<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>தொடர் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/தொடர்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "தொடர்"</description>
	<pubDate>Fri, 18 Jul 2008 22:59:17 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[சுடர்களின் நடனம்]]></title>
<link>http://sirumazai.wordpress.com/?p=129</link>
<pubDate>Tue, 20 May 2008 04:11:56 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/?p=129</guid>
<description><![CDATA[மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்]]></description>
<content:encoded><![CDATA[<p>மார்கோ அவ்வளவு சாதாரணமாக அழுபவன் அல்ல. ஒரு காதல் நிறைவேறாமல் போன பின்னும் அவன் அழவில்லை. லிடியாவைச் சந்தித்த சில நாட்களே ஆகிறது. அவள் காளைச் சண்டை வீராங்கனை. அபாயகரமான விதியுடன் கழிகிற ஒவ்வொரு நாளுடன் இருவருக்குள்ளான காதலும் பெருகுகிறது. நாளை பற்றியே நினைவே ஏதோ ஒரு பயத்தை தருகிறது. வீட்டில் பாம்பு புகுந்ததில் தொடங்கி எல்லாமே கெட்ட சகுணங்களாக தெரிகின்றன. ஒரு நல்ல நிலா இரவில் நண்பர்களுடன் அமர்ந்து அந்த கிட்டார் பாடகனின் பாடலை கேட்டுக்கொண்டிருக்கையில் மார்கோவிற்கு அழுகை வருகிறது, காரணம் தெரியாமல். பாடல் நெடுக அவன் கண்ணீர் சிந்தியபடியே இருக்கிறான்.</p>
<p>சமீப காலங்களில் நான் மிகவும் ரசித்த <a href="http://www.youtube.com/watch?v=c3A1lDYud64" target="_blank">பாடலும</a>் காட்சியும் பெட்ரோ அல்மோதவாரின் "<a href="http://en.wikipedia.org/wiki/Talk_to_Her" target="_blank">Talk to her</a>"ல் வருகிறது. அத்தனை அழகான பாடல். அந்தப் பாடலின் ஸ்பானிஷ் வரிகளை பொழிபெயர்க்க முயற்சிக்க தோன்றவில்லை. அந்தக் காட்சிக்கான பாடல் என்னுள்ளேயே இருப்பதாக தோன்றியது. அந்த காட்சிக்காக நான் எழுதியது, இந்தப் பாடல்.</p>
<p>------------------------------------------</p>
<p>காற்றின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருக்கும்<br />
ஒற்றைப் படகென<br />
இந்தச் சுடரை<br />
பார்த்துக் கொண்டிருக்கிறேன்</p>
<p>கைகள் நீளவில்லை ஏனோ தோன்றவில்லை<br />
கண்ணில் நீருடன்<br />
இந்தச் சுடரினை<br />
பார்த்துக் கொண்டிருக்கிறேன்</p>
<p>காற்றின் இசைப்படி<br />
சுடர்களின் நடனம்</p>
<p>------------------------------------------</p>
<p>உந்தன் கையினை இறுகப் பற்றிக்கொண்டேன்<br />
முணுமுணுப்பிலே ஏதோ சொல்லிக்கொண்டேன்<br />
எங்கோ தொலைவிலே கேட்ட அந்தப்பாடலின்<br />
அடுத்த வரியை நானே எழுதிக்கொண்டேன்<br />
துளி கண்ணீருடன் புன்னகைத்த<br />
மற்றுமொரு பொழுதை<br />
உன்னுடன் வாழ்ந்துகொண்டேன்<br />
யாரின் விதிப்படி<br />
நாளை நிகழும்<br />
நீரின் விசைப்படியே<br />
நதிகளும் நகரும்</p>
<p>--------------------------------------------</p>
<p>அந்த இரவினில் கண்ட கெட்டக்கனவிலே<br />
கைகள் நழுவிட நான் விட்டது என்ன?<br />
வந்த வழியினில் திரும்ப சென்றுவிடவே<br />
மீண்டும் தோன்றிட ஒரு காரணம் என்ன?<br />
நீ கேள்வியுடன் சுண்டிவிட்ட<br />
நாணயத்தின் விடையை<br />
என்னுடனே வைத்துக்கொண்டேன்<br />
யாரின் விதிப்படி<br />
நாளை நிகழும்<br />
காற்றின் இசைப்படியே<br />
சுடர்களின் நடனம்</p>
<p>--------------------------------------------</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரத்தடி]]></title>
<link>http://sirumazai.wordpress.com/?p=128</link>
<pubDate>Sun, 11 May 2008 12:08:53 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/?p=128</guid>
<description><![CDATA[ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ]]></description>
<content:encoded><![CDATA[<p style="text-align:left;">ஒரு திரைப்படத்தின் கதையை சொல்வதற்கு ஒவ்வொருவரும் ஒரு உத்தியை கையாள்கிறார்கள். சிலர் இரண்டு மணி நேர கதையை ஐந்து மணி நேரம் சொல்லும் ஆற்றல் கொண்டவர்கள். ஐந்து மணி நேரம் கழித்தும் திருப்தியடையாதவர்கள் பலர். சிலர் பாடல்கள் எங்கு வரும் என்று குறிப்பிடுவதில் கவனமாக இருப்பார்கள். பாடல்களை வழிகாட்டி மரம் போல பாவித்திருப்பார்கள். ஒவ்வொரு பாடலையும் அடையும் போது, சரியான பாதையில் செல்கிறோம் எனற ஒரு திருப்தி அவர்கள் முகத்தில் தெரியும். கதை சொல்லி முடிக்கும் போது நிச்சயம் ஒரு பாடல் விட்டு போயிருக்கும். மீண்டும் வந்த வழியே சென்று விட்டுப்போன பாடலை பொருத்துவார்கள். சிலர் வசனங்களை அதே தொனியில் சொல்லிக் காட்டுவர். பலருக்கு இரண்டு வரிகளுக்கு மேல் கதையை சொல்லத் தெரியாது. முக்கியமான காட்சியை விளக்குவதற்கு முன்னால் சிலர் நம்மை கவனப்படுத்துவார்கள். அந்தக் காட்சி கடந்ததும் அதில் என்ன அப்படி முக்கியமானது இருந்தது என்று நிச்சய்ம் தோன்றும். சிலர் முழுதாக சொல்லி முடித்ததும் அவர்கள் அந்த படத்தை பார்க்கவேயில்லையென நமக்கு தோன்றும்.</p>
<p>அலுவலகத்திற்கு என்னை தினமும் காரில் கொண்டு விடும் அன்பர் அன்று மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அவரின் புன்னகையில் ஒரு உரையாடலை அவர் தொடங்குவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. நேற்று இரவு அவர் ஒரு திரைப்படத்தை பார்த்திருக்கிறார். சுமார் நான்கு வருடங்கள் கழித்து திரையரங்கில் சென்று பார்த்திருக்கிறார். அதுவே அந்த உற்சாகத்திற்கு காரணம். நான் அப்படியா சந்தோஷம் புன்னகை ஒன்றை உதிர்த்தேன். அவரோ படத்தின் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டார். கடைசிக் காட்சியில் யாரெல்லாம் இறந்துவிடுவார்கள் என்பதை முன்னுரையாகச் சொல்லிவிட்டு தொடங்கினார். நினைவுக்கு வருகிற எல்லாக் காட்சியையும் சொல்லிக்கொண்டே வந்தார். வரிசையில் சொல்ல வேண்டும் என்று அவருக்கு ஏனோ தோன்றவில்லை. தோன்றிய காட்சியை உடனே சொல்லாவிட்டால் அது மறந்து விடுமோ என்னவோ. அலுவலகம் அடைந்த போது அவர் சொல்லி முடித்துவிட்டாரா என்பதை அவரிடமே கேட்க விரும்பினேன். அவருக்கே தெரிந்திருக்காது என்று நினைத்து அந்த எண்ணத்தை நிராகரித்தேன். ஒரு முத்துமாலையை அறுத்தது போல அந்த திரைப்படத்தை அவர் என்னிடம் அறுத்திருந்தார். திரைப்படம் என்னைச் சுற்றி சிதறிக்கிடந்தது. கதவை திறந்து இறங்குகையில் மடியிலிருந்து விழுந்து சிதறியோடியது திரைப்படத்தின் பாடல் ஒன்று.</p>
<p style="text-align:center;">******************</p>
<p style="text-align:left;">"கடைசி பேருந்து" என்ற வார்த்தைப் பிரயோகமே நகரங்களில் இல்லையென தோன்றுகிறது. எங்கள் டவுனுக்கு சென்னையிலிருந்து வரும் கடைசி பேருந்துக்கு கோயில் தேர் போல ராஜ மரியாதை தரபட்டது. எங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அது கண்ணுக்குத்தெரியாமல் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. எத்தனை சுவாரசியமான பேச்சையும் எட்டரை மணிக்கு துண்டித்தாக வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு சென்று அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி நிற்க வேண்டும். சென்னை திருமணங்களிலிருந்து சாப்பிடாமலே பலர் அதை பிடிக்க ஓடி வந்துவிடுவர். அலுவலக ஊழியர்கள் அந்த பேருந்தில் ஒரு நண்பர் வட்டத்தையே உருவாக்கியிருப்பர். காய்கறிகள் விற்றுவிட்டு திரும்பி வரும் வயதான பாட்டிகளின் குடிசை வாயில்களிலே பேருந்து நின்று செல்லும்.  நடத்துனர் கொஞ்சம் பேச்சு சிரிப்புடன் பேருந்தை வழி நடத்திச் செல்வார். டிக்கெட் கிழித்தலில் இயந்திரத்தனம் குறைந்திருக்கும். நாள் முழுதும் ரகசியமாக ஊரைச் ஒன்றாக சுற்றி திரும்ப வரும் காதலர்கள் யாரையும் நான் அறியேன் என்ற பாவனையோடு தூரதூரமாக அமர்ந்து வந்துகொண்டிருப்பார்கள். அலைபேசிகள் இல்லாமல் அம்மாமார்களின் மனம் அல்லாடிக்கொண்டிருக்கும். இரவில் விழித்திருக்கும் கடவுள்களுக்கு அவர்களின் பிரார்த்தனை புளித்து போயிருக்கும். ஒரு தலைமுறையாகவே வீட்டின் பெண்கள் அதற்காக தினமும் காத்துக்கொண்டிருந்தார்கள், பலர் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டு.</p>
