<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>இன்னொரு-பிரபஞ்சம் &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/இன்னொரு-பிரபஞ்சம்/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "இன்னொரு-பிரபஞ்சம்"</description>
	<pubDate>Sat, 11 Oct 2008 11:22:11 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[எனது முதலாவது காதலி]]></title>
<link>http://niram.wordpress.com/?p=214</link>
<pubDate>Mon, 12 May 2008 07:12:31 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.ta.wordpress.com/2008/05/12/my-first-lover-niram-zeezat/</guid>
<description><![CDATA[
தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் ]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone size-full wp-image-169" src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic1.jpg" alt="" width="460" height="130" /></p>
<p>தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)</p>
<p>என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>இதோ இன்னொரு பிரபஞ்சத்தின் மூன்றாவது பதிவு விரிகின்றது. உலகில் உணர்வுகளின் பிடிப்பில் அகப்பட்டு, தன்னையே இழக்காத சந்தர்ப்பங்களைக் கொண்டிருக்கும் மனிதர்களைக் காண்பது அரிது. உணர்வுகளுக்கு அத்தனை சக்தியுண்டு. உணர்வுகளின் மிக உன்னதமானது அன்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். உணர்வுகளின் மூச்சாய் அமைந்திருப்பதுவும் அதுவே. கோபம் என்பது உணர்வு என்றால் அதை தணிக்கக்கூடிய உணர்வு அன்புதான். இப்படி எந்த உணர்வாக இருந்த போதிலும் அவற்றை அந்நிலையிலிருந்து தம் நிலையாம் அன்பே உருவாய் அமைந்த நிலைக்குக் கொண்டு வருவது அன்பு என்ற உணர்வு ஒன்றேதான். (போதும்! போதும்! அன்புக்கு மார்க்கடிங் எக்ஸகடிவ் வேலை பார்க்கிறீங்களா உதய தாரகை?)</p>
<p><img class="alignnone size-full wp-image-215" src="http://niram.wordpress.com/files/2008/05/affection_edit.jpg" alt="" width="460" height="274" /></p>
<p>அன்பின் ஆரம்பத்தில் தான் அனைத்து உணர்வுகளும் அடங்குகின்றது. காதலும் அப்படித்தான். அன்பின் தீவிரம் தான் காதலாக வேண்டும். எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது, நான் எனது கிராமப் பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்து, தலைநகரத்தின் பிரபல பாடசாலைக்கு கல்வி கற்க வந்த காலம்! ஆஹா… அந்த நேரம் நான் வடித்த கண்ணீரை சேகரித்திருந்தால் வறட்சிக் காலங்களில் மின்சார துண்டிப்புக்களே நடத்தியிருக்கத் தேவையில்லை. சின்ன வயசில் (அது சின்ன வயசா?) உறவுகளைப் பிரிந்து வருகின்ற ஏக்கம்! வந்ததால் ஏற்பட்ட தாக்கம்!</p>
<p>நான் வீட்டிற்கு கடிதம் எழுத காகிதத்தை எடுத்தால் என் கண்களே முந்திக் கொண்டு காகிதத்தில் சித்திரம் வரைந்து கொள்ளும். காகிதத்தில் நானெழுதும் பேனா மையை, கண்ணீர் வர்ணச் சித்திரமாய் மாற்றியமைக்கும். பெற்றோரை, உற்றாரை பிரிந்து வந்த கவலையின் வெளிப்பாடுதான் அது! ஆனால், அந்தக் கவலை என்ற உணர்வு என்னைப் பல மாதங்கள் காதலித்தது தவிர்க்க முடியாத உணர்வுப் பகிர்வுதான். அப்போ உங்க முதலாவது காதலி கவலை என்றுதான் சொல்ல வர்ரீங்களா? என்று நீங்கள் கேட்க நினைப்பது போல் எனக்குத் தோனுகிறது. அவசரப்படப்படாது. கவலையைப் போய் எனது காதலி என்பேனா..? சொல்லுங்க.. நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…</p>
