<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>பறவை &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/பறவை/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "பறவை"</description>
	<pubDate>Mon, 08 Sep 2008 02:51:43 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[புகைப்படங்கள் - ரங்கன்திட்டு பறவைகள் சரணாயலம்]]></title>
<link>http://kundavai.wordpress.com/?p=528</link>
<pubDate>Mon, 02 Jun 2008 06:26:58 +0000</pubDate>
<dc:creator>kundavai</dc:creator>
<guid>http://kundavai.wordpress.com/?p=528</guid>
<description><![CDATA[சமீபத்தில் மைசூர் போகலாம் என்ற திட்ட]]></description>
<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் மைசூர் போகலாம் என்ற திட்டம் தீட்டியதும் நண்பர்களாய் ரங்கன்திட்டு என்றொரு பறவைகள் சரணாலயம் இருக்கிறது அங்கே நீ ஏன் அங்கே சென்று புகைப்படம் எடுக்கக்கூடாது என்று கேட்டனர். நான் வேடந்தாங்கலையே பார்த்தவன் என்கிற மமதையில் ம்ம்ம் சரிசரி பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன்.</p>
<p>மைசூர் சென்ற பொழுது ரங்கன் திட்டுவிற்கும் சென்றிருந்தேன், வேடந்தாங்கலை ஒப்பிட பறவைகள் குறைவு தான் என்றாலும் வகைகளுக்கும் பறவைகளுக்கு நிச்சயமாய்க் குறைவில்லை ரங்கன் திட்டுவில். அதைவிடவும் முக்கியமான விஷயம் போட்டிங் உண்டு, போட் ஒன்றை எடுத்துக் கொண்டு நீங்கள் பறவைகளுக்கு அருகில் சென்று பார்த்துவிட்டு வரலாம். 300 ரூபாய் கொடுத்தால் இன்னும் நிறைய தூரம் அழைத்துச் சென்று அமைதியாக புகைப்படம் எடுத்துவிட்டு வரமுடியும் என்றும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அதையும் ஒரு முறை செய்து பார்க்க உத்தேசம் கைவசம் இருக்கிறது.</p>
<p>இப்போதைக்கு அங்கே எடுத்த படங்கள் சில.</p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2523643535/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2214/2523643535_cd8ef25434.jpg" width="322" height="500" alt="Bird" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2523643239/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2014/2523643239_163e702bd6.jpg" width="322" height="500" alt="Bird" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2523643047/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm4.static.flickr.com/3245/2523643047_fcf6bae658.jpg" width="320" height="500" alt="Bird" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2523643383/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2287/2523643383_f45f665e91.jpg" width="422" height="500" alt="Bird" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2524467558/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2387/2524467558_3e5d31e9d2.jpg" width="321" height="500" alt="Bird" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2524467290/" title="m1__IMG_7375 by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2112/2524467290_72d25d890a.jpg" width="321" height="500" alt="m1__IMG_7375" /></a></p>
