<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>மகள் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/மகள்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "மகள்"</description>
	<pubDate>Fri, 18 Jul 2008 23:00:37 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[சுயசரிதை அல்ல]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4251</link>
<pubDate>Wed, 21 May 2008 05:08:12 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4251</guid>
<description><![CDATA[சன் டிவியின் திருவிளையாடலை விட இராமா]]></description>
<content:encoded><![CDATA[<p>சன் டிவியின் <strong>திருவிளையாடலை </strong>விட <strong>இராமாயணம் </strong>சிறுவர்களைக் கவரும் விதமாக இருக்கிறது. மாதுரி தீட்சிட் &#38; சல்மான் கான் மணம் செய்யும் 'ஹம் ஆப் கே ஹை கௌன்' போல் ஆற அமர கல்யாணத்தை சொல்லாததால் இருக்கலாம். தினமும் திருவிளையாடல் வந்து அலுப்பூட்டுவதாலும் இருக்கலாம்.</p>
<p>'இராமருக்கு அப்புறம் சீதாவுடைய மகள்தான் அரசேறுவாள் என்பதாலா?'</p>
<p>'அடுத்து என்ன நடக்கும்' என்று பின் கதை சுருக்கமாக தங்கிலீஷில் இராமாயணத்தை விவரித்த போதுதான் மகளிடமிருந்து அந்தக் கேள்வி வந்தது. பரதனுக்கு முடிசூட்டுமாறு ஏன் கைகேயி உசுப்பேற்றப்பட்டாள் என்பதை பரம்பரை வாரிசுகளை கொண்டு விளக்கும்போது கேள்வி எழுப்பினாள். லவ குசா எல்லாம் தொடாமல், மையமாய் தலையை ஆட்டி வைத்தேன்.</p>
<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/noticing-family-wife-appearances-haricut-cartoons.gif"><img class="alignnone size-medium wp-image-4250" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/noticing-family-wife-appearances-haricut-cartoons.gif?w=300" alt="Adam at Home - cartoons &#38; Comics" width="300" height="94" /></a></p>
<p><em>நன்றி</em>: <a href="http://www.gocomics.com/adamathome/2008/05/19/?campid=0&#38;ssns=9&#38;">Adam@Home</a></p>
<p>மனைவியிடம் எத்தனையோ முறை சொல்லியாகி விட்டது. ஆண்கள் முகத்தைப் பார்ப்பதில்லை; முடியையும் பார்ப்பதில்லை என்று. அரக்கர்களின் உயிர்கள் எங்கோ ஏழு கடல் தாண்டி இருக்கும் புறாவின் கண்ணில் இருப்பதாக அம்புலிமாமா கதை சொல்லும். உண்மைதான். புருவத்தை நெறிமுறை செய்தபிறகோ, புதிய காதணியைக் கண்டு கொள்வதிலோ, சமையலில் வித்தியாசம் காட்டியதையோ கண்டுகொள்வதில்தான் தாம்பத்தியத்தின் நாடி இருக்கிறது.</p>
<p>மேற்கண்ட கார்ட்டூன் போல் துப்புகளை சேமித்து 'கணவன்மாருக்கான டம்மீஸ்' புத்தகம் தொகுத்தால் ஐ.பி.எல்., என்.பி.ஏ., ரசிகர்கள் வாழ்த்துவார்கள்.</p>
<blockquote><p>தன்னைச் சுற்றி விரிந்து அலையடிக்கும் வாழ்க்கையிலிருந்து சில துளிகளை மட்டுமே அள்ள முடியக்கூடியவன் மனிதன். ஆகவே முடிவில்லாத மர்மங்களின் நடுவே அவன் வாழ்கிறான். அவனுக்கு கிடைக்கும் பிரபஞ்ச அனுபவம் என்பது அந்த மர்மங்களில் இடறி விழுவதேயாகும். அப்போது அவன் ஒரு அதிர்ச்சியையும் கணநேர மனவிரிவையும் அடைகிறான்.அந்தத் தரிசனத்தைக் கொண்டு அவன் ஒரு வாழ்க்கை நோக்கை உருவாக்கிக் கொள்கிறான். அது அவன் வரைக்கும் சரியானது. அந்த எல்லைக்கு அப்பால் அதற்குப் பொருள் ஏதும் இல்லை. மீண்டும் மீண்டும் மனிதன் இயற்கையின் பெருவிதிகளினால் சதுரங்கக் காயாக ஆடப்பட்டு அதைப் புரிந்துகொள்ள தன் தரிசனத்தால் ஓயாது முயன்றபடி வாழ்ந்து மெல்ல மெல்ல மறைகிறான். - <strong><a href="http://jeyamohan.in/?p=472">ஜெயமோகன்</a></strong>: "<em>சொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்</em>"</p></blockquote>
<p>திங்கள் அன்று இரண்டு சோக செய்திகள். முதலில் நண்பரிடமிருந்து சினிமாவில் மட்டுமே பார்க்கும் வியாதி வந்திருப்பதைத் தாங்கி வந்த மின்னஞ்சல். வலைப்பதியவே மனம் ஒப்பவில்லை. ட்விட்டர் மட்டும் செய்து வைத்தேன்.</p>
