<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>நூல் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/நூல்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "நூல்"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 14:50:28 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[அலசல் : எனது புதிய நூல்]]></title>
<link>http://sirippu.wordpress.com/?p=1197</link>
<pubDate>Thu, 31 Jul 2008 10:41:12 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://sirippu.wordpress.com/?p=1197</guid>
<description><![CDATA[எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோர]]></description>
<content:encoded><![CDATA[<p>எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.</p>
<p>வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.<br />
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்</p>
<p>அன்புடன்<br />
<span style="text-decoration:underline;">சேவியர்</span></p>
<p><span style="color:#0000ff;"><strong>அருவி வெளியீடு<br />
9444302967<br />
பக்கங்கள் 128<br />
விலை  : 70/-</strong>  </span></p>
<p> </p>
<p><a href="http://sirippu.wordpress.com/files/2008/07/alasal1.jpg"><img class="alignnone size-medium wp-image-1198" src="http://sirippu.wordpress.com/files/2008/07/alasal1.jpg?w=226" alt="" width="226" height="300" /></a></p>
<p class="MsoNormal" style="text-align:right;margin:0;"><span style="font-size:10pt;font-family:Latha;"><strong><span style="color:#800000;">சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை</span></strong></span></p>
<p>சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.</p>
<p>ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.</p>
<p>போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.</p>
<p>ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.</p>
<p>இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.</p>
<p>அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.</p>
<p>- சுந்தரபுத்தன்.<br />
<a href="http://sirippu.wordpress.com/files/2008/07/alasal2.jpg"><img class="alignnone size-medium wp-image-1199" src="http://sirippu.wordpress.com/files/2008/07/alasal2.jpg?w=198" alt="" width="198" height="300" /></a></p>
<p class="MsoNormal" style="text-align:right;margin:0;"><span style="font-size:10pt;font-family:Latha;"><strong><span style="color:#800000;">இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை</span></strong></span></p>
<p>வேர்களைத் தேடி<br />
 <br />
ஃ</p>
<p>'உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ' என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது   . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.</p>
<p>நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.</p>
<p>அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.</p>
<p>அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.</p>
<p>தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான  களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.</p>
<p>கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.</p>
<p>பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.</p>
<p>உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து  தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும்,  தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.</p>
<p>கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்  எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எனது நூல் : கிறிஸ்தவம் - ஒரு முழுமையான வரலாறு]]></title>
<link>http://sirippu.wordpress.com/?p=1111</link>
<pubDate>Mon, 30 Jun 2008 08:50:35 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://sirippu.wordpress.com/?p=1111</guid>
<description><![CDATA[கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.

வர]]></description>
<content:encoded><![CDATA[<p><strong>கிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.</strong></p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/christianity.jpg"><img class="alignnone size-medium wp-image-939" src="http://xavi.wordpress.com/files/2008/06/christianity.jpg?w=193" alt="" width="193" height="300" /></a></p>
<p>வரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.</p>
<p>மதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.</p>
<p>ஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.</p>
<p>எல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.</p>
<p>கிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத்தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.</p>
<p>யார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது ? எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் ? கிறிஸ்தவம் புனிதமா ? அவமானமா ? என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.</p>
<p>கிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.</p>
<p>கிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.</p>
<p>நண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.</p>
<p>இந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.<br />
<strong>கிழக்கு பதிப்பகம்<br />