<p style="text-align:center;">******************</p>
<p style="text-align:left;">பாதி நிரம்பிய வாளியினுள் குழாயின் நீர் சொட்டும் ஒலியை விட இரவில் கேட்பதற்கான ரம்மியமான இசை வேறெதுவும் இல்லை. ஒரு ராணுவ ஒழுங்கை கொண்டது சொட்டுகளுக்கிடையேயான அந்த இடைவெளி. முடிவற்ற ஒரு பாடலைப் போல தொடர்ச்சியாக நீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது. ஏதோ நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிற வேளைகளில் அந்த ஓசை மிகச் சுலபமாக நினைவுகளுடன் கலந்து விடுகிறது. உறுத்தாமல் பக்க வாத்தியம் வாசிப்பது போல. வாளியில் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அதே சின்ன அதிர்வு என் எண்ணவெளிகளில் ஏற்படுகிறது. திடீரென யாராவது குழாயின் வாயை அழுத்தி மூடிவிட்டு படுக்கிறார்கள். அவர்களுக்கு அது ஏதோ ஒரு விடுதலையை தந்துவிடுகிறது. அதன் பிறகு எனக்கு தான் உறக்கம் போய்விடுகிறது. சப்தப்பெருவெளி எங்கும் நீர் துளிகள் சொட்டிக்கொண்டே இருப்பது போன்று ஒரு பிரமை.</p>
<p style="text-align:left;">காற்று வீசும்.............</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[Colour of paradise]]></title>
<link>http://vimarsanam.wordpress.com/?p=165</link>
<pubDate>Thu, 08 May 2008 03:31:45 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://vimarsanam.wordpress.com/?p=165</guid>
<description><![CDATA[
Color of paradise - ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழ]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone size-medium wp-image-166" src="http://vimarsanam.wordpress.com/files/2008/05/colour-of-paradise.jpg?w=208" alt="" width="208" height="300" /></p>
<p>Color of paradise - ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழகான நிலப்பரப்பில், மலைப்பிரதேசக் குளுமையில், கற்பனைக்கெட்டாத அழகழகான இடங்களில் நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு படம்.</p>
<p>மேலும் படிக்க இங்கே <a href="http://sirumazai.wordpress.com/2008/05/08/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/" target="_blank">கிளிக</a>் செய்யவும்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[செல்லுலாய்ட் கவிதைகள் - 5]]></title>
<link>http://sirumazai.wordpress.com/?p=126</link>
<pubDate>Thu, 08 May 2008 03:25:11 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/?p=126</guid>
<description><![CDATA[
திரை முழுதும் இருள்.
&#8220;இது யாருடையது]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone size-full wp-image-127" src="http://sirumazai.wordpress.com/files/2008/05/colour-of-paradise.jpg" alt="" width="500" height="718" /></p>
<p>திரை முழுதும் இருள்.</p>
<p>"இது யாருடையது?"</p>
<p>பதில் இல்லை.</p>
<p>ஒரு டேப் ரெகார்டர் திறக்கப்படும் ஓசை. ஒரு கேஸட் ஓடத் துவங்குகிறது. ஒரு சிறுவனின் குரல் அதிலிருந்து ஒலிக்கிறது.</p>
<p>"இது என்னுடையது சார்"</p>
<p>தொடர்ந்து நான்கைந்து கேசட்டுகள். ஒவ்வொன்றும் இதே போன்று யாருடையது என்று அடையாளம் காணப்படுகிறது.</p>
<p>திரையில் ஒளி பரவுகிறது. அது பார்க்கும் திறனற்றவர்களுக்கான உறைவிடப்* பள்ளி.</p>
<p>அன்று பள்ளியின் கடைசி நாள். எல்லா மாணவர்களும் உற்சாகமாக கிளம்பத் தயாராகின்றனர். வீட்டிலிருந்து ஆட்கள் வந்து எல்லோரையும் அழைத்து செல்கிறார்கள். மிஞ்சிப் போவது பதினோரு வயது மொஹமத் மட்டுமே. அவனை அழைத்துப் போக அவன் அப்பா நெடு நேரமாக வரவில்லை.</p>
<p>எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம் என்று தெரியாமலே காத்திருக்கிறான். அவ்வப்போது அழுகிறான். ஒரு சின்னஞ்சிறு பறவையின் முனகல் சத்தம் கேட்கிறது. பிறந்து சில நாட்களே ஆன பறவை போல அதன் குரலில் ஒரு பலவீனம். மொஹமத் அந்த திசை நோக்கி செல்கிறான். மரங்கள் அடர்ந்த தோட்டத்தில் தரையில் அமர்ந்து கைகளால் தடவி தடவி அந்த பறவையைத் தேடுகிறான். மெதுவாக அதை கண்டுபிடித்து மரத்தில் மிகுந்த சிரமத்துடன் ஏறி அதன் கூட்டில் அதை பத்திரமாக சேர்க்கிறான். அவனை அவன் கூட்டுக்கு அழைத்து செல்ல அவன் அப்பா வருவாரா??</p>
<p>இரானின் மலைப்பிரதேச கிராமத்தில் வாழ்கிறது மொஹமத்தின் குடும்பம். அம்மா இறந்து போய் வருடங்கள் ஆகிறது. இரண்டு இளைய சகோதரிகள், ஒரு பாட்டி. அவனுடைய அப்பாவின் அம்மா. வெகு நேரத்திற்கு பிறகு அவனுடைய அப்பா அவனை அழைத்துச் செல்ல வருகிறார். தாமதமாக வந்ததற்கு பள்ளி நிர்வாகத்தினர் அவரை கண்டிக்கிறார்கள். அவனுடைய அப்பாவோ அவனை இங்கேயே வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார்!</p>
<p>விடுமுறை சமயங்களில் அவனை அங்கு வைத்துக் கொள்ள இயலாதென அவர்கள் மறுத்துவிட, விருப்பமின்றி அவனை அழைத்துச் செல்கிறார். பேருந்து பயணம் முடிந்து, குதிரையில் ஏறி மலை மேல் செல்கிறார்கள். வீடு வந்து விட்டதா என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான் மொஹமத். ஒரு கட்டத்தில் வந்துவிட்டதாக அப்பா சொல்ல, பாட்டியின் பேரையும் தங்கைகளின் பேரையும் உரக்க கூவிக் கொண்டே வருகிறான். அத்தனை மகிழ்ச்சி. அந்த மூவரையும் அவன் சந்தித்து அவர்களை தொட்டு உணர்ந்து நெகிழ்கிறான்.</p>
<p>தங்கைகளின் பள்ளிக்கு ஒரு நாள் செல்கிறான். தன் ப்ரெய்லி புத்தகம் கொண்டு மற்றவர்களை விட வேகமாகவும் தெளிவாகவும் படிக்கிறான். பாட்டி தங்கைகளுடன் விளையாட்டு, துணிகளுக்கு சாயமேற்றுதல் என மகிழ்வாய் கழிகிறது நாட்கள்.</p>
<p>அவனுடைய அப்பாவிற்கு எதுவுமே பிடிக்கவில்லை!</p>
<p>மறு கல்யாணம் செய்துகொள்ள இருக்கும் அவருக்கு மொஹமெத் தேவையற்ற ஒரு சுமை. அந்த சுமையை எப்படி இறக்கி வைப்பது? அவனை தொடர்ந்து படிக்க வைக்க விருப்பமும் பணமுமில்லை. பாட்டிக்கோ மொஹமெத்தை வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசை.</p>
<p>ஒரு கட்டத்தில் அவனை அடுத்த ஊரில் இருக்கும் பார்க்கும் திறனற்ற தச்சனிடம் உதவியாளனாக அவனுடைய அப்பா சேர்த்துவிடுகிறார், பாட்டி இல்லாத சமயமாக பார்த்து. வீடு திரும்புகிற பாட்டி அதிர்ச்சியுறுகிறார். மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேற முயற்சிக்க, அவரை தடுத்து மொஹமத்தின் அப்பா கெஞ்சுகிற காட்சி - அற்புதம். உச்சியிலுருந்து மழை கொட்டோ கொட்டென கொட்ட, தன்னுடைய நிலையை கோபமும் அழுகையுமாய் மொஹமத்தின் அப்பா விவரிக்கிறார். சிறு வயதிலிருந்து வறுமையும் துயரமும் நிறைந்த வாழ்க்கையை தனக்கென இதுவரை வாழவே இல்லையென வெடிக்கிறார்.</p>
<p>மொஹமெத்துக்கு என்ன ஆகும்?</p>
<p>Color of paradise - ஒரு fairy tale! காணக் காண திகட்டாத அழகான நிலப்பரப்பில், மலைப்பிரதேசக் குளுமையில், கற்பனைக்கெட்டாத அழகழகான இடங்களில் நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு படம்.</p>
<p>மகனுக்கும் பேரனுக்கும் இடையே சிக்கிக் கொள்கிற அந்த பாட்டியின் நிலை பரிதாபம். கிட்டதட்ட அவரின் நிலைமைக்கு நாமும் வந்து விடுகிறோம். அந்த பாட்டி அத்தனை அநாயசமாக நடித்திருக்கிறார். யார் பக்கம் தான் இருக்க வேண்டுமென்று தெரியாமல் மனம் நொந்து செத்துப் போகிறார்!</p>
<p>மொஹமெத்தாக வருகிற சிறுவன் நிஜமாக மாற்றுத் திறன் கொண்டவன். அவனிடமிருந்து நடிப்பை சுலபமாக வாங்கியிருக்கிறார்கள்.</p>
