<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>குத்து &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/குத்து/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "குத்து"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 23:52:09 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA['பத்துமே குத்தா'..?-வைரமுத்து வேதனை   ]]></title>
<link>http://carthickeyan.wordpress.com/?p=86</link>
<pubDate>Wed, 25 Jun 2008 09:59:48 +0000</pubDate>
<dc:creator>carthickeyan</dc:creator>
<guid>http://carthickeyan.wordpress.com/?p=86</guid>
<description><![CDATA[பத்துப் பாட்டில் ஒரு குத்துப் பாட்டி]]></description>
<content:encoded><![CDATA[<p>பத்துப் பாட்டில் ஒரு குத்துப் பாட்டிருந்தால் பரவாயில்லை. பத்துமே குத்தாக இருப்பது நெஞ்சை வேதனை கொள்ளச் செய்கிறது என்று கவிஞர் வைரமுத்து வேதனையுடன் குறிப்பிட்டார்.</p>
<p>மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரையும், எம்மகன் படத்தையும் இயக்கிய எம்.திருமுருகன் இப்போது, முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தை இயக்கி வருகிறார்.</p>
<p>இதில் பரத் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். டத்தோ ரெனா.துரைசிங்கம் பிள்ளை தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத, வித்யாசாகர் இசையமைத்து இருக்கிறார்.</p>
<p>இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் விஜய் வெளியிட, நடிகர் பிரபு பெற்றுக்கொண்டார்.</p>
<p>விழாவில் வைரமுத்து பேசுகையில்,</p>
<p>தமிழ் திரையுலகை விட்டு மெலடி எனப்படும் சுகமான கானங்கள் வெளியே போய்விடக் கூடாது. குத்து பாடல்கள் தேவைதான். அது பாகவதர் காலம் முதல் பரத் காலம் வரை இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதுவும் இசையில் ஒரு அங்கம்தான்.</p>
<p>பத்து பாடல்களில் ஒரு குத்து பாட்டு இருக்கலாம். தப்பில்லை. பத்துமே குத்து என்றால், தாங்க முடியுமா... இலையில் ஊறுகாய் மாதிரிதான் அவை இருக்க வேண்டும். இலை முழுவதும் ஊறுகாயாக இருக்கக் கூடாது. `மெலடி' பாடல்களுக்குத்தான் என்றைக்கும் மதிப்பு இருக்கும்.</p>
<p>முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் பாடல்களில் விரசம் வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.</p>
<p>இப்போது ஆங்கில படங்கள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. அவற்றின் பிரமாண்டங்களை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப் படங்கள் அடித்தட்டு மக்களுக்கும் போய்ச் சேர்ந்து விட்டதால் இன்றாக்கு நிலைமை மோசமாகி வருகிறது.</p>
<p>அந்த பிரமாண்டத்தைத் தமிழில் பார்க்க முடியவில்லையே என்ற நினைப்பில் தமிழ்ப் படங்களைப் புறக்கணிக்கும் அபாயம் உண்டாகியிருக்கிறது. எனவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் உருவாக வேண்டும் என்றார் வைரமுத்து.</p>
<p>அவருக்கு முன் பேசிய நடிகர் விஜய்,  நான் ஏற்கெனவே பல மேடைகள்ல சொல்லியிருக்கேன். எனக்கு மெலடியை விட குத்துப் பாட்டுதான் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்துல ரெண்டு குத்துப்பாட்டு இருக்கு, ரெண்டுமே சூப்பர் என்றார்.</p>
<p>அவருக்கு அடுத்துப் பேசிய வைரமுத்துவோ குத்துப் பாடல்களைக் குத்திக் கிழிக்க, அரங்கம் பரபரப்பானது. ஆனால் முகத்தில் எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் விஜய்.</p>
<p>விழாவில் பட அதிபர்கள் டி.ஜி.தியாகராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் எல்.சுரேஷ், கலைப்புலி எஸ்.தாணு, இசையமைப்பாளர் வித்யாசாகர், டைரக்டர் திருமுருகன் தயாரிப்பாளர் டத்தோ ரெனா. துரைசிங்கம் பிள்ளை, ஐங்கரன் பிலிம்ஸ் கருணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் ]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4060</link>
<pubDate>Fri, 21 Mar 2008 04:04:51 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4060</guid>
<description><![CDATA[ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்]]></description>