<p><a href="http://www.flickr.com/photos/mohandoss/2523642757/" title="Bird by Mohandoss, on Flickr"><img src="http://farm3.static.flickr.com/2164/2523642757_5cdf4791b5.jpg" width="477" height="500" alt="Bird" /></a></p>
<p>PS1:பறவைகள் மேல் க்ளிக்கினால் பறந்து போய்டாது பெரிதாகத் தெரியும்</p>
<p>PS2:பறவைகள் எதுவும் ட்ரெஸ் போட்டிருப்பதாகத் தெரியவில்லை</p>
<p>PS3:கொல்லிமலையில் பேசியது விலங்குகளைப்(மனிதன் தவிர்த்த :)) பற்றி</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இனிமேல் நாமும் பறக்கலாம்...]]></title>
<link>http://sirippu.wordpress.com/?p=969</link>
<pubDate>Fri, 16 May 2008 06:26:10 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://sirippu.wordpress.com/?p=969</guid>
<description><![CDATA[ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் ம]]></description>
<content:encoded><![CDATA[<p>ஸ்விட்சர்லாந்திலுள்ள ராணுவத்தில் முன்பு பணியாற்றிய Yves Rossy வினோத ஆசைகளின் சொந்தக்காரர். விமானத்துக்குள்ளே பயணம் செய்து செய்து போரடித்துப் போன அவர், பறவையைப் போல பறப்பது அதி அற்புதமாய் இருக்குமே என கனவுகளில் திளைத்தார்.</p>
<p><a href="http://sirippu.wordpress.com/files/2008/05/bird1.jpg"><img class="alignnone size-medium wp-image-970" src="http://sirippu.wordpress.com/files/2008/05/bird1.jpg?w=300" alt="" width="300" height="200" /></a></p>
<p>அந்த கனவுகளுக்கு வடிவம் கொடுக்க கடுமையாய் போராடிய அவருக்கு தனது கனவை மலைக்கு மேல் பறக்க விட ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆனது.</p>
<p><a href="http://sirippu.wordpress.com/files/2008/05/bird2.jpg"><img class="alignnone size-medium wp-image-971" src="http://sirippu.wordpress.com/files/2008/05/bird2.jpg?w=200" alt="" width="200" height="300" /></a></p>
<p>ஃப்யூஷன் மேன் – என செல்லமாக அழைக்கப்படும் இவர் ஜெட் எஞ்சின் பொருத்தப்பட்ட இறக்கையை உருவாக்கி ஆல்ப்ஸ் மலைக்கு மேலாக பறந்து திரிந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறகுகளுடன் பறந்த முதல் மனிதன் எனும் பெருமையையும் பெற்றுள்ளார்.</p>
<p>.<br />
( எங்கள் புராணத்தில் இவர்களெல்லாம் பறந்திருக்கிறார்கள், தேவதைகள் பறக்கின்றன, வான தூதர்கள் பறக்கின்றனர் என்றெல்லாம் கோபப்படுவோர், பதட்டப் படுவோர், எரிச்சல் படுவோர், மற்றும் இன்ன பிற உணர்ச்சிகள் அடைவோர் அவற்றை என் மேல் காட்டாதிருப்பார்களாக )</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4179</link>
<pubDate>Tue, 29 Apr 2008 21:46:28 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4179</guid>
<description><![CDATA[முதலில் வந்த பட்சிக்காக:
