<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>சிறகுகள் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/சிறகுகள்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "சிறகுகள்"</description>
	<pubDate>Tue, 14 Oct 2008 07:01:20 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[கவிதை : கண்டும் காணாமலும்...]]></title>
<link>http://xavi.wordpress.com/?p=828</link>
<pubDate>Tue, 13 May 2008 07:41:43 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2008/05/13/eyes_love/</guid>
<description><![CDATA[
 
பிரியமே,
நீ யாரோ
எவரோ நானறியேன்.
ஒரு ]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.wordpress.com/files/2007/03/smile3.jpg"><img class="alignnone size-full wp-image-300" src="http://xavi.wordpress.com/files/2007/03/smile3.jpg" alt="" width="113" height="170" /></a></p>
<p> </p>
<p>பிரியமே,</p>
<p>நீ யாரோ<br />
எவரோ நானறியேன்.</p>
<p>ஒரு வசந்தகால வளைவில்<br />
சரேலென<br />
என்<br />
விழிச்சக்கரங்களைத் திருப்புகையில்<br />
உன்னைச் சந்தித்தேன்.</p>
<p>பின்<br />
திருப்பப்பட முடியா நிலையில்<br />
சுருண்டுகிடக்கின்றன<br />
என் நினைவுகள்.</p>
<p>பின்பொரு நாள்<br />
ஓர்<br />
குளிர்காலக் கூரையருகில்<br />
கசிந்த மெல்லிசையிலும்,</p>
<p>மாலை நேர<br />
மழைத்துளி ஒன்றின்<br />
உணர்வுப் பாய்ச்சலிலும்,</p>
<p>கடத்தி வரப்பட்ட<br />
காட்டாறு போல<br />
புரண்டு படுத்தன<br />
உன் நினைவுகள்</p>
<p>காலங்கள் தரும்<br />
உன்னதமானவற்றில்<br />
உன்னைக் கண்டேன்,</p>
<p>நீ<br />
ஒரு முறை கூட<br />
என்னைக் காணவில்லையே<br />
எனும் உண்மையை மட்டும்<br />
இலையுதிர் காலத்துக்காய்<br />
ஒத்தி வைத்திருக்கிறேன்</p>
<p> </p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அந்த நாள் ஞாபகம்...]]></title>
<link>http://xavi.wordpress.com/2007/12/27/gym/</link>
<pubDate>Thu, 27 Dec 2007 15:57:22 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2007/12/27/gym/</guid>
<description><![CDATA[
தாள லயத்துடன்
கிணற்றில்
தண்ணீர் இறை]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.wordpress.com/files/2007/12/gym.jpg" title="gym.jpg"><img src="http://xavi.wordpress.com/files/2007/12/gym.jpg" alt="gym.jpg" /></a></p>
<p>தாள லயத்துடன்<br />
கிணற்றில்<br />
தண்ணீர் இறைத்த காலத்திலும்,<br />
 <br />
காற்றின் முதுகெலும்பாய்<br />
கழுத்தை நீட்டும்<br />
சாய்ந்த தென்னையில்<br />
ஏறி<br />
குளத்தில் குதித்து<br />
நீச்சலடித்த காலத்திலும்,<br />
 <br />
உச்சிக் கொம்பு மாங்காயை<br />
எச்சில் ஒழுக குறிபார்த்து<br />
கல்வீசிக்<br />
கைப்பற்றிய காலங்களிலும்<br />
 <br />
வரப்புக்கும்<br />
நிலப் பரப்புக்கும்<br />
ஓடி ஓடி<br />
பொழுது போக்கிய பொழுதுகளிலும்<br />
தெரிந்திருக்கவில்லை,<br />
 <br />
இப்போது<br />
தொப்பையைக் குறைக்க<br />
மூடிய அறையில்<br />
மூன்று மணி நேரம்<br />
மூச்சு முட்ட<br />
இயந்திரத்தில் ஓடும்போது தான்<br />
தெரிகிறது<br />
 <br />
அன்று<br />
வாழ்க்கையே உடற்பயிற்சி<br />
இன்று<br />
வாழ்க்கையில் உடற்பயிற்சி.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நிற்க அதற்குத் தக.]]></title>
<link>http://xavi.wordpress.com/2007/11/26/fish/</link>
<pubDate>Mon, 26 Nov 2007 11:09:13 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2007/11/26/fish/</guid>
<description><![CDATA[

வீட்டைப் பார்க்கலாமென
கூட்டிச் சென]]></description>
<content:encoded><![CDATA[<p><font face="Times New Roman"></p>
<p style="margin:0;" class="MsoNormal"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><a href="http://xavi.wordpress.com/files/2007/11/fish.jpg" title="fish.jpg"><img src="http://xavi.wordpress.com/files/2007/11/fish.jpg" alt="fish.jpg" /></a></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">வீட்டைப் பார்க்கலாமென<br />
கூட்டிச் சென்றார்<br />
நண்பர் ஒருவர்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">அடைந்து கிடந்த<br />
மதிலைத் திறந்ததும்<br />
குரலெழுப்பி வரவேற்றன<br />
கூண்டுக்குள் கிடந்த<br />
பலவண்ணப் பறவைகள்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">இடது புறக் கூட்டில்<br />
குறுகிக் கிடந்தது<br />
சங்கிலிகளால் சங்கமமான<br />
நீளமான நாய் ஒன்று</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">வசீகரிக்கும்<br />
வரவேற்பறையில்<br />
தொட்டியின் திசைகளெங்கும்<br />
கண்சிமிட்டின<br />
கண்ணாடி மீன்கள்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">சுவரில் அறையப்பட்டிருந்த<br />
மாலை சூடிய<br />
