<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>யூ-டுயூப் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/யூ-டுயூப்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "யூ-டுயூப்"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 15:20:03 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[காலம் தாழ்த்தாதீர்கள் சகோதர சகோதரிகளே...]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=29</link>
<pubDate>Thu, 03 Apr 2008 13:33:12 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=29</guid>
<description><![CDATA[அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதர]]></description>
<content:encoded><![CDATA[<h3>அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,</h3>
<h3>நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?</h3>
<h3>கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது பக்கவாதத்தால் முடங்கிப் போயிருக்கும் இவரை பேட்டி கண்டனர். அப்பேட்டி அரபியில் இருப்பதால் , முடிந்த வரை சரியான தமிழாக்கம் செய்திருக்கின்றேன். அரபி தெரிந்தவர்கள், இதில் ஏதேனும் பிழை கண்டால் தெரியப் படுத்தவும். நன்றி.</h3>
<h3><span style='text-align:center; display: block;'><object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/EGORd3HXywY'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/EGORd3HXywY&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object></span></h3>
<h3><strong>பேட்டி காண்பவர்:</strong> "உண்மையில் இது அல்லாஹ்வின் ஃகதர் தான் என்பதில் நமக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை. அல்லாஹ் தன் திருமறையில் "...நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல்குர்ஆன்: 4:19)" என்று கூறுகின்றான். சரி, அப்துல்லாஹ், நீங்கள் கூறுங்கள். உங்கள் வாழ்வில் முன்னமிருந்த மூன்று முக்கிய விடையங்களைப் பற்றி, இப்போது நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின் மீண்டும்<br />
அவைகளைச் செயல்படுத்தும் பாக்கியம் கிட்டாதா என ஏங்கும் மூன்று விடையங்களைப் பற்றி கூறுங்கள்."</h3>
<h3><strong>அப்துல்லாஹ்:</strong> "மூன்று விடையங்களா? என்னை சார்ந்த மூன்று விடையங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றது. அவற்றை இப்போது செயல் படுத்த முடியாத நிலையில் இருக்கின்றேனே என்பதே எனக்கு வேதனையளிக்கின்றது.</h3>
<h3>அவற்றில் முதன்மையானது, மீண்டும் ஒருமுறையாவது அல்லாஹ்விற்கு 'ஸஜ்தா' செய்யும் பாக்கியம் கிட்டுவது. மீண்டும் ஒருமுறை, ஒரே முறை அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்ய விரும்புகின்றேன். மீண்டு வரவே முடியாத ஒரு ஸஜ்தாவை அல்லாஹ்விற்கு செய்ய விரும்புகின்றேன், இன்ஷா அல்லாஹ். என்னுடைய பயமும் அதனைச் சுற்றியே உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றபடி நான் ஆகிவிட்டேனோ என்று அஞ்சுகின்றேன். [68-42 கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.] இன்று என்னால் ஸஜ்தா செய்ய இயலாத நிலையில் உள்ளேன். ஆனால், நான் நடந்து செல்லும் நிலையில் இருந்த போது நிறைய தொழுகைகளை நான் தவற விட்டிருக்கின்றேன். இப்போது என்னை காண்பவர்கள் என் மீது பரிதாபம் கொள்கின்றார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் நான் தொழுகையை தவற விட்டபோது எனக்காக பரிதாபப் படவில்லை.</h3>
<h3>என்னை வருத்தும் இரண்டாவது விடையம், குர்ஆனின் ஒரு பக்கத்தையாவது புரட்டும் வாய்ப்பு. நல்ல நிலையில் இருக்கும் உங்களைப் போன்ற சகோதரர்களுக்கு இது ஒரு விடையமே இல்லை. ஆனால் எனக்கோ மலையைப் போன்றதொரு பெரிய விடையம்.</h3>
<h3>மூன்றாவது, மகிழ்ச்சியான ஒரு நேரத்தில், அது ஈதுப் பெருநாளோ அல்லது வேறு சந்தர்ப்பமோ வாய்க்கும்போது, என் வீட்டிற்கு சென்று என் தாயை கட்டி அணைக்க வேண்டும்..." (நீண்ட மௌனம் நிலவுகின்றது...)</h3>
<blockquote>
<h3><em><strong>“எங்கள் இறைவனே! ‘உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்’ என்று எங்களை ஈமானினளவில் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியுற்று, நாங்களும் அவ்வாறே ‘ஈமான்’ கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாபங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!”</strong></em> <span style="color:#0000ff;">(குர்ஆன் 3:193)</span></h3>
</blockquote>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