K.N. Rao&#8217;s introduction to ]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://snapjudge.wordpress.com/2008/04/29/%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/#comment-12568">முதலில் வந்த பட்சிக்காக</a>:</p>
<p><strong>K.N. Rao</strong>'s introduction to the book "<strong>Biorhythms of Natal Moon </strong>- Panchapakshi Shastram"</p>
<p><a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080">http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5080</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5081</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5082</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5083</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5084</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5085</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5086</a><br />
<a href="http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087"> http://groups.yahoo.com/group/JyotishGroup/message/5087</a></p>
<p>சூக்குமம் நமசிவய என்னும் <a href="http://www.treasurehouseofagathiyar.net/21800/21818.htm">ஐந்தெழுத்தில்</a> உள்ளது.</p>
<p>இவ்வாறே, மானுட இனத்தையும் பிறந்த நட்சேத்திரங்களை அடிப்படையாக வைத்து ஐந்து பிரிவுகளாகப்<br />
பிரித்தனர். ஒவ்வொரு பிரிவையும் அடையாளம்காண ஒரு பறவையின் பெயரைக்கொடுத்தனர். அந்த<br />
நட்சேத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்களைக் கணக்கில் கொண்டு, அதேவகை குணநலன்களையுடைய பறவையைத் தெரிவுசெய்தனர். அவைகள்:</p>
<ol>
<li> வல்லூறு,</li>
<li> ஆந்தை,</li>
<li> காகம்,</li>
<li> கோழி,</li>
<li> மயில்</li>
</ol>
<p>பறவைகள் உருவகமே.</p>
<p>பறவை அரசாளும் என்றால் அப்பறவை அரசனாகவியலாது. இவ்வைந்து பறவைகளும் பகலில் ஐந்துசெயல்களையும் இரவில் ஐந்துசெயல்களையும் செய்யும். ஆனால், செயல்கள் ஐந்துதான்.</p>
<p>வளர்பிறைக்கும், தேய்பிறைக்கும் தொழில்கள் மாறும். அவையாவன:</p>
<ol>
<li> உண்ணும்,</li>
<li> நடக்கும்,</li>
<li> தூங்கும்,</li>
<li> அரசாளும்,</li>
<li> இறக்கும்.</li>
</ol>
<p>இதை,</p>
<ol>
<li> ஊண்,</li>
<li> நடை,</li>
<li> நித்திரை,</li>
<li> அரசு,</li>
<li> மரித்தல்</li>
</ol>
<p>என்பர்.</p>
<p>இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில்,</p>
<ul>
<li> திதிப் பிரிவு,</li>
<li> அட்சரப் புணர்ச்சி,</li>
<li> பட்சிப் புணர்ச்சி,</li>
<li> அட்டயோனிப் பொருத்தம்,</li>
<li> எழுத்தலங்காரப் பொருத்தம்,</li>
<li> நாமயோனிப் பொருத்தம்,</li>
<li> வெற்றி தோல்விநிலை,</li>
<li> அருக்கனிலை,</li>
<li> பட்சியின் வலிமை,</li>
<li> படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்),</li>
<li> பட்சிகளின் செயல்கள்,</li>
<li> பட்சி பாகம்</li>
</ul>
<p>இவ்வாறு பலவற்றை இச்சாற்றிறம் இயம்புகிறது.</p>
<p><strong>அகத்தியரின் பஞ்ச பட்சி சாற்றிறம்</strong></p>