புகைப்படத்தில்<br />
கம்பீரமாய் நின்றிருந்தார்<br />
கடந்தகால தாத்தா ஒருவர்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">யாரென்று கேட்டேன்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">சுதந்திரத்தையே மூச்சாய் கொண்டு<br />
போராட்டக் களம் புகுந்த<br />
என்<br />
தாத்தா என்றார் பெருமையாய்.</span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;">தொட்டி மீன்கள்<br />
சத்தமில்லாமல் சிரித்தன.<br />
 </span></span></p>
<p><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"><span style="font-size:10pt;color:maroon;font-family:Latha;"></span></span></p>
<p></font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[கவிதை : மூங்கில் நினைவுகள்]]></title>
<link>http://xavi.wordpress.com/2007/11/16/bamboo/</link>
<pubDate>Fri, 16 Nov 2007 05:15:20 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2007/11/16/bamboo/</guid>
<description><![CDATA[
அடுப்படியில்
அம்மா
மூங்கில் குழலால்]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://xavi.wordpress.com/files/2007/11/bamboo.jpg" title="bamboo.jpg"><img src="http://xavi.wordpress.com/files/2007/11/bamboo.jpg" alt="bamboo.jpg" /></a></p>
<p>அடுப்படியில்<br />
அம்மா<br />
மூங்கில் குழலால்<br />
அடுப்பு ஊதிக்கொண்டிருக்கிறார்.</p>
<p>தோட்டத்தில்<br />
மூங்கில் ஏணியில்<br />
அப்பா<br />
தென்னை மரம் ஏறுகிறார்.</p>
<p>தோட்டத்தில்<br />
மூங்கில் மேடையில்<br />
பாம்பென ஆடுகின்றன<br />
புடலங்காய்கள்</p>
<p><span style="font-size:8pt;font-family:Latha;"></span>உழைக்கும் வர்க்கத்தின்<br />
தேவைகளின்<br />
நெருக்குதலில்<br />
மூங்கில் ஐக்கியமாகிக் கிடக்கையில்</p>
<p> சாப்பிட்ட திருப்தியுடன்<br />
நான் கவிதை எழுதினேன்<br />
புல்லாங்குழலில்<br />
வழியும்<br />
காதலில் இசை குறித்து</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நிதர்சனம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/12/05/nitharsanam/</link>
<pubDate>Tue, 05 Dec 2006 16:17:46 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/12/05/nitharsanam/</guid>
<description><![CDATA[
தேனிலவுக்குச் செல்லும்
தம்பதிகளைப் ]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/102/314968716_25b5523d25.jpg" /><br />
தேனிலவுக்குச் செல்லும்<br />
தம்பதிகளைப் போல<br />
உற்சாகமாய்<br />
வீசிக்கொண்டிருப்பதில்லை<br />
காற்று எப்போதும்.</p>
<p>முத்தமிட்டுத் தூங்கி<br />
முத்தமிட்டு விழித்து<br />
புனிதத்துவம் அடையும்<br />
பொழுதுகள்<br />
இல்லாமல் போகின்றன<br />
பல வேளைகளில்.</p>
<p>இழுத்து முடித்த சிகரெட்டை<br />
செருப்புக் காலால்<br />
நசுக்கும்<br />
பல பொழுதுகள்.</p>
<p>அவிழ்ந்து வீழ்ந்த<br />
கொலுசு மணியை<br />
கவனமாய் எடுத்து வைக்கும்<br />
சில பொழுதுகள்.</p>
<p>தவிர்த்தலுக்கும்<br />
தவித்தலுக்குமிடையே<br />
நகர்ந்து கொண்டிருக்கிறது<br />
தாம்பத்ய ரயில்<br />
எல்லா வீடுகளிலும்.</p>
<p>சொல்லிக் கொண்டோ<br />
சொல்லிக் கொள்ளாமலோ.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஊரடைதல் என்பது மீட்படைதல்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/09/01/ooradaithal/</link>
<pubDate>Fri, 01 Sep 2006 12:31:36 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/09/01/ooradaithal/</guid>
<description><![CDATA[
மீண்டும்
ஊருக்குத் திரும்புதல்
உன்ன]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/71/230897874_cf7b6cc0eb.jpg" /><br />
மீண்டும்<br />
ஊருக்குத் திரும்புதல்<br />
உன்னதமானது.</p>
<p>ஏதேதோ<br />
எதிர்பார்ப்புகள்<br />
இமை தொற்றிக் கொள்ள,</p>
<p>அர்த்தமற்றதென்றும்<br />
அவசியமற்றதென்றும்<br />
கருதப்பட்டவை எல்லாம்<br />
வரவேற்கக் காத்திருப்பதாய்<br />
உள்மனப் பட்சி<br />
இடைவிடாமல் கத்தும்.</p>
<p>கதறக் கதறப்<br />
பலாத்காரம் செய்யும்<br />
பகல் வெயில் கூட<br />
பரவாயில்லை.</p>
<p>வரவுக்காய் காத்திருக்க<br />
ஓர்<br />
மழலைப் புன்னகை உண்டெனில்<br />
ஊரடைதல் என்பது<br />
மீட்படைதல்.</p>
<p>உயிர்ப்பின் மீது<br />
நம்பிக்கை இருப்பவர்களுக்கு<br />
மரணம் என்பது<br />
தற்காலிகப் பிரிவு.</p>
<p>சேர்வோம்<br />
என்னும் நம்பிக்கை<br />
இருப்பவர்களுக்கு<br />
பிரிவு என்பது<br />
தற்காலிக மரணம்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சமத்துவம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/31/samaththuvam/</link>
<pubDate>Thu, 31 Aug 2006 09:37:17 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/31/samaththuvam/</guid>
<description><![CDATA[
மாதவியை சந்தித்துத்
திரும்பு.
