<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>சொர்க்கம் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/சொர்க்கம்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "சொர்க்கம்"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 14:40:49 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[இல்மும், இஸ்லாத்தின் மறுமலர்ச்சியும்]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=26</link>
<pubDate>Wed, 26 Mar 2008 22:50:30 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=26</guid>
<description><![CDATA[&#8220;இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண]]></description>
<content:encoded><![CDATA[<h3><span style="color:#993366;">"இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்."</span>,</h3>
<h3>என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.</h3>
<h3>[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(3)]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/2008/03/24/suvanam1/</link>
<pubDate>Mon, 24 Mar 2008 20:24:37 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/2008/03/24/suvanam1/</guid>
<description><![CDATA[


சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற ]]></description>
<content:encoded><![CDATA[<div class="snap_preview">
<h3><code><br />
</code></h3>
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/14/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9/" target="_blank">சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(1)</a></h3>
</div>
<div class="snap_preview">
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/16/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/" target="_blank">சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)</a></h3>
</div>
<div class="snap_preview">
<h3>“இன்னும் நற்கூலிகள் பெருகிடும் நாளையும், அந்நாளில் காட்சி தரும் எல்லாம் வல்ல, முற்காலமும் அறிந்தவனின் ஈடு இணையற்ற, ஒப்பிட இயலா, அழகிய முகத்தை (நடுப்பகலில் காணக் கிடைக்கும் சூரியனையும், மேகங்கள‌ற்ற இரவினில் வலம் வரும் நிலவைப் பார்ப்பது போலான) காணும் சௌந்தர்யத்தையும் பற்றி கேள்வியுண்டென்றால், கேளுங்கள்,“</h3>
<blockquote>
<h3><span style="color:#993366;">அந்நாளில் அழைப்பாளர் அழைப்பார், “<span style="color:#0000ff;">ஓ! சுவனவாதிகளே, சாந்தி நிரம்பிய, அளவற்ற கண்ணியத்துக்கு உரியவன் தங்களை காண அழைக்கின்றான், வாருங்கள், அவனைக் காண!!</span>“, எனவே அவர்கள் பதிலுரைப்பார்கள், “<span style="color:#0000ff;">நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம</span>்”</span></h3>
<h3><span style="color:#993366;">அவர்கள் அனைவரும் அக்குரலுக்கு கட்டுப்பட்டவர்களாக, பதிலுரைத்தவர்களாக ஒரு பள்ளத்தாக்கில் நிரம்பிடுவர், பின் எல்லாம் வல்ல அருளாளன், தன் அரியாசனத்தை அங்கே கொண்டு சேர்க்க கட்டளையிடுவான். பின் ஒளி வீசும் ஆலய மேடைகள் வெளிப்படும், முத்துக்களாலும், தங்கத்தாலும், வெள்ளியினாலும், வைரங்களாலும் ஆன மேடைகள் வெளிப்படும். அவர்கள் அதில் அமர்வர். அவர்களில் கீழ் வரிசையில் உள்ளவர்கள், கஸ்தூரியினால் ஆன மேடை