<p><a href="http://www.treasurehouseofagathiyar.net/21100/21158.htm"><strong>காப்பு</strong></a></p>
<p>1. உன்னியொருவன் உரைத்த முதலெழுத்தைப்<br />
பன்னிப் பறவையாய்ப் பாவித்து - வன்னி<br />
உதைய திசைப்பட்சி யுண்மை யுரைக்கக்<br />
கதை காவியப் பொருலே காப்பு.</p>
<p>2. துய்யமலருறையுந் தோகா யுன தைம்பொற்<br />
செய்யமலர்ப் பாதஞ் சேவித்தேன் - வையத்<br />
தைந்து வகைப்பட்சி யமையுங் குணமென்றன்<br />
சிந்தை தனினிற்கவே செய்.</p>
<p>3. ஒன்று திசைக்குருவி யொன்றிவரு மோர்தூதன்<br />
நின்றநிலை யாருடத்தில் நேருமே - நன்று<br />
வழுவா துரைதாயும் வல்லவர்கள் சொன்ன<br />
முழுவா கடத்தின் முறை.</p>
<hr />
<p><strong>முதலதிகாரம்.</strong></p>
<p>1. மொழிக்கு முதலெழுத்தே முன்னுதிக்கு மாமதனைப்<br />
பழித்தவலன் றன்னிலையும் பார்த்து - வழிபெறவே<br />
பேரால் வருவனவும் பேதமறிந் துணர்ந்து<br />
ஆராய்ந்து சொல்வ தறி.</p>
<p>2. அகரமே வல்லூறு ஆந்தை இகரமதாம்<br />
உகரங் கருங்காக முன்னிப் - பகரில்<br />
எகரமது கோழி யெஞ்ஞான்று மஞ்ஞை<br />
ஒகார முயர் மெய்யாந் துரை.</p>
<p>3. ஊணடையரசு நித்திரை மரணம் உயிர்பகலிரவினிலுண்டு<br />
நீணிலத்தரசு செய்துபின் சென்று நெறியுடனடந்து மேயுறங்கும்<br />
பூணுறும்மர பக்க நற்பகலூண் பொன்றியுந் துயின்றரசாகிக்<br />
சேணுறு நடையுண் டுறங்கியே சென்றுஞ் செத்தர சாளுநல்லிரவே.</p>
<blockquote><p>ஐந்து பட்சிகளும் ஐந்து செய்கைகளை மாறிமாறிச் செய்கின்றன. அவைகளின் முறை:<br />
<span style="color:#ff0000;">பூர்வபக்கம்</span>:<br />
<span style="color:#0000ff;">பகல்</span>: ஊண், நடை, அரசு, நித்திரை, மரணம்.<br />
<span style="color:#0000ff;">இரவு</span>: ஊண், அரசு, மரணம், நடை, நித்திரை.<br />
<span style="color:#ff0000;">அமரபக்கம்</span>:<br />
<span style="color:#0000ff;">பகல்</span>: ஊண், மரணம், நித்திரை, அரசு, நடை.<br />
<span style="color:#0000ff;">இரவு</span>: ஊண், நித்திரை, நடை, மரணம், அரசு.</p></blockquote>
<p>4. ஒன்றேகா லொன்ரறையீ ரொன்று முக்காலரையும்<br />
நன்றாக விவ்வாறு நாழிகையுங் - குன்றாத<br />
வளர்பிறைக்குந் தேய்பிறைக்கும் வாலாய மாஞ்சூட்ச<br />
வளமுரைத்தார் முன்னோர் வகுத்து.<br />
(இச் சாற்றிறம் அகத்தியர் காலத்திற்கு முன்னமேயே வளர்ந்து வாழ்ந்திருத்தல் வேண்டும்)</p>
<p>5. மறித்து மொருவகையால் வண்கடிகை யாறுந்<br />
தெறித்ததொரு சூக்குமத்தைச் சேரக் - குறித்திடுங்கா<br />
லுண்டு நடந்தாண் டுறங்கி யிறந்திடுமே<br />
வண்டனைய கண்ணாய் மதி.</p>
<p>6. உண்பானுக் கொன்றேகா லொன்றரையிற் றானடக்க<br />
கண்பார்த் தரசிரண்டிற் காண்போமே - பண்பாகத்<br />
தூங்குவது முக்காலாய்த் துஞ்சுவது தானரையாய்ப்<br />
பாங்குடைய பட்சி பலன்.</p>
<p>7. வினவின் முதற்றி தியாறும் பதினொன்று நத்தை<br />
மேலிரண்டேழ் பன்னிரண்டும் விளங்கும் பத்திரையா<br />
மினியதொரு மூன்றெட்டும் பதிமூன்றுஞ் சயையா<br />
மிருத்தை யென்பா னாந்கிலுட நவமி பதினான்கை<br />
புனைகுழலாய்ப் பஞ்சமியும் பத்துமுவரத் தரமும்<br />
பூரணை மென் மறியலவன் கோன் மகரஞ் சரமாந்<br />
