<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>கத்தரிக்காய் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/கத்தரிக்காய்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "கத்தரிக்காய்"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 14:21:57 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[கத்திரிக்காய் புளிக்கூட்டு ]]></title>
<link>http://barthee.wordpress.com/?p=398</link>
<pubDate>Sun, 08 Jun 2008 13:37:49 +0000</pubDate>
<dc:creator>barthee</dc:creator>
<guid>http://barthee.wordpress.com/?p=398</guid>
<description><![CDATA[

தேவையானப்பொருட்கள்:
கத்திரிக்காய் - ]]></description>
<content:encoded><![CDATA[<div class="post-body entry-content">
<p><a href="http://bp0.blogger.com/_SMpec4BuE_Y/SDfeOLRTVkI/AAAAAAAADRQ/EypUmbXwjpk/s1600-h/2512984720_ab8e0e1269.jpg"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_SMpec4BuE_Y/SDfeOLRTVkI/AAAAAAAADRQ/EypUmbXwjpk/s400/2512984720_ab8e0e1269.jpg" border="0" alt="" /></a><br />
<strong>தேவையானப்பொருட்கள்:</strong></p>
<p>கத்திரிக்காய் - 4 (பெரியதாக இருந்தால் 2)<br />
துவரம்பருப்பு - 1/2 கப்<br />
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு<br />
பெரிய வெங்காயம் - 1 (நடுத்தர அளவு)<br />
தக்காளி - 1<br />
பூண்டுப்பற்கள் - 4<br />
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்<br />
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்<br />
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு</p>
<p><strong><em>தாளிப்பதற்கு:</em></strong></p>
<p>எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்<br />
கடுகு - 1/2 டீஸ்பூன்<br />
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்<br />
சீரகம் - 1/2 டீஸ்பூன்<br />
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்<br />
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை<br />
கறிவேப்பிலை - சிறிது<br />
பச்சை மிளகாய் - 2</p>
<p><strong>செய்முறை:</strong></p>
<p>துவரம்பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.</p>
<p>புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக பிழிந்தெடுக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் கெட்டி புளிச்சாறு தேவை. (புளி பேஸ்ட் இருந்தாலும் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம்).</p>
<p>வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இலேசாக நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.</p>
<p>ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு ஒரிரு வினாடிகள் வதக்கி, பின் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பானதும், தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்புப் போட்டு நன்றாக சேர்த்து விடவும். இப்பொழுது கத்திரிக்காய்த் துண்டங்களைப் போட்டு கிளறவும். காய் மூழ்கும் அளவிற்குத் தண்ணீர் விட்டு, ஒரு மூடியால் மூடி விட்டு, மிதமான் தீயில் 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்திருக்கவும். காய் வேகவில்லையென்றால், இன்னும் சிறிது நேரம் வைத்திருந்து, காய் வெந்தவுடன், வேகவைத்தப் பருப்பைக் கொட்டிக் கிளறி, கொதிக்க விடவும். கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், புளித்தண்ணிரைச் சேர்த்துக் கிளறிவிட்டு, மீண்டும் நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.</p>
<p>சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாயிருக்கும். தொட்டுக்கொள்ள பொரித்த கூழ்வடவம் இருந்தால் இன்னும் சுவை கூடும்.</p>
<p>By Kamala</p></div>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தக்காளிக் காய் கூட்டு - [2]]]></title>
<link>http://mykitchenpitch.wordpress.com/?p=416</link>