வீட்ட]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/78/229919365_1767c26787.jpg" /><br />
மாதவியை சந்தித்துத்<br />
திரும்பு.<br />
வீட்டுக் கண்ணகி<br />
வாசல் தாண்டினால்<br />
வெட்டு.</p>
<p>பாஞ்சாலியைப்<br />
பாராட்டு<br />
மனைவியை சந்தேகப்படு.</p>
<p>திருக் கல்யாணம்<br />
போய் வா.<br />
மகளின்<br />
காதல் விருப்பத்தை நிராகரி.</p>
<p>சிவனில் பாதி<br />
பெண் என்று பூஜி.<br />
சாதம் தாமதமானால்<br />
தலை கீழாய் குதி.</p>
<p>எதிர்த்துப் பேசாத<br />
எல்லாவற்றுக்கும்<br />
பெண்ணின் பெயரை வை.<br />
பதில் பேசினால்<br />
பெண்ணா நீ என<br />
உரக்கச் சொல்.</p>
<p>கலியுகக்<br />
கோவலர்களைச் சந்தித்து<br />
இன்னும் சில<br />
அறிவுரைகளை வாங்கு.</p>
<p>சமத்துவம் பேசும் பெண்களை<br />
பின்<br />
எப்படித் தான் சமாளிப்பதாம்</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காதல் வாக்குவாதம் ]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/30/lovevaakkuvaatham/</link>
<pubDate>Wed, 30 Aug 2006 07:45:24 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/30/lovevaakkuvaatham/</guid>
<description><![CDATA[( கதை போல் ஒரு கவிதை. அல்லது கவிதை போல் ]]></description>
<content:encoded><![CDATA[<p>( கதை போல் ஒரு கவிதை. அல்லது கவிதை போல் ஒரு கதை )<br />
 </p>
<p><img src="http://static.flickr.com/98/228974510_52a9dd0f12.jpg" /></p>
<p>அலைகள்<br />
சிப்பிகளை<br />
கரையில் இறக்கிவைக்க<br />
அயராது அலைந்துகொண்டிருந்த<br />
மாலை வேளை.</p>
<p>சூரியன்<br />
கடலில் குளிப்பதற்காய்<br />
கால்பதித்திருந்த<br />
கண்கவர் மாலை.</p>
<p>0</p>
<p>தரையில் விழுந்த<br />
அயிரை மீனின் முதுகு துடைத்து,<br />
மீண்டும்<br />
அருவிக்குள் விடும்<br />
மெல்லிய மனதுக்காரியிடம்<br />
காதலன் கேட்டான்.</p>
<p>அவன் :</p>
<p>என்ன முடிவு செய்திருக்கிறாய் ?<br />
என் பெற்றோருக்காய்<br />
நான்<br />
பெற்றுக் கொண்டவளை<br />
விட்டுவிட சம்மதமில்லை எனக்கு.</p>
<p>நீ சொல்,<br />
ஊரை விட்டு வருவாயா ?</p>
<p>0</p>
<p>துடைத்துத் துடைத்து<br />
தேய்ந்து போன<br />
விழியோரங்களோடு<br />
காதலி விசும்பினாள்.<br />
 <br />
அவள் :</p>
<p>ஊரை விடுவதை விட<br />
உயிரை விடுவதே<br />
எளிதெனக்கு.</p>
<p>எனக்கு<br />
சிறகு முளைத்ததென்று<br />
சொல்லித் தந்தவர்களின்<br />
கூட்டை எரிக்க<br />
என்<br />
கட்டைவிரலுக்கும்<br />
திட்டமில்லை.</p>
<p>0<br />
அவன் :</p>
<p>உனக்கு முன்னால்<br />
இரண்டு முடிவுகள் மட்டுமே.</p>
<p>ஏதோ ஒன்றை<br />
நீ<br />
இழந்தாக வேண்டும்.<br />
எதை ?</p>
<p>சிந்தை துலக்கிச் சிந்தி<br />
தந்தையா ?<br />
என் கையா ?<br />
எதைப் பற்றிக் கொள்கிறாய் ?</p>
<p>0</p>
<p>அவள் :<br />
 <br />
ஏற்கனவே<br />
பற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்<br />
என்<br />
இறக்கை கருகும் வாசம்<br />
உனக்கு வரவில்லையா ?</p>
<p>சிப்பியாய் முத்தை<br />
தர வேண்டும்<br />
என<br />
தியானமிருக்கிறேன் நான்<br />
தவம் கலைக்கிறாய் நீ.</p>
<p>அவன் :</p>
<p>சம்மதிக்காத சிப்பிக் கூட்டை<br />
திறந்து கொண்டு<br />
பறந்து வர<br />
இன்னுமா வரவில்லை<br />
உனக்கு<br />
இரண்டங்குலச் சிறகு ?</p>
<p>அவள் :<br />
 <br />
பருந்தைக் கண்டு<br />
பதறித் துடிக்கும் தாய்க்கோழியின்<br />
இறகுச் சூட்டில்<br />
வெப்பம் கண்டவள் நான்.</p>
<p>என் தாய்க்கோழிக்கு<br />