தனிவிடை தேள் குடஞ்சிங்கம் நிலைராசி சாகுந்<br />
தனுமிதுனங் கன்னியுமீ னுபய மெனத்தகுமே.</p>
<p>8. ஊர்கோணத்தைக் கதிர்செவ்வாய் அகரமோங் கும்பத்திரையாம்<br />
தேர்கோளருணன் மதி இகரஞ் சயையும்பொன்னும் உகரமதாம்<br />
வேர்கோளிருத்தைப் புகர் எகரம் வெய்யசனிபூரணை ஒகரம்<br />
ஏர்கோளிடையாய் பகற்கடிகை யிவ்வாறிவையூண் சொன்னோமே.</p>
<p>9. சொன்னவகரம் வல்லூறூண் துய்ய இகரமாந்தையிணூண்<br />
முன்னை உகரங் கொடியூணா மொழியிலெகரங் கோழியிணூண்<br />
பன்னுமெகர மஞ்ஞையிணூண் பண்டையடையவே பறவைகளொண்<br />
றுண்ணுமிரண்டு நடைமுடி மூன்றுறக்க நான்குசாவைந்தே.</p>
<p>10.சாய்ந்த அகரங்ககரமுடன் சகரந்தகரந் தந்நகரம்<br />
வாய்ந்தபகர மகரமுடன் வகரமிவை யெட்டெழுத்தாகும்<br />
ஆய்ந்தபருந்து முதல் யோனியிரு நான்கினுக்குமடைவாக<br />
வேய்ந்த பொருத்தம் வெற்றியுடனிதனாற் பறவையியம்பிடுமே.</p>
<p><strong> பகுதி 4</strong></p>
<p>31. வல்லூறு முண்ண மாமயிலுந் தானரசாய்ப்<br />
பொல்லாத கொழியது போயிறக்க - நல்லாய்க்கேள்<br />
காரண்டந் தானடக்கக் கண்டுயிலு மேயாந்தை<br />
சீரண்ட மாலுண்டு சேர்.</p>
<p>32. ஆந்தை யமுதுண்ணும் வல்லூறரசு செயுஞ்<br />
சாந்த மயிலதுவுஞ் செத்துவிழும் - ஏந்திழையீர்<br />
கோழியது நடக்குங் கொம்பார்ந்த காகமது<br />
வீழும் விழிதுயின்று மேல்.</p>
<p>33. திங்கட் சனிமயிலாஞ் சேயருக்கன் கோழியதாம்<br />
பொங்கு புதன்காகம் போசனமா - மங்கையே<br />
அந்தணனுக் காந்தை யணிபுகர்க்கும் வல்லூறு<br />
சந்தமும் பிற் பகற்கே சாற்று.</p>
<p>34. கூறிடுந் திங்களாந்தை குலவுசேய் வல்லூறு<br />
மீறிய வருக்கன் காகம் வெள்ளியும் - புதனுமஞ்ஞை<br />
யேறியசனி வியாழங் கோழியா மியம்புங்காலை<br />
யாறுபத்தாகுங் கன்ன லதிற் சாகும மரபக்கம்.</p>
<p>35. உண்டுடனே செத்து முறங்கிய ரசாண்டும்<br />
விண்டு நடக்கும் விழிமடவீ - ரன்றிரவில்<br />
உண்டு முறங்கு முடனே நடத்திறக்குங்<br />
கண்டரசனாகு மெனக் காண்.</p>
<p>36. வரியார் மயிலுண்ண மாலாகு மாந்தை<br />
திரியாதோ தேசமெலாஞ் சென்று - பெரிய<br />
வாரணமே மண்ணாள வல்லூறு தானுறங்கக்<br />
காரணத்தாற் காக்கை சாங் காண்.</p>
<p>37. கண்டாந்தை யுண்ணக் கருங்கோழி தானடக்க<br />
வண்டாயுண் வல்லூறு மன்னவனாய் - விண்ட<br />
விழிமூடுமே காகம் வீணாக மஞ்ஞை<br />
பழிதேட வேயிறக்கும் பார்.</p>
<p>38. சொற்கோழி யுண்ணத் தொடர்ந்தேகும் வல்லூறு<br />
நற்காக நன்றாக நாடாளும் - பொற்காவின்<br />
மண்ணின் மயிலுறங்க மாலாந்தையே மரணம்<br />
எண் ணுமறிவா லெடு.</p>
<p>39. வந்த பிற் பக்கத்தில் வல்லூறு முண்ணவே<br />
முந்து கருங்காக முடனேகும் - அந்தமயி<br />
லாளுமே பூமியது வாந்தையே கண்டுயிலு<br />
மாளுமே கோழியதே வந்து.</p>
<p>40. தண்காக முண்ணத் தனிமயிலுந் தானடக்க<br />
மண்காவ லாந்தையது வந்தாளப் - பெண்கொடியே<br />
கோழியுறங்கக் குல வலியானே சாக<br />
வாழி புதனுக் கெனவே வை.</p>
<p><strong><a href="http://www.treasurehouseofagathiyar.net/21500/21570.htm">பகுதி 5</a></strong></p>