<pubDate>Fri, 28 Mar 2008 07:44:07 +0000</pubDate>
<dc:creator>Jayashree Govindarajan</dc:creator>
<guid>http://mykitchenpitch.wordpress.com/?p=416</guid>
<description><![CDATA[தேவையான பொருள்கள்:
தக்காளிக்காய் - 1/4 க]]></description>
<content:encoded><![CDATA[<p><strong><em><font color="#0000ff">தேவையான பொருள்கள்:</font></em></strong></p>
<p>தக்காளிக்காய் - 1/4 கிலோ<br />
கத்தரிக்காய் - 1/4 கிலோ<br />
நிலக்கடலை - ஒரு கைப்பிடி <br />
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்<br />
பால் (அல்லது தேங்காய்ப் பால்) - அரை கப்<br />
மஞ்சள் தூள்<br />
உப்பு<br />
கொத்தமல்லித் தழை </p>
<p><em><font color="#0000ff">வறுத்து அரைக்க:<br />
</font></em>எண்ணெய் - 2 டீஸ்பூன்<br />
காய்ந்த மிளகாய் - 4, 5<br />
தனியா - 1 டீஸ்பூன்<br />
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்<br />
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்<br />
தேங்காய்த் துருவல் - 1/4 கப்</p>
<p><em><font color="#0000ff">தாளிக்க:</font></em> எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.</p>
<p><a href="http://www.flickr.com/photos/jsri/2367605417/" title="thakkaalikkaai kaththarikkaai koottu by Jayashree Govindarajan, on Flickr"><img width="240" src="http://farm4.static.flickr.com/3165/2367605417_812d573bfa_m.jpg" alt="thakkaalikkaai kaththarikkaai koottu" height="210" /></a><a href="http://www.flickr.com/photos/jsri/2368437560/" title="thakkaalikkaai paagarkkaai koottu by Jayashree Govindarajan, on Flickr"><img width="240" src="http://farm4.static.flickr.com/3217/2368437560_4f415a5300_m.jpg" alt="thakkaalikkaai paagarkkaai koottu" height="213" /></a></p>
<p><strong><em><font color="#0000ff">செய்முறை:</font></em></strong></p>
<p><strong><em><font color="#0000ff"></font></em></strong></p>
<ul>
<li>
<div>துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>நிலக்கடலையை ஒரு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும் அல்லது துவரம் பருப்போடு குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>தக்காளிக் காய், கத்தரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.</div>
</li>
<li>
<div>நறுக்கிய தக்காளிக் காய், ஊறவைத்த நிலக்கடலையைச் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.</div>
</li>
<li>
<div>கத்தரிக்காய், தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.</div>
</li>
<li>
<div>கத்தரிக்காய் முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, அரை கப் பால் அல்லது தேங்காய்ப் பால், தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடவும்.</div>
</li>
<li>வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.</li>
<li>நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.</li>
</ul>
<p>* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான பாகற்காய், புடலங்காய், கொத்தவரங்காய், அவரைக்காய், போன்ற காய்களிலும், பீன்ஸ், சௌசௌ, கோஸ் போன்ற காய்களிலும் விரும்பினால் பொருத்தமான பயறுகள் சேர்த்துச் செய்யலாம்.</p>
<p>* நிலக்கடலை தவிர வேறு பயறுகளாக இருந்தால் எட்டுமணி நேரம் ஊறவைத்து குக்கரில் பருப்போடு வேகவைத்துச் சேர்க்க வேண்டும். இந்த முறையில், அரைத்துவிடும் பொருள்களில் 7, 8 பச்சை நிலக்கடலையும் சேர்த்து அரைக்கலாம். சுவையாக இருக்கும்.</p>
<p>* ஊறவைத்த பயறு தயாராக இல்லாதபொழுது ஒரு கைப்பிடி கடலைப் பருப்பையே நேரடியாக காயோடு வேகவைத்துக் கொள்ளலாம்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சாதாக் கூட்டு - (2) [கத்தரிக்காய்]]]></title>
<link>http://mykitchenpitch.wordpress.com/2007/12/22/saadhaa-koottu-2-kaththarikkaai/</link>