விலை : ரூ 100</strong></p>
<p><a href="http://xavi.wordpress.com/files/2008/06/christianity2.jpg"><img class="alignnone size-medium wp-image-940" src="http://xavi.wordpress.com/files/2008/06/christianity2.jpg?w=191" alt="" width="191" height="300" /></a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புத்தகங்கள் - Must browse Books: Library]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4269</link>
<pubDate>Tue, 27 May 2008 21:41:17 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4269</guid>
<description><![CDATA[சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூல]]></description>
<content:encoded><![CDATA[<p>சமீபத்தில் படிக்க வேண்டும் என்று நூலகத்தில் முன்பதிவு செய்துவைத்துக் கொண்ட புத்தகங்களின் பட்டியல்:</p>
<p>1. <a href="http://www.amazon.com/Nudge-Improving-Decisions-Health-Happiness/dp/0300122233">Nudge: Improving Decisions About Health, Wealth, and Happiness</a>: Richard H. Thaler, Cass R. Sunstein</p>
<ul>
<li>மக்கள் எடுக்கும் முடிவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்துவது எவ்வாறு?</li>
<li>மோசமான தேர்ந்தெடுப்புக்கு வழிவகுக்காமல், வாழ்க்கையில் வெற்றியும் சமூகத்திற்கு நன்மையும் கிடைக்கும் வழி செல்ல வைப்பது எப்படி?</li>
</ul>
<p><em>தொடர்புள்ள வலையகம்</em>: <a href="http://www.nudges.org/">Nudge</a></p>
<p>2. <a href="http://www.amazon.com/McMafia-Journey-Through-Criminal-Underworld/dp/1400044111">McMafia: A Journey Through the Global Criminal Underworld</a>: Misha Glenny</p>
<ul>
<li><a href="http://snapjudge.wordpress.com/2005/12/09/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be/">சிரியானா</a>, ட்ராஃபிக் மாதிரி உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?</li>
<li>இஸ்ரேலின் விலைமாதுக்கள் முதல் 93 மும்பை குண்டுவெடிப்புகள் வரை உள்ள தொடுப்பு</li>
</ul>
<p><em>தொடர்புள்ள பேட்டி</em>: <a href="http://www.carnegieendowment.org/events/index.cfm?fa=eventDetail&#38;id=1119&#38;prog=zru">McMafia: A Journey Through the Global Criminal Underworld by Misha Glenny - Carnegie Endowment for International Peace</a></p>
<p>3. அ) <a href="http://www.amazon.com/When-Men-Become-Gods-Polygamist/dp/0312372485">When Men Become Gods: Mormon Polygamist Warren Jeffs, His Cult of Fear, and the Women Who Fought Back</a>: Stephen Singular</p>
<p>ஆ) <a href="http://www.amazon.com/Stolen-Innocence-Polygamous-Becoming-Breaking/dp/0061628018">Stolen Innocence: My Story of Growing Up in a Polygamous Sect, Becoming a Teenage Bride, and Breaking Free of Warren Jeffs</a>: Elissa Wall, Lisa Pulitzer</p>
<p>இ) <a href="http://www.amazon.com/Escape-Carolyn-Jessop/dp/0767927567">Escape: Carolyn Jessop, Laura Palmer</a></p>
<ul>
<li>அமெரிக்காவில் பைபிள் பெல்ட் என்றழைக்கப்படும் டெக்சாஸ் சார்ந்த சுற்றுப்புறங்களில் இயங்கும் Fundamentalist Church of Latter Day Saints (FLDS) குறித்த பின்னணி</li>
<li>கடவுள் நம்பிக்கைகளுக்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள உறவு</li>
<li>மனித உரிமைகளும் மதங்களும் எங்கு உரசுகின்றன?</li>
</ul>
<p>4. <a href="http://www.amazon.com/Worst-Case-Scenarios-Cass-R-Sunstein/dp/0674025105">Worst-Case Scenarios</a>: Cass R. Sunstein</p>
<ul>
<li><em>எம்பி3 பேட்டி</em>: <a href="http://www.econtalk.org/archives/2007/11/sunstein_on_wor_1.html">Sunstein on Worst-case Scenarios, EconTalk Permanent Podcast Link: Library of Economics and Liberty</a></li>
<li>உலக வெம்மையாக்கலும் தீவிரவாத ஆபத்துக்களும் - எவ்வாறு ஒப்பிடலாம்?</li>
<li>இந்தியா &#38; ஆப்பிரிக்கா: சுனாமி, ஏவியன் பறவை காய்ச்சல், ஒசோன் படலம் - பேராபத்து களங்கள்</li>
</ul>
<p>5. அ) <a href="http://www.amazon.com/Freedom-Oil-President-United-Addiction/dp/0071489061">Freedom From Oil: How the Next President Can End the United States' Oil Addiction</a>: David Sandalow</p>
<p>ஆ) <a href="http://www.amazon.com/Over-Barrel-Foreign-Dependence-Stanford/dp/0804754993">Over a Barrel: The Costs of U.S. Foreign Oil Dependence</a>: John Duffield</p>
<ul>
<li>உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வளம் இருந்தும் அமெரிக்கா ஏன் எண்ணெய் மேலே மட்டும் சார்ந்திருக்கிறது?</li>
<li>ஒவ்வொரு நாளும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு எண்ணெய் இறக்குமதியாகிறது. இது அதிகாரபூர்வ தகவல். இதில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் செலவினங்கள் எவ்வளவு?</li>
<li><em>சுருக்கமான செயல்திட்டம்</em>: <a href="http://www.wired.com/cars/energy/news/2008/01/oil">How the Next President Can End Our Oil Addiction</a></li>
<li><em>பாட்காஸ்ட் பேட்டி</em>: <a href="http://www.brookings.edu/events/2007/1015oil.aspx">Freedom from Oil: How the Next President Can End the United States' Oil Addiction - Brookings Institution</a></li>
</ul>
<p>6. <a href="http://www.amazon.com/Really-Inconvenient-Truths-Environmental-About-Because/dp/1596980540">The Really Inconvenient Truths: Seven Environmental Catastrophes Liberals Don't Want You to Know About--Because They Helped Cause Them</a>: Iain Murray</p>
<ul>
<li>ஆல் கோர் நோபல் பரிசு பேசுவதற்காக சுற்றுச்சூழல் குறித்து ஏட்டுச்சுரைக்காயாக கவலைப்படுகிறாரா?</li>