<p>படத்தின் பல காட்சிகளில் படிமங்கள் நிறைந்து இருக்கின்றன. தான் செய்வது சரியா தவறா என்று தெரியாமல், மகனை மீண்டும் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு அப்பா வருகிற காட்சியில் ஒரு ஆமை கல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. ப்ரெய்லி முறையில் படிக்கத் தெரிந்த மொஹமெத் ஆற்றுப்படுகையின் கற்களில் கூட ஏதேதோ படிக்கிறான்.</p>
<p>மொஹமெத்தின் அப்பாவாக வருகிறவர் அசத்துகிறார். முதலில் இவரின் மேல் வெறுப்பு வந்தாலும், போகப் போக நாமும் அவரின் நிலையைக் கொஞ்சம் புரிந்துகொள்கிறோம்.</p>
<p>காட்டுப் பகுதியில் மகனும் அப்பாவும் செல்கிற சமயங்களில் எல்லாம் ஒரு ஓநாயின் குரல் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஓநாய்க்கு மகனை இரையாக்கி விடலாமா என்ற அபாயகரமான எண்ணமும் அப்பாவிற்கு தோன்றுகிறது. ஓநாய் இருக்கிற திசையில் மொஹமெத் செல்ல அப்படியே விட்டுவிடலாமா அது சரியா என்று அப்பா பதைபதைக்கிறார். ஒவ்வொரு முறையும் ஓநாயின் குரல் கேட்கிற போது நமக்கு அடி வயிற்றில் பயம்!</p>
<p>ஓவ்வொரு காட்சியிலும் கவிதை சொல்ல வேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு எடுத்திருக்கிறார்கள். கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் வாளி கூட நிலவின் பிம்பத்தை மொண்டு வருகிறது.</p>
<p>இந்த படம் பார்த்து நாளானாலும் இன்னும் அந்த காட்சிகள் நினைவில் இருந்து கொண்டே இருக்கின்றன. அத்தனை துல்லியமான ஒளிப்பதிவு. முடுபனி மெதுவாக திரையை ஆக்கிரமிக்கிற காட்சி தொடங்கி, இறுதிக் காட்சியில் பாலம் உடைவது வரை, இந்தப் படத்தின் மொத்த வெற்றியில் ஒளிப்பதிவாளரின் பங்கு அசாத்தியம்.</p>
<p>விரல் நுனியில் நான் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறேன் என்று மொஹமெத் சொல்கிறான். எல்லாப் பொருட்களையும் விரல் நுனிகளால் தான் உணர்கிறான். ஒரு நாள் நான் கடவுளையும் உணர்வேன் என்று அழுதுக்கொண்டே மொஹமெத் சொல்கிறான். அதை வைத்து பின்னப்பட்டிருக்கும் அந்த கடைசிக் காட்சி, கச்சிதம்.</p>
<p>நினைவில் நிற்கிற ஓவியம்.</p>
<p>------------------------------------------------------------</p>
<p>( உறைவிடப் பள்ளி - Residential school)</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அற்புத குர்ஆனும் அழகிய தஜ்வீதும் –2]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=33</link>
<pubDate>Wed, 16 Apr 2008 19:49:34 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=33</guid>
<description><![CDATA[பகுதி ஒன்று
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த]]></description>
<content:encoded><![CDATA[<h3>பகுதி <a href="http://iniyaislam.wordpress.com/2008/04/04/%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4/">ஒன்று</a></h3>
<h3>அஸ்ஸலாமு அலைக்கும்,</h3>
<h3>இந்த் பகுதியில் அரபி எழுத்துக்களின் உச்சரிப்பை பழகுவோம். உச்சரிப்பு என்றதும் இது நமக்கு தெரிந்தது தானே என்று இருந்து விடாதீர்கள். அரபியில் உள்ள எழுத்துக்களுக்கும் நம் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களுக்கும் தொலைதூர தொடர்பே உள்ளது. நாம் நினைத்துக் கொண்டு உள்ளது போல ஒரே மாதிரி உச்சரிக்கப் படுவதில்லை அவை. இன்னும் ஒன்றை நினைவிற் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. எனவே அரபியை அதன் வழியிலேயேதான் கற்க வேண்டும். தமிழ் போலல்ல.</h3>
<h3>இன்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதை கேளுங்கள்: <em>"<span style="color:#0000ff;">குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். அலீஃப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலீஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும். மீம் என்பது ஒரு எழுத்தாகும்.</span></em>" (ஆதாரம்: திர்மிதி)</h3>
<h3>எனவே ஒவ்வொரு எழுத்தையும் சரியான விதத்தில் உச்சரிக்க வேண்டும். அவ்வாறு உச்சரித்தால் மட்டுமே முஹம்மது நபி (ஸல்) சொல்லுகின்ற வெகுமதிகளை அல்லாஹ்விடம் கோர முடியும். இன்ஷா அல்லாஹ். இனி, ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்கும் விதத்தை காண்போம்.</h3>
<h1 style="text-align:center;"><span style="color:#ff0000;"><span style="text-decoration:underline;">மக்ரஜ்</span></span></h1>
<h3>அரபியில் ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பின் பிறப்பிடத்தை குறிக்க மக்ரஜ் (Makhraj) என்னும் சொல்லை உபயோகிப்பார்கள். மக்ரஜ் என்னும் சொல்லின் மூலச்சொல், கரஜ (Kha-Ra-Ja) அல்லது யக்ருஜு(Ya-Kh-Ru-Ju) ஆகும். கரஜ  அல்லது யக்ருஜு என்றால், "வெளியில் செல்வது" என்பது பொருளாகும். இங்கு அதன் பொருளானது, உச்சரிப்பு வெளிக்கிளம்பும் விதம் எனக் கொள்ளலாம்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>உலெமாக்களின் கூற்று:</strong></span></span></h3>
<h3>மக்ரஜ் என்றால், ஒரு எழுத்தின் உச்சரிப்பு பிறக்கும் இடம், அல்லது அந்த எழுத்தின் ஒலி உருவாகும் இடம். தஜ்வீத் உலெமாக்கள் இதனை அல்‍=மகாரிஜ் என குறிப்பிடுகின்றார்கள். அல்=மகாரிஜ் என்பது, மக்ரஜ் என்னும் சொல்லின் பன்மையாகும்.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>மகாரிஜ் மற்றும் ஸிஃபாத்தின் வித்தியாசங்கள்:</strong></span></span></h3>
<h3>ஒவ்வொரு எழுத்தின் உச்சரிப்பும் வேறு விதமானாலும், சில எழுத்துக்களின் ஒலி ஒரே இடத்தில் இருந்து வெளியாவதும் உண்டு.  உதாரணத்திற்கு "பா" மற்றும் "மீம்", இரண்டு எழுத்துக்களின் உச்சரிப்பும் உதடுகளிலிருந்து உருவாகின்றன. ஆனால் உச்சரிக்கும் விதம் வேறானதாகும். இவ்வாறு ஒரே இடத்திலிருந்து உருவானாலும் அதன் உச்சரிக்கும் விதம், அவ்வெழுத்தின் குணம் ஆகியன மாறுபடும். ஒவ்வொரு எழுத்தின் இயல்புக் குணத்தை குறிக்கும் சொல்லே ஸிஃபா என‌ப்படும்.ஸிஃபா என்றால் 'அரபி எழுத்தின் இயல்புக்குணம்' என்று பொருள். என்வே ஒரே மக்ரஜைக் கொண்ட எழுத்துக்களை வேறுபடுத்த ஸிஃபா (அஸ்ஸிஃபாத்‍ பன்மை) உபயோகப் படுகின்றது.</h3>
<h3><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>அரபி எழுத்</strong></span><span style="text-decoration:underline;"><strong>து</strong></span></span><span style="color:#993300;"><span style="text-decoration:underline;"><strong>க்களின் ஒலி:</strong></span></span></h3>
<h3>அடிப்படையில் அரபியில் 28 வகையான ஒலிகள் உள்ளன. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு விதமான ஒலி. ஆனால், சில தஜ்வீத் உலெமாக்கள் "அலிஃப்" என்னும் எழுத்தும் "ஹம்ஜா" என்னும் எழுத்தும் ஒரே வகையான ஒலியைக் கொண்டவையே என்று வாதிடுகின்றனர். அவ்வாறு நோக்கின், 27 வகையான ஒலிகளே அரபியில் உள்ளன.</h3>
<h3>இனி மக்ரஜைப் பற்றி விரிவாக காண்போம்.</h3>
<h2><strong><span style="text-decoration:underline;"><span style="color:#993300;">மக்ரஜின் எண்ணிக்கை:</span></span></strong></h2>
<h3>அல்லாமா அல் இமாம் ஷேக் உல் குர்ரா அல் இமாம் அல் ஜஜரி (புகழ் பெற்ற காரி){Al Imaam Shaykhul Qurraa Al Jazari} தன்னுடைய "முகத்திமதுல் இமாமல் ஜஜரி"  என்னும் புத்தகத்தில் 17 வகையான மக்ரஜ் இருப்பதாக குறிப்பிடுகின்றார். 28 வகை எழுத்துக்கள் இருப்பினும் மக்ரஜ் (ஒலி உருவாகும் இடம்) 17 வகையே. தஜ்வீத் உலெமாக்களிடையே இந்த தொகையைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் உண்டு. அல் இமாம் ஷாஃபீஈ 16 வகையான மக்ரஜ் உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் பல உலெமாக்கள் 14 வகையான மக்ரஜே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும் இமாம் அல்ஜ்ஜரி{Al Jazari} தன்னுடைய வாதத்தை பல்வேறு துறைகளைச் சார்ந்த உலெமாக்களை (இலக்கணம், கிராஅத், நஹ்வ்...) சந்தித்து அவர்களின் வாத‌ங்களை ஆராய்ந்த பின்னரே 17 வகை என முன் வைக்கிறார்.</h3>