<pubDate>Sat, 22 Dec 2007 06:14:44 +0000</pubDate>
<dc:creator>Jayashree Govindarajan</dc:creator>
<guid>http://mykitchenpitch.wordpress.com/2007/12/22/saadhaa-koottu-2-kaththarikkaai/</guid>
<description><![CDATA[தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் - 1/2 கி]]></description>
<content:encoded><![CDATA[<p><strong><em><font color="#0000ff">தேவையான பொருள்கள்:</font></em></strong></p>
<p>கத்தரிக்காய் - 1/2 கிலோ<br />
பயறு - 3 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)<br />
வேகவைத்த துவரம் பருப்பு - 1/4 கப்<br />
உப்பு - தேவையான அளவு<br />
கொத்தமல்லித் தழை</p>
<p><em><font color="#0000ff">வறுத்து அரைக்க:<br />
</font></em>எண்ணெய் - 2 டீஸ்பூன்<br />
காய்ந்த மிளகாய் - 3, 4<br />
தனியா - 1 டேபிள்ஸ்பூன்<br />
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்<br />
தேங்காய் - 1/2 மூடி</p>
<p><em><font color="#0000ff">தாளிக்க:</font></em> எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை</p>
<p><a href="http://www.flickr.com/photos/jsri/2127668811/" title="kaththarikkai koottu by Jayashree Govindarajan, on Flickr"><img width="500" src="http://farm3.static.flickr.com/2047/2127668811_52ea71a4f4.jpg" alt="kaththarikkai koottu" height="438" /></a></p>
<p><strong><em><font color="#0000ff">செய்முறை:</font></em></strong></p>
<ul>
<li>
<div>துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>விரும்பினால் தட்டப்பயறை ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். (கத்தரிக்காய்க்கு கொத்துக்கடலையும் நன்றாக இருக்கும். பயறு வகை எதுவும் சேர்க்காமலும் செய்யலாம்.)</div>
</li>
<li>
<div>கத்திரிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, தனியா என்ற வரிசையில் சேர்த்து, சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.</div>
</li>
<li>
<div>அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.</div>
</li>
<li>
<div>நறுக்கிய கத்தரிக்காயை தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடி, வேகவைக்கவும்.</div>
</li>
<li>
<div>முக்கால் பதம் வெந்ததும், அரைத்த விழுது, வேகவைத்த பயறு சேர்த்து, தேவைப்பட்டால் இன்னும் நீர் சேர்த்து மேலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு கொதிவிடவும்.</div>
</li>
<li>
<div>வேகவைத்து மசித்த துவரம் பருப்பு கலந்து மேலும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.</div>
</li>
<li>
<div>நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.</div>
</li>
</ul>
<p>* இதே முறையில் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரங்காய், அவரைக்காய், புடலங்காய் போன்றவற்றிலும் விரும்பினால் காய்க்குப் பொருத்தமான பயறு சேர்த்தோ, சேர்க்காமலோ செய்யலாம்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பஜ்ஜி]]></title>
<link>http://mykitchenpitch.wordpress.com/2007/09/28/bajji/</link>
<pubDate>Fri, 28 Sep 2007 11:30:15 +0000</pubDate>
<dc:creator>Jayashree Govindarajan</dc:creator>
<guid>http://mykitchenpitch.wordpress.com/2007/09/28/bajji/</guid>
<description><![CDATA[தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவ]]></description>
<content:encoded><![CDATA[<p>தமிழ்நாட்டில் பெண்பார்க்கச் செல்பவர்களுக்குக் கொடுக்கப் படும் முக்கிய உணவு. : ) எப்பொழுதிலிருந்து அந்த இடத்தை இது பிடித்தது, ஏன் அவர்களுக்கு பஜ்ஜியை தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மக்கள் வந்ததும் வேகமாகத் தயாரிக்க முடிவதும், ஒரே வகையில் வெரைட்டி காண்பிக்க முடிவதும் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டின் நடைபாதைத் தள்ளுவண்டிகளில் அன்றாடம் அதிகம் விற்பனை ஆவதும் இதுவாகத் தான் இருக்கும்.</p>