<li>பூச்சிக்கொல்லிகளை தடை செய்ததும் மலேரியா பரவியதும்</li>
<li>உணவுத் தட்டுப்பாடு x பயிர்களில் தயாரகும் எண்ணெய் - சாப்பாட்டு பஞ்சம்</li>
</ul>
<p>7. <a href="http://www.amazon.com/Invisible-Nation-Statehood-Shaping-Middle/dp/0802716113">Invisible Nation: How the Kurds' Quest for Statehood Is Shaping Iraq and the Middle East</a>: Quil Lawrence</p>
<ul>
<li>குர்திஸ்தான் வலுப்பெறுவதை மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளை <a href="http://snapjudge.wordpress.com/2008/02/26/world_independence_kosovo/">துருக்கி</a> எந்நாளும் விரும்பாது.</li>
<li>இரானுக்கும் சிரியாவுக்கும் கூட குர்து பகுதியில் உள்ள எண்ணெய் வளத்தின் மீது நிறையவே பாசம் இருக்கிறது. இப்படியாகப் பட்ட சந்தர்ப்பத்தில் உள்ள அலசல்</li>
</ul>
<p>8. அ) <a href="http://www.amazon.com/Free-Ride-John-McCain-Media/dp/0307279405">Free Ride: John McCain and the Media</a>: David Brock, Paul Waldman</p>
<p>ஆ) <a href="http://www.amazon.com/Real-McCain-Conservatives-Independents-Shouldnt/dp/0979482291">Amazon.com: The Real McCain: Why Conservatives Don't Trust Him and Why Independents Shouldn't</a>: Cliff Schecter</p>
<ul>
<li>அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் ஜான் மெகெயின் குறித்த பின்னணித் தகவல்கள்</li>
<li>மெக்கெயின் - இடதுசாரியா? மிதவாத வலதுசாரியா? கைதேர்ந்த அரசியல்வாதியாக எவ்வாறு 'வெளிப்படையானவர்' போல் வேஷம் கட்டுகிறார்?</li>
</ul>
<p>9. <a href="http://www.amazon.com/Unbroken-Agony-Revolution-Kidnapping-President/dp/0465070507">An Unbroken Agony: Haiti, From Revolution to the Kidnapping of a President</a>: Randall Robinson</p>
<ul>
<li>அமெரிக்காவின் அருகில் இருந்தாலும் ஆப்பிரிக்காவை விட பரம ஏழையாக இருக்கும் ஹைதி நாட்டின் மேலோட்டமான சரித்திரம்</li>
<li>சமீபத்தில் நாடுகடத்தப்பட்ட ஜனாதிபதி ழான் - பெர்ட்ரான்ட் ஆர்ட்டிசைட் குறித்த டைரிப் பதிவுகள்</li>
</ul>
<p>10. <a href="http://www.amazon.com/Stuffed-Starved-Hidden-Battle-System/dp/1933633492">Stuffed and Starved: The Hidden Battle for the World Food System</a>: Raj Patel</p>
<ul>
<li>நவோமி க்ளெய்ன், சாய்னாத் என்று டிஸாஸ்டர் கேபிடலிசம் படிப்பவர்களுக்கு, மேலும் புரிதல்கள் கிடைக்கும்</li>
<li>அமெரிக்காவில் உழவர்களுக்கு கிடைக்கும் மானியங்கள், வரிவிலக்குகள் எவ்வாறு உலக சந்தையை பாதிக்கிறது?</li>
<li>மொத்த உணவு வர்த்தகத்திற்கு பல்லாயிரக் கணக்கான தயாரிப்பாளர்களும் கொள்முதலாளர்களும் இருந்தாலும் ஒரு கைக்குள் அடங்கும் இடைத்தரகர்கள்தான் விலையை நிர்ணயிக்கிறார்கள்</li>
</ul>
<p>11. <a href="http://www.amazon.com/Inside-Jihad-My-Life-Qaeda/dp/0465023886">Inside the Jihad: My Life with Al Qaeda</a>: Omar Nasiri</p>
<ul>
<li>அல் க்வெய்தா, ஜிஹாத் எல்லாம் குழந்தைகளும் அறிந்த பெயராக ஆகுமுன் உள்ளே இருந்து உளவாளியான கதை</li>
</ul>
<p>12. <a href="http://www.amazon.com/Snoop-What-Your-Stuff-About/dp/0465027814">Snoop: What Your Stuff Says About You</a>: Sam Gosling</p>
<ul>
<li>அலுவலில் உங்கள் இடம் எப்படி இருக்கிறது? என்ன பொருட்கள் வைத்திருக்கிறீர்கள்? என்பதை வைத்து வேலைக்கு ஏற்றவரா என்று அலசலாம்</li>
<li>காதலிப்பவரின் உண்மையான குணாதிசயங்கள் என்ன என்று உளவியல் ரீதியாக அறிவது எவ்வாறு?</li>
<li>வலைப்பதிவரின் எண்ணவோட்டங்கள் எப்படி என்பதை கேள்வி-பதில் போன்ற எளிய அலசல்களில், புறச்சூழலை ஒப்பிட்டு தெரிந்து கொள்ளலாம்</li>
</ul>
<p>13. <a href="http://www.amazon.com/Fate-Africa-History-Fifty-Independence/dp/1586483986/ref=pd_bbs_sr_1?ie=UTF8&#38;s=books&#38;qid=1211919243&#38;sr=1-1">The Fate of Africa: A History of Fifty Years of Independence</a>: Martin Meredith</p>
<ul>
<li>ஆப்பிரிக்கா ஏன் ஏழை நாடாகவே இருக்கிறது?</li>
<li>ஜிம்பாப்வே போன்றோர் <a href="http://manoranjitam.wordpress.com/2008/05/27/zimbabwe-issues-fifty-crore-value-in-single-currency-note/">ஐம்பது கோடி மதிப்புள்ள நாணயம் அச்சிட்டாலும்</a> இரண்டு அமெரிக்க டாலருக்கு ஒப்பாகுமளவு பணவீக்கம் எப்படி அரங்கேறுகிறது?</li>
</ul>
<p>14. <a href="http://www.amazon.com/Maxims-Reflections-Penguin-Classics-Wolfgang/dp/0140447202">Maxims and Reflections (Penguin Classics)</a>: Johann Wolfgang von Goethe</p>
<ul>
<li>அந்தக் காலத்தில் ட்விட்டர் இல்லை. அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? சில எடுத்துக்காட்டுகள்:
<ul>
<li>என்ன வார்த்தை சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதம் நிழலாடுவது இயல்பு</li>
<li>பாராட்டிப் பேசுவதும் வெட்டிப் பேசுவதும் சுவாரசியமான உரையாடலுக்கு வசதிப்படாது</li>
<li>உங்களைப் பார்த்து மற்றவர் சிரித்தால் நேர்பட இயங்குகிறீர்கள் என்று அர்த்தம்</li>
</ul>
</li>
<li><em>மேலும்</em>: <a href="http://en.wikiquote.org/wiki/Johann_Wolfgang_von_Goethe">Johann Wolfgang von Goethe - Wikiquote</a></li>
</ul>
<p>15. <a href="http://www.amazon.com/Weird-History-John-Richard-Stephens/dp/1558507159">Weird History 101</a>: John Richard Stephens</p>
<ul>
<li>சரித்திரத்தை ரொம்ப சேரியமாய் எடுத்துக் கொண்டு வாசித்தறிவது இயல்பு. பிரச்சினை செய்து பரபரப்புக்கு பதிவு போட விஷயம் தேடுவது வலை இயல்பு. இரண்டாவது பிரிவுக்கு ஏற்ற புத்தகம்</li>
</ul>
<p>16. அ) <a href="http://www.amazon.com/Translator-Tribesmans-Memoir-Darfur/dp/1400067448">The Translator: A Tribesman's Memoir of Darfur</a>: Daoud Hari</p>