<h3>இனி வரும் பகுதிகளில் மக்ரஜ்ஜின் அடிப்படைகளைப் பற்றியும், இன்னும் விரிவான மக்ரஜ்ஜையும் காண்போம் இன்ஷா அல்லாஹ்.</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரத்தடி]]></title>
<link>http://sirumazai.wordpress.com/?p=119</link>
<pubDate>Thu, 03 Apr 2008 04:26:20 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/?p=119</guid>
<description><![CDATA[கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் ]]></description>
<content:encoded><![CDATA[<p>கடலைக் காண செல்லும் போதெல்லாம் நான் எனக்குள் ஏதேனும் ரகசியம் இருக்கிறதாவென பார்ப்பேன். ஏதேனும் ஒரு ரகசியத்தை எழுதி ஒரு கண்ணாடிக் குப்பியில் அடைத்து கடலுக்குள் வீசுவது என் நினைவிற்கு வரும். அப்படி ஒரு எண்ணத்தை எங்கிருந்து பெற்றேன் என்று தெரியவில்லை. எங்கேனும் படித்தேனா, யாராவது கதையின் தொடக்கமாக சொன்னார்களா என தெரியவில்லை. ரொம்ப காலமாக அந்த எண்ணம் என்னுடன் இருக்கிறது.  முடிவில் அப்படி ஒரு ரகசியம் இல்லை என்று உணர்வேன். அதன் பின்னரும் தொடர்ந்து யோசித்துக் கொண்டேயிருப்பேன். ஒரு வேளை இருந்திருந்தால், ஒரு வேளை அதை கடலில் வீசினால், ஒரு வேளை யாரேனும் படித்தால்.. என்று நூல் பிடித்து சென்று கொண்டேயிருப்பேன். உண்மையில் எனக்கு ரகசியம் இருப்பதும் இல்லாததும் ஒரு பிரச்சினை இல்லை. எனக்கு அந்த எண்ணம் பிடித்திருக்கிறது. அவ்வளவே. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும் போது அதை எடுத்து பார்த்துக்கொள்கிறேன், மிகவும் பிடித்த பழைய புகைப்படத்தை அடிக்கடி எடுத்துப் பார்ப்பது போல.</p>
<p align="center">******************</p>
<p align="left">கல்லூரியில் விடுதியில் இருந்த ஒரு இரவு தூக்கம் வராமல் நானும் நண்பணும் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்து கதை பேச துவங்கினோம். நிலா வானத்தின் ஒரு ஓரமாக இருந்தபடி கவனித்துக்கொண்டிருந்தது. பேச்சு சுவாரசியத்தில் நிலாவை நாங்கள் பொருட்படுத்தவில்லை. முழு நிலாவாக இருந்தும் கூட அது எங்களை சுவாரசியப்படுத்தவில்லை. பொறுத்து பொறுத்து பொங்கி எழுந்த நிலா முழுதும் சிவப்பாக மாறிவிட்டது. கருப்பு வானத்தில் அபத்திரமாக செக்கச்செவேலென முறைத்து பார்த்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. பேச்சு மெதுமெதுவாக சுவாரசியம் குறைய குறைய நிலாவும் தேய்ந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் முழுதாக நாங்கள் மௌனமடைந்து விட்ட போது நிலாவைக் காணவில்லை. அடுத்த நாள் நாளிதழில் பார்த்து தெரிந்து கொண்டோம் முந்தைய நாள் சந்திர கிரகணம் என்று.</p>
<p>எதிர்பாராமல் சந்திர கிரகணம் பார்த்த காலமெல்லாம் போய் நிலாவையே நான் தற்செயலாக தான் இப்போதெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் எதிர்பாராத நாட்களில் பவுர்ணமி நிலவைக் காண்பதை நான் மிகவும் விரும்புகிறேன். போன வாரம் மாடி ரயிலில் பறந்து கொண்டிருந்தபோது சென்னை நகர அடுக்குமாடி குடியிருப்புகளிடையே ஒளிந்து ஒளிந்து கூடவே வந்தது பவுர்ணமி நிலா. ஒரு கட்டத்தில் ரயில் பாலம் திடுமென, நிலா என்னை பார்த்துக்கொண்டிருந்த திசையிலேயே திரும்ப, ரயில் கூவென அலறி ஓடியது, நிலாவை இடித்து முன்னேறியபடி.</p>
<p align="center">******************</p>
<p align="left">உவமைகள் எல்லோருக்கும் பிடிக்கிறது. எழுதும் போது உவமைகள் நிறைத்து எழுதினால் சொல்ல வந்த வாக்கியங்கள் ஒவ்வொன்றும் காட்சியாக மாறிவிடுகிறது. புக்கர் பரிசு பெற்ற புத்தகங்களைப் படிக்கையில், பல விதமான உவமைகள் கிடைக்கின்றன. ஒருவரின் முகத்தை வர்ணிப்பதில் இருந்து, ஒரு நாற்காலி எப்படி சாய்வாக இருக்கின்றது என்பது வரை எல்லாவற்றுக்கும் உவமை சொல்கிறார்கள். "தி காட் ஆஃப் ஸ்மால் திங்க்ஸ்" புத்தகத்தில் இருந்த விளக்கங்களை படிக்க பொறுமையில்லாமல் தெறித்து ஓடிய நண்பர்கள் ஏராளம். "மெமாயர்ஸ் ஆஃப் கீய்ஷா"வில் வருகிற சின்னப் பெண் சயூரிக்கு மலை மேல் மெதுவாக ஏறுகிற ரயில், புகையை வெளியேற்றுவது, ஒரு பாம்பு தன் சட்டையை உரிப்பது போல இருக்கிறது. அ.முத்துலிங்கத்தின் சிறுகதை ஒன்றில் ஆங்கிலம் சரளமாக பேசக் கூடிய பெண்ணும், சரளமாக பேச முடியாத ஆணும் உரையாடுகிறார்கள். அதை அவர், "அவளின் ஆங்கிலம் ஆறு போல ஓடியது. அவனோ இருட்டில் தட்டு தடுமாறி நடப்பவன் போல ஆங்கிலம் பேசினான்" என்று எழுதுகிறார். செய்வதற்கு ஒன்றுமில்லாமல் முழிக்கிற சமயங்களில் இது போன்று பல  எழுதி வைக்கப் போகிறேன். புக்கர் பரிசு வாங்க உதவும்.</p>
<p align="center">&#160;</p>
<p align="center">&#160;</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[செல்லுலாய்ட் கவிதைகள் - 4]]></title>
<link>http://sirumazai.wordpress.com/2008/03/20/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/</link>
<pubDate>Thu, 20 Mar 2008 04:40:54 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/2008/03/20/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/</guid>
<description><![CDATA[
இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர்]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://sirumazai.wordpress.com/files/2008/03/827969067420.jpg" alt="827969067420.jpg" /></p>
<p><font size="2">இரவு சுமார் பத்து மணி. ஐந்தாறு இளைஞர் இளைஞிகள் கொண்ட கூட்டம் தனித்தனியாக காரில் வந்து இறங்குகின்றது. அவர்கள் நண்பர் குழாமில் புதிதாக ஒருவன் சேர விரும்புகிறான். அவனுக்கு அதற்காக வைக்கப்பட்டிற்கும் ஒரு பந்தயம் - இருபதடி உயரத்திலிருந்து ஒரு குளத்தில் குதிப்பது. அவனை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பொறுப்பற்ற அந்த கூட்டம். குதித்தவனுக்கு படுகாயம். காவல்துறையினரின் கார் சத்தம் அருகில் கேட்கிறது. அடிபட்டவனை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் காரில் பறக்கிறார்கள். ஒருவன் மட்டும் மாட்டிக்கொள்கிறான் - லேண்டன்.</font></p>
<p><font size="2"> லேண்டண் அம்மாவுடன் தனித்து வாழுகிறான். அவனுடைய அப்பா வேறு பெண்ணுடன் இருக்கிறார். அதனால் அவனுக்கு அவர் மேல் வெறுப்பு. அவரோ அவனிடமும் முந்நாள் மனைவியிடமும் நட்பாகவே இருக்க முயல்கிறார். லேண்டன் அதை ஏற்றுக்கொள்வதாயில்லை. அப்பா இல்லாததால் தான் அவன் இத்தகைய காரியங்கள் செயதாக தாய் வருத்தப்படுகிறாள். காவல்துறையின் பரிந்துரையின் பேரில் அவனுடைய பள்ளி அவனுக்கு சில பணிகளை விதித்திருக்கிறது. சேவை மையத்தில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லித்தருதல் மற்றும் உள்ளூர் நாடக குழுவின் நாடகத்தில் பங்குபெறுதல். வேண்டா வெறுப்பாக வாரம்தோறும் சனிக்கிழமைகளில் அவன் அந்த இடங்களுக்கு செல்கிறான். </font></p>
<p><font size="2"> அந்த இடங்களுக்கு ஜேமியும் தவறாமல் வருகிறாள். அவளை ஏற்கனவே அவன் அறிந்திருக்கிறான். தேவாலய போதகரின் ஒரே மகள். சதா படித்துக்கொண்டேயிருப்பதற்காகவும், சேவை மையங்களில் நேரம் செலவழிப்பதற்காகவும், அவள் அணியும் அசுவாரஸ்யமான உடைகளுக்காவும் அவள் அந்த பள்ளியில் பிரபலமானவள். லேண்டன் விரும்பித்தான் சேவை செய்ய முன் வந்திருப்பதாக நினைத்து நட்பு பாராட்ட அவள் முயல, லேண்டன் அதை நிராகரிக்கிறான். அவனுடைய நண்பர் குழாம் அவளுடனான இவனுடைய நட்பை ஏற்காது. அது அவமானமாகவும் கேலியாகவும் கருதப்படும்.</font></p>
<p><font size="2"> ஆயினும், சேவை மையத்திலும் சரி, அவர்கள் காதலர்களாக நடிக்கும் அந்த நாடகத்தின் ஒத்திகையிலும் சரி, அவளின் உதவி இவனுக்கு தேவைப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவளுடைய நண்பனாகிறான். ஜேமி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் - தன்னை காதலிக்கக் கூடாது என்று. லேண்டனுக்கு அடங்க மாட்டாமல் சிரிப்பு வருகிறது - இந்த பெண்ணை யார் காதலிப்பார்கள். நண்பர்கள் இல்லை - தோழிகள் இல்லை - ஆடைகளில் நல்ல தேர்வு இல்லை - அழகு தான் ஆனாலும் - லேண்டனின் கற்பனைக்கு எட்டாத ஒரு அதிசயம் மட்டுமே அவனை அவள் மேல் காதல் கொள்ள வைக்குமென நம்புகிறான்.</p>