<p><strong><em><font color="#0000ff">தேவையான பொருள்கள்:</font></em></strong></p>
<p>கடலைப் பருப்பு - 1 கப்<br />
பச்சரிசி - 1/3 கப்<br />
துவரம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)<br />
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5<br />
பெருங்காயம்<br />
எண்ணெய்<br />
உப்பு - தேவையான அளவு.</p>
<p>கத்திரிக்காய், வாழைக்காய், வெங்காயம், உருளைக் கிழங்கு, சௌசௌ போன்ற காய்கறிகள்....</p>
<p><a href="http://www.flickr.com/photos/jsri/1436920640/" title="Photo Sharing"><img width="240" src="http://farm2.static.flickr.com/1117/1436920640_68ac7dae2e_m.jpg" alt="bajji 1" height="219" /></a><a href="http://www.flickr.com/photos/jsri/1435974127/" title="Photo Sharing"></a></p>
<p><strong><em><font color="#0000ff">செய்முறை:</font></em></strong></p>
<ul>
<li>கடலைப் பருப்பு, துவரம் பருப்பு அரிசியைச் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.</li>
<li>ஊறியதும் பெருங்காயம், காய்ந்த மிளகாய், சேர்த்து மிக மென்மையாக இட்லிமாவு பதத்திற்கு அரைக்கவும். கிரைண்டரில் அரைத்தால் நலம். மிக்ஸியும் பரவாயில்லை.</li>
<li>அரைத்து எடுப்பதற்கு முன் உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.</li>
<li>காய்கறிகளை தயாராக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய், உருளைக் கிழங்கு, வெங்காயம், சௌசௌ போன்ற உருளையான காய்களை மெல்லிய வட்டமாக நறுக்கவும். வாழைக்காயை இரண்டாக வெட்டி, அகலமான இரண்டு பக்கங்களில் மட்டும் தோல்சீவி, நீளவாக்கில இரண்டு பக்கமும் தோலோடு மெலிதாக நறுக்கவும்.</li>
<li>அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து நன்கு சூடாக்கவும். பஜ்ஜிக்கு எண்ணெய் குறைவாகக் காய்ந்திருந்தால் சரியாக வேகாமல் எண்ணெயைக் குடித்து சவசவவென்றிருக்கும். அதிகம் காய்ந்திருந்தால் மேலாகக் கருகி, உள்ளே காய் வேகாமல் இருந்துவிடும். சரியான பதத்தில் எண்ணெய் சுட்டதும் அடுப்பை நிதானமான சூட்டில் வைக்கவும்.</li>
<li>நறுக்கித் தயாராக வைத்திருக்கும் காய்கறிகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து, எண்ணெயில் போடவும்.</li>
<li>இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரிந்து பஜ்ஜி உப்பிவந்ததும் எண்ணெயை வடித்து வெளியே எடுக்கவும். </li>
</ul>
<p><a href="http://www.flickr.com/photos/jsri/1435974127/" title="Photo Sharing"><img width="240" src="http://farm2.static.flickr.com/1154/1435974127_e95eae62ff_m.jpg" alt="bajji 2" height="233" /></a> </p>
<p>*  வெங்காயம், சௌசௌ போன்ற காய்கள் கொஞ்சம் இனிப்பாக இருப்பது பிடிக்கவில்லையென்றால் குடமிளகாயை வட்டமாக நறுக்கி, அதையும் அவைகளோடு சேர்த்து தோய்த்துப் போடலாம்.</p>
<p>* தோய்ந்திருக்கும் மாவு அடர்த்தியாக இல்லாமல், மெலிதாக மூடியிருந்தால் பாதி வேகும்போதே வெளியே எடுத்துவிடவும். அடுத்த தவணை பஜ்ஜியை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு, இவை ஆறியதும் மீண்டும் மாவில் தோய்த்து எண்ணெயில் நன்றாகப் பொரித்து எடுக்கவும். முக்கியமாக அப்பளம் போன்றவைகளுக்கு இந்தப் பிரச்சினை வரலாம்.</p>
<p>* வீட்டிலேயே பருப்புகளை ஊறவைத்து அரைப்பது மிகச் சிறந்த முறை. ஊறவைத்து செய்ய நேரமில்லை என்றால் கடலைப் பருப்பு, துவரம் பருப்பை வாணலியில் வறுத்து 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, மிக்சியில் நைசாக அரைத்து, அரிசி மாவு கலந்து செய்யலாம்.</p>
<p>* பின்வருகிற அளவுகளில் மொத்தமாக மிஷினிலும் அரைத்துவைத்துக் கொள்ளலாம். அவ்வப்போது தேவையான அளவு மாவை உப்பு பெருங்காயம் சேர்த்துக் கரைத்துச் செய்யலாம்.</p>
<p>1. கடலைப் பருப்பு - 3 கப், பச்சரிசி - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 12</p>