நான்<br />
குஞ்சாய் இருப்பதல்லவா<br />
பருந்தாய் மாறுவதை விட<br />
பரவசமானது ?</p>
<p>அவன் :<br />
 <br />
அப்படியென்றால்<br />
என்<br />
காதல் கரைகளை விட<br />
உனக்கு<br />
உன் அன்புச் சிறைகள் தான்<br />
அவசியமா ?</p>
<p>அவள் :<br />
தராசுத் தட்டுகளோடு<br />
நான் வரவில்லை.<br />
எனக்கு<br />
வேர் வேண்டுமா நீர் வேண்டுமா<br />
என்றால்<br />
வேரில் விழும் நீர் வேண்டும்<br />
என்பேன்.</p>
<p>நீயோ<br />
வேரை அறுத்து<br />
நீரில் இட நினைக்கிறாய்.</p>
<p>அவன் :<br />
 <br />
நீ<br />
தண்ணீர் தேடுவது<br />
பாலை நிலத்தின்<br />
நீர் நிராகரித்த பகுதிகளில்.</p>
<p>இங்கே<br />
உன் கண்ணீர் ஈரம் கூட<br />
கரையிறங்கும் முன்<br />
இறந்து விடும்.</p>
<p>எப்படிச் சேகரிப்பாய்<br />
தோணி செலுத்துமளவுக்குத்<br />
தண்ணீரை ?</p>
<p>அவள் :<br />
 <br />
ஏன்<br />
கேள்விகளால் என்னை<br />
சிலுவையில் அறைகிறாய் ?</p>
<p>என் தந்தையின்<br />
இதயத்தில்<br />
உறைந்து கிடக்கும்<br />
பனிப்பாறைகளை<br />
உன்<br />
உண்மைக் காதலால்<br />
உருக வை.</p>
<p>பாருக்குள் புகுமுன்<br />
ஒரு முறை<br />
என்<br />
கூரைக்குள் புகு.</p>
<p>அவன் :<br />
 <br />
என் இல்லத்து<br />
சிக்கல்களைச் சரிசெய்வேன்<br />
நான்.<br />
உன்<br />
வீட்டு வலைகளை<br />
நீதான் விலக்க வேண்டும்.</p>
<p>அவள் :<br />
 <br />
தீமிதிக்கும் தவளையாய்<br />
திரிகிறேன் நான்<br />
நீயும் ஏன்<br />
என் பாதங்களுக்குக் கீழே<br />
தீ வளர்க்கிறாய்.</p>
<p>சிறு<br />
ஈரத் துணியாய்<br />
இருந்து விடேன்.</p>
<p>அவன் :<br />
 <br />
எனக்காய்<br />
எதையும் நிராகரிக்க விரும்பாத<br />
உனக்காய்<br />
ஈரத் துணியாய் விரிவதில்<br />
உடன்பாடில்லை எனக்கு.</p>
<p>என் மேல்<br />
நம்பிக்கை வைத்தால்<br />
என் கைமேல்<br />
உன் கை வை<br />
இல்லையேல்<br />
வறண்டு போன வைகை மடியாய்<br />
என்<br />
காதலையும்<br />
சூரியச் சூட்டில் உலர வை.</p>
<p>அவள் :<br />
 <br />
நீயும் வேண்டும்<br />
என்கிறேன் நான்,<br />
நீ மட்டும் வேண்டுமென<br />
வலியுறுத்துகிறாய் நீ.</p>
<p>காதலனின் பணி<br />
காதலிப்பதும்<br />
காதலிக்கப் படுவதும் தானா ?</p>
<p>எந்த<br />
சிக்கல் சாலையை<br />
சீரமைப்பதிலும்<br />
இல்லையா ?</p>
<p>அவள் :<br />
 <br />
என்னோடு வா<br />
இல்லையேல்<br />
உன்னோடு வாழ்.</p>
<p>இதுவே இறுதி.<br />
இனிமேல்<br />
என் காதல் உணர்வுகளை<br />
உன் வீட்டாரின்<br />
காலில் விழ வைக்காதே.</p>
<p>அவள் :<br />
 <br />
விழுவதற்குத் தயங்கும்<br />
தண்ணீர்<br />
அருவியாகும் அழகை<br />
இழக்கும்.</p>
<p>வளைவதற்கு தயாராகாத<br />
மூங்கில்<br />
இசை விளைவிக்கும்<br />
நிலை இழக்கும்.</p>
<p>நீ<br />
விழுவதை அழிவென்கிறாய்<br />
விழுவதால்<br />
விழுதாகலாம் என்கிறேன்<br />
நான்.</p>
<p>விழவேண்டாம் நீ<br />
ஒருமுறை<br />
வளைந்தேனும் கொடுப்பாயா ?</p>
<p>அவன் :<br />
 <br />
வீரனுக்கு அழகு<br />
வீழாமல் இருப்பதில் தான்.</p>
<p>அவள் :<br />
 <br />
புறமுதுகிடுதலும்<br />
பின் வாங்குதலும் மட்டும்<br />
போர் வீரனுக்குப்<br />
பொருத்தமோ ?</p>
<p>கவசம் மாட்டிக் கொண்டு<br />
குகைக்குள்<br />
குடியிருப்பவனோடு<br />
எனக்கென்ன பேச்சு.</p>
<p>உனக்கு<br />
காதல் முக்கியமென்றால்<br />
சமரசத்துக்குச் சம்மதி.<br />
இல்லையேல்<br />
என்<br />
காதலுக்கு மேல்<br />
சமாதி வைக்கச் சம்மதி.</p>
<p>அவன் :<br />
 <br />
என்னோடு<br />