விரிப்புக்களில் அமர்வர். மேல் வரிசையில் உள்ளவர்கள் எவ்வகை விரிப்பினில் அமர்ந்திருக்கின்றனர் என்பதை அறிய இலர். அனைவரும் பாதுகாப்பாக, வசதியாக தத்தம் இடங்களில் அமர்ந்த பிறகு அழைப்பாளர் மீண்டும் உரத்துக் கூறுவார், “<span style="color:#0000ff;">சொர்க்கவாசிகளே! இன்று எல்லாம் வல்ல நாயனை நீங்கள் காண்பீர்கள், இன்று அல்லாஹ் உங்களுக்கு கூலி தர விரும்புகின்றான்</span>.” உடனே அவர்கள் தமக்குள் பேசிக்கொள்வர், “<span style="color:#0000ff;">இன்னும் நம் இறைவன் நமக்கு என்ன கூலி தர விரும்புகின்றான்? ஏற்கனவே நம் முகங்களை ஒளியுள்ளவையாக்கி, நம் தராசுகளை எடை மிகுந்தவையாக்கி, நம்மை சுவனத்தில் நுழையச் செய்து, கொதிக்கும் நெருப்பிலிருந்து நம்மை காப்பாற்றிடவில்லையா?</span>“</span></h3>
<h3><span style="color:#993366;">அவர்கள் இவ்வாறே பேசிக்கொண்டிருக்கும் பொழுது, திடுமென ஓர் ஒளி சுவனத்தைச் சுற்றி ஒளிரும், சுவனம் அவ்வழகிய ஒளியால் நிரம்பிடும். அவர்கள் அனைவரும் யோசனையுடன் தம் தலைகளை உயர்த்துவர்…கவனியுங்கள், எல்லையில்லா அன்பு பாராட்டுபவனும், அளவிலா கண்ணியத்திற்குரியவனுமாகிய சாந்தி மிகுந்த திருப்பெயர்களைக் கொண்ட அவர்களின் இறைவன், அவர்களின் முன், உயர்வான விதத்தில் தோன்றி அவர்களை கௌரவிப்பான். பின் கூறுவான், “<em><span style="color:#333300;">சுவனவாதிகளே, உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக‌.</span></em>“</span></h3>
<h3><span style="color:#993366;">அழகிய இவ்வாழ்த்திற்கு பதிலாய், “<span style="color:#0000ff;">அல்லாஹ்வே, நீயே அமைதி, உன்னிடத்திலிருந்தே அமைதி, ஓ! கண்ணியமும் மேன்மையும் கொண்டவனே!! நீயே ஆசி மிகக் கொண்டவன்.!!</span>” என்பதே பதிலாகும். அவர்களின் பதிலிற்கு அவர்களின் இறைவன் புன்னகை பூத்தவனாய் பதிலுரைப்பான்,”<em><span style="color:#333300;">ஓ! சுவனவாதிகளே, என்னைக் காணாமலே என் மீது ஈமான் கொண்டு, என் கட்டளையின் படி வாழ்ந்த‌வர்கள் எங்கே? இன்று கூலிகள் பெருகிடும் நாளாகும்!</span></em>“</span></h3>
<h3><span style="color:#993366;">அதற்கு பதிலாக அவர்கள் அனைவரும் ஒரு சேர பதிலுரைப்பர், “எங்கள் இறைவா! நாங்கள் உன்னைப் பொருந்திக் கொண்டோம். எனவே எங்களை நீ பொருந்திக் கொள்வாயாக”. அதற்கு ரப்புல் ஆலமீன் பதிலுரைப்பான்,” <span style="color:#333300;"><em>ஓ! சுவனவாதிகளே!, நான் உங்களைப் பொருந்திக் கொண்டு இராவிட்டால், உங்களை சுவனவாதிகளாக்கியிருக்க மாட்டேன். எனவே என்னிடம் என்ன தேவையுள்ளதோ, கேட்பீர்களாக</em></span>”  இதற்கு அவர்கள் அனைவரின் பதிலும் ஒன்றாக இருக்கும்,”<span style="color:#0000ff;">யா அல்லாஹ், நாங்கள் கண்டு மகிழ உன் திருமுகத்தை காட்டுவாயாக.</span>” எனவே கருணையும் மேன்மையும் கொண்ட இறைவன் திரைகளை அகற்றி தன் திருமுகத்தைக் காட்டுவான். அவனின் ஒளியால் அவர்கள் கௌரவிக்கப்படுவர். அவனின் ஒளியால் அவர்கள் சுற்றி வளைக்கப்படுவர், அல்லாஹ் நாடியிரா விட்டால் அவனின் நூர் / ஒளி அவர்களை எரித்து சாம்பலாக்கியிருக்கும். எனவே அன்பு கொண்ட இறைவன் அவர்களை பாதுகாத்திடுவான்.</span></h3>