<p>ஆ) <a href="http://www.amazon.com/gp/product/B000LSA8S0">They Poured Fire On Us From The Sky: The True Story of Three Lost Boys from Sudan</a>: Alphonsion Deng, Benson Deng, Benjamin Ajak, Judy A. Bernstein</p>
<ul>
<li>சூடானில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிவரின் குறிப்புகள்</li>
<li>தன் குடும்பம் கரையேற்றப்பட்ட பிறகும், பிறருக்காக மீண்டும் தாய்நாடு சென்று பணியாற்றிவரின் வரலாறு.</li>
<li>தனி மனிதரால் என்ன செய்ய முடியும் என்பதற்கான விடை</li>
</ul>
<p>17. <a href="http://www.amazon.com/Aristotle-Aardvark-Washington-Thomas-Cathcart/dp/0810995417">Aristotle and an Aardvark Go to Washington</a>: Thomas Cathcart, Daniel Klein</p>
<ul>
<li>அரசியல்வாதி பேச்சை கனகாரியமாக எடுத்து ஆராய்ந்து, ஓட்டைகளை நகைச்சுவையாக கட்சிப் பாகுபாடின்றி கோர்க்கும் புத்தகம்.</li>
<li>இவர்களின் <a href="http://snapjudge.wordpress.com/2007/11/28/book-selections-by-boston-globe/">முந்தைய புத்தகத்தின் ரசிகன்</a> என்பதால், எமாற்றி இருக்க மாட்டார்கள்.</li>
</ul>
<p>18. <a href="http://www.amazon.com/Logic-Life-Rational-Economics-Irrational/dp/1400066425">The Logic of Life: The Rational Economics of an Irrational World</a>: Tim Harford</p>
<ul>
<li>ஆணுறை அணியாமல் விலைமாதுக்கள் ஏன் உறவு கொள்கிறார்கள்?</li>
<li>கால்பந்தாட்ட பெனால்டி கிக்கில் எந்தப் பக்கம் அடிப்பது என்று பெக்கம் எப்படி முடிவெடுகிறார்?</li>
<li>திருமணத்திற்கும் விவாகரத்திற்கும் இடையே உள்ள பொருளாதார அடிப்படை, கணக்கு என்ன?</li>
</ul>
<p>19. <a href="http://www.amazon.com/Year-Living-Biblically-Literally-Possible/dp/0743291476">The Year of Living Biblically: One Man's Humble Quest to Follow the Bible as Literally as Possible</a>: A. J. Jacobs</p>
<ul>
<li>பைபிளில் சொல்வது போல் பரீட்சார்த்தமாக வாழ்ந்த காலத்தின் அனுபவங்கள்</li>
<li>பொய் சொல்லக்கூடாது, வதந்தி பேசக்கூடாது, அடுத்தவரின் பொருள் மேல் கண்வைக்க கூடாது என்று கர்ம சிரத்தையாக கடைபிடிக்க முடியுமா?</li>
<li>வாரத்தில் ஒரு நாள் வேலை பார்க்காமல் (அதாவது வலைப்பதியாமல்) வெறுமனே இருக்க முடியுமா?</li>
</ul>
<p>20. <a href="http://www.amazon.com/How-Read-Literature-Like-Professor/dp/B000MAH71I">How to Read Literature Like a Professor</a>: Thomas C. Foster</p>
<ul>
<li>இலக்கியத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு கோனார் நோட்ஸோ க்ளிஃப் உரையோ உங்களுக்குத் தேவையா?</li>
<li>எந்த உவமை வந்தாலும், குறிப்பால் உணர்த்தினாலும் தட்டையாக உணராமல், உள்ளே உறைந்திருக்கும் பொருளைப் (உள்குத்து) புரிந்து கொள்வது எப்படி?</li>
</ul>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[படிக்காத மேதை - புத்தக வாசமில்லாத விமர்சகர்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4226</link>
<pubDate>Tue, 13 May 2008 04:36:23 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4226</guid>
<description><![CDATA[கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்ற]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://dystocia.weblogs.us/archives/278">கரிசலில் <strong>சாலைகள், சதியாலோசனைகள்</strong></a> என்று <strong>சன்னாசி </strong>பதிவெழுதியிருக்கிறார்.</p>
<p><em>மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்</em>:</p>
<blockquote><p>அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் - எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது - உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு - எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.</p></blockquote>
<p>இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று <span style="color:#ff0000;">உங்களைப் </span>பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?</p>
<p>முதலில் விமர்சனம் <span style="color:#ff0000;">எப்படி </span>இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.</p>
<p><a href="http://books.google.com/books?id=MS0r5giZF04C&#38;dq=balzac+lost+illusions&#38;psp=1&#38;source=gbs_summary_s&#38;cad=0">'பால்சாக்'கின்</a> <strong>Lost Illusions</strong> நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:</p>
<blockquote><p>ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். 'நாவல் ரொம்ப போர்' என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.</p></blockquote>
<p>அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் "the author is dead". இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. <a href="http://mathy.kandasamy.net/musings/archives/2008/02/18/842">ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன்</a> என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.</p>
<p>ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் '<a href="http://books.google.com/books?id=8Gq5AAAACAAJ&#38;dq=changing+places+lodge&#38;ei=0AkpSNfhDIuCyQSjlP3KCQ">Changing Places: A Tale of Two Campuses</a>' நூலை துணைக்கழைக்கலாம்.</p>
<p>வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:</p>
<ul>
<li>நீங்க இதுவரைக்கும் <span style="color:#ff0000;">வாசிக்காத </span>புத்தகத்தை நினைச்சுக்குங்க...</li>
<li>நெனச்சாச்சா?</li>
<li>இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் <span style="color:#008000;">படிச்சிருக்காங்களே</span>, உங்களுக்கு ஒரு மதிப்பெண்</li>