<p>அந்த அதிசயமும் நிகழ்கிறது.</font></p>
<p><font size="2"> ஜேமி யாரும் அறியாத ஒரு புதையலைப் போல இருக்கிறாள். அமைதியான அழகு, அடக்கமான அறிவு், வயதை மீறிய தெளிவு - அத்தனையும் அவளிடம் கொட்டிக்கிடக்கிறது. மெல்ல மெல்ல அவளை காதலிக்கத் தொடங்குகிறான். இதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவளை பள்ளியில் மிகவும் கேவலமான முறையில் கேலி செய்ய, அவர்களை எதிர்க்கிறான். ஜேமிக்கு ஆதரவாக நிற்கிறான்.</font></p>
<p><font size="2"> ஜேமி தன் வாழ்நாளில் தான் செய்ய வேண்டிய wish list ஒன்று வைத்திருக்கிறாள். முன் பின் தெரியாத ஒருவருக்கு காரில் லிஃப்ட் கொடுப்பதில் துவங்கி, ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருப்பது, ஒரு பேரதிசயத்தை காண்பது என வளரும் அந்த பட்டியலின் முதல் ஆசை் இறந்து போன அவளுடைய அம்மா திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளும் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்பது. இதை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குகிறான் லேண்டன். அவளை யாருடனும் வெளியே அனுப்ப மறுக்கும் அவனுடைய தந்தையுடன் வாதிட்டு அவளை வெளியே அழைத்துச்செல்கிறான். பள்ளி முடிகிற தருவாயில் காதலைச் சொல்கிறான்்.</font></p>
<p><font size="2"> தன்னுடைய நிபந்தனையை கண்ணீருடன் நினைவூட்டுகிறாள் ஜேமி. அவள் யாரையும் காதலிக்க முடியாது என மறுக்கிறாள். அவளுக்கு லுகீமியா. தன்னுடைய வாழ்நாளின் கடைசிகட்டத்தில் இருக்கிறாள் ஜேமி.</font></p>
<p><font size="2"> கண்ணீருடன் ஜேமி காட்டுத்தனமாக காரில் செல்கிறான். அவனுடைய அப்பாவிடமும்! அவர் ஒரு மருத்துவர். அவனுடைய அத்தனைக் கோபங்களும் உடைந்து அவரிடம் உதவி கேட்டு நிற்கிறான்!</font></p>
<p><font size="2"> வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு, மருத்துவப்படிப்புக்கு விண்ணப்பிக்கிறான். தொடர்ந்து அவளின் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருகிறான். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவளுடைய பெற்றோர் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில் அவளை மணமுடிக்கிறான்.</font></p>
<p><font size="2">    ஒரு வருடம் அழகிய ஒரு வாழ்வை வாழ்ந்துவிட்டு இறந்து போகிறாள் ஜேமி. </font></p>
<p><font size="2"> பின்னர் ஒரு நாளில், லேண்டன் ஜேமியின் தந்தையை சந்திக்கிறான். அவளுடைய இரண்டாவது ஆசையாக ஒரு பேரதிசயத்தை காண விரும்பினாள். ஆனால் அது நடக்காமல் போனதாக வருந்துகிறான். அவனுடைய அப்பா மறுக்கிறார். ஜேமி நிச்சயம் ஒரு பேரதிசயத்தை கண்டாள். அது நீ என்று சொல்கிறார். மனதை நிறைக்கும் இசையுடன் நிறைவு பெறுகிறது படம்.</font></p>
<p><font size="2">    தெளிவான இதமான ஒரு காதல் கவிதை இந்தப் படம். அதே பெயரில் வந்த ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. </font></p>
<p><font size="2">    லேண்டனாக வருகிற Shane west, ஜேமியாக வருகிற Mandy moore இருவரும் கச்சிதம். அழகான ஜோடி. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.</font></p>
<p><font size="2"> இருவரின் பெற்றோர் நம் மனதை நெகிழ வைக்கிறார்கள். பெற்றோருடன் பிள்ளைகள் பேசுகிற சில காட்சிகள் அற்புதம். உடல்நிலை மோசமடைந்து ஜேமி மருத்துவமனையில் இருக்கும் போது அவளுடய அப்பா நினைவுகூறும் சிறு வயது ஞாபகங்களும், ஜேமிக்கு வீட்டிலிருந்தே மருத்துவம் செய்ய அத்தனை ஏற்பாடுகளையும் செலவையும் லேண்டனின் தந்தை மேற்கொண்டதை அறிந்து லேண்டன் அவரைத் தேடிச் சென்று அத்தனை வெறுப்பும் கோபமும் மறந்து கட்டியணைத்து அழுகிற காட்சி அழகு.</font></p>
<p><font size="2">    கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், இதமான பிண்ணனி இசையுமாக படத்தின் இரு தூண்களும் பலம்.</font></p>
<p><font size="2"> காதல் மெதுவாக மெதுவாக தலை காட்டத்துவங்கும் நாட்களின் உச்சமாக, லேண்டனும் ஜேமியும் காதலர்களாக அந்த மேடை நாடகத்தில் அரங்கேறுகிறார்கள். செம்மையான ஒப்பனையுடன், அற்புதமான உடையுடன் இந்தப் பெண் இத்தனை அழகா என்று நாமே வியக்கிற அந்த காட்சியில் அடக்கி வைத்த லேண்டனின் அத்தனைக் காதலும் வெடித்துச் சிதற படபடக்கிறது. காதல் வசனங்களும் அதை தொடரும் அற்புதமான மேடைப்பாடலுமாக லேண்டன் தவிக்கிற அந்த கணங்கள் படம் முடிந்தும் நம் நினைவில் இருக்கும்.</font></p>
<p><font size="2">    இதமான தரமான சுவையான காதல் படம்.</font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரத்தடி ]]></title>
<link>http://sirumazai.wordpress.com/?p=114</link>
<pubDate>Thu, 21 Feb 2008 07:04:44 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/?p=114</guid>
<description><![CDATA[நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அல]]></description>
<content:encoded><![CDATA[<p>நள்ளிரவை நெருங்குகிற பொழுதுகளில் அலுவலகத்திலிருந்து கிளம்புகிற நாட்களில் அது நாள் வரை இருந்த போக்குவரத்து நெரிசலை பழிவாங்குவது போல கார்கள் பறக்கின்றன. கட்டுப்பாடென்பதில்லாமல் சீறிப் பாய்கின்றன. தடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல தார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்கிறோம். "உச்சிப் பொட்டு தெறிக்கிற" இசையுடன் ஒரு இரவு அப்படி சென்றுக் கொண்டிருக்கையில் கார் அழகான வளைவுகளில் அபாயகரமான திருப்பங்களையும் அபாயகரமான வளைவுகளில் அழகான திருப்பங்களையும் மேற்கொண்டபடி சென்றுகொண்டிருந்தது. அமைதியான சென்னை சந்துகளில் உறங்க ஆயத்தமான நாய்கள் பதறி சிதறி ஓடின. எதற்கும் நிற்பதாயில்லை என்ற வைராக்கியத்துடன் மிக வேகமாக திரும்புகையில் அதிர்ச்சியுற்று காரை கிரீச்சிடவைத்து அதிர வைத்தாள் ஒரு பெண். பித்து பிடித்தவள். நடு ரோட்டில் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். "சாவி எங்கே? சாவி எங்கே?" என்று எங்களைப் பார்த்து கத்துகிறாள்.  தொலைவில் சில ஆண்கள் கவனித்தபடி நின்றுக்கொண்டிருந்தனர். யார் அவள், எந்த சாவியை வெகு காலமாக தேடுகிறாள், நாங்கள் கடந்த பின் அவள் நிலை என்ன?</p>
<p>இது போன்ற ஊர் உறங்குகிற வேளையில் ஊர்தியில் வெறி கொண்டு பறக்கிற நேரங்களில் நான் பார்த்த மேலும் இரண்டு வித்தியாசமான காட்சிகள் - கோட்டூர்புர குறுக்கு சந்தில் நாங்கள் திரும்ப எத்தனித்த போது ஒரு புதரில் இருந்து மான் ஒன்று எட்டிப் பார்த்தது; நீல் மெட்டாலிக்கா ஒவ்வொரு தெரு முக்கிலும் வைத்திருக்கும் சக்கரம் பொருந்திய குப்பைத்தொட்டியில் சிறுவன் ஒருவனை ஏற்றி நான்கு சிறுவர்கள் ஊர்வலமாக தள்ளிக்கொண்டு சென்றது.</p>
<div align="center">******************</div>
<div align="left">70களில் அரசாங்க வேலைக்கு சென்ற பெண்கள் அனைவரடிமும் ஒரு சாகசக் கதையிருப்பதை கவனிக்கிறேன். ஒன்று வீட்டில் இருப்பவர்கள், அண்டையில் இருப்பவர் எதிர்ப்பை மீறுகிற சாகசம் அல்லது பயணம் என்றொரு சாகசம். எங்கோ ஊர் பேர் தெரியாத இடத்திற்கு தினமும் சென்று வந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டதில் இருக்கிறது நிர்வாகத் தன்மையின் ரகசியம். என் அம்மாவுடன் பணிபுரிந்த அவரின் தோழி நான் எப்போது ஊருக்கு சென்றாலும் என்னை வந்து பார்த்துவிட்டு போவார். அவர் வேலைக்கு சேர்ந்த 70களில் அவரின் பள்ளிக்கு பேருந்து வசதி குறைவு. காலையில் ஒன்று, மாலையில் ஒன்று. நேரத்தோடு வருமென்று சொல்ல முடியாது. அதுவும் பேருந்திலிருந்து இறங்கி நீண்ட செம்மன் சாலையில் பதினைந்து நிமிடம் நடந்து செல்லவேண்டும். மாலையில் பெரும்பாலும் அவர் நடந்து சென்று ரோட்டை அடைவதற்குள் பேருந்து சென்று விடுமென்பதால் அவர் ஒரு விசில் வாங்கி வைத்துக்கொண்டாராம். தூரத்தில் பேருந்தைக் கண்டால் உடனே விசிலை ஊதுவாராம். நடத்துனருக்கு அது தான் உடனடி தந்தி. பேருந்து சில நிமிடம் நின்று அவரை ஏற்றிச் செல்லுமாம். காலையில் தினம் பேருந்தை தவற விடுபவர்கள் இதை பத்து முறை திரும்பத் திரும்பப் படிக்கவும்.</p>