நடைபோடு,<br />
இல்லையேல்<br />
எனக்கு விடைகொடு.</p>
<p>அவள் :<br />
 <br />
வீரம் என்பது<br />
வீழ்த்துவதில் மட்டுமல்ல<br />
வாழ்த்துவதிலும் தான்.<br />
போய் வாழ்.<br />
வீரனாகவே வாழ்.</p>
<p>நீ<br />
உன் வீரத்தை இழக்கவேண்டாம்<br />
ஏனென்றால்<br />
அதற்குப் பதிலாய்<br />
இந்த வினாடியில்<br />
உன்<br />
காதலியை இழந்து விட்டாய்.</p>
<p>0</p>
<p>காதலரின் சண்டை<br />
வெப்பத்தில்,<br />
சூரியன் மூழ்கிப் போனபின்னும்<br />
கரையில்<br />
வெப்பம் கலையாதிருந்தது.</p>
<p>செருப்புகளில் குடியிருந்த<br />
மணலை உதறிக்கொண்டே<br />
காதலி<br />
கடலுக்கு முதுகு காட்டி<br />
நடக்கத் துவங்கினாள்.</p>
<p>0</p>
<p>கூடவே நடந்த காதலன்<br />
அவளை<br />
ஆட்டோ வில்<br />
அனுப்பி வைத்துக் கொண்டே<br />
சொன்னான்.<br />
 </p>
<p><img width="113" src="http://static.flickr.com/98/228974510_52a9dd0f12.jpg" height="170" /><br />
அவன் :</p>
<p>நாளை<br />
கொஞ்சம்<br />
சீக்கிரமாகவே வந்துவிடு.</p>
<p>கடலலை<br />
பழக்கமான காட்சியைப் பார்த்து<br />
வழக்கம் போல<br />
சிரித்துக் கொண்டிருந்தது.<br />
 <br />
0</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பெரிய பூதம்.]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/29/periyabootham/</link>
<pubDate>Tue, 29 Aug 2006 09:42:18 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/29/periyabootham/</guid>
<description><![CDATA[ 
.
திருப்தியின்
படிக்கட்டு மட்டும்
த]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/72/228074746_6d4fc5ac6c.jpg" /> </p>
<p>.<br />
திருப்தியின்<br />
படிக்கட்டு மட்டும்<br />
தீர்ந்தபாடில்லை.</p>
<p>முதல் வேலைக்காய்<br />
நான்<br />
சூரிய உலையில் பழுத்த,<br />
என் முகத்தைத்<br />
அழுந்தத் துடைத்து<br />
நடந்தபோது,</p>
<p>நிரந்தரமாய் ஒரு வேலை<br />
தான்<br />
நினைவுக்குள் சுழன்றது.</p>
<p>பட்டங்களைப் பார்த்து<br />
பெருமூச்சு விடும்<br />
மளிகைக் கடைக்<br />
காகிதமாய்<br />
கசங்கிக் கிடந்தது மனசு.</p>
<p>சில அங்குசங்கள்,<br />
கனத்த சங்கிலிகள்,<br />
மறைத்து வைத்த<br />
சருகுப் பள்ளங்கள் என<br />
போராடித் தான்<br />
பிடிக்க வேண்டியிருந்தது<br />
அந்த யானையை.</p>
<p>பிடித்த யானை<br />
சில வருடங்களில்<br />
சுண்டெலியாய்<br />
சிறுத்துப் போனதற்கு<br />
சத்தியமாய்<br />
யானை காரணியில்லை.</p>
<p>முதல் அலையில் கால் நனைத்து<br />
அடுத்த அலையில்<br />
முட்டி துடைத்து,<br />
மூன்றாம் அலை நோக்கி<br />
நீச்சலடிக்கும்<br />
மீனவச் சிறுவனாய்<br />
என் கடல் பயணங்கள் நடந்தன.</p>
<p>ஒவ்வோர்<br />
அலையைப் பிடித்தபின்னும்<br />
கண்டேன்<br />
பின்னாலே துரத்தி வரும்<br />
பெரிய அலையை !</p>
<p>அலைகளின் முதுகு தாவி<br />
முதுகு தாவி<br />
முன்னேறியதில்,<br />
அலைகளற்ற<br />
ஆழ்பகுதியில் நிற்கிறேன்<br />
இப்போது.</p>
<p>தாமதமாய் வருகிறது<br />
ஞானம்.</p>
<p>அலைகளைப் பிடிக்க<br />
மட்டுமே<br />
ஆர்வம் காட்டாமல்,<br />
நீச்சலும் கொஞ்சம்<br />
பழகியிருந்திருக்க வேண்டும்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சோதனைச் சாலையில் கடவுள்.]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/25/ariviyalkadavul/</link>
<pubDate>Fri, 25 Aug 2006 06:55:59 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/25/ariviyalkadavul/</guid>
<description><![CDATA[ 
.