<p>மாலையில் வீட்டை அவ்வப்போது சுத்தம் செய்பவருக்கு ட்யூபில் வந்திருந்த கட்டி குறித்து அறிந்ததும் வாழ்வின் நிலையாமை எல்லாம் எட்டிப் பார்த்தது.</p>
<p>என்னால் ஆனது... அலுவலில் தரும் ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்தேன்.</p>
<p>அலுவலில் சீனாவில் நடந்த நிலநடுக்கத்துக்கு நிதி சேகரித்தார்கள். எவ்வளவு தானம் கொடுக்கிறோமோ, அதை இரட்டிப்பாக்கினார்கள். 50,000+ பலி. தெரிந்தவருக்கு என்றால் மனம் பதை பதைக்கிறது. எங்கோ ஒருவர் என்பதால் எண்ணிக்கையாக போய்விட்டது.</p>
<p>பர்மா சூறாவளி நிவாரணம் குறித்து அலுவலில் மனிதவளத் துறையினரிடம் விசாரித்தேன். எழுபத்தெட்டாயிரமோ, 150,000-ஓ மறைந்த மியான்மர் வாசிகளுக்கு எதுவும் உண்டியல் குலுக்கவில்லையா என்று. நம் நிறுவனத்தில் இருந்து எவரும் வேலையும் செய்யவில்லை; தொண்டு நிறுவனங்களும் தெரியாது என்று தோள்குலுக்கிவிட்டார்கள்.</p>
<p>நாள்தோறும் தனிமடலிலும், பொதுவிலும் <a href="http://snapjudge.wordpress.com/2007/06/01/anna-university-affiliated-dote-ii-college-rankings-couple-of-years-old/">அண்ணா பல்கலை சார்ந்த பொறியியல் கல்லூரிகளின் தரப்பட்டியல்</a> குறித்து விசாரிக்கிறார்கள்.</p>
<p>அமெரிக்காவில் கின்டர்கார்டன் படிப்பதற்கு எது #157வது சிறந்த பள்ளி என்பதற்கு கூட யுஎஸ் நியூஸ் &#38; வோர்ல்ட் ரிப்பொர்ட், நியுஸ்வீக், டைம் என்று பல பத்திரிகைகள் வரிசைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் 'கனவுக்கன்னி 2007' நடத்தும் சன் டிவியும் சரி. 'அழகிரியா/ஸ்டாலினா/உதயநிதியா?' என்று கருத்துக்கணிப்பு நடத்தும் தினகரனும் சரி... யாரும் பட்டியல் போடுவதில்லை.</p>
<ul>
<li>தேர்ச்சி சதவீதம் என்ன?</li>
<li>வளாக வேலைவாய்ப்பு எவ்வாறு உள்ளது?</li>
<li>தங்கும் வசதிகள் எப்படி?</li>
<li>சோதனைச்சாலைகள், பயிற்சிக்களங்கள் எங்ஙனம் இருக்கிறது?</li>
<li>பலரும் அங்கேயே தங்கிப் படிக்கிறார்களா, மாநகரத்தில் இருந்து வந்து போகிறார்களா?</li>
<li>எத்தனை ஆண்டுகளாக இயங்குகிறது?</li>
<li>படித்தவர்கள் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள்? எவ்வளவு சம்பளம் கிடைக்கிறது?</li>
<li>எந்தப் படிப்புக்கு எந்தக் கல்லூரி உகந்தது?</li>
<li>அங்கே படிக்கும் மாணவர்களுடன் சந்திப்பு, நிறைகுறை பேட்டிகள்</li>
<li>ரேகிங், கடுமையான நடைமுறை, கண்டிப்புகள், வசதிகள் குறித்த அலசல்</li>
<li>நிர்வாகமே கடைசி வருட தொழிற்சாலை பயிற்சிக்கு உதவுகிறதா?</li>
<li>செலவு எவ்வளவு?</li>
</ul>
<p>தேர்தல் காலத்தில் குமுதமும் விகடனும் முண்டியடித்து, ஒவ்வொரு ஊராக சென்று வாக்கெடுப்பு நடத்தி, லயோலா கல்லூரி கணிப்பில் இன்னார் வெற்றி; என்டிடிவி நடத்திய வோட்டுப்பதிவில் இந்தக் கூட்டணி முன்னணி என்று பறைசாற்றுவது போல் இந்த மார்க்கெடிங் ரிசர்ச்சும் செய்தால், பலருக்கு பயனாக இருக்கும். டிஆர்பி ரேட்டிங் பிராப்திரஸ்து என்று வாழ்த்துவார்கள்.</p>
<p>இந்தப் பதிவில் கூட தசாவதாரம் என்று முணுமுணுக்காவிட்டால், கூகிள் தெய்வம் சீந்தாது என்பது போல் திரைக்கடியில் தெரியும் ஸ்க்ராலில் <a href="http://gilli.in/shahrukh-is-licking-my-feet-aamir-khan/">ஷாரூக்கானை நாயாக்கிய செய்தியை இட்டு நிரப்பி</a>, மாணவர்களுக்கும் தெளிவு பிறந்தால் மகிழ்ச்சி.</p>
<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/new-religion-carigs-list-david-sipress-cartoons-comics.jpg"><img class="alignnone size-medium wp-image-4252" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/new-religion-carigs-list-david-sipress-cartoons-comics.jpg?w=300" alt="jack\'s found a new religion on craigslist" width="300" height="272" /></a></p>
<p><em>நன்றி</em>: <a href="http://thephoenix.com/article_ektid61625.aspx">Finding religion - Life - The Phoenix</a></p>