<div align="center">******************</div>
<p>மஞ்சள் பூக்களின் மேல் எனக்கு என்ன ஈர்ப்பு என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சிறுமழையில் எழுதிய ஒரு கவிதையில் அவை பூத்திருந்தன. அதை படித்து விட்டு தோழி ஒருவர் கல்லூரியில் படிக்கும் போது நான் எழுதிய ஒரு கவிதையிலும் அவை வந்திருந்ததை நினைவு படுத்தினார். போன வாரம் எழுதிக்கொண்டிருந்த ஒரு கவிதையிலும் அவை நான் சொல்வதை மதிக்காமல் மறுபடி பூத்தன. யோசித்து பார்த்தால் கவிதை யோசிக்கிற பொழுதெல்லாம் சில காட்சிகள் தவறாமல் என் மனது காட்சிப்படுத்திக்கொள்கிறது. அதிலே மஞ்சள் பூக்களும் உண்டு. ஆனால் அவை மரத்தில் இருப்பதேயில்லை. எப்போதும் எங்கேயாவது சிதறி விழுந்தோ, விழுந்துக்கொண்டோ இருக்கின்றன. ரயில் நிலையம் பற்றி எழுதத் தொடங்கினால் ப்ளாட்ஃபார பெஞ்சில் சிதறிக் கிடக்கினறன. உளவியல் காரணங்கள் ஏதேனும் இருக்குமா என்று யோசிக்க சுவாரசியமாக தான் இருக்கின்றது. ஆனால் யோசித்து முடித்த பின் அப்படி இருக்குமா என்று தெரியவில்லை. ஒரு வேளை பூர்வ ஜென்மம் என்று சொல்லுகிறார்களே அப்படி ஏதேனும் இருக்கலாம். மஞ்சள் பூக்களை அலட்சியப்படுத்தியதால் அடுத்த ஜென்மத்தில் அதைப் பற்றி கவிதை எழுதிக் குவிப்பதாக ஒரு சாபம் இருக்கலாமோ என்னவோ.</p>
<div align="center">******************</div>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மரத்தடி]]></title>
<link>http://sirumazai.wordpress.com/2008/01/22/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf/</link>
<pubDate>Tue, 22 Jan 2008 07:05:37 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/2008/01/22/%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf/</guid>
<description><![CDATA[கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராள]]></description>
<content:encoded><![CDATA[<p>கடந்த சில வாரங்களாக எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் சேர்ந்து விட்டது. இத்தனைக்கும் தினம் ஏதாவது எழுதுகிறேன். ஒரு வாக்கியமாவது எழுதுகிறேன். பல விஷயங்கள் யோசிக்கிறேன். சில ஆழ் மனதைப் பேசும் எண்ணங்களாக இருக்கின்றன. சில மெல்லிய நகைச்சுவை முலாமுடன் இருக்கின்றன. ஒரு சில விஷயங்களை அழகானது என்று மட்டுமே வகைப்படுத்த முடிகிறது. சில இது அதுவென வகைபடுத்த முடியாமல் எழுதிவிட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக சேமிக்கப் படுகிறது.  நிற்காத ஆறென ஓடிக்கொண்டேயிருக்கிற எண்ணங்களை பேசவே இந்த மரத்தடி. வாரா வாரம் எழுதுவேன், மாதா மாதம் எழுதுவேன் போன்ற உத்திரவாதங்களை விட, சுவாரஸ்யமாக எழுதுவேன் என்ற உத்திரவாதத்தை தர விரும்புகிறேன்.</p>
<div align="center">******************</div>
<p>என்னோடு நெருங்கிப் பழகுத் தொடங்குபவர்களுக்கு எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழ வாய்ப்புகள் குறைவு. பொதுவாகவே, கடவுளைத் தொழாதவர்கள் எந்நேரமும் ஒரு விவாதக் குழந்தையை கிள்ளி அழ வைக்கவே விரும்புகிறார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் தங்களது வாழ்வை தங்கள் விருப்பப்படி வாழ உரிமையுள்ளவர்கள் என்பது என் கருத்து. ஆக, நான் கடவுளைப் எதிர்த்து பிரசாரம் செய்வதில்லை. கடவுள் இருக்கிறார், இல்லை என்ற பிரிவுகளில் சேராமல் கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எனக்குத் தேவையில்லை என்று நினைப்பவன். என் எழுத்துக்களில் எப்போதாவது அதைப் பற்றி சொல்வது உண்டு. அது போன்ற பேச்சுகளில் நான் ஏன் ஈடுபடக் கூடாது என்பதற்கு மீண்டும் ஒரு பலமான விடை எனக்கு சென்ற வாரம் கிடைத்தது.</p>
<p>சமீபத்தில் என் உறவினள் ஒருத்தி முதுகில் அடிபட்டு படுக்கையில் இருக்கிறாள். எல்லோரும் மிகவும் வருத்ததில் இருக்கிறார்கள். வேறு பணி காரணமாக தஞ்சாவூர் சென்ற போது என் பெரியப்பா அருகில் இருக்கும் முல்லைக்குடி என்ற கிராமத்தை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னார். அங்குள்ள ஒரு அம்மனிடம் இதற்கு முன்பு இதே போன்ற ஒரு விஷயத்திற்காக வேண்டி அது நிகழ்ந்ததாக அவர் நம்புகிறார்.</p>
<p>அதனால் அந்த கிராமத்தை தேடிச் சென்றோம். அங்கு கோயில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது. மிகச் சிறிய கோயில் அது. எதிரே இருந்த ஒற்றைக் குடிசையில் சாவி வாங்கி நாங்களே திறந்து சென்றோம். நாங்கள் வந்து திறப்போம் என்று இத்தனை நாளாக அந்த அம்மன் காத்திருந்தாள் போலும். வழிபட்டு விட்டு திரும்பிய போது பெரியப்பாவின் மகிழ்சிக்கு அளவே இல்லை. அலைபேசியில் அனைவரையும் அழைத்து வேண்டிக் கொண்டது பற்றியும் விரைவில் குணமாகும் என்ற நம்பிக்கையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.</p>
<p>இப்படி என்னைச் சுற்றி எல்லோரும் கடவுளின் பெயரால் மகிழ்ச்சியும் அமைதியும் கொள்ளும் போது நான் நடுவில் புகுந்து குழப்புவதில் எந்த அர்த்தமுமில்லை.</p>
<div align="center">******************</div>
<p>அது ஏன் சிலர் புல்வெளியில் அமர்ந்து பேசும் போது அனிச்சையாக புற்களை பிடுங்கிக் கொண்டே இருக்கிறார்கள் எனப் புரியவில்லை. நாங்கள் நால்வர் தஞ்சாவூர் பெரிய கோயில் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அதில் ஒருவர் பேசுவதற்காக உட்கார்ந்தாரா இல்லை புற்களை பிய்த்து எறிய உட்கார்ந்தாரா எனத் தெரியவில்லை. ஒரு வாக்கியம் பேசி முடிக்கும் போது கொத்தாக கொஞ்சம் புற்களை பிடுங்கி பக்கத்தில் "ஸ்வாஹா" என்பது போல குவித்து வைக்கிறார். கோபமாக உக்கிரமாக பேசும் போது இன்னும் நான்கு புற்கள் சேர்ந்து பிடுங்கப் படுகிறது. மற்றவர் பேசுகையில் அவர் அதிகம் பிடுங்குவதில்லை. அவரைப் பேச விடாமல் பார்த்துக்கொள்கிற அளவுக்கு கருணையின்றி பிடுங்கிக் கொண்டிருந்தார். இப்படிச் செய்கிற எல்லோருக்கும் கட்டுப்படுத்த முடியாத நோய் இதெனில், தத்தம் தலை முடிகளை பிய்த்து எறியும்படி கேட்டுக்கொள்கிறேன். தலையில் ஒன்றும் இல்லையென்றால், அடுத்தவரின் தலையை தாரளமாக உபயோகிக்கலாம்.</p>
<div align="center">******************</div>
<p>பழமொழிகள் சுருக்கமாக இருப்பது எழுதுபவரின் சௌகர்யம். அதை தவறாக புரிந்து கொள்வது நம் சௌகர்யம் போல. "காசிக்கு போனவன் காலை தொட்டு கும்பிடு. பழனிக்கு போனவன் பாதத்தை தொட்டு கும்பிடு" என்று ஒரு பழமொழி உண்டு. இது ஏதோ புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தவர்களெல்லாம் புனிதர்கள் என்று தப்பாக அர்த்தம் செய்யப்படுவதாக நினைக்கிறேன். அந்தக் காலத்தில் காசி வரை நடந்து ஒருவன் சென்று, திரும்ப ஊர் வந்து சேர்கிறான் என்றால், நிஜமாகவே அவன் கால்களை தொட்டு வணங்கலாம். அவ்வளவு ஆரோக்கியமாக இருந்திருப்பான். அதே தான் பழனி மலைக்கு சென்று வந்தவனுக்கும். ஆனால் அதை தப்பாக அர்த்தம் செய்துக்கொள்வதின் விளைவு தான் போலிச் சாமியார்கள் என்று தோன்றுகிறது.</p>
<div align="center">******************</div>
<div align="left">காற்று வீசும்.............</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தீதும் நன்றும் - இரண்டாம் பாகம்]]></title>
<link>http://sirumazai.wordpress.com/2007/11/27/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Tue, 27 Nov 2007 14:51:51 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/2007/11/27/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[முதல் பாகம்
குப்பையா தாத்தா கோவிலை ம]]></description>