</ul>
<p>இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து '<em>அது கூட வாசிக்காதவரா</em>!?' என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி '<em>முதல் ரேங்க் வாங்கணும்</em>!' என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.</p>
<p>முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். '<strong>காந்தியின் சுயசரிதை</strong>'யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் '<em>நான் வாசித்திருக்கிறேன்</em>' என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், '<em>காந்தியக் கூட படிச்சதில்லையா</em>' என்னும் ஏளனம் வந்தே தீரும்!</p>
<p>தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.</p>
<blockquote><p>டயலாக் <strong>விருமாண்டி </strong>நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் <strong>வீரன்</strong>; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் <strong>மனுசன்!</strong></p></blockquote>
<p>இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட <em>புத்தகம் </em>அல்லது <em>ஆசிரியர் </em>எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து -- இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.</p>
<p>கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு <strong>உம்பர்ட்டோ ஈக்கோ</strong>வின் '<a href="http://en.wikipedia.org/wiki/The_Name_of_the_Rose">The Name of the Rose</a>' பயன்படும்.</p>
<p>வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.</p>
<p>டேன் பிரௌனின் <a href="http://en.wikipedia.org/wiki/Angels_and_Demons">ஏஞ்சல்ஸ் &#38; டீமன்ஸ்</a> ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது <span style="color:#0000ff;">பின் நவீனத்துவ </span>உம்பர்ட்டோ இகோ வகையறா.</p>
<p>எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.</p>
<p>நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் 'நகைச்சுவை'யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.</p>
<p>புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் -- எப்படி இறந்தார்கள்?</p>
<p>இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.</p>
<p>பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.</p>
<p>இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் <strong>என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் </strong>ஹீரோ!</p>
<p>நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.</p>
<p>வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.</p>
<p>ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.</p>
<p>விமர்சகரின் வேலையும் இதுதான்.</p>
<p>கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை <a href="http://books.google.com/books?id=1Sb9ZwgSqJgC&#38;pg=PA12&#38;lpg=PA12&#38;dq=oscar+wilde+selected+journalism+%22to+read+or+not+to+read%22&#38;source=web&#38;ots=IDh_GaVewx&#38;sig=Ff-f57yLlwuHH1Tv02wbHKVpksA&#38;hl=en">ஆஸ்கார் வைல்ட்-டின் 'படிக்கலாமா? வேண்டாமா'</a> என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:</p>
<blockquote><p>சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.</p>
<p>1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.<br />
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!<br />
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.</p>
<p>படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.</p></blockquote>
<p>சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?</p>
<p><em>உதவிய புத்தகம்</em>: <a href="http://snapjudge.wordpress.com/2008/04/24/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/">புத்தக தினம்</a></p>
<p><em>உதவிய பதிவு</em>: <strong>Literature, Science, and a New Humanities </strong>:: <em>Jonathan Gottschall </em> - <a href="http://www.boston.com/bostonglobe/ideas/articles/2008/05/11/measure_for_measure/?page=full">Measure for Measure - The Boston Globe</a>: "Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science"</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Dor (நூல்) - விமர்சனம்]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4061</link>
<pubDate>Sat, 22 Mar 2008 03:53:08 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4061</guid>
<description><![CDATA[நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார]]></description>
<content:encoded><![CDATA[<p>நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.</p>
<p>ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:</p>
<ul>
<li><a href="http://snapjudge.wordpress.com/files/2008/03/dor-2006-5b-1_1188030619.jpg" title="dor-2006-5b-1_1188030619.jpg"><img src="http://snapjudge.wordpress.com/files/2008/03/dor-2006-5b-1_1188030619.thumbnail.jpg" alt="dor-2006-5b-1_1188030619.jpg" align="right" /></a><b>ஜீனத் </b>ஆக நடித்த <font color="#ff0000">குல் பனாக் </font>(Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.</li>
<li>பல மோசமான படங்களில் <font color="#ff0000">ஆயிஷா தகியா</font>வை பார்த்து 'நடிப்பு வராத பொண்ணு' போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!</li>
