<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>மனிதன் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/மனிதன்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "மனிதன்"</description>
	<pubDate>Mon, 13 Oct 2008 23:29:19 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[இனிமேல் நாமும் பறக்கலாம்...]]></title>
<link>http://sirippu.wordpress.com/?p=969</link>
<pubDate>Fri, 16 May 2008 06:26:10 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://sirippu.ta.wordpress.com/2008/05/16/fly_with_wings_yves-rossy/</guid>
<description><![CDATA[ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் ம]]></description>
<content:encoded><![CDATA[<p>ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் முன்பு பணியாற்றிய Yves Rossy வினோத ஆசைகளின் சொந்தக்காரர். விமானத்துக்குள்ளே பயணம் செய்து செய்து போரடித்துப் போன அவர், பறவையைப் போல பறப்பது அதி அற்புதமாய் இருக்குமே என கனவுகளில் திளைத்தார்.</p>
<p><a href="http://sirippu.wordpress.com/files/2008/05/bird1.jpg"><img class="alignnone size-medium wp-image-970" src="http://sirippu.wordpress.com/files/2008/05/bird1.jpg?w=300" alt="" width="300" height="200" /></a></p>
<p>அந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கடுமையாய் போராடிய அவருக்கு தனது கனவை மலைக்கு மேல் பறக்க விட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.</p>
<p><a href="http://sirippu.wordpress.com/files/2008/05/bird2.jpg"><img class="alignnone size-medium wp-image-971" src="http://sirippu.wordpress.com/files/2008/05/bird2.jpg?w=200" alt="" width="200" height="300" /></a></p>
<p>ஃப்யூஷன் மேன் – என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட இறக்கையை உருவாக்கி ஆல்ப்ஸ் மலைக்கு மேலாக பறந்து திரிந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறகுகளுடன் பறந்த முதல் மனிதன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.</p>
<p>.<br />
( எங்கள் புராணத்தில் இவர்களெல்லாம் பறந்திருக்கிறார்கள், தேவதைகள் பறக்கின்றன, வான தூதர்கள் பறக்கின்றனர் என்றெல்லாம் கோபப்படுவோர், பதட்டப் படுவோர், எரிச்சல் படுவோர், மற்றும் இன்ன பிற உணர்ச்சிகள் அடைவோர் அவற்றை என் மேல் காட்டாதிருப்பார்களாக )</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அதெப்படி மனிதனின் செயல்கள் பூமியை பாதிக்க முடியும்?]]></title>
<link>http://srinig.wordpress.com/?p=32</link>
<pubDate>Wed, 16 Apr 2008 09:07:01 +0000</pubDate>
<dc:creator>Srini</dc:creator>
<guid>http://srinig.ta.wordpress.com/2008/04/16/human-activity-global-warming/</guid>
<description><![CDATA[சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழ]]></description>
<content:encoded><![CDATA[<p>சில மாதங்களுக்கு முன்பு <a href="http://srinig.wordpress.com/2007/11/29/மாதவன்-சுற்றுச்சூழல்/">சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமடைதல் போன்ற விஷயங்களைப் பற்றி பதிவிட்டிருந்தேன்</a>. அதற்கு மறுமொழி அளித்த ஒரு நண்பர், "அதெப்படி 3 பில்லியன் வருடங்களாக சுழன்று வரும் பூமியின் வெப்பநிலையை மனிதன் 50 வருடங்களாக புரிந்து வரும் செயல்கள் பாதிக்க முடியும்" என்கிற ரீதியில் கேட்டிுருந்தார். இது நல்ல கேள்வி, பலர் மனதில் இயல்பாக தோன்றக்கூடிய கேள்வி. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வாரப்பத்திரிகையில் சுஜாதா அவர்களின் கேள்வி பதில் பகுதியில் புவி வெப்பமடைதல் பற்றிய ஒருவரின் கேள்விக்கு, "மனித செயல்களெல்லாம் பூமியை ஒன்றும் செய்துவிட முடியாது. இதெல்லாம் அதுக்கு கொசு கடிக்கிற மாதிரி, புவி வெப்பமடைதல் அபாயம் எல்லாம் சும்மா கட்டுக்கதை" என்பது போல் பதில் அளித்திருந்தார். உண்மையில் நானும் ஆரம்பத்தில் இது போன்றே சிந்தித்திருக்கிறேன். </p>