<blockquote><p>வாழ்தலின்  பிரதான கேள்விகளையும், மர்மங்களையும், சிக்கல்களையும் போர்ஹேவால் ஒரு குண்டூசியின் தலையில் உட்கார வைக்க முடியும். தனக்கென ஒரு விவரணை மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்கும் அதன் இலக்கியத்திற்கும் பெரும் பயனை ஈட்டிக் கொடுத்தவர்.</p></blockquote>
<p>போர்ஹேவைக் (Jorge Luis Borges) குறித்த <a href="http://www.geotamil.com/pathivukal/brammarajanonBorges.html">பிரம்மராஜனும்</a> <a href="http://dystocia.weblogs.us/archives/80">சன்னாசி</a>யும் சொல்வது போன்ற வாழ்வின் விவரிப்பை பாவண்ணன் தொடர்ந்து நிறைவேற்றுகிறார். 'If I only had a little humility, I'd be perfect.' என்னும் டெட் டர்னர் போல் தன்னடக்கமின்றி சொல்லவேண்டுமானால், இப்படி மேற்கோள் காட்டி காட்டியே போர்ஹேயாகும் எண்ணம்தான் இந்த மாதிரி பதிவுகளின் தோற்றுவாய்.</p>
<blockquote><p>What helped him overcome the block that had prevented him, almost until he was forty, from moving from essays to narrative prose was to pretend that the book he wanted to write had already been written, written by someone else, by an unknown invented author, an author from another language, another culture, and then to describe, summarize or review that hypothetical book.Part of the legend that surrounds Borges is the anecdote that the first, extraordinary story that he wrote using this formula, 'The Approach to Almotaism', when it first appeared in the journal <em>Sur</em>, convinced readers that it was a genuine review of a book by an Indian author - <em><strong>Italo Calvino </strong>(<a href="http://www.des.emory.edu/mfp/calvino/calclassics.html">Why Read the Classics</a>)</em></p></blockquote>
<p><a href="http://www.thinnai.com/?module=displaystory&#38;story_id=60805086&#38;format=html">பெரும்புதிர்களின் இடையில் : லங்கேஷ் சிறுகதைகள் - பாவண்ணன்</a>: தமிழில் இறையடியான். காவ்யா பதிப்பகம்</p>
<blockquote><p>அன்பை நிராகரிக்கத் தூண்டியது எது? புறக்கணிப்பின் வலியால் உள்ளூர மனம் நொந்திருந்தாலும் அவருடைய கோபத்திலிருந்து மீள்வதற்காக புனைந்துரைத்த ஒரு சின்னப் பொய்யால் பூபாலனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்க பார்வதியைத் தூண்டிய உணர்வு எத்தகையது? நெருங்கிப் பழகியபிறகும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் ஏன் இப்படி நிராகரிக்கிறார்கள்? நெருக்கத்தின் அனுபவம் ஏன் நிராகரித்தலைத் தடுப்பதில்லை? இந்த உறவு ஏன் இப்படி புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது?<br />
:::<br />
ஆண்பெண் உறவு போலவே, இந்தியமண்ணில் சாதி அபிமானமும் விளங்கிக்கொள்ள முடியாத ஒரு பெரும்புதிர். எல்லாச் சாதியினரிடையேயும் மாற்றுச் சாதியில் தனக்குப் பிடித்தமான இணையைத் தேடிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. சாதி என்னும் பேரமைப்பு அத்தகு நிகழ்ச்சிகளை தற்செயல்கள் என்றும் பிறழ்வுகள் என்றும் அடையாளமிட்டு சில காலம் தனித்துவைக்கிறது. பிறகு மெல்லமெல்ல தன் மையத்தைநோக்கி இழுத்துக்கொள்கிறது. சாதிக்கலப்பு என்பதை சாதிப் பேரமைப்பின் மையம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. நிகழாதவரை அது அனுமதிக்கப்படாத ஒரு விதி. நிகழ்ந்தபிறகு, இணைத்துக்கொள்ளத்தக்க ஒரு விதிவிலக்கு. அவ்வளவுதான்.<br />
::<br />
மீண்டும் இந்த உறவும் வாழ்வும் ஏன் இப்படி புதிராக இருக்கிறது என்னும் வினா நம்மை அசைக்கிறது.</p></blockquote>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Hannah Montana &amp; Kamal: Father - Daughter photos]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4194</link>