<li>'Dutch courage' ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லும் <font color="#ff0000">ஷ்ரேயஸ் தல்பாடே</font>வும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது 'நடக்காது!' என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.</li>
<li><font color="#ff0000">வசனங்கள்</font>: எளிமை. ஆனால், உணர்ச்சி &#38; எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.</li>
<li>படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) <font color="#ff0000">மலையாளப் </font>படமாம் (என்ன படம்?)</li>
<li><font color="#ff0000">தமிழ்ப்பதிவர் </font>எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; 'ராத்திரி பத்து மணிக்கு' என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி...</li>
<li><font color="#ff0000">சினிமாத்தனம் </font>இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே</li>
</ul>
<p>காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது... இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.</p>
<p><i>புகைப்படம்</i>: <a href="http://in.movies.yahoo.com/movies/Dor/moviestills/photo-gallery-9832.html">யாஹு</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல்]]></title>
<link>http://islamicnews.wordpress.com/?p=505</link>
<pubDate>Sun, 24 Feb 2008 19:41:01 +0000</pubDate>
<dc:creator>islamicnews</dc:creator>
<guid>http://islamicnews.wordpress.com/?p=505</guid>
<description><![CDATA[அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹ]]></description>
<content:encoded><![CDATA[<p>அபுதாபியில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல்</p>
<p><img width="510" src="http://www.gulfnews.com/images/08/02/23/24_ae_museum02_5.jpg" /> </p>
<p>அபுதாபியில் டாக்டர் அஹமது கூரி ( வயது 56 ) தனது வீட்டில் சுய ஆர்வத்துடன் அருங்காட்சியகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் 210 வருடத்திற்கு முந்தைய ஹதீஸ் நூல் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருட்களை வைத்துள்ளார்.</p>
<p>இதனைக் காண விரும்புவோர் 055 444 34 14 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார் அஹ்மது கூரி.</p>
<p><a href="http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10192145.html">http://www.gulfnews.com/nation/Heritage_and_Culture/10192145.html</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[துபாயில் நூல் அறிமுக விழா]]></title>
<link>http://islamicnews.wordpress.com/?p=503</link>
<pubDate>Sat, 23 Feb 2008 18:59:31 +0000</pubDate>
<dc:creator>islamicnews</dc:creator>
<guid>http://islamicnews.wordpress.com/?p=503</guid>
<description><![CDATA[துபாயில் நூல் அறிமுக விழா
               ]]></description>
<content:encoded><![CDATA[<p>துபாயில் நூல் அறிமுக விழா<br />
                                                    </p>
<p>வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின்  'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற்றது. நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேசினார். நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மானும் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் லியாகத் அலியும் பெற்றுக்கொண்டனர்.  இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
<p>நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது <a href="mailto:gsfuae@gmail.com">gsfuae@gmail.com</a></p>
<p> விரிவான செய்திக்கு : <a href="http://www.muduvaihidayath.blogspot.com/">www.muduvaihidayath.blogspot.com</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா ]]></title>
<link>http://islamicnews.wordpress.com/2008/02/21/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88/</link>
<pubDate>Thu, 21 Feb 2008 11:56:09 +0000</pubDate>
<dc:creator>islamicnews</dc:creator>
<guid>http://islamicnews.wordpress.com/2008/02/21/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%af%88/</guid>
<description><![CDATA[துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக ]]></description>
<content:encoded><![CDATA[<p>துபாயில் இலக்கியச் சோலை நூல் அறிமுக விழா<br />
 <br />
துபாயில் வளைகுடா சமூகப் பேரவை ( Gulf Social Forum ) தமிழகத்தின் தலைசிறந்த புத்தக வெளியீட்டு நிறுவனமான இலக்கியச்சோலையின்  'மனித இனத்திற்கெதிரான குற்றம்' ( Crime Against Humanity ) எனும் நூல் அறிமுக விழா 22.02.2008 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு துபாய் தேரா கல்ஃப் ஏர் பில்டிங் பின்புறம் கமாலி பில்டிங்கின் இரண்டாவது மாடியில் நடைபெற இருக்கிறது.<br />
 <br />
நூலை துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவரும், துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் தலைவருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் அறிமுகப்படுத்திப் பேச இருக்கிறார்.<br />
 <br />
நூலை KEO International Consultants மூத்த கட்டிடக்கலை நிபுணர் எம்.ஜே. ஹபிபுர் ரஹ்மான் நூலை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.<br />
 <br />
இந்நூல் கடந்த 11.01.2008 அன்று தாயகத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.<br />
 <br />
நூல் அறிமுக நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050 468 98 68 / 050 910 32 48 அல்லது <a href="mailto:gsfuae@gmail.com">gsfuae@gmail.com</a><br />
 </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பிப்ரவரி14- 98, கோவை, காதலும் வெடிகுண்டும்...  ]]></title>