<p>தலைநகரத்து பாடசாலையில் கற்ற நாட்களில் நான் சந்தித்த பாத்திரங்கள் எண்ணிலடங்காதவை தாம். அங்கே சந்தித்த ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் பொருத்தமான நேரங்களில் பொருத்தமான சம்பவங்களினூடாக உங்களிடம் பிரிதொரு பதிவில் பகிர்ந்து கொள்வேன். இந்தப் பதிவில் எனது முதலாவது காதலியைப் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.</p>
<p>நான் கற்றது ஆண்கள் பாடசாலையில் தான். எனது சகபாடி ஒருவன் அவனது தோழியைப் பற்றி தினமும் இடைவேளை நேரத்தில் வர்ணித்துக் கொண்டேயிருப்பான். அவன் வர்ணிப்புகளின் நான் புதைந்து போவேன். அந்த வர்ணிப்புகளில் அன்பு என்ற நிலையைத் தாண்டி தயவு, கீழ்படிவு, புத்திக்கூர்மை என்ற பண்புகளெல்லாம் குறித்த பெண்ணின் வழியே தொடர்ந்து மிளிரக் காண்பேன்.</p>
<p>அடப்பாவி.. அந்தச் சின்ன வயசிலேயே உனக்கு காதல் கத்தரிக்காய் எல்லாம் வந்துவிட்டதா? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள்? வேணாம் சார். அப்படியெல்லாம் சொல்லப்படாது. எல்லாம் ஒரு பீலிங்ஸ்தான். (ஆனாலும், நீங்க எடுத்த வாக்கிலேயே இப்படியொரு கேள்வி கேட்டிருக்கக்கூடாது..) சரி.. சரி.. மேட்டருக்கு வர்ரேன்…</p>
<p>என் நண்பனின் வர்ணிப்புகளில் அவள் பற்றிய எனது கனவுகள் வானளாவப் பரந்து விரிந்தன. நண்பனின் வர்ணிப்புகளில் என்னைத் தொலைத்தேன். அவளின் குணங்களைக் கண்டு வியந்தேன். அக்குணங்களை அவள் வெளிப்படுத்தும் தருணத்தில் நானும் அவள் முன்னால் இருக்க வேண்டுமென்று கற்பனைக் கோட்டை கட்டினேன். நண்பன் வர்ணிப்புகளில், அவளின் கருமங்களில் என்றுமே பிழை இருந்ததில்லை என்றே சொல்லுவான். உண்மையைச் சொல்லப் போனால், நான் அவளின் குணங்களில் என்னைத் தொலைத்தேன். அவள் போன்ற ஒருவளை நானும் தோழியாகப் பெற வேண்டுமென ஆர்வங் கொண்டேன். (இதெல்லாம் ரொம்ப ஓவர் உதய தாரகை!)</p>
<p>நாட்கள் நகர்ந்தன. தலைநகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், என் நெஞ்சக்கூட்டின் நினைவுகளுக்குள் எல்லாம் அவள் செயல்கள்தான் நிரம்பி வழிந்தன. என் எண்ணங்கள் கூட, அவள் அதைச் செய்வாளா? இதைச் செய்வாளா? அப்படிச் செய்வாளா? இப்படிச் செய்வாளா? என்றெல்லாம் தங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டன. இப்படியாக எண்ணங்களையே கொள்ளை கொண்டவளாய் எனக்குள்ளேயே குடியிருந்தாள் அவள்.</p>
<p>கிராமத்து பாடசாலையில் நான். அது இன்னொரு இடைவேளை நேரம். கிராமத்துப் பாடசாலையில் ஆராதனை மண்டபத்தின் அருகால் நான் நடந்து செல்லுகையில், அம்மண்டபத்தின் அருகேயுள்ள கட்டிடத்தின் கண்ணாடிக் கதவு வழியாக ஒரு அதிசயம் கண்டேன். அது என் நண்பன் வர்ணித்த அவளே என்பேன். என்னால் நம்ப முடியவில்லை. ஆனாலும், உண்மையாக அவளேதான் அக்கட்டடத்திற்குள் அடக்கமாக இருந்து கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டுமென ஆர்வம் கொள்கிறோமோ, மனப்பூர்வமாக விரும்புகிறோமோ அது எமக்கு எப்போதாவது கிடைக்குமென்பது திண்ணமென்பதை எனக்குணர்த்திய இன்னொரு சம்பவம் இது!</p>