<content:encoded><![CDATA[<p class="MsoNormal"><a href="http://sirumazai.wordpress.com/2007/11/20/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/"><span style="font-family:aAvarangal;">முதல் பாகம்</span></a></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">குப்பையா தாத்தா கோவிலை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தார். “புனர் தரிசன ப்ராப்பிரஸ்த்து” என்று சொல்லிக்கொண்டார். போன வருடம் இறந்து போன சாரதி பூஜாரி தான் இதை ரொம்ப வருடங்களுக்கு முன் சொல்லிக் கொடுத்தார். இதன் அர்த்தம் “மீண்டும் இந்தக் கோயிலை காணும் வரத்தை கொடு” என்பதாம்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">குப்பையாவிற்கு அதை விட பெரிய வரம் தேவையில்லை.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அவரின் அம்மா பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த போது மழைக்கு இந்தக் கோயிலில் ஒதுங்கிவிட்டு மருத்துவச்சிக்கு சொல்லியனுப்பினார்களாம். அவள் வருவதற்குள் கோயில் மண்டபத்திலேயே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிறந்தார் குப்பையா. அவரின் பாட்டி கடவுளே பிரசவம் பார்த்ததாக சொல்லுவாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">சிறு வயது முழுக்க கோவிலில் விளையாடுவதிலேயே கழிந்தது. முதன் முதலில் தேங்காய் கடை வைத்தது கோயில் வாசலில் தான். அவருக்கு வாழ்க்கையை சம்பாதித்து கொடுத்தது அக்கோயில். திருமணம், பையனின் காதுகுத்து துவங்கி திருமணம் வரை எல்லாம் அங்கேயே தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இப்போது யாருமில்லை அவருடன். கோயிலைத் தவிர.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">கோயிலைப் பற்றி பல செய்திகள் சேகரித்து வைத்திருந்தார். அதை வைத்து அவர் சொல்லும் கதைகள் ஊரில் பிரபலம். நானூறு வருடப் பழமையான கோயில். இன்று பராமரிப்பின்றி கிடக்கிறது.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">எதிர்க்கட்சி தலைவரின் சொந்த ஊர் இது. அவர் முதலமைச்சராக இருந்த பொழுது கூட குப்பையா நேரில் சென்று கோயிலைப் புதுப்பிக்க மனு கொடுத்தார். பிரயோஜனமில்லை.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">மீண்டும் கோயிலைத் திரும்பி பார்த்தார். சில சமயங்களில் கோயிலும் தானும் ஒன்று தான் என்று தோன்றும் அவருக்கு. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு, இப்போது<span>  </span>யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது, இரண்டும்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">உயிர் போவதற்குள் இதை யாராவது புதுப்பித்தால் அவருக்கு ஆனந்தமாயிருக்கும். அது வரை அவர் உயிர் போகவும் போகாது.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அடுத்த தெரு தாண்டியவுடன் இடி விழுந்தது போல ஓசை கேட்டது. குப்பையா சற்று நிலைகுலைந்து விட்டார். கோயில் தெருவிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். சட்டையெங்கும் ரத்தக்கறை. அவனை நிறுத்தினார். கோயிலில் குண்டுவெடித்ததாக பெரும் முயற்சிக்குப்பிறகு சொன்னான். உறைந்து போனார் குப்பையா. </span></p>
<p style="border-style:none none dotted;border-width:medium medium 3pt;padding:0 0 1pt;">&#160;</p>
<p class="MsoNormal" style="border:medium none;padding:0;"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align:center;" align="center"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“எதிர்கட்சி தலைவர் கோபால பாண்டியனின் சொந்த ஊரான குளித்தலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குண்டுவெடிப்பில் பலியான வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. விளம்பரத்துக்குப்பின் மீண்டும் இணைவோம்..”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">மாலினி </span><span style="font-family:aAvarangal;">வேகமாக குறிப்பெடுத்தாள். சில வருடங்களுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்கு அவள் சென்றிருந்தாள். இதழியல் படித்துக்கொண்டிருந்த போது பழமைவாய்ந்த கோயில்களைப் பற்றி அவள் குறும்படம் எடுத்த போது அந்தக் கோயிலுக்கு போனாள். அப்போதிலிருந்து வருடம் தோறும் செல்கிறாள். </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“மாத்யூ! அந்த ஊருல குப்பையானு ஒரு தாத்தா இருக்காரு. அவரக் கேட்டா இன்னும் நிறைய விஷயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சத டேட்டா செண்டருக்கு அனுப்பிட்டேன். நம்ம டீம உடனே அங்க போக சொல்லுங்க. க்விக்.” </span><span style="font-family:Arial;">–</span><span style="font-family:aAvarangal;"> மாலினி முழு நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“ஓ குட் மாலினி! கண்டிப்பா</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” பரப்பரப்பாக நகர்ந்தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">சற்று நடந்த பின் திரும்பி அவளைப் பார்த்து</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> “வெரி ஸ்மார்ட் ஐடியா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“டீ.வியைத் தொடர்ந்து பார்க்கவும்.” ப்ரவீணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு செய்தி வாசிக்க தயாரானாள் மாலினி.</span></p>
<p style="border-style:none none dotted;border-width:medium medium 3pt;padding:0 0 1pt;">&#160;</p>
<p class="MsoNormal" style="border:medium none;padding:0;"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal" style="text-align:center;" align="center"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“குப்பையா நிறைய விஷயங்கள் சொன்னீங்க. ரொம்ப நன்றி. அரசு உடனே கோயில புதுப்பிக்க உத்தரவு போட்டிருக்காங்க. நீங்க அதுக்காக எவ்வளவு போராடியிருக்கீங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” தேர்ந்த வாசிப்பாளினி போல ஒருத்தி பேசிக்கொண்டிருந்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அம்மா அழுகையை இன்னும் நிறுத்தவில்லை. “பாவிங்க! உருப்படுவானுங்களா</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> கோயில கூட விட மாட்டேங்கிறானுங்க</span><span style="font-family:Arial;">…யாரு அந்தப் பையனோ கோயிலுக்கு வந்து உயிர் போயிடுச்சே...</span><span style="font-family:aAvarangal;">” இதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“உன்ன கோயிலுக்கு போ போன்னு விரடிட்டே இருந்தேனே</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி தேம்பினாள்</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">தேவியை திரும்பிப் பார்த்து சொன்னாள்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> “அழாத தேவி, கடவுள் எப்பவும் நம்ம கூடவே இருப்பார். நல்லதே நடக்கும்”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">தேவி தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்களில் கண்ணீர் தேங்கியிருந்ததால் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை தேவிக்கு.</span></p>
<p class="MsoNormal" align="center"><strong>முற்றும் </strong></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தீதும் நன்றும்]]></title>
<link>http://sirumazai.wordpress.com/2007/11/20/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Tue, 20 Nov 2007 16:54:34 +0000</pubDate>
<dc:creator>aravind</dc:creator>
<guid>http://sirumazai.wordpress.com/2007/11/20/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
<description><![CDATA[3….
