசித்த சில வரிகள்....</p>
<p>காலம் மரணத்தை நியாயப்படுத்தும்போது கவிதை<br />
வாழ்க்கையை நியாயப்படுத்துகிறது .<br />
***<br />
கவிதை இந்த உலகத்தைக் காணச் சொல்கிறது - ஒரு<br />
குழந்தையின் கண்கொண்டு. ஆனால் வாழ்ச் சொல்கிறது - ஒரு ஞானியின் மனம் கொண்டு.<br />
***<br />
வியத்தல் ஒன்றுதான் நம் வாழ்வைச் சலிக்கவிடாததாய்<br />
உணர்ச்சிக்கு நிறம் கூட்டுவதாய் - ஒவ்வொரு நாளையும் தீட்டிக் கொடுப்பதாய்த் திகழ்கிறது.<br />
நேராய்ச் செல்லும் நதியை விட வளைந்து செல்லும் நதியில்<br />
வசீகரம் அதிகம் இருப்பதுமாதிரி - வியக்கக் தெரிந்த வாழ்வுக்கு ருசி அதிகம்.<br />
வாழ்வை வியக்கச் சொல்கிறது கவிதை; வியக்கச் சொல்லிக்<br />
கொடுக்கிறது கவிதை.<br />
***<br />
எந்தக்காலத்திலும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கையென்பது<br />
புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை.<br />
உடல்சார்ந்த தேவைகளாலும் மனம் சார்ந்த தேவைகளாலும்<br />
மனித வாழ்க்கை<br />
எப்பொழுதும் சிக்கலான பின்னல்வலைக்குள் சிக்கியிருக்கிறது.<br />
பாசி படர்ந்த குளம் இந்த உலகம்.<br />
அதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை வாழ்க்கை.<br />
காலமெல்லாம் கவிதை செய்து கொண்டேயிருக்கிறது<br />
பாசி அறுக்கும் அல்லது பாசி விலக்கும் வேலையை.<br />
***<br />
விஞ்ஞானம் விளக்குவைத்துத் தேடுவதை<br />
கண்களை மூடிக் கண்டறிகிறது கவிதை.<br />
***<br />
வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு<br />
தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போன இந்தத்<br />
தொலைதொடர்பு யுகத்தில் நழுவிக்கொண்டிருக்கும்<br />
மனிதத்தை அலறியடித்தோடி இறுக்கிப் பிடிக்கும்<br />
கடமையை என் கவிதைகளுக்குக் கற்றுக் கொடுத்துக்<br />
கொண்டிருப்பவனாய் என்னை கருதுகிறேன்.</p>
<p>இனிவரும் மழையில் நனைந்து பார்க்க, இனி<br />
மலரப்போகும் மலர்களில் மனம் கரைய, வானவில்<br />
ரசிக்க, வாழ்வின் வலி தாங்க, இலையுதிர்காலக்<br />
கிளைகளில் முட்டும் முதல் தளிருக்குக் காத்திருக்க,<br />
புயல்களை எதிர்பார்க்க, பூகம்பங்களை எதிர்கொள்ள,<br />
சக உயிர்களை நேசிக்க, சேமித்த கண்ணீரை அன்புக்குச்<br />
செலவழிக்கக் கற்றுத் தரும் கடமை இருக்கிறது<br />
கவிதைக்கு.<br />
அந்தக் கடமை சுமந்து நடக்கின்றன என் கவிதைகளும்<br />
- வைரமுத்து<br />
************************************</p>
<p>இத்தொகுப்பில் நான் ரசித்த கவிவரிகள் அடுத்த பதிவில் தொடரும்.</p>
<p>நதியலை</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