<p>2. பச்சரிசி 1 1/2 கப், துவரம் பருப்பு - 1 கப், கடலைப் பருப்பு - 1 கப், உளுத்தம் பருப்பு - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 12</p>
<p>* சட்டென பஜ்ஜி தயாரிக்க கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கரைத்தும் செய்யலாம். அதிகம் பேர் அப்படித் தான் செய்கிறார்கள்.</p>
<p>* பஜ்ஜி கரகரப்பாக இருக்க சமையல் சோடா சேர்ப்பதை விட இரண்டு டீஸ்பூன் டால்டா அல்லது 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃளோர் சேர்த்துக் கொள்ளலாம்.</p>
<p>* கரகரப்பாக இல்லாமல் மெத்தென்று இருக்க மைதா மாவு 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஆறிய பின்னும் சுவையாக இருக்கும்.</p>
<p>* இட்லி அல்லது தோசை மாவு இருந்தாலும் ஒரு கரண்டி கலந்து கொள்ளலாம்.</p>
<p>* பஜ்ஜி கடையில் செய்வதைப் போல் நிறமாக இருக்க விரும்புபவர்கள் கலர் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து உபயோகித்தாலும் அடர் சிவப்பாக இருக்கும். என்னுடையது அதுவே.</p>
<p><strong><em><font color="#0000ff">மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:</font></em></strong></p>
<p><a target="_blank" href="http://mykitchenpitch.wordpress.com/2007/01/08/thengaai-chutney/">தேங்காய்ச் சட்னி...</a></p>
<p>நல்ல மழை...</p>
<p>சுடச் சுட செய்து தட்டில் எடுத்து வந்து கையில் கொடுக்க அம்மா அல்லது மாமியார் [ஒருவேளை அவர்களைக் கேட்டால் மருமகள் என்று சொல்லலாம். :)]...</p>
<p>"போரடிக்குதுன்னு நீ சொன்னியேன்னு தான் வேலையை எல்லாம் போட்டுட்டு சீக்கிரமே வந்தேன்" என்று (பொய்) சொல்லிக் கொண்டு எதிர்பாராத நாளில் மாலையிலேயே கிரிக்கெட் மேட்ச் பார்க்க வரும் கணவன்...</p>
<p>பேசுவதற்கு சூடான விஷயங்கள்..</p>
<blockquote><p>"C6 block கட்டிடமே என்னமோ இடிஞ்சு விழுந்துடுச்சுன்றாங்க. காலனியே அங்க இருக்கு, நீ பஜ்ஜி போட்டுகிட்டிருக்க?"</p>
<p>"எதுக்கு இவ்ளோ அதிர்ச்சி? ரெண்டு வருஷமா அதைத் தானே நான் அலறிகிட்டிருக்கேன். கன்ஸ்ட்ரக்ஷன் படு கேவலம். எல்லாரும் சாப்பிட்டுட்டாங்கன்னு நான் சொல்லும்போதெல்லாம் ஆளாளுக்கு வானமாமலை ஜீயரைச் சுத்தி நிக்கிற அடிப்பொடிகள் மாதிரி உஸ் உஸ்னு என் வாயை அடைச்சாங்க. இன்னிக்கு என்னவோ நடக்க முடியாதது நடந்த மாதிரி.... எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. நல்லவேளை, யாருக்கும் ஒன்னும் ஆகலை, வீட்டுக்குள்ள இருந்திருக்காங்க. இதுக்கு மேல இதுக்கெல்லாம் என்னால ரியாக்ஷனும் காமிக்க முடியாது! நான் அங்க ஒன்னும் சொல்லாம வந்ததுக்கே எனக்கு நன்றி சொல்லுங்க. தேவை இல்லைன்னு தான் உங்களுக்கும் ஃபோன்ல சொல்லலை."</p>
<p>"நீ போய்ப் பாக்கலையா?"</p>
<p>"பின்ன பார்க்காம? ஃபர்ஸ்ட் ஃப்ளோர் வாசல் கதவுலேருந்து மாடிப்படி வரைக்கும் முழுக் காரிடரும் மொத்தமா விழுந்திருக்கு. லட்சக்கணக்குல காலனில திருட்டுப் போனப்ப ஒரு FIR ஃபைல் பண்ண என்ன பிகு செஞ்சாங்க போலீஸ் ஸ்டேஷன்ல, இப்ப ஊருக்கு முன்னாடி வந்து நிக்கறாங்க. நான் போறதுக்குள்ளயே Fire Brigades, Police, Media... எல்லாரும் வந்தாச்சு. ஒரு மாசத்துக்குள்ள காலி செய்யணுமாம். இல்லைன்னா சீல் வெப்போம்னு ஆர்டர்.."</p>
<p>"உனக்கு பயமா இல்லையா இந்த பில்டிங்ல இருக்க? கூலா பஜ்ஜி சாப்பிடற, அலட்டிக்காம கம்ப்யூட்டர்ல வேற வந்து உக்கார்ற?"</p>
<p>"இல்லையே சூடாத் தான் பஜ்ஜி சாப்பிடறேன். உங்களுக்கு பயமா இருந்தா ப்ளாட்ஃபார்ம்ல போய்ப் படுங்க. நானெல்லாம் தமிழச்சி. உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்..." ஐயோ!! மேற்குப் பதிப்பகம் கிட்டேயிருந்து பின்னூட்டம் வந்திருக்கா?? தலை சுத்துதே..!!!</p></blockquote>
<p><a target="_blank" href="http://mykitchenpitch.wordpress.com/2007/09/28/milagaai-bajji-inna-pira/">மிளகாய் பஜ்ஜி இன்னபிற....</a></p>
<p><a target="_blank" href="http://www.maraththadi.com/article.asp?id=1909">பஜ்ஜி குறித்த சுவாரசியமான கட்டுரைத் தொடர்...</a></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