<p>41.மந்தன் சோமன் கோழியிணூண் மானேவெள்ளி மயிலுண்ணும்<br />
புந்தியாந்தைப் போசனமாம் பொன்னிற்காக மிரையருந்தும்<br />
சிந்தைமகிழச் சேயிரவி தினத்தேவல்லூ றமுதுசெயும்<br />
அந்தித்தோன்றும் பிற்பக்கத்தடைவே சொன்னோமறி நன்றே.</p>
<p>42.வாரணம் பொன்னேகாரி மயில்புகர் புதனேமிக்கச்<br />
சீரணிகாகம் வெய்யோன் சிறந்தமாமுனி யாந்திங்கள்<br />
பேரணிவலியன் செவ்வாய்ப் பிற்பக்கத் திரவிற்றங்கும்<br />
ஏரணி குழலாயென்று மிடமறிந்தியம் புவாயே.</p>
<p>43.சேவல் புசிக்கத் திரியுமே யாந்தையது<br />
மாவிற் புவியாளு மாமயிலுங் - கூவி<br />
யுறங்குமே காக்கையுடனி றக்குமே வலியன்<br />
கறங்கு மேகக் கலையாய் காண்.</p>
<p>44.அல்லின் மயிலுண்ண வார்ந்து நடக்குங்காகம்<br />
வல்லம் புவியாளும் வாரணமு - மில்லுறங்கு<br />
மாந்தையது சாகுமன்ன நடைக் கன்னன்மொழி<br />
யேந்திழையா யென்னே இடர்.</p>
<p>45.வகுத்த மினியுண்ண மஞ்ஞையது நடக்கச்<br />
செகத்திற் கொடியரசு செய்யவே - நகைத்துத்<br />
தூங்குமே வல்லூறு துஞ்சுமே செஞ்சேவல்<br />
மாங்குயிலே யென்னா மதி.</p>
<p>46.செப்பக் காரண்டந்தான் றின்னநடக்கும் வலியான்<br />
தப்பிலாக்கோழி தரையாளும் - ஒப்பிலா<br />
மாலாந்தை கண்டுயிலும் வாழ்மயிலுஞ் சாவாகும்<br />
சேலார்விழி மடவீர் செப்பு.</p>
<p>47.வல்லூறினிதுண்ண வார்கோழியே நடக்க<br />
நல்லாந்தை வந்திருந்து நாடாளப் - பொல்லாத்<br />
தூக்கமுறு மயிலாஞ் சொல்ல விழுங்காகத்<br />
தாக்கமலைப் பொடியாந் தான்.</p>
<p>48.போசனமாகில் பதிவாழும் போனார்மீள்வார் போங்கவலை<br />
காசினிவாழுமீ மழைபொழியுங் களவுமில்லைக் கதிர்விளையும்<br />
பேசிற்கன்னிப் பேறாகும் பிணியுந்தீரும் பெண்பெறுவள்<br />
வாசிசெழும் பொன்வாணிபமாம் மன்னரைவெல்வாய் மாங்குயிலே.</p>
<p>49.யாத்திரையாகில்லை நிலைகுலையு மொன்னார் வெல்வரிருநீதிபோங்<br />
காத்திரமில்லாக் கதிர்விளையுங் கன்னியர்வாழ்க்கை நன்றாகா<br />
மாத்திரள்செல்லும் பொருள் கூடாவேட்கை தவழ்ந்துமணங்கூடா<br />
சூத்திரஞ் சொன்னபடியாலே சொன்னார்பெரியோர் சுரிகுழலே.</p>
<p>50.அரசேசெய்யிற் புவிப்பேராம் அரசராலே பலனெய்து<br />
முரசுமதிரும் வரிசையுடன்மூண்ட கருமந்தான் விலகும்<br />
பரிசும்பெரியோர் திறலிடுவர் பழையபிணி போம்பயமில்லை<br />
புரைபோங் களவுந்தான் காணும்போக்குமில்லை புரிகுழலே.</p>
<p><a href="http://groups.yahoo.com/group/agathiyar/message/21610"><strong>பகுதி 6</strong></a></p>
<p>51. தூங்குமாகில் நோய்மாறா தூரம்போனார் தாம்மீளார்<br />
ஆங்கேகரும நன்றாகா வரிவைவாழ்க்கைத் தாழ்வாகுந்<br />
தீங்கேயல்லால் மழைபொழியாச் செந்நெல்விளையாச் செய்குறியீர்<br />
ஓங்கிமணமுந் தாராதே யுண்மையாக வுரைத்தோமே.</p>
<p>52. துஞ்சுமாகிற் சாவுசொலுந் துலையாப்பிணியுந் தானெய்தும்<br />
நெஞ்சினினைந்த பொருள்கூடா நிதியுங்காணார் நிலைகுலைவார்<br />
வஞ்சநோயுமிக வுண்டாமனையாள் வெறுக்கிலு றவாகாள்<br />
கஞ்சமலரார் குழலாளே கருத்தாயுரைத்த படியறியே.</p>
<p>53. கெடுதிய்முட நேகாணார் கிளையுடன் வாழ்வுபேறாம்<br />
கடுகிய பிணியுந்தீருங் கலக்கமோ சற்றுமில்லை<br />