<p>புவி வெப்பமடைதல் எல்லாம் பூமிக்கு கொசு கடிக்கிற மாதிரி கொசுறான விஷயம் என்பது உண்மை தான். ஆனால், கொசு கடித்து நம் ரத்தத்தை உறிஞ்சினால் நாம் அதை அடிக்கிறோமா இல்லையா? கொசு கடிப்பது, கொஞ்சம் ரத்தம் குடிப்பது, நாம் அதை அடிப்பது, இதெல்லாம் கடிபட்ட மனிதனுக்கு பெரிய வாழ்க்கைப் பிரச்சனை இல்லை. ஆனால் கொசுவுக்கு அது நிச்சயம் வாழ்க்கைப் பிரச்சனை. அது போல் பூமியின் வளங்களை தன் சுயநலங்களுக்காக மனிதன் அரக்கத்தனமாக உறிஞ்சி எடுப்பதும், மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் பூமித்தாயின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், சும்மா ஜுஜுபி. ஆனால் இதெல்லாம் மனித குலத்தினராகிய நமக்குத்தான் ஆபத்தில் போய் முடியும். மனிதனின் இது போன்ற செயல்களால் விளைந்த 'புவி வெப்பமடைதல்' (<a href="http://en.wikipedia.org/wiki/Global_warming">global warming</a>) இன்று மனித குலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து வளர்ந்திருப்பது கசப்பான உண்மை. ஒரேயடியாக சுனாமி போல் ஏதாவது வந்து நம்மை அடித்துக்கொண்டு போனால் கூட பரவாயில்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை துன்பப்படுத்தி கொல்லக் கூடிய பிரச்சனை. </p>
<p>புவி வெப்பமடைவது, அதனால் வடதுருவ, தென்துருவ பனிக்கட்டிகள் உருகி வருவது, கடல்மட்டம் உயர்வது, தட்ப வெட்ப நிலை கன்னாபின்னாவென்று மாறிக்கொண்டு வருவது, கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் கண்டபடி மழை பெய்வது, மழை பெய்ய வேண்டிய இடத்தில் வறட்சி காணப்படுவது... இதெல்லாம் மனிதனின் செயல்களாலேயே விளைபவை என்பது இன்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். இன்னமும் கூட மனித செயல்களால் தான் புவி வெப்பமடைகிறதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தால் கடைசி வரை விவாதித்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான், அப்புறம் ஊர் பற்றி எரிய நீரோ பிடில் வாசித்த கதையாகிவிடும். </p>
<p>ஆறடி உயரம் உள்ள ஒரு மனிதனை கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமிகள் பாதித்து ஜுரத்தை ஏற்படுத்துவதில்லையா? அது போல் மூன்று பில்லியன் வருடங்களாக சுற்றி வரும் பிரம்மாண்ட பூமியை அற்ப மனித குலம் தன் ஐம்பது வருட அறிவுகெட்ட செயல்களால் பாதித்து அதன் வெப்பத்தை சற்று அதிகப்படுத்துவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? புவி வெப்பமடைதல் என்பது பூமிக்கு சும்மா ஒரு நாள் ஜுரம் தான். ஆனால் நம் மனித குலத்துக்கு தான் அழிவு காத்திருக்கிறது, அதாவது நாம் உடனே விழித்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்படத் துவங்காவிட்டால். பூமியை நாம் ஒன்றும் காக்க வேண்டியதில்லை, நாம் இன்றோ இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழித்தோ அழிந்த பின்னும் பல கோடி வருடங்களுக்கு பூமி சுழன்று கொண்டு தான் இருக்கும். நம்மைத் தான் இப்போது நாம் காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? மரங்கள் நடுவது, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வது, எரிசக்தி, மின்சாரம் இதையெல்லாம் வீணாக்காமல் தேவையான சமயங்களில் மட்டும் பயன்படுத்துவது, இது போன்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை எங்கும் ஏற்படுத்துவது.</p>
<p>(குறிப்பு: முதலில் புவி வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை சுஜாதா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பின்னர் சில காலம் கழித்து அவரே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தமிழ்மணம் க.இரமணிதரன் அவர்களுக்கு சவால்]]></title>
<link>http://thamilislam.wordpress.com/2008/03/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5/</link>
<pubDate>Tue, 25 Mar 2008 12:01:00 +0000</pubDate>
<dc:creator>allah6666</dc:creator>