<pubDate>Thu, 01 May 2008 15:32:23 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4194</guid>
<description><![CDATA[கமல் - சுருதிஹாசன் புகைப்படம் குறித்]]></description>
<content:encoded><![CDATA[<p><strong>கமல் - சுருதிஹாசன் புகைப்படம் </strong>குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:<br />
<a href="http://johan-paris.blogspot.com/2008/04/blog-post.html">என் பார்வையில்.. - <strong>Johan-Paris</strong>: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்...</a></p>
<p>இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற <strong>'<span style="color:#0000ff;">ஹானா மொன்டானா</span>' </strong>நாயகி <strong>மிலி சைரஸின் </strong>சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:<br />
<a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/miley-cyrus-vanity-fair-kamal-dad-sruthy-perspectives.jpg"><img class="alignnone size-medium wp-image-4192" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/miley-cyrus-vanity-fair-kamal-dad-sruthy-perspectives.jpg?w=300" alt="Kamalahasan - Daughter &#38; Father Issues" width="300" height="205" /></a></p>
<p>அது குறித்த <strong>சர்ச்சை</strong>: <a href="http://news.bostonherald.com/track/inside_track/view.bg?articleid=1090635&#38;srvc=home&#38;position=also">Photo no-no controversy - BostonHerald.com</a></p>
<p>அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:<br />
<a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/hanna-montana-controversy-images-portrayal-conservative.jpg"><img class="alignnone size-medium wp-image-4193" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/hanna-montana-controversy-images-portrayal-conservative.jpg?w=300" alt="miley cyrus Howard Stern" width="300" height="261" /></a></p>
<p><strong>பத்திரிகை </strong>பத்தியை வாசிக்க: <a href="http://www.vanityfair.com/culture/features/2008/06/miley200806">Miley Knows Best: Entertainment &#38; Culture: vanityfair.com</a>: "Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney."</p>
<p><strong>சுருக்கமான பின்னணி</strong>:</p>
<ul>
<li>'<span style="color:#ff0000;"><strong>ஹானா மொன்டானா</strong></span>' பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.</li>
<li>வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று <strong><span style="color:#ff0000;">டிஸ்னித்தனமாக </span></strong>இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், 'கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா'வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.</li>
<li>விஜய் தொலைக்காட்சியின் '<a href="http://bsubra.wordpress.com/2008/02/12/star-vijay-tvs-neeya-naana-interview-with-moderator-gopinath/">நீயா... நானா</a>' போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் '<strong><span style="color:#ff0000;">ஹோவர்ட் ஸ்டெர்ன்</span></strong>' (Howard Stern).</li>
<li>"The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He's trying to be hot" என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.</li>
</ul>
<p><strong>சிந்தனைவயப்படும் நேரம்</strong>:</p>
<ul>
<li>அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.</li>
<li>மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.</li>
<li>புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.</li>
</ul>