<h3><span style="color:#993366;">இன்னும் அந்த கூட்டத்தினரில் அல்லாஹ் எல்லோருடனும் தனிமையில் பேசிடுவான். ஒவ்வொருவரிடமும் அல்லாஹ் அவர்களின் வாழிவினில் ஒரு நாளினை நினைவுபடுத்தி, அன்று அவர்கள் செய்த துச்செயலைப் பற்றி, “<em><span style="color:#333300;">அன்று இவ்வாறு செய்தாயே நினைவிருக்கிறதா?</span></em>” என்று கேள்வியெழுப்புவான். கேள்வி கேட்கப்பட்டவனோ, அச்சம் மிகக் கொண்டு,” <span style="color:#0000ff;">என் ரப்பே, என்னை மன்னித்திட மாட்டாயா?</span>” என்று கேட்பான். இறைவன் பதிலளிப்பான்,”<span style="color:#333300;"><em>மன்னித்தேன். நான் மன்னித்திரா விட்டால் இன்று நீ சுவனவாதியாகியிருக்க மாட்டாய்</em></span>“</span></h3>
<h3><span style="color:#000000;">செவிகளில் தேனாய் பாய்ந்திடும் வார்த்தைகள் நிரம்பிய தருணம், இறைவனின் திருமுகத்தை காணக் கிடைத்திடும் பாக்கியஞ்செய்த கண்கள், என்ன அழகு அத்தருணம்..”</span></h3>
</blockquote>
<h3>“</h3>
<h3><span style="color:#800000;"> இன்னும் சில முகங்கள் அந்நாளில் பொலிவுற்றிருக்கும். (அவை) தங்களது ரப்பை நோக்கிய வண்ணமிருக்கும். [சூறா அல் கியாமாஹ் : 22, 23]</span></h3>
<h3>இப்னுல் கய்யூமின் ” ஹாதி அல் அர்வா இல்லா பிலாத் இல் அர்ஃபாஹ்” என்னும் அழகிய புத்தகத்தில் இருந்து, (பக்கம்‍:193)</h3>
</div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்...(2)]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=15</link>
<pubDate>Sun, 16 Mar 2008 11:23:25 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=15</guid>
<description><![CDATA[


சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற ]]></description>
<content:encoded><![CDATA[<p><code><br />
</code></p>
<h3></h3>
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/14/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9/" target="_blank">சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்...(1)</a></h3>
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/24/suvanam1/" target="_blank">சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்...(3) </a><code></p>
<p></code></h3>
<h3>"இன்னும் அது எவ்வளவு தூரம் வானத்தில் நீண்டு கொண்டிருக்கிறது என்று கேட்டீர்களானால், நம் கண்களுக்கு எட்டுகின்ற தூரத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், இன்னும் நம் கண்களுக்கு புலப்படா தூரத்தில் உள்ளவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்""இன்னும் சுவனத்தில் வாழ்பவர்களின் உடைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை தங்கத்தாலும், பட்டாலும் நெய்யப்பட்டவையாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் படுக்கைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை உயர்தர பட்டினைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் நெய்யப்பட்டவையாகும்"</h3>
<h3>"இன்னும் அதனுள் வாழ்கின்றவர்களின் முகங்களைப் பற்றியும், அழகைப் பற்றியும் கேட்டீர்களானால், வெண்ணிலவின் பிம்பங்களைப் போலானதாகும்"</h3>
<h3>"இன்னும் அவர்களின் வயதைப் பற்றி கேட்டீர்களானால், அனைத்து மக்களின் தந்தை ஆதம்(அலை..) தோற்றத்தில், 33 வயது இளைஞர்களாக இருப்பர்"</h3>
<h3>"இன்னும் அவர்களின் காதில் விழும் ஓசைகளைப் பற்றி கேட்டிர்களானால், அவர்களின் மனைவிகளான ஹூருல்'ஈன்களின் பாட்டுக்களும், அதை விட சிறந்தவையான மலக்குமார்கள் மற்றும் நபிமார்களின் பேச்சுக்களும், அதை விடவும் சிறந்த‌தான அகிலத்தின் இறைவனின் வார்த்தைகளுமாகும்"</h3>