ஆண்டவன் இருக்கிறார்
என
நான் நடும் ந]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/69/224282894_f56341ad91.jpg" /> </p>
<p>.</p>
<p>ஆண்டவன் இருக்கிறார்<br />
என<br />
நான் நடும் நம்பிக்கையின்<br />
கடுகு விதைகளை<br />
என் ஆறறிவு<br />
தயவு தாட்சண்யமின்றி<br />
நறுக்கிப் போடும்.</p>
<p>இருக்கின்றார் என்று நான்<br />
ஒரு காய் நகர்த்தும் போது,<br />
எப்படி?<br />
என நான்கு காய்கள்<br />
எனக்கெதிராய் நகர்த்தப் படும்.</p>
<p>வெற்றிகளை நான்<br />
பட்டியலிட்டால்,<br />
என்னை விட வெற்றி பெற்ற<br />
நாத்திக நண்பர்களை<br />
அது<br />
துணைக்கு அழைத்து வரும்.</p>
<p>தோல்விகளை நான்<br />
எடுத்து வைத்தால்,<br />
என்னை விட அதிகமாய் தோற்ற<br />
ஆத்திக அன்பர்களை<br />
அது ஆதரவுக்கு அழைத்து வரும்.</p>
<p>நோய்களுக்காய்<br />
நான்<br />
கடவுளைத் தொழுதால்<br />
அதிசயம் நடக்காவிடில்<br />
அவநம்பிக்கை வந்து சம்மணமிடும்.</p>
<p>வரலாறுகளுக்காய் நான்<br />
இறையை நம்பினால்,<br />
கல்வெட்டுகள் நிஜமா எனும்<br />
சந்தேகம் என்<br />
மனதில் வெட்டும்.</p>
<p>வரலாறுகள் உண்மை என<br />
அறிவியல் சொன்னால்,<br />
வரலாற்று நாயகன் உண்மையா ?<br />
என<br />
எதிர் கேள்வி உருவாகும்.</p>
<p>புரியாமல் நம்பும்<br />
அறிவியல் கருவிகள் ஏராளம்,<br />
ஆதாரமில்லாமல் ஆண்டவனை<br />
நம்பும்போதோ,<br />
அரை குறை சிந்தனைகள்<br />
அலைக்கழிக்கின்றன.</p>
<p>ஆனாலும்<br />
எங்கேனும்  ஏதேனும்<br />
நடந்து விட்டால்,<br />
மனசு<br />
ஆண்டவா என்று தான்<br />
ஆரம்பிக்கிறது.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மிச்சமிருப்பவை]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/24/michamiruppavai/</link>
<pubDate>Thu, 24 Aug 2006 15:11:57 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/24/michamiruppavai/</guid>
<description><![CDATA[ 
.
கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்
சூரி]]></description>
<content:encoded><![CDATA[<p> <img width="113" src="http://static.flickr.com/86/223720596_25ae8f4282.jpg" height="170" /></p>
<p>.</p>
<p>கொதிக்கக் கொதிக்கக் கொட்டும்<br />
சூரிய பானத்தை<br />
நிலாக் கோப்பை<br />
குளிர வைத்துப் பரிமாறும்.<br />
நிலவும் சூரியனும் இன்னும்<br />
அயல் தேசக் காப்புரிமைக்குள்<br />
அடைக்கப்படவில்லை.</p>
<p>தொட்டு விட இயலாத<br />
தூரப் புள்ளிகளை<br />
பூமி<br />
நட்சத்திரமென்று பெயரிட்டு<br />
உலகுக்கெல்லாம் உரிமையாக்கும்.</p>
<p>மிதக்கும் கட்டிடங்கள்<br />
இப்போதைக்கு<br />
சாத்தியமில்லாமல் போனதால்<br />
தூரவானம் இன்னும்<br />
கம்பி வேலிகளுக்குள் கட்டப்படவில்லை.</p>
<p>துருவப் பனி எப்போதும்<br />
தீர்ந்து போகாது என்பதால்<br />
யாரும்<br />
வெட்டி எடுத்துச் செல்வதில்<br />
வெட்டுக் குத்து நடப்பதில்லை.</p>
<p>இன்னும்<br />
காற்றுக்கு வரி கட்டும்<br />
காலம் வரவில்லை.</p>
<p>ஆற்றுக்குள் மணலெடுத்தால்<br />
ஊற்றெடுக்கும் பிரச்சனைகள்.<br />
பாலைவனத்தில்<br />
மணல் திருடினால்<br />
யாரும்<br />
பொருட்படுத்துவதில்லை.</p>
<p>மேகத்தைப் பிரிந்து<br />
தாய் வீடு திரும்பும்<br />
மழைப்பெண்ணுக்கு<br />
வானத்தில் வரப்புகள் இல்லை.</p>
<p>கீழே விழுந்தபின் தான்<br />
அவை<br />
அரசாங்க அணைக்கட்டுகளில்.</p>
<p>விதிமுறைகள்<br />
பூமியில் வித்தியாசமானவை.</p>
<p>இழுத்துப் பிடித்து<br />
அமுக்க முடியாததெல்லாம்<br />
பொதுவுடமை.</p>
<p>விரட்டி விரட்டி<br />
வால் தொட முடிந்ததெல்லாம்<br />
தனியுடமை !</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காக்கைச் சிறகினிலே....]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/23/kaakkai/</link>