<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/miley-cyrus-ted-rall-book-deal-memoirs-bestseller.gif"><img class="alignnone size-medium wp-image-4203" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/miley-cyrus-ted-rall-book-deal-memoirs-bestseller.gif?w=300" alt="Cartoons Comics" width="300" height="232" /></a></p>
<ul></ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA["அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்"]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=35</link>
<pubDate>Wed, 16 Apr 2008 20:44:00 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=35</guid>
<description><![CDATA[ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:
]]></description>
<content:encoded><![CDATA[<h3>ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:</h3>
<h3>ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், <span style="color:#0000ff;"><em>" அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் உலக ஆசை அவருக்கு பயனளிக்க வில்லை. அவரிடம் அளவற்ற செல்வமும், கார்களும், நிலங்களும் இருந்தன. எனவே அவரின் மகளை கல்யாணம் செய்ய முன் வருபவர் செல்வத்தின் அதிபதியாகவும், கணக்கு வழக்கற்ற அளவில் செல்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனையாக இருந்தது. எந்த ஒரு வரன் வந்தாலும் அவனிடத்தில் முதலில் அவனின் சம்பளத்தைப் பற்றியும், அவனிடம் இருக்கும் வாகன எண்ணிக்கையைப் பற்றியும், சொந்தமாய் எத்தனை பெரிய வீடு உள்ளது என்பதுவுமே கேள்வியாய் இருந்தது. என்வே நல்ல்தொரு முஸ்லிமாய் வாழும் எந்த இளைஞனுக்கும் வாய்ப்பு கிட்டாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியே காலங்கள் செல்ல செல்ல அவரின் மகளுக்கு தீராத ஓர் வியாதி வந்து அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். நாங்கள் அவளைக் காணும் வேளையில் அவள் மலக்குல் மௌத்தைக் காணும் நெருங்கிய தூரத்தில் இருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவள் அல்லாஹ்வை, வல்ல நாயனை, நீதியின் அதிபதியை காணப் போகின்ற ஏற்பாடுகளில் இருந்தாள்."</em></span></h3>
<h3>சில வினாடிகளுக்கு பிறகு அவள் தன் தந்தையை அழைத்தாள்,<span style="color:#008000;">" அப்பா...அருகில் வாருங்கள்!"</span></h3>
<h3>அவளின் தந்தை இப்போது அவளின் அருகில் இருந்தார்.</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்"</span></h3>
<h3>அப்பா: " ஆமீன்"</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"அப்பா, மீண்டும் ஆமீன் என்று கூறுங்கள்"</span></h3>
<h3>அப்பா: "ஆமீன்"</h3>
<h3>அவள்: <span style="color:#008000;">"மூன்று தடவை ஆமீன் என்று கூறுங்கள் அப்பா..."</span></h3>
<h3>அதன் பின் கூறினாள், <span style="color:#008000;">" எப்படி நீங்கள் எனக்கு திருமண வாழ்வை எட்டா கனியாக்கி அதன் இன்பத்தை எனக்கு தடை செய்தீர்களோ அது போல எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை தடை செய்யட்டும்"</span></h3>
<h3>(அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது உண்மையில் அவ்விடத்தில் இருந்து அச் சம்பவ‌த்தை நேரில் கண்ட ஒரு ஷேக் / உலெமா கூறியதே இது)</h3>
<h3>40 வருடங்களாக அவள் தன் தந்தைக்கு அடி பணிந்து அவரின் வீட்டிலேயே, அவரின் சொல் தட்டாமல் வாழ்ந்ததற்கு அவளின் தந்தை யோசித்திருக்க வேண்டாமா? காலம் கடந்த ஞானோதயம் வந்து ஒன்றும் பிரயோஜனமில்லை.</h3>
<pre>:<a href="http://shadows15.wordpress.com/2008/04/14/say-ameen/">மூலம்</a>:</pre>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தகுதி: வாரிசு; அனுபவம்,களப்பணி: அப்படின்னா?]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=3949</link>
<pubDate>Thu, 31 Jan 2008 17:28:29 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=3949</guid>
<description><![CDATA[
டில்லியில் ராகுல்காந்தி மற்றும்