அடைமழை பெருகவுண்டா மகமேற நிற்குந்தன்மை<br />
முடுகிய பயணமில்லை மொழிந்தபின் நுண்ணுங்காலை.</p>
<p>54. வெற்றியுஞ்சுகமு முண்டாம் வியாதியும் மாற்றும்பின்பு<br />
பற்றியகருமந் தானும் பயமில்லையக முந்தாழார்<br />
உற்றதோர் கெடுதி காணாருறு மழையுண்டுதூரத்<br />
துற்றவர் வரவுங்கூடச் சொல்லும் பின்னடக்கத்தோன்றில.</p>
<p>55. ஜெயமொடு சுகமுமுண்டு சிறந்ததோர் பயணந்தன்னில்<br />
புயலிடுமழையு மற்பம் புவிதனிற் கலக்கமில்லை<br />
இயம்பினாற் பெறலாம்வெற்றி யிலாபமும் நீடுமாகும்<br />
பயம்விளையாது நாளும் அரசதாம் பறவையாகில்.</p>
<p>56. உன்னிடிற் பிணியுமல்லா லொருபிணி யதிகமாகும்<br />
மண்ணில்மழையே யில்லை வையத்தில் கெடுதிகாணும்<br />
துன்னிய நெஞ்சிற்றோடந் தோன்றிடுங் கருமஞ்செய்யும்<br />
பன்னியே யுதிக்கும் பட்சிபயனுட னுறங்குமாகில்.</p>
<p>57. காவினிற் பயமுமுண்டு கலகமாங் கருமமெல்லாம்<br />
தீவினைபடு மற்றன்றிச் செய்யுநல் வினைகளாகாச்<br />
சாவினில் விழுந்த பட்சி தனித்து வந்துதிப்பதாலே<br />
பூவினிற்சிறந்த மாதே புகன்றனர் பள்ளினூலே.</p>
<p>58. ஓதுகிலோ மாபட்சி யன்றுண்ணு மொன்றுயிர்போம்<br />
ஏதுமிலா வொன்றையிலேகுமே - நீதிபுனை<br />
நன்றி யுடநொன்றறையி நாடறியத் தானுறங்கும்<br />
ஒன்று முதலாள் வதுலகு.</p>
<p>59. போசனத்தில் மூத்தோனும் போய்நடக்கி லிளையோனும்<br />
ஆசனத்தி னெடியோனு மாயவனை - மாசற்றுத்<br />
தூங்குமவன் குள்ளன் றுஞ்சிடுமே யாமாகில்<br />
அங்கி ருவரோ ராண்டறி.</p>
<p>60. உண்கின்றான்பால நுயர்நடை யானே குமரன்<br />
பண்பாமரசனே பாராள்வான் நண்பு பெறு<br />
முற்றுந்துயில் கிழவன் மோனமுடிந்தோன் சாவோன்<br />
பற்றுந் தவத்தின் பலன்.</p>
<p><a href="http://groups.yahoo.com/group/agathiyar/message/21758"><strong>பகுதி 7</strong></a><br />
61. ஊணினிலுயர்ந்தோன் வெல்வனுயர் நடைக்குள்ளன் வெல்வன்<br />
காணுறு வெகுரோமத்தன் கடுகராச்சியத்தில் வெல்வன்<br />
தானருந் தூக்கந்தன்னி ளிருவருள் வலுத்தோன் வெல்வன்<br />
வேணுமோர் மரணந்தன்னுளிருவருள் வலுத்தோன் வெல்வன்.</p>
<p>62. ஊணில் நடைவலிது நடையி லரசுறுதி<br />
நாணியுறங்கிடவு நன்றாகப் - பேணி<br />
விலகுகுழலாளே யிறப்பும் பொல்லாதென்<br />
றுலகு புகழவுரை.</p>
<p>63. உண்பா னடப்பானை வெல்வ னடப்பானுந்<br />
தன்பாலரசனையுந் தானழிப்பான் - மன்காத்<br />
திருப்பான் றுயில்வானை வெல்லத் துயில்வோன்<br />
மரிம்மானை வெல்வன் மதி.</p>
<p>64. நல்லூணாகிற் கிழவன்வெல்வ நடையேயாகிலிளவல் வெல்வான்<br />
செல்லத்தூக்கமாமரசிற் சிறந்தோன் மிகவும் வென்றிடுவான்<br />
எல்லாமரசேயாமாகி லிளையோன் வெல்வா னென்நாளும்<br />
பொல்லாச் சாவேயாமாகிற் போனாரிருவர் மீளாரே.</p>
<p>65. உரைத்திடு மிருவர்பேரு மொரு பக்ஷ¢யுண்ணுமாகில்<br />
நரைத்திடுமவனே வெல்வனடையினி னெடியோன் வெல்வன்<br />
கருத்தரசிளை யோன்வெல்வன் கருங்குட்டன் துயிலில்வெல்வன்<br />
மரித்திடச் சரியாமென்றே மாதவருரைத்தார் மாதே.</p>
<p>66. உண்பான டப்பானை யோட்டு மிருவர்களும்<br />
பண்பாம் பதியைப் பரிந்தோட்டும் - பெண்பாவாய்<br />