 
2….
 
1….
 
0….
 
“On air…” என்று விக்ரம் சைக]]></description>
<content:encoded><![CDATA[<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">3</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">2</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">1</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">0</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“On air</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” என்று விக்ரம் சைகையில் சொன்னான். </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">குரல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் மாலினி. மாலினி ஐயர். <span> </span></span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">விக்ரம் உற்சாகமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. அவளும் அப்படி தானே இருக்கிறாள். உற்சாகம் தொலைந்து பல நாட்களாகி விட்டது. இது இன்னுமொரு நாள். அவ்வளவே.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“வணக்கம். இது மாலினி ஐயர். தற்போதைய முக்கிய செய்திகள்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">..”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இன்னும் எத்தனை நாள் இந்த தொலைக்காட்சியில் இருக்கப்போகிறோமென நினைத்துக்கொண்டாள். வேலைக்கு வர வெறுப்பாய் இருந்தது.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“தமிழக அமைச்சரவை பரப்பரப்பான சூழ்நிலையில் இன்று</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இன்று காலை கூட ப்ரவீண் ஆறுதல் சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை என்பது அவனது வாதம். நல்ல குரல் வளம், நாட்டு நடப்பில் ஆர்வம், பொது அறிவு, அரசியல் ஆட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது. பார்ப்பவர்கள் கவனம் சிதறாமல் செய்திகளை கேட்கும் அளவுக்கு அவள் அமைதியான அழகு தான். இருந்தும்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"></span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தலை தூக்கியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இருந்தும் அவள் இங்கு வெற்றிப்பெறவில்லை. ஏன் இப்படி</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"></span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">மாத்யூ அறைக்குள் வருவது தெரிந்தது. செய்தி வாசிப்பில் கவனம் செலுத்தினாள் மாலினி. மாத்யூ ஏற்கனவே அவள் மேல் குறை சொல்லிக்கொண்டிருந்தான். இவள் செய்தி வாசிக்கும் அன்று அமைச்சரவை கூடி ஒழுங்காக நடக்கிறது. இந்தியா போட்டியில் தோற்றுப்போகிறது. உலகம் எப்போதும் போலிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் கூட ஏதும் அறிக்கைவிடுவதுவில்லை. அது இவளின் தவறா? பரப்பரப்பான செய்திகளை இவளே உருவாக்க முடியுமா என்ன??</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளுடன் அஞ்சனா தயாராக இருக்கிறார்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> ஓவர் டூ</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">ச்சே! மாலினி வெறுப்புடன் வெளியே வந்தாள். அஞ்சனாவிற்கு கூட சிவாஜி படம் வெளிவந்த போது ஒரு வாய்ப்பு கிடைத்தது. சரியாக பயன்படுத்திக்கொண்டாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“மைல்ட் காஃபி ஒண்ணு</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” யாரும் இல்லை கேஃபிடேரியாவில்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">பிரவீணுடன் திருமணமாகி ஓராண்டு கழிந்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஏதாவது சவாலாக செய்ய வேண்டும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பிரவீண் கூட அடிக்கடி</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"></span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">என்ன அது???</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">சில ஆங்கிலப்படங்களின் துவக்க காட்சிகளில் அவள் குழம்பிவிடுவாள். காட்சிகள் விரைந்து கண்முன் ஓடுமே தவிர ஒன்றும் புரியாது. அது போல இருந்தது கண்ணாடி வழியே நியூஸ் எடிட்டிங் அறையைப் பார்க்க.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">கண்டபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். விக்ரம் வேறு தொலைபேசியில் பேசியபடி எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">காஃபி கோப்பையை வைக்க திரும்பிய போது, மாத்யூ அவசரமாக வந்தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“மாலினி. அர்ஜ்ண்ட். கோ ஆன் ஏர். சீக்கிரம். சீக்கிரம் ஐ சே” </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"><span>        </span>********************************</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p><span style="font-family:aAvarangal;">“மேடம்.. எனக்கு பகல் நிலவு படத்துலேர்ந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாட்டு போடுங்களேன்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்த தேவி தொலைக்காட்சியை திரும்பிப் பார்த்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“இன்னும் கிளம்பலையா நீ</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” </span><span style="font-family:Arial;">–</span><span style="font-family:aAvarangal;"> அம்மா.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அந்தப் பாடலை கேட்க கேட்க எரிச்சலாக வந்தது. இந்தப் பாடலை ரிகார்ட் செய்ய கடைக்குச் சென்ற போது தான் ரவியைப் பார்த்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“இந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?” </span><span style="font-family:Arial;">–</span><span style="font-family:aAvarangal;"> இது தான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை. </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“தேவீ</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">. கோவிலுக்குப் போறியா இல்லையா?” </span><span style="font-family:Arial;">–</span><span style="font-family:aAvarangal;"> அம்மா அடுத்த அறையிலிருந்து கத்தினாள்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இப்போது அவனை தான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாள் என்ன செய்வாளோ. </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“போறேம்மா</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">ஒரேடியாக போய்விடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றியிருக்கிறான். இவள் தன்னை இழப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்டாள். அவன் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்ததும் விலகிடுவான் என்று நினைத்தாள். ஆனால்</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அவன் சொன்னது எல்லாம் பொய். செய்துகொண்டிருப்பதாய் சொன்ன வேலை பொய். காதலிப்பதாய் சொன்னது பொய். இப்படியே போனால் திருமணம் அவனுக்கு நடக்காது என்பதால் <span> </span>எப்படியாவது அவளை மணக்க முயல்கிறான். அதற்கு அவன் கிளப்பப் போகும் புரளி, அவன் குழந்தையை அவள் சுமக்கிறாள் என்பது தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">ஏற்கனவே அவன் ஒரு பெண்ணை அவன் ஏமாற்றியது ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்தபோது தான் இவளுக்கும் தெரிந்தது. அப்போது தான் அவனிடமிருந்து விலகினாள். இப்போது இவளையும் ஏமாற்றினான் என்று அவன் பொய் சொன்னால் கூட ஊரார் நம்பக்கூடும்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">கோவிலில் காத்துக்கொண்டிருப்பான். </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">போன வாரமே ஊருக்கு வெளியே வரவழைத்தான். போகவில்லை. இன்றும் அவனைப் பார்க்கவில்லை என்றால், அவன் பிரச்சினை செய்யத் தொடங்குவான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">இரவெல்லம் யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவனிடம் தன்னை இழக்கவில்லை என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்? </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">கடிகாரம் கவலையேதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கான கெடுவை குறைத்துகொண்டேயிருந்தது.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">யாருடைய உதவியைக் கேட்பது. அப்பாவுக்கு ஏற்கனவே அவள் மேல் நம்பிக்கை கிடையாது. அம்மாவுக்கு பயப்படுவதை தவிர எதுவும் தெரியாது.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">சொல்லிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அம்மாவையும் அழைத்துச் சென்று அவனை கண்டிக்கலாமா</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">. எதுவும் பிடிபடவில்லை.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“அம்மா..”</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“இன்னும் போகலயா நீ</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> நேரம் ஆகுதுடி.” </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“உன்கிட்டே</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> “</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">அதற்குள் பக்கத்து வீட்டு சிறுவன் ராமுவின் அழுகை சத்தம் கேட்டது. சாதாரண அழுகை இல்லை. மிதமான அலறல்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">தேவி அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தாள். ராமுவின் சட்டையெங்கும் ரத்தக்கறை. தேம்புவதும் உளறுவதும் மூச்சு வாங்குவதுமாய் இருந்தான்.</span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;"> </span></p>
<p class="MsoNormal"><span style="font-family:aAvarangal;">“அங்க</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;"> அங்க</span><span style="font-family:Arial;">…</span><span style="font-family:aAvarangal;">” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.</span></p>
<p><strong>தொடரும்.... </strong></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