பிர]]></description>
<content:encoded><![CDATA[<ul>
<li>டில்லியில் ராகுல்காந்தி மற்றும்</li>
<li>பிரியங்கா காந்தி,</li>
<li>சென்னையில் மு.க.ஸ்டாலின்,</li>
<li>மு.க.அழகிரி,</li>
<li>மு.க.கனிமொழி,</li>
<li>மு.க. தமிழரசு,</li>
<li>ஜி.கே.வாசன் என்பவை மிக வெளிப்படையான ஒன்று. அதேபோல்</li>
<li> பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், இவர்கள் இல்லாமல், மாநிலத்தில் வாரிசுகள் வளர்ந்து வருவதையும் கவனிக்க முடியும்.</li>
<li> கார்த்திக் சிதம்பரம் தனது பிறந்த நாளுக்கு வைக்க ஏற்பாடு செய்த கட் அவுட்கள் ஏராளம்.</li>
<li>காங்கிரஸ் கட்சியின் இளைஞரணிக்கு செயலாளராக உள்ளவர்களில் ஒருவரான திருமகன் ஈ.வெ.ரா. இவர் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் புதல்வர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.</li>
<li>பூந்தமல்லி எம்எல்ஏ அருள்,</li>
<li>செய்யாறு எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் ஆகியோருக்கு பதவி அவர்களின் தந்தை செல்வாக்கால்தான் வந்தது.</li>
<li>திமுகவில்..</li>
</ul>
<p>1. சேலம்-வீரபாண்டி ஆறுமுகம்-வீரபாண்டி ராஜா<br />
2. ஈரோடு-என்.கே.பி.பெரியசாமி-என்.கே.பி.பி.ராஜா<br />
3. கோவை-பொங்கலூர் பழனிச்சாமி-பாரி<br />
4. திண்டுக்கல்-ஐ.பெரியசாமி-ஐ.பி.செந்தில்குமார்<br />
5. திருச்சி-அன்பில் குடும்பம்<br />
6. ராமநாதபுரம்-சுப.தங்கவேலன்-சுப.த.சம்பத்<br />
7. திருவாரூர்-கலைச்செல்வன்-கலைவாணன்<br />
8. விழுப்புரம்-பொன்முடி-கௌதமசிகாமணி பொன்முடி<br />
9. கடலூர்-எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-எம்.ஆர்.கே.அன்பரசி, கே.ஆர்.செந்தில்குமார்</p>
<p>நன்றி: <a href="http://www.keetru.com/dyfi/jan08/kannan.php">DYFI &#124; Ilaingar Muzhakkam &#124; Lenin &#124; Kanna</a> - ஜனவரி 2008 :: இளைஞர்களும் சவால்கள் நிறைந்த அரசியலும்: எஸ். கண்ணன் (இளைஞர் முழக்கம்)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Happy Youth Day (Belated wishes to Ageing Politicians)]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2008/01/17/happy-youth-day-belated-wishes-to-ageing-politicians/</link>
<pubDate>Thu, 17 Jan 2008 05:30:05 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2008/01/17/happy-youth-day-belated-wishes-to-ageing-politicians/</guid>
<description><![CDATA[
]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://www.slide.com/s/SBrHCTtg1j9P1sVOacPNNObKlVl3LqwS?referrer=hlnk" target="_blank"><img src="http://widget.slide.com/rdr/1/1/1/W/1000000011a79776/1/225/NM9v2nls6z-Vn1gi9slKmjZ5nRq0CRxl.jpg" alt="Host unlimited photos at slide.com for FREE!" border="0" /></a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Dreams]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2007/11/26/dreams/</link>
<pubDate>Mon, 26 Nov 2007 03:46:11 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2007/11/26/dreams/</guid>
<description><![CDATA[என் ஏழு வயது மகள் கடிதமாக எனக்கு எழுத]]></description>
<content:encoded><![CDATA[<blockquote>என் ஏழு வயது மகள் கடிதமாக எனக்கு எழுதித் தந்தது. அவ்வப்போது அவள் பகிர்வதை, அவளின் எழுத்துக்களாகவே பதிந்து வைக்க திட்டம்.</p></blockquote>
<p>When I was sleeping I was dreaming.</p>
<p>What I was dreaming is I was sleeping and I was flying. I was flying to the moon.</p>
<p>But it was fun in top of the moon.</p>
<p>I was dancing in top of the moon.</p>
<p>I was singing a lot of things. But after that I woke up.</p>
<p>But when I woke up I wasn't in the moon anymore.</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