துஞ்சினோர்க் கஞ்சுந் துயில்வோனை யாவருமே<br />
யஞ்சலென் றழைத்திடு வாராம்.</p>
<p>67. வல்லூறு பொன்னிறமாம் வாழாந்தை வெள்ளியதாம்<br />
செல்லாருங் காகஞ் சிவப்ப்பாகு - நல்லாய்கேள்<br />
கோழியுறு பச்சை குளிர்ந்தமயில் கறுப்பாம்<br />
நாழி மணக்க நவில்.</p>
<p>68. ஆந்தை சிவப்பாம் அணிகாகம் பொன்னிறமாம்<br />
வாய்த்த பச்சை வண்ணமயிலாகும் - ஏந்திழையீர்<br />
வெள்ளையாங்கோழி விளங்கு வரிகறுப்பு<br />
வல்லூறாக் கொண்டு மதி.</p>
<p>69. வல்லூறு பார்ப்பான் வளராந்தை தான்வணிகன்<br />
செல்லாருங் காகஞ் செகத்தரசன் - நல்லாய்க்கேள்<br />
கோழியாம் வேளாளன் கூறுமயில் சண்டாளன்<br />
ஆழியா நூலாய்ந் தறி.</p>
<p>70. பொன்மறையோனும் வலியான் பேராந்தை வேந்தனும்<br />
துன்னுமொழிகாகந் துலை வணிகன் - மன்னும்<br />
உழுகுலத்தோன் கோழியே யோதுங்காண் மஞ்ஞை<br />
இழிகுலத்தோ னென்றே யிசை.</p>
<p><a href="http://www.treasurehouseofagathiyar.net/21800/21800.htm">பகுதி 9</a></p>
<p>81. வல்லூறு பாலை வளராந்தை வண்குறிஞ்சி<br />
நல்லாருங்காக நடுமருதம் - மெல்லியரே<br />
வாரணமே முல்லை வளருமயி னெய்தல்<br />
ஆரணத்தோர் சொல்லா லறி.</p>
<p>82. வல்லூறு வண்மை வளர்காக நீர்க்காலாம்<br />
நல்ல திறலாந்தையது நாற்காலாம் - சொல்லக்<br />
குறுங்கோழி கொம்பாங் குலவு மயில் பட்சி<br />
பெறுங்கா ணிவையாய்ந்து பேசு.</p>
<p>83. வல்லூறு பொன்னாம் வளராந்தை வெள்ளியதாம்<br />
நெல்லார்ய்ங்காக நிறஞ் செம்பாம் - பொல்லாத<br />
கோழியது வெண்கலமாங் கோலமயிலி ரும்பாம்<br />
வாழி மடவார் வகை.</p>
<p>84. வல்லூறு வருகின்றான் மாமறையோன் தூரவந்தான்<br />
நெல்லிக் கருங்காக நிற்கின்றான் - மெல்லியரே<br />
கோழியே மீண்டான் குலவு மயிலுமரை<br />
நாழிகையிலே வருவா னாடு.</p>
<p>85. மன்னவன் வல்லூறாகின் மனிதர்கைப் புகுந்ததென்க<br />
வெண்ணிய வாந்தையாகி லொண்டொடியெடுத்தாளென்க<br />
உண்ணிடுங்காகமாகி லொருவனே கொண்டா னென்க<br />
வண்ணமார்கோழி யாணும் பூமியின்மயில்தான் பெண்ணே.</p>
<p>86. வல்லூறுகாக மயின் மூன்று மாணாகும்<br />
நல்லதிரவுகோ லுஞ்சொன்னோம் - பொல்லாத<br />
ஆந்தை பொற்கோழி பெண்ணாகுமிதேதோழி<br />
செர்ந்தறிந்து சொல்லுந் திறம்.</p>
<p>87. உரைகிழக்கு வல்லூறு உயிராந்தை தெற்காம்<br />
விரையங் கருங்காக மேற்காம் - புரைதீரக்<br />
கொத்தியிரை விழுங்குங் கோழி வடக்காகு<br />
மத்திபத்தி னிற்கு மயில்.</p>
<p>88. பச்சைமயில் மேற்காம் பாரில் வடக்காந்தையா<br />
மிக்ககிழக்காகும் வல்லூறு - மெச்சு நல்ல<br />
தெற்காகும் காகமது தேனார்விழி மடவாய்<br />
பொற்கோழி மத்திபமாம் போற்று.</p>
<p>89. மத்திபத்தில் வல்லூறு வாழாந்தை தெற்காகும்<br />
உற்றநிதி கிழக்கேயொண் காகம் - சற்றிடமே<br />
தெற்காகுங் கோழி சிறந்தமயின் மேற்காகும்<br />
எக்காலுஞ் சாற்றுதற்கா மீடு.</p>
<p>90. காணு மகாரப் பேரானுடைய கண்டமுதல்<br />
காணுஞ் சிரசாந்தை கைகாகம் - பேணிக்<br />
கோழியுடம்பு மயில் முன்பின்னாகும் வலியான்<br />
தாழுமிரு சரணந்தான் இஉஎஒஅ</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