<guid>http://thamilislam.ta.wordpress.com/2008/03/25/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%87%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5/</guid>
<description><![CDATA[அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உ]]></description>
<content:encoded><![CDATA[<div>அன்பு நண்பர் தமிழ்மணம் க.இரமணிதரன் உங்களின் இந்த பதில் வேடிக்கையாக உள்ளது.நான் சவால் விடுகிறேன் மற்ற பதிவர்களின் பதிவுகளை&#160;ஒப்பிடும்&#160;போது&#160;ஒரு சதவீத தனிமனித தாக்குதல்களை எனக்கு&#160;நீங்கள்&#160;பட்டியல் இட்டுக்காட்டுங்கள்.</div>
<div>&#160;</div>
<div>சரி&#160;நானும் ஒரு&#160;தமிழ்மண&#160;பதிவராக இருந்தவன்&#160;தானே&#160;பின் ஏன்&#160;நீங்கள்&#160;கீழே உள்ளது போல் ஒரு தனி மடலை எனக்கு இதுவரை அனுப்பவில்லை.என் பதிவுகள் தனிமனித தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தது என்று அநியாயமாக குற்றம் சாட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது.உங்களை எதாவது திட்டி உள்ளேனா?.அல்லது ஏதாவது தமிழ்மண பதிவர்களை திட்டி உள்ளேனா? என்று சொல்லுங்கள்.நான் எழுதிய அந்த பதிவை நீங்கள் நீக்கி விட்டு இது போல் எனக்கும் எச்சரிக்கை செய்து இருக்கலாம் அல்லவா? அதை ஏன் தமிழ்மணம் செய்யத்தவறியது.என் மேல் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்.</div>
<div>&#160;</div>
<div><strong><em>இதற்கு தமிழ்மணம் சொல்லப்போகும் பதில் என்ன?</em></strong></div>
<div>&#160;</div>
<div>
<dt><a name="c4850003243451791407"></a>&#160;
<dt>&#160;
<dt>&#160;
<dt>&#160;
<dt>&#160;
<dt>&#160;
<dt><a href="http://www.blogger.com/profile/02832957324643856096" rel="nofollow"><font color="#336699">மனிதன்</font></a> said...
<dd>
<p>Dear author,Your post தமிழ்மணமும்-ஜனநாயகமும்is removed by <a href="http://www.thamizmanam.com">www.thamizmanam.com</a> Administrator due to follwing reason,pபதிவர் மனிதன்</p>
<p>உங்களின் இப்பதிவும் <strong><font color="#ff0000">தெய்வமகன் போன்றோரின் பதிவுகள் போல தொடர்ச்சியாக தனிமனிதத்தாக்குதலை</font></strong> மேற்கொள்ளப்பயன்படுத்தப்படுமெனில், நீக்கப்படும் என்று அறியத்தருகிறேன் </p>
</dd>
</dt>
</dt>
</dt>
</dt>
</dt>
</dt>
</dt>
</div>
<div>&#160;</div>
<div>&#160;</div>
<div>
<dt><a name="c781976032306811064"></a><a href="http://www.blogger.com/profile/15749767493269752127" rel="nofollow"><font color="#336699">லக்கிலுக்</font></a> said...
<dd>
<p>தமிழ்மணம் நிர்வாகத்திலிருந்து வந்திருக்கும் கடிதம் :</p>
<p>பதிவர் லக்கி லுக் உங்களின் இவ்விடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ச்சியான தனிமனித்தாக்குதல் நிகழ்த்தப்படின், உங்கள் முழுப்பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படும் என்று இத்தால் அறியத் தருகிறேன். க.இரமணிதரன் தமிழ்மணம்</p>
<dd><span class="comment-timestamp"><a title="comment permalink" href="http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_7623.html#c781976032306811064"><span></span><font color="#336699">மாலை 5:05 , மார்ச் 25, 2008 </font></a><span class="item-control blog-admin pid-853528181"><a title="Delete Comment" href="http://www.blogger.com/delete-comment.g?blogID=25593973&#38;postID=781976032306811064"><font color="#336699"><span class="delete-comment-icon">&#160;</span> </font></a></span></span></dd>
<p class="comment-footer"><font color="#336699"></font>&#160;</p>
<div class="widget HTML" id="HTML7">
<div class="clear"><a href="http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_7623.html">http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_7623.html</a></div>