<h3>"இன்னும் அவர்களின் பணியாட்களைப் பற்றி கேட்டீர்களானால், தெறித்த முத்துக்களைப் போன்ற தோற்றமுடைய, என்றும் இளமை மாறா இளஞ்சிறார்கள் ஆவார்கள்"</h3>
<h3>"இன்னும் அவர்களின் மணப்பெண்களைப் பற்றியும், மனைவிகளைப் பற்றியும் கேட்டீர்களானால், அவர்கள் இளமையானவர்களாக, அழகிய மார்புகளைப் பெற்றவர்களாக, அவர்களின் அவயங்களிலிருந்து இளமை பொங்கி வழிபவர்களாக இருப்பர். அவளின் முகம் காணக் கண்டால் சூரியனின் பிரகாசம் கிட்டும், சிரித்தால் பற்களின் வழியே வெளிச்சம் வழிந்தோடும், அவளின் மணாளனை அவள் காணும் போது, இரு பொன்கீற்றுக்களின் சந்திப்பு நிகழ்ந்தது போலாகும், அவளின் மணாளன் அவளின் கன்னங்களைக் காண்கையில், சுத்தம் செய்த கண்ணாடியைப் போல் ஒளிரும், இன்னும் அவளின் எலும்புகளுக்கும் திசுக்களுக்கும் மத்தியில் ஒளி பரவ‌க் காண்பான்,   அவளை இந்த பூமியில் காணக் கிடைத்தால், வானம் மற்றும் பூமியின் மத்தியில் அவள், அவள் மட்டுமே தெரிவாள், பூமியில் பரவியுள்ள மனிதக் கூட்டம் எல்லாம் அவளை புகழ்வதும், பாராட்டுவதும், மேன்மைப்படுத்துவதிலும் லயித்திருக்கும், கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியிலுள்ள எல்லாமே அவளுக்கு ஆபரணங்களாகும், அவளைத் தவிர வேறெதையும் காண இயலாது கண்கள் இமை மூடி விடும், நட்சத்திரங்களின் பிரகாசத்தை சூரியன் எவ்வாறு தாழ்த்தி விடுகிறதோ அதுபோல் இவளின் ஒளி, சூரியனின் ஒளியை மங்கச்செய்யும், இன்னும் பூமியிலுள்ள எல்லாமே இவளையும் இன்னும் இவ்வுலகையும் படைத்து சர்வ‌ வல்லமை கொண்டு ஆட்சி புரியும் நாயன் ஒருவனின் மேல் ஈமான் கொள்ளும்;</h3>
<h3>இன்னும் அவளின் கூந்தலிலுள்ள ஆபரணம், இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் விட மேலானதாகும், வயது முதிரும்போது இன்னும் அழகு மிளிருமே தவிர குறையாது, தொப்பூழ் கொடியிலிருந்தும், பிரசவத்திலிருந்தும், மாதவிடாயிலிருந்தும், எச்சிலிலிருந்தும், சிறுநீரிலிருந்தும் இன்னும் பிற அசுத்தங்களிலிருந்தும் பரிசுத்தமானவளாய் இருப்பாள், அவளது இளமையோ என்றும் மாறாதது, அவளின் உடைகளோ என்றும் கசங்காதது, அவளோடு இருப்பவர் யாருக்கும் அசதி வந்து சேராது, அவளின் எண்ணம் முழுதும் அவளின் மணாளனே குடி கொண்டிருப்பான், அவனைத்தவிர வேறெதிலும் அவள் எண்ணம் சென்று சேராது, இன்னும் அவனின் கவனம் முழுதும் இவளைச் சுற்றியே இருக்கும், இன்னும் மிகுந்த பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் அவர்கள் இருப்பர், யாரும் அதற்கு முன் அவளை ஜின்னோ அல்லது எந்த மானுடனோ தொடவும் இலர்"</h3>
<h3>இப்னுல் கய்யூமின் ” ஹாதி அல் அர்வா இல்லா பிலாத் இல் அர்ஃபாஹ்” என்னும் அழகிய புத்தகத்தில் இருந்து, (பக்கம்‍:193)</h3>
<h3>இன்ஷா அல்லாஹ், மேலும் வளரும்…</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சுவனத்தைப் பற்றியும் அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்...(1)]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=11</link>
<pubDate>Fri, 14 Mar 2008 15:53:55 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=11</guid>
<description><![CDATA[சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற ம]]></description>
<content:encoded><![CDATA[<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/16/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/" target="_blank">சுவனத்தைப் பற்றியும், அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்…(2)</a></h3>