<content:encoded><![CDATA[<p>ஆணுக்கு மட்டுமே பிடித்த பாடல்கள் என்று ஏதாவது இருக்கிறதா? குத்துப்பாடல்களும் குலுக்கல்களும் பெண்களுக்கும் ரசிக்கிறதா? மெட்டு ரசிக்கப்படுகிறதா? காட்சியாக்கமா? <a href="http://uspresident08.wordpress.com/2008/03/02/%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1/">மூன்று மணிக்கு ஃபோன் சிணுங்குவதை நிறுத்துபவர்கள் இருக்கட்டும்</a>; சிற்றஞ்சிறுகாலே மூன்று மணி தாகசந்திக்கு யாரைக் கேட்க விருப்பம்?</p>
<p><font color="#ff0000">ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் </font></p>
<p>1. 'அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க' - <font color="#0000ff">அழகே உன்னை ஆராதிக்கிறேன்</font></p>
<p>2. 'செவ்வந்தி பூமுடிச்ச சின்னக்கா' கேட்க விரும்பினால் இன்னும் ரொமான்ஸ் மூடு போகவில்லை என்று அர்த்தம். அல்லது நண்பர் குழாம் தூங்கிப் போனதும் காரணமாக இருக்கலாம். இரண்டையும் சரி செய்தால் 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்'</p>
<p>3. 'வஜ்ஜிரம் வவ்வாலு மீனுதானா!' - <font color="#0000ff">செம்பருத்தி </font></p>
<p>4. 'போட்டு வைத்த காதல் திட்டம் ஒகே கண்மணி' - <font color="#0000ff">சிங்காரவேலன்</font></p>
<p>5. 'கூடையில கருவாடு; கூந்தலிலே பூக்காடு': <font color="#0000ff">ஒரு தலை ராகம்;</font> ஒரிஜினல் டி ஆர் சிச்சுவேசனுக்கு ஏற்ப 'அட பொன்னான மனசே பூவான மனசே' என்று உருமாற்றலுக்கும் ஏற்றவர்.</p>
<p>6. 'எம்மாடி ஆத்தாடீ! உன்ன எனக்கு தரியாடீ?' - எம்மா எம்மா எம்மம்மாஆ; தற்போதைய <a href="http://snapjudge.wordpress.com/2008/01/16/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-disaster-lyricism/">காளை 'குட்டிப் பிசாசே'</a>வும் சரியான ஆம்பிளையின் தேர்வு.</p>
<p>7. 'தண்ணிதொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்' - <font color="#0000ff">சிந்துபைரவி</font></p>
<p>8. 'காதல் என்பது பொதுவுடைமை; கஷ்டம் மட்டுந்தானே தனியுடைம' - <font color="#0000ff">பாலைவன ரோஜாக்கள்</font></p>
<p>9. 'ஆசை நூறு வகை' (அசல்): <font color="#0000ff">அடுத்த வாரிசு</font></p>
<p>10. 'கண்ணத் தொறக்கணும் சாமீ; கையப் புடிக்கணும் சாமீ!' - <font color="#0000ff">முந்தானை முடிச்சு</font></p>
<blockquote><p><i>தொடர்புள்ள பதிவுகளில் சில</i>:</p>
<ul>
<li><a href="http://snapjudge.wordpress.com/2005/10/25/%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/">பத்து பாட்டு « Snap Judgment</a></li>
<li><a href="http://snapjudge.wordpress.com/2004/01/06/%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/">எனக்குப் பிடித்த பாடல்கள் « Snap Judgment</a></li>
<li><a href="http://jeyamohan.in/?p=320">jeyamohan.in » Blog Archive » குத்துப்பாட்டு , இரு கடிதங்கள்</a></li>
<li><a href="http://halwacity.com/blogs/?p=195">போட்டுத் தாக்கு!!! » Blog Archive » இதுக்கு எடமிருக்கா?</a></li>
<li><a href="http://thenkinnam.blogspot.com/">தேன் கிண்ணம்</a></li>
</ul>
</blockquote>
<p><font color="#ff0000"><b>பெண்ணின் ஸ்டீரியோடைப் மனதைத் தொட்டுச் செல்லும் பாடல்களை guess செய்தால்...</b></font></p>
<p>1. 'கவிதைகள் சொல்லவா? உன் பெயர் சொல்லவா? இரண்டுமே ஒன்றுதான்!' - <font color="#008000">உள்ளம் கொள்ளை போகுதே</font></p>
<p>2. 'தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது' - <font color="#008000">மகாநதி</font></p>
<p>3. 'காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில்' - <font color="#008000">தம்பிக்கு எந்த ஊரு</font></p>
<p>4. 'மன்றம் வந்த தென்றலுக்கு' - <font color="#008000">மௌன ராகம்</font></p>
<p>5. 'கொஞ்ச நாள் பொறு தலைவா' - <font color="#008000">ஆசை</font></p>
<p>6. 'வசீகரா' - <font color="#008000">மின்னலே</font></p>
<p>7. 'பச்சை நிறமே' - <font color="#008000">அலைபாயுதே</font></p>
<p>8. 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்... ஒற்றை நாணயம்' - <font color="#008000">ஆனந்தம்</font></p>
<p>9. 'மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே' - <font color="#008000">ரோஜாக்கூட்டம்</font></p>
<p>10. 'குறுக்கு சிறுத்தவளே' - <font color="#008000">முதல்வன் </font></p>
<p><i>சிறப்பு கொசுறு</i>: 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' - <font color="#008000">ஆட்டோகிராப்</font></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