</div>
</dd>
</dt>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மனிதமும் விலங்கினமும் - கலாச்சாரம் &amp; குமுகாயம்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=3976</link>
<pubDate>Thu, 06 Mar 2008 03:16:20 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.com/2008/03/06/man_animal_society_critical_thinking/</guid>
<description><![CDATA[
நன்றி: THE THINKING APE BLUES - A Comic Of Questionable Taste
]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/03/tab357.gif" title="culture, tool use and critical thinking - Cartoons, Comics"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/03/tab357.gif" alt="culture, tool use and critical thinking - Cartoons, Comics" /></a></p>
<p><i>நன்றி</i>: <a href="http://www.thinkingapeblues.com/">THE THINKING APE BLUES - A Comic Of Questionable Taste</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இன்னா செய்தாரை ஒறுத்தல்...]]></title>
<link>http://friendlyfiretamil.wordpress.com/2007/07/29/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88/</link>
<pubDate>Sun, 29 Jul 2007 10:19:23 +0000</pubDate>
<dc:creator>Friendly Fire</dc:creator>
<guid>http://friendlyfiretamil.ta.wordpress.com/2007/07/29/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%88/</guid>
<description><![CDATA[இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்ன]]></description>
<content:encoded><![CDATA[<blockquote><p>இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண<br />
நன்னயஞ் செய்து விடல்.<br />
(திருக்குறள்: 314)</p></blockquote>
<p>சில நாட்களுக்கு முன்பு  <a href="http://www.mypathtv.com/articles/ask-jane/1070723.001/what-you-get-is-what-you-(choose-to)-see.html">ஒரு வலைப்பக்கத்தில் ஆப்பிரிக்க பழங்குடியனம் ஒன்றில் புழங்கும் ஒரு வித்தியாசமான சடங்கைப்</a> பற்றிப் படித்தேன். அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குற்றம் ஏதாவது செய்து விட்டால் அவருக்கு தண்டனை வழங்கும் சடங்கு தான் இது. பழங்குடியினம் என்றவுடன் சினிமாவில் காட்டுவது போல் ஒரு பெரிய சட்டியை அடுப்பில் வைத்து, குற்றம் செய்தவனை அந்தச் சட்டியில் போட்டு சுட்டு மற்றவர் அனைவரும் இலைதழைகளை இடுப்பில் கட்டிக்கொண்டு சட்டியைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவார்கள் என்பது போல் கற்பனை செய்ய வேண்டாம். இந்த ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் குற்றம் செய்தவரை கிராமத்தின் நடுவில் கொண்டு வந்து நிறுத்திவிடுவார்கள். கிராம மக்கள் அனைவரும் தத்தம் பணிகளை விட்டுவிட்டு குற்றம் செய்தவரைச் சுற்றி நின்று கொள்வார்கள். பின்னர் ஒருவர் பின் ஒருவராக குற்றம் செய்தவரிடம் சென்று குற்றம் செய்தவர் முற்காலத்தில் தமக்குச் செய்த நல்ல காரியங்களை அவருக்கு நினைவு படுத்துவார்கள். இந்த சடங்கு சில நாட்களுக்கு நடக்கும். சடங்கு முடிந்த பின்னர் குற்றவாளியை மறுபடியும் சமூகத்தினுள் மகிழ்ச்சியுடன் சேர்த்துக்கொள்வார்கள்.</p>
<p>இந்தப் பழங்குடியினரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவு உள்ளது. இவர்களிடம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இங்கே குற்றம் செய்தவரை பாதிப்பு ஏற்படுத்தியவராக பார்க்காமல் பாதிக்கப்பட்டவராக பார்க்கிறார்கள். குற்றம் செய்தவர் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை அவர் செய்த நல்ல காரியங்களை அவருக்கே நினைவுபடுத்துகிறார்கள்.</p>