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/24/suvanam1/" target="_blank"> சுவனத்தைப் பற்றியும் அதன் மட்டற்ற மகிழ்ச்சிகளைப் பற்றியும்...(3)</a></h3>
<h3>"இன்னும் அதன் தரையைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் கேட்டீர்களானால், அவை கஸ்தூரியும் குங்குமப்பூவுமாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் கூரையைப் பற்றி் கேட்டீர்களானால், அது அளவற்ற அருளாளனின் அரியாசனமாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் பாறைகளைப் பற்றி் கேட்டீர்களானால், அவை பவள ஆபரணங்களாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் கட்டிடங்களைப் பற்றி் கேட்டீர்களானால், அவை தங்கக் கட்டிகளாலும் வெள்ளிக் கட்டிகளாலும் கட்டப்பட்டவையாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் மரங்களைப் பற்றி் கேட்டீர்களானால், தங்கமோ அல்லது வெள்ளியோ அல்லாத எந்த மரத்தின் அடிப்பாகத்தையும் காண இயலாது"</h3>
<h3>"இன்னும் அதன் கனிகளைப் பற்றீ கேட்டீர்களானால், அவை வெண்ணையை விட மிருதுவானதாகவும், தேனை விட சுவை மிகுந்ததாகவும் இருக்கும்"</h3>
<h3>"இன்னும் அதன் இலைகளைப் பற்றி கேட்டீர்களானால், அவை மிருதுவான துணியை விடவும் மிருதுவாய் இருக்கும்"</h3>
<h3>"இன்னும் அதில் ஓடும்  நதிகளைப் பற்றி கேட்டீர்களானால், அவற்றில் என்றும் சுவை மாறா பால் நதி உண்டு, அருந்துபவர்களுக்கு அளவிட இயலா இன்சுவையை தரும் மதுவினால் ஆன நதியும் உண்டு, இன்னும் என்றென்றும் புத்துணர்ச்சியோடு கூடிய தண்ணீரினால் ஆன நதியும் உண்டு"</h3>
<h3>"இன்னும் அங்குள்ளவர்களின் ஆகாரம் பற்றி கேட்டீர்களானால், அவர்கள் எதை நாடுகிறார்களோ  அவையே கனிகளாகவும், எந்த பறவையை விரும்புகிறார்களோ அதன் மாமிசமே உணவாகவும் கிடைக்கும்"</h3>
<h3>"இன்னும் அவர்களின் பானம் பற்றி கேட்டால், அது தஸ்நீமாகும், இஞ்சியும் ' கஃபூரும்' கலந்தது"</h3>
<h3>"இன்னும் அவர்களின் கோப்பைகளைப் பற்றி கேட்டீர்களானால் அது மாசு மருவற்ற தெளிவான தங்கத்தாலும், வெள்ளியினாலும் ஆனவையாகும்"</h3>
<h3>"இன்னும் சுவனத்தின் நிழலைப் பற்றி கேட்டீர்களானால், ஒரு அதிவேக குதிரையில் சவாரி செய்பவர், சுவனத்தின் ஒரு மர நிழலில் சவாரி செய்ய ஆரம்பித்தால் நூறு வருடங்களானாலும் அவரால் அந்நிழலை கடக்க இயலாது"</h3>
<h3>"இன்னும் அதன் விஸ்தீரணத்தைப் பற்றி கேட்டீர்களானால், அதில் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் மாட மாளிகைகளையும் தோட்டங்களையும் அதன் சுவர்களையும் கடக்க ஆயிரம் வருடங்களேனும் ஆகும்"</h3>
<h3>"இன்னும் அதிலுள்ள கூடாரங்களைப் பற்றியும் அதன் முகாம்களைப் பற்றியும் கேட்டீர்களானால், அதன் ஒவ்வொரு கூடாரமும் அறுபது மைல் தூரமுள்ள, மூடி வைத்த முத்து போலானதாகும்"</h3>
<h3>"இன்னும் அதன் கோபுரங்களைப் பற்றி கேட்டீர்களானால், அதன் ஒவ்வொரு கோபுரத்தின் அடியிலும் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும், அறைகளின் மேல் அறைகளைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும்"</h3>
<h3>இப்னுல் கய்யூமின் " ஹாதி அல் அர்வா இல்லா பிலாத் இல் அர்ஃபாஹ்" என்னும் அழகிய புத்தகத்தில் இருந்து, (பக்கம்‍:193)</h3>
<h3><a href="http://iniyaislam.wordpress.com/2008/03/16/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4/">இரண்டாம் பகுதி</a></h3>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