<link>http://ponsudhaa.wordpress.com/2008/02/10/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf14-98-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/</link>
<pubDate>Sun, 10 Feb 2008 07:17:54 +0000</pubDate>
<dc:creator>பொன்.சுதா</dc:creator>
<guid>http://ponsudhaa.wordpress.com/2008/02/10/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf14-98-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86/</guid>
<description><![CDATA[எனது காதல் கவிதைத் தொகுப்பான &#8216;கவித]]></description>
<content:encoded><![CDATA[<p>எனது காதல் கவிதைத் தொகுப்பான 'கவிதை அல்ல காதல் ' நூல் வெளியீட்டு விழா காதலர் தினமான பிப்ரவரி 14ல் 98ம் வருடம் கோவையில் நடந்தது.</p>
<p>அண்ணன் அறிவுமதியும், அண்ணன் பழநி பாரதியும் சிறப்பு விருந்தினர்கள்.மாலை 3 மணிக்கு விழா.</p>
<p>இடம் ரயில் நிலையத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருக்கும் திவ்வோதயா அரங்கம்.<br />
'விழா நேரத்திற்கு முன்பே கூட்டம் வரத் துவங்கி விட்டது. விரைவாகவே அரங்கம் நிறைந்து விட்டது.</p>
<p>அண்ணன் பழநிபாரதி சாய்பாபா காலனியின் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.</p>
<p>கூட்டம் அதிகமாகி விட்டதால் அவர்களைக் காக்க வைப்பது முறையல்ல எனவே விழாவைத் துவங்கி<br />
விடலாம் அண்ணன் வந்து இணைந்து கொள்வார் என்று முடிவெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்கள்<br />
மேடையில் அமர வைக்கப் பட்டார்கள்.</p>
<p>நண்பன் மாகலிங்கத்தோடு பாடலோடு விழா துவங்கியது.</p>
<p>பாதிப் பாடல் பாடிக் கொண்டிருகும் போது மாபெரும் வெடிச் சத்தம், அரங்கமே கொஞ்ச நேரம்<br />
அதிர்ந்து அடங்கியது. கூட்டம் முழுவதும் வெளியில் ஓடி வந்தது.</p>
<p>என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. விரும்பத் தகாத ஏதோ நடந்து விட்டது என்பதை மட்டும் அனைவருக்கும் புரிந்தது.</p>
<p>எனக்கு விழா அவ்வளவு தான் என்று தோன்றியது.</p>
<p>உதவி இயக்குனரான நான் என் சக்திக்கு மீறி உறவினர்கள், நண்பர்களிடம் பிய்த்துப் பிடிங்கி பணம்<br />
தயார் செய்து செலவழித்திருந்தேன்.விழா நின்று போய்விட்டால் இன்னொரு முறை நடத்துவதென்பது சத்தியமாய் சாத்தியமில்லை.</p>
<p>குழுக்கள் குழுக்களாக கூடி நின்று அனைவரும் பேசி சலசலத்த படி இருந்தார்கள்.</p>
<p>அண்ணன் ஓசைக் காளிதாசனும்,அண்ணன் கவிஞர் அவை நாயகனும் குழப்பத்தில் நின்று<br />
கொண்டிருந்தவனை உலுக்கி உலகிற்கு கொண்டு வந்தார்கள்.</p>
<p>'போய் மேடைல உட்காருங்க ஆனது ஆகட்டும் நிகழ்சியை நடத்துவோம்' என்றார்கள்.</p>
<p>மீண்டும் அண்ணன் அறிவுமதி மேடையில் வந்து அமர்ந்தார் விழாத் துவங்கியது.</p>
<p>கொஞ்ச நேரத்திற்கொரு முறை பெரும் வேட்டுச் சப்தங்கள் கேட்ட படி தான் இருந்தது.</p>
<p>பழநி பாரதி அண்ணன் வரவில்லை. எங்கு இருக்கிறார் என்ன நடக்கிறது என்பதும் தெரியவில்லை.</p>
<p>கொஞ்சம் பேர் பீதியில் கிளம்பி விட்டாலும் அரங்கம் நிறைந்திருக்க விழா நடந்தது.</p>
<p>பாதியில் பழநி பாரதி வந்து விட்டார்.</p>
<p>அவர் வந்த பிறகு தான் வெளியே வெடித்துக் கொண்டிருப்பவைகள் குண்டுகள் என்பதை அறிந்தோம்.</p>
<p>மேடையிலேயே வெளியில் குண்டு வெடிப்பதைப் பற்றி அறிவித்தும் அனைவரும் விழாவில் பங்கு<br />
கொண்டது ஆச்சரியமாய் தான் இருக்கிறது இன்றும்.</p>
<p>பழநி பாரதி பேசும் போது ' காதலைப் பற்றிப் பேசுவது மதத்திற்கு எதிராகப் பேசுவது, சாதிகளுக்கு<br />
எதிராகப் பேசுவது, அதற்கு உதாரணமாகத் தான் வெளியே யாரோ யாரையோ அழிக்க ஆயுதங்கள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பொன் சுதா நாம் பேசுவதற்காக பூக்களை வழங்கி கொண்டிருக்கிறார்' என்று பேசினார்.'</p>
<p>விழா சிறப்பாய் பயத்தோடும் பதட்டத்தோடும் நிறைவடைந்தது.</p>
<p>விழா முடிந்ததும் தான் தெரிய வந்தது எங்கேயும் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது.</p>
<p>இரு சக்கர வாகனங்களில் ஒவ்வொருவராய் சென்று நண்பர்கள் விட்டு வந்தார்கள்.</p>
<p>பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்த நண்பர் காந்தி, லதா அக்கா, நண்பன் மீன்ஸ், அம்சப்ரியா, மற்றும் </p>
<p>இன்னும் சிலர், சென்னயிலிருந்து, திருப்பூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள் அனைவரும் அரங்கிலேயே<br />
தங்க வைக்கப் பட்டார்கள். விழா முடிந்தும் இலக்கியம் பேசிக் கொண்டிருந்தோம்.</p>
<p>அப்படியாக அந்த விழா அதில் பங்கு கொண்ட யாவருக்கும் மறக்க முடியாத திகிலான நாளாக அமைந்து விட்டது.</p>
<p>திகில் நிமிடங்கள்:</p>
<p>1. விழாவிற்கு முந்தைய நாள் இரவிலும், அதற்கு முந்திய நாள் இரவிலும் கோவை முழுக்க நானும்<br />
   நண்பன் மீனாட்சி சுந்தரமும், திலகேஸ்வரனும் போஸ்டர் ஓட்டினோம் அப்போது தானே அவர்கள்<br />
   குண்டுகள் வைத்துக் கொண்டிருந்திருப்பார்கள்.</p>
<p>2. சிறப்பு விருந்தினர்களுக்கு ரோஜாக்கள் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஆர் எஸ் புரத்திற்கு<br />
    நானும் என் தம்பி பிரசாத்தும் அத்வானி பங்கு கொள்ளும் விழாவின் மேடயைக் கடந்து போய் அதன்<br />
    வழியாகவே திரும்பினோம். அதன் பிறகு அரை மணி நேரத்தில் முதல் குண்டு அங்கு வெடித்தது.  </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[31st Chennai Book Fair 2008 - Small biz vs Big box Retailers]]></title>
<link>http://snapjudge.wordpress.com/2008/01/18/31st-chennai-book-fair-2008-small-biz-vs-big-box-retailers/</link>
<pubDate>Fri, 18 Jan 2008 04:18:18 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/2008/01/18/31st-chennai-book-fair-2008-small-biz-vs-big-box-retailers/</guid>
<description><![CDATA[பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா?