<p>நாம் அனைவரும் தினந்தோறும் சின்னதாகவோ, பெரியதாகவோ ஏதாவது குற்றங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். நாம் குற்றமோ தவறோ செய்வதற்கான காரணம் குற்றம் புரிவதனால் கிடைக்கும் நன்மையினால் அல்ல. உண்மையில் நாம் குற்றம் புரிய காரணம் நம்முள் உள்ள ஏதோவொரு வெறுமையினால் தான். நல்ல மனநிலையில் இருக்கும் ஒருவரும் குற்றம் செய்வதில்லை. சமூகத்தில் உள்ள நாம் அனைவரும் ஒருவரையொருவர் தொடர்ந்து நம் செயல்கள் மூலமும் எண்ணங்கள் மூலமும் பாதித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஒரு குற்றம் நடக்கும்போது, அதற்கு ஒரு தனி மனிதனை குற்றம் சாட்டுவது சரியல்ல. சமூகத்தில் உள்ள அனைவரின் மனதிலும் உள்ள வெறுப்புணர்ச்சி ஒருசில துரதிர்ஷ்டசாலிகள் மூலம் குற்றங்களாகவும் தீவிரவாதச் செயல்களாகவும் வெளிப்படுகிறது. இதற்கு குற்றவாளியை மட்டும் உலகத்திலிருந்து நீக்கிவிட்டால் உலகிலிருந்து குற்றம் போய்விடுமா? இந்த துரதிர்ஷ்டசாலிகளால் மேலும் பலருக்கு ஆபத்து ஏற்படு வாய்ப்பிருக்கிறது என்றால் அவரை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், அவருக்கு என்ன பிரச்சனை என்று விசாரித்து அவருள் இருக்கும் வெறுப்புணர்ச்சியை போக்க ஏதாவது வழி செய்யுங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை சமூகத்தில் உள்ள நாம் அனைவருமே நமக்குள் சிறிதளவிலோ, பெரிதளவிலோ இருக்கும் வெறுப்புணர்ச்சியை களைந்துகொள்ளும் வரை எத்தனைபேரை தூக்கில் தொங்க விட்டாலும் சமூகத்தில் குற்றம் குறையாது. </p>
<p>இந்த விஷயத்தில் <a href="http://www.srisri.org/Prisoner%20Rehabilitation.html">ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்</a>, <a href="http://www.ishafoundation.org/poutreach/default.asp?id=1">சத்குரு ஜக்கி வாசுதேவ்</a> போன்றோர் செய்யும் பணிகள் மகத்தானது. இவர்கள் தங்கள் யோக முறைகளை சிறைவாசிகளுக்கு கற்பித்து அவர்களை புது மனிதர்களாக்குகிறார்கள். இவர்கள் சொல்லிக்கொடுப்பது போன்ற யோக முறை ஒன்றை நானும் கடந்த சில வருடங்களாக பழகி வருகிறேன். யோகம் செய்வது மூலம் நமக்குள் உள்ள வெறுப்புணர்ச்சிகள் நீங்கி ஆனந்தமும் எல்லா உயிர்கள் மீது அன்பும் தோன்றும் என்பது உண்மை. சமூகத்தில் அன்பு தோன்றினால் குற்றங்களுக்கு இடம் ஏது? <a href="http://friendlyfiretamil.wordpress.com/2007/06/18/புலிகள்-புத்த-பிட்சுக்கள/">அன்பினால் காட்டு விலங்கான புலிகளையே கட்டுப்படுத்த முடியும்போது</a> சமூக விலங்கான மனிதர்கள் எம்மாத்திரம்?</p>
<p>அன்பு மலரட்டும். அமைதி நிலவட்டும். :)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கடவுள் சிரிக்கும் தருணங்கள்]]></title>
<link>http://friendlyfiretamil.wordpress.com/2007/07/11/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/</link>
<pubDate>Wed, 11 Jul 2007 04:37:18 +0000</pubDate>
<dc:creator>Friendly Fire</dc:creator>
<guid>http://friendlyfiretamil.ta.wordpress.com/2007/07/11/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d/</guid>
<description><![CDATA[கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார]]></description>
<content:encoded><![CDATA[<blockquote><p>கடவுள் இரண்டு வேளைகளில் சிரிக்கிறார். இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தை பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, "இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னுடையது" என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரிக்கிறார். "இந்தப் பிரபஞ்சமே என்னுடையது. இதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே!" என்று நினைத்துச் சிரிக்கிறார்.</p>
<p>கடவுள் மற்றும் ஒருமுறை சிரிக்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது. தாய் அழுது கொண்டிருக்கிறாள்; வைத்தியர் அவளிடம், "அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்தி விடுகிறேன்" என்று சொல்கிறார். அப்போதும் கடவுள் சிரித்துக் கொள்கிறார். குழந்தை இறக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பமானால், யாராலும் அதைக் காக்க முடியாது என்பது வைத்தியருக்குத் தெரியவில்லை.