<pubDate>Wed, 23 Aug 2006 11:16:32 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/23/kaakkai/</guid>
<description><![CDATA[ 
.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
என
நெக]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/82/222788679_351d57f240.jpg" /> </p>
<p>.</p>
<p>காக்கைச் சிறகினிலே நந்தலாலா<br />
என<br />
நெக்குருகிப் பாடுகிறாய்<br />
கருப்பென்று என்னை<br />
நிராகரித்துப் போன<br />
அதே நாவுடன்.</p>
<p>ஃ</p>
<p><img src="http://static.flickr.com/92/222788683_92911f2b4c.jpg" /></p>
<p> எல்லோரும்<br />
காதலை வெளிக்காட்டி இருந்தால்<br />
உனக்கான<br />
பட்டியல்<br />
எத்தனை பெரிதாயிருக்கும் ?</p>
<p>ஃ</p>
<p><img src="http://static.flickr.com/62/222792665_eb96b88caf.jpg" /></p>
<p>இப்போதெல்லாம்<br />
கொலை செய்துவிட்டுக் கூட<br />
சாரி சொல்லிக்<br />
கடந்து போகலாம்.</p>
<p>அவளைப் போல.</p>
<p>ஃ</p>
<p><img src="http://static.flickr.com/96/222792664_5295b55e4b.jpg" /></p>
<p>உன்னுடைய<br />
சிரிப்புகளையெல்லாம் சேமித்து<br />
அழியாத குடுவையில்<br />
அடைத்து<br />
ஆழமாய் புதைக்க வேண்டும்.</p>
<p>எதிர்கால சந்ததிக்கும்<br />
ஏதேனும்<br />
புதையல் வேண்டுமல்லவா.<br />
ஃ</p>
<p><img src="http://static.flickr.com/95/222798588_0b546ec141.jpg" /></p>
<p>இறுக்கிப் பிடித்த<br />
ஜீன்ஸும்,<br />
இளமை பிரச்சாரமான<br />
டி-சர்ட்ம் அணிந்து<br />
கலவர வேர்களை<br />
எனக்குள் படரவிட்டுக்<br />
கடந்து போன அவள்<br />
புள்ளியாய் மறைந்தபின்<br />
போலியாய் சொன்னேன்</p>
<p>இந்தக் காலத்து பிள்ளைங்க...</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தகவல் இல்லா தொடர்புகள்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/22/%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
<pubDate>Tue, 22 Aug 2006 14:29:15 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/22/thahavalillaathodarp/</guid>
<description><![CDATA[ 
.
இணையத்தில்
ஏதோ இணைப்புப் பிழை,
உனக்]]></description>
<content:encoded><![CDATA[<p> <img src="http://static.flickr.com/79/222023532_eaa35a9631.jpg" /></p>
<p>.<br />
இணையத்தில்<br />
ஏதோ இணைப்புப் பிழை,<br />
உனக்கனுப்பிய<br />
இ-மெயில்<br />
வழியில் எங்கோ விழுந்துவிட்டது.</p>
<p>உன்<br />
வீட்டுத் தொலைபேசி<br />
வேலை செய்யவில்லையா ?</p>
<p>மறந்து போன நண்பனை<br />
வழியில் சந்திக்கும் போது<br />
உதடுகள்<br />
ஓயாமல் பொய்சொல்லும்.</p>
<p>'கடுதாசி போட்டேனே'<br />
என்று அப்பா யாரிடமோ<br />
ஒரு நாள்<br />
சொல்லிக் கொண்டிருந்தார்.</p>
<p>பாம்பின் மேல் பழி சுமத்திய<br />
ஆதாம் காலத்து ஆரம்பம் தான்<br />
இந்த<br />
தப்பித்தல் உளறல்கள்.</p>
<p>கற்காலத்துக்கும்<br />
தற்காலத்துக்கும்<br />
அர்த்தங்களின் தூரம் அதிகமில்லை,<br />
பெயர் சூட்டுதலில் தான்<br />
பல நூற்றாண்டு நீளம்.</p>
<p>மறக்கத் துவங்கியிருக்கும்<br />
பால்ய கால நண்பர்களுக்கு<br />
டைரியைத் தொலைத்தேனெனும்<br />
முன் ஜாமீன் பதில் தான்.</p>
<p>இந்த நட்பு<br />
இறுதிவரை இருக்குமென்று நினைத்து<br />
இறுக்கமற்றுப் போனவற்றின்<br />
கணக்குகள்<br />
ஐந்தாம் வகுப்பிலிருந்து<br />
அமெரிக்கா வரை நீள்கிறது.</p>
<p>நேற்று,<br />
சாலையோரம் மங்கலான வெளிச்சத்தில்<br />
அவனைப் பார்த்தேன்,<br />
ஒரு காலத்தில் என்னோடு<br />
நெருக்கமாய் இருந்தவன்.</p>
<p>விசாரிப்புக்கிடையில்<br />
வினவினான்<br />
ஒரு கடிதம் அனுப்பினேனே,<br />
கிடைத்ததா ?</p>
<p>சிரிப்புக்கிடையில் சொன்னேன்.<br />
ஆம்,<br />
பதில் கூட அனுப்பினேனே !</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பிரியமா ? பிரியுமா ? ]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/21/piriyamaapiriyumaa/</link>