]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://idlyvadai.blogspot.com/2008/01/blog-post_3828.html">பதிப்பாளர் ஒருவர், அரங்குகள் நான்கா</a>?</p>
<blockquote><p>இந்த ஆண்டு ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களே ஒன்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை எடுத்து தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். இதனால் சிறுபதிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பதிப்பாளர் சங்கத் தலைமையிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இவ்வாறு இடம் ஒதுக்கப்படுகிறதோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.</p></blockquote>
<p>‘<a href="http://satrumun.com/2008/01/17/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/">அடுத்த ஆண்டு சரி செய்யப்பட்டுவிடும்</a>…’</p>
<blockquote><p>ஒருவர் தனது பெயரில் ஒரு பதிப்பகமும், மனைவி பெயரில் இன்னொரு பதிப்பகமும், உறவினர் பெயரில் மற்றொரு பதிப்பகமும் வைத்திருந்தால் மூவரும் சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியும். இந்த மூவர் பெயரிலும் அரங்குகள் வேண்டும் என்று கேட்கிறபோது நாங்கள் சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும் விதிகளுக்கும் உட்பட்டு அரங்குகள் ஒதுக்க வேண்டியதாக உள்ளது.</p>
<p>சில பதிப்பகங்கள் தங்களுடைய அரங்கில் மட்டும் தங்கள் பதிப்பகத்தின் புத்தகங்களை விற்காமல் பிற அரங்குகளிலும் விற்பனைக்கென கொடுத்து விடுகிறார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் ஒரு சில பதிப்பகங்களின் புத்தகங்களே இருக்கின்ற சூழ்நிலை உருவாகிவிட்டது...சிறுபதிப்பாளர்களின் புத்தக விற்பனை குறையும் வாய்ப்பும் உள்ளது.</p></blockquote>
<p><a href="http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080116131022&#38;Title=TamilNadu+Page&#38;lTitle=R%AAZLm&#38;Topic=0">தினமணி</a>: இந்த ஆண்டு மொத்தம் வந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரம்.</p>
<p><strong>நடுவில் என்னுடைய மறுமொழி</strong>:</p>
<p>ஒருவரே பல பெயரில் பதிப்பகம் நடத்துவது ரொம்ப காலமாக நடந்து வருகிற விஷயம். கிழக்கு போன்றவர்கள் அதை வெளிப்படையாக செய்கிறார்கள். வானதி பதிப்பகத்தார் போன்ற பழம்பெரியவர்கள் இதையே கமுக்கமாக நீன்ட நெடுங்காலமாக நடத்துகிறார்கள். 'நாலு ஸ்டால் போட்டு இருக்காங்களே' என்பது வளர்ந்தவரைப் பார்த்து பொறாமை பாராட்டும் குணம். </p>
<p>'சிவாஜி' படம் ஊரில் அகப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெளியாவது போல், குறிப்பிட்ட பதிப்பகத்தின் புத்தகங்கள் அனைத்து விற்பனை அரங்குகளிலும் கிடைக்க செய்வது வியாபார சூட்சுமம். 'கமிஷன் தண்டம் அழ வேண்டுமே' என்றால் விற்பனையாகும் அளவு குறைந்து போனாலும், நிகர லாபம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரிசமமாகும்.</p>
<p>உள்ளே இருப்பவர்களுக்குத்தான் இது உண்மையா என்று தெரியும்.</p>
<p><a href="http://thoughtsintamil.blogspot.com/2008/01/1.html">பாதி கடந்த நிலையில் பத்ரியின் எண்ணங்கள்</a>:</p>
<blockquote><p>சிறு பதிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மான்யம்... அதாவது அவர்களுக்கு மட்டும் குறைந்த விலையில் ஸ்டால் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அப்படியானால் யார் சிறு பதிப்பாளர்கள் என்ற வரைமுறையும் (ஆண்டுக்கு என்ன டர்ன் ஓவர் என்பதைக் கொண்டு இருக்கலாம்) அதற்கான ஆடிட் சான்றும் இருந்தால் இதனைச் செய்யலாம்.</p></blockquote>
<p><a href="http://pksivakumar.blogspot.com/2008/01/chennai-book-fair-2008-my-thoughts.html">பி.கே. சிவகுமார்</a>:</p>
<blockquote><p>புத்தகக் கண்காட்சி இல்லாதபோது விற்பனைக்குப் புத்தகக் கடைகளைச் சார்ந்து வாழ்கிற பதிப்பகங்கள், ஒன்று புத்தகக் கண்காட்சியிலும் புத்தக விற்பனை நிலையங்களுக்கு இப்போது போலவே Equal இடம் கொடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்குப் புத்தகக் கண்காட்சியில் இடமே இல்லை என்று சொல்ல வேண்டும். இடமே இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லிவிட்டால், வருடத்தில் பதினோரு மாதங்கள் இந்த விற்பனையாளர்களின் தயவு இல்லாமல் புத்தகங்கள் விற்காது. </p>
<p>ஆதலால், ஒரு புத்தகம் பல கடைகளில் கிடைப்பது ஜனநாயகம். </p>
<p>இந்தக் கடையில் மட்டுமே இந்தப் புத்தகம் இருக்க வேண்டும் என்கிற குறுகியகால லாபங்களை மனதில் கொள்ளாது செயற்படுவதே நல்லது. பல கடைகளில் ஒரு புத்தகம் கிடைத்தாலும் பதிப்பாளருக்கு நஷ்டமில்லை. 30%-லிருந்து 40% கமிஷன் கொடுக்க வேண்டியிருந்தாலும் அது லாபமே. அந்த கமிஷன் லாபமும் தனக்கே வரவேண்டும் என்று நினைப்பது என்னைப் பொருத்தவரை நிச்சயம் சரியில்லை.</p></blockquote>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