</p></blockquote>
<p>(ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள், பக்கம்: 515-516)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எரிபொருளாகும் மதுபானம்]]></title>
<link>http://friendlyfiretamil.wordpress.com/2007/06/27/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Wed, 27 Jun 2007 09:29:45 +0000</pubDate>
<dc:creator>Friendly Fire</dc:creator>
<guid>http://friendlyfiretamil.ta.wordpress.com/2007/06/27/%e0%ae%8e%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[ஸ்வீடன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக க]]></description>
<content:encoded><![CDATA[<p>ஸ்வீடன் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்படும் மதுபான சரக்கு சாதாரணமாக கீழே கொட்டப்பட்டு வீணாக்கப்படும். சென்ற வருடம் இப்படி கைப்பற்றப்பட்ட 7 லட்சம் லிட்டர் (அம்மாடியோவ்!!) மதுபான வகைகளை எரிபொருளாக மாற்ற அந்நாட்டில் முடிவெடுக்கப் பட்டது. இதன்படி இந்தக் 'குடி' நீருடன் மிருகக் கழிவுகளையும் சேர்த்து எரித்து பயோ வாயு (bio gas) தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிக்கப்படும் எரிபொருள் மிகவும் தூய்மையானது, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாது. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரத்தில் ஓடும் பேருந்துகளில் இருபத்தைந்து சதவிகித பேருந்துகள் இப்படி தயாரிக்கப்டும் மாசற்ற எரிபொருளின் உதவியுடன் இயக்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு பார்க்க: <a href="http://news.nationalgeographic.com/news/2007/06/070625-swedish-biogas_2.html">Alcohol, Feces, Carcasses Fuel "Green" Vehicles in Sweden</a>. சுற்றச் சூழலை மாசுபடுத்தம் எரிபொருள்களை அதிகமாக பயன்படுத்துவதால் <a href="http://en.wikipedia.org/wiki/Global_warming">புவி வெப்பம் அதிகமாகி</a> உலகமே அழிவுகளை எதிர்நோக்கும் இந்நேரத்தில் இப்படிப்பட்ட தூய எரிபொருட்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.</p>
<p>வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிப்பதாக கருதப்படும் ஒரு திரவம் 'குடி' மக்களின் இச்சைகளை பூர்த்தி செய்வதற்கு பதிலாக இது போன்ற ஆக்கப்பூர்வமாக விஷயங்களுக்கு பயன்படுத்தப் படுவதால் உலகத்துக்கே எவ்வளவு நன்மை பாருங்கள்!</p>
<p>இதே போல், <a href="http://en.wikipedia.org/wiki/Hemp">hemp</a> எனப்படும் தாவரம் ஒன்றைப் பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். இத்தாவரம் எரிபொருள், காகிதம், துணி, கயிறு  போன்ற பல பொருட்கள் செய்வதற்கு பயன்படக் கூடியது.  வேகமாக வளரக்கூடியது, மேலும் இதை வளர்ப்பதற்கு குறைந்த செலவே ஆகும். இதைப் பயன்படுத்தி காகிதம் போன்ற பொருட்களை தயாரித்தால் காடுகள் அழிவது பெருமளவில் தடுக்கப்படும். ஆனால் இதை வளர்க்க US உட்பட பல நாடுகளில் தடை உள்ளது. மனித சமுதாயத்துக்கு மிகவும் பயன் தரக்கூடிய இத்தாவரம் அதே சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்கள் தயாரிக்கவும் உதவுவக்கூடியது என்பது தான் காரணம். இது இயற்கையின் தவறா? அல்லது மனிதனின் சுயக் கட்டுப்பாடின்மையா? </p>
<p>உலகத்திலேயே மிகவுயர்ந்த இனம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் மனிதர்களாகிய நாம் ஒரு பொருளில் உள்ள தீமையை தவிர்த்து அப்பொருளை நன்மைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் தன்மை இல்லாதவராய் இருக்கிறோம். இயற்கையையே மிஞ்சக் கூடிய அரிய சாதனங்களை கண்டுபிடிப்பதாக மார்தட்டிக் கொண்டு இயற்கையை வெல்ல முயலும் நாம் முதலில் நம்மை நாமே வெல்ல முயல்கிறோமா? நம்முடைய தேவைகளை சரியாக புரிந்துகொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்கிறோமா? </p>
<p>இயற்கை அன்னை நமக்கு தேவையானதெல்லாம் தேவையான அளவுக்கு வாரித்தான் வழங்குகிறாள். நாம் தான் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மை நாமே அழித்துக் கொள்கிறோம். பிறகு இயற்கையையும், நாமாக கண்டுபிடித்த கடவுள்களையும் குறை சொல்லிப் புலம்புகிறோம்.</p>
<blockquote><p>Earth provides enough to satisfy every man’s need, but not any man’s greed.</p></blockquote>
<p>இதைச் சொன்னவர் <a href="http://en.wikiquote.org/wiki/Mahatma_Gandhi">மோகன்தாஸ் காந்தி</a> என்ற பெயரைக் கொண்ட மாமனிதர்.</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