<pubDate>Mon, 21 Aug 2006 08:20:43 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/21/piriyamaapiriyumaa/</guid>
<description><![CDATA[( பாடல் போல ஒரு கவிதை.. அல்லது கவிதை போல]]></description>
<content:encoded><![CDATA[<p>( பாடல் போல ஒரு கவிதை.. அல்லது கவிதை போல ஒரு பாடல்..) </p>
<p><img width="170" src="http://static.flickr.com/60/220838961_5af9a1387f_m.jpg" height="113" /></p>
<p>பூவைத் தீண்டும் தென்றல் போலே<br />
 என்னைத் தீண்டினாய் - நான்<br />
தீயைத் தீண்டும் காலம் வேண்டும்<br />
 என்றா வேண்டினாய் ?</p>
<p>காதல் என்னும் சுவாசக் காற்றை<br />
 நீதான் ஊற்றினாய் - பின்<br />
மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை<br />
 ஏனோ மாற்றினாய்</p>
<p>.<br />
ஃ</p>
<p>வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில்<br />
 உன்னைக் காண்கிறேன் - நீ<br />
கொட்டிச் சென்ற காதல் மண்ணில்<br />
 பூக்கக் காண்கிறேன்.</p>
<p>சொட்டுச் சொட்டாய் எந்தன் ரத்தம்<br />
 கொட்டக் காண்கிறேன் - நீ<br />
விட்டுச் செல்லச் செல்லக் காதல்<br />
 வற்றக் காண்கிறேன்</p>
<p>.<br />
ஃ</p>
<p>.<br />
உதயம் வானில் சிரிக்கும் முன்னே<br />
 உன்னைத் தேடுவேன் - பின்<br />
இரவுப் பொழுது முடிந்த பின்னும்<br />
 உன்னால் வாடுவேன்.</p>
<p>இதயம் துவைத்து காதல் இருத்தி<br />
 தினமும் நாடினேன் - நீ<br />
புதையல் கிடந்த இடத்தை நோக்கி<br />
 பயணம் மாற்றினாய்</p>
<p>ஃ</p>
<p>உள்ளம் முழுதும் வெள்ளம் போலே<br />
 காதல் வந்ததடி - பின்<br />
கள்ளம் எல்லாம் உள்ளம் விட்டு<br />
 எங்கோ சென்றதடி.</p>
<p>வெள்ளை மனதில் உன்னை வைத்தேன்<br />
 முள்ளாய் கொல்லுதடி - உன்<br />
பிள்ளைப் பாதம் தீண்டா நெஞ்சம்<br />
 உள்ளே வேகுதடி.</p>
<p>ஃ</p>
<p>தீயாய் எரிந்த என்னை நீராய்<br />
 நீதான் மாற்றினாய் - பின்<br />
நீயாய் ஏனோ என்னை விட்டு<br />
 பாதை மாற்றினாய்.</p>
<p>தேயா நிலவாய் நீயே வந்தாய்<br />
 வானாய் மாறினேன் - எனை<br />
தேயச் சொல்லி வானம் விட்டு<br />
 மாயம் ஆகிறாய்.</p>
<p>.<br />
ஃ</p>
<p>முத்தம் மட்டும் கன்னம் தொட்டால்<br />
 காதல் வாழுமா - நான்<br />
நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன்<br />
 போதல் நியாயமா ?</p>
<p>சித்தம் கொண்டு என்னைத் தீண்டு<br />
 பாவம் நானம்மா - ஓர்<br />
யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல்<br />
 சாபம் ஏனம்மா ?<br />
<img width="170" src="http://static.flickr.com/60/220838961_5af9a1387f_m.jpg" height="113" /></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஐந்தறிவு பயமறியாது]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/08/19/aintharivubayamariyaathu/</link>
<pubDate>Sat, 19 Aug 2006 07:18:46 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/08/19/aintharivubayamariyaathu/</guid>
<description><![CDATA[ 
.
கர்ப்பக் கிரகத்துக்குள்
சுற்றி வர]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://static.flickr.com/68/218969211_18fa68ff4e.jpg" /> </p>
<p>.</p>
<p>கர்ப்பக் கிரகத்துக்குள்<br />
சுற்றி வருகின்றன<br />
சாதி வேறுபாடற்ற<br />
சிலந்திகள்.</p>
<p>பூட்டிய கோயிலுக்குள்ளும்<br />
புகுந்து விடுகின்றன<br />
தயக்கமற்ற<br />
தானிய எறும்புகள்.</p>
<p>குருக்களின்<br />
குருதியையும் குடிக்கின்றன<br />
தீண்டாமை துகிலுரித்த<br />
கொசுக்கள்</p>
<p>ஐயப்பன் சந்நிதிக்கு<br />
மேலேயும்<br />
பதட்டமின்றி பறக்கின்றன<br />
சில<br />
பெண் புறாக்கள்.<br />
.</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