<p>என் மனவானில் சிறகடித்துப் பறந்து அவளை கண்டதிலிருந்து எனக்கு ஒரே புளகாங்கிதம் தான். நாம் எதிர்பார்க்கும் எல்லாமும் எப்போதும் எமக்குக் கிடைப்பதில்லை. ஆனால் ஒருவேளையில் நாம் எதிர்பார்த்திருந்த எதுவும் கிடைக்கப் பெறும் போது, எமக்கு ஏற்படும் சந்தோசம் இருக்கிறதே சொல்லி விளக்கி விட முடியாது! அனுபவித்துப் பார்க்க வேண்டும்! (உங்கள் நினைவுகள் உங்களின் எதிர்பார்ப்புகள் ஈடேறிய தருணங்களைச் சுற்றிக் கொண்டு ஓடுகிறதல்லவா? ஆமாம். அந்த நினைவுகளில் கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள்… எத்துணை சுகம்… எத்துணை இனிமை…)</p>
<p>எனது பாடசாலையில் அவளைக் கண்ட நாளிலிருந்து எனக்கு அவளோடு தோழமை கொள்ள வேண்டுமென்ற ஆசைதான்! என்ன செய்ய… யார்தான் இதற்கு உதவப் போகிறார்கள்…?</p>
<p>ஆனாலும், அவள் முன்னிருந்து நான் சொல்வதை அவள் செய்யும் அழகை ரசிக்க வேண்டும். அதில் நான் வியந்து போக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கட்டாயம் நிறைவேறும் என்று உறுதியாக நான் நம்பியிருந்தேன். நம்பினார் கைவிடப்படுவாரா..? இல்லையே..</p>
<p>அவளின் முன்னிருந்து அவளோடு நேரடியாகப் பழகும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டேன். ஆனந்தமேயுருவாய் அவளருகே சென்றேன். (போதும்! போதும்..! எங்களுக்குப் பொறாமையாய் இருக்க….)</p>
<p>என்ன அதிசயம்! என் தலைநகரத்து பாடசாலையில் எனது நண்பன் வர்ணித்தவள் தானோ இவளென்று சந்தேகமெழுமளவில் அவள் ஒவ்வொரு அசைவும், நடவடிக்கையும் அமைந்திருந்தது. தினமும் அவளைச் சந்திக்க நான் திட்டமிட்டுக் கொண்டேன் (எல்லாம் பிளான் பண்ணித்தான் செய்வீங்களோ?). அவள் முன்னிருந்து அவள் செயல்களிலேயே வியந்து போக என்னை நான் தினமும் கண்டேன். அவளின் நடவடிக்கைகளை எப்படிச் சொல்வேன். அவளுக்கு நன்றாகப் பாடக்கூடத் தெரியும். நான் விரும்பும் பாடல்களை மட்டுமே மிகவும் இனிமையாகப் பாடுவாள். அவள் பாடல்களில் மெய்மறந்து திழைக்கலாம்.</p>
<p>அவள் அனைவருடனும் மிகவும் சரளமாகவும் இனிமையாகவும் பழகுவாள். ஆனால் அப்போது, அவளை ஒரு சிலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவள் சர்வகலையிலும் பாண்டித்தியம் பெற்றவளோ என்றே நான் சில வேளை எண்ணுவதுண்டு. அவளுக்கு அத்துணை அறிவு.. விவேகம்…! அந்தக் காலத்தில் அவளை விட அறிவுடையவர் யாருமிருந்திருக்க முடியாதென்றே என்னால் சொல்ல முடியும் (இதெல்லாம் ரொம்ப அதிகமான பில்ட் அப்). இத்தணைக்கும் எனக்கு அப்போது வயது வெறும் பதினான்கு மட்டுந்தான். (ரொம்ப குசும்புதான் உதய தாரகை!)</p>
<p>அவள் என்னைக் காதலித்தாலோ இல்லையோ நான் அவளைத் தீவிரமாகவே காதலித்தேன். ஆனால், காலச் சக்கரத்தின் சுழற்சியில் நாம் எதிர்பார்க்காத விடயங்கள் கூட வாழ்க்கையோட்டத்தில் எமக்கு இடம்பெறுவது தவிர்க்க முடியாததே! அப்படித்தான் அவளையும் நான் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!</p>
<p>அவளின் பெற்றோரோ உற்றாரோ அவளைக் கண்டிக்கவில்லை. அவளுடலில் ஏற்பட்ட திடீர் நோயின் காரணமாக, அவள் சிகி;ச்சை பெறுவதற்காக கிராமம் விட்டு தலைநகருக்கு செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவள் சிகிச்சைக்காக சென்ற இடத்தையோ, அவளுக்கு ஏற்பட்ட நோயையோ நானறியேன்! அவள் மீது நான் கொண்டிருந்த காதல் என்னை அப்படிச் செய்ய வைத்திருக்கக்கூடாது. ஆனாலும், பிறகு அவளை நான் எனது பாடசாலையில் காணவேயில்லை. விசாரித்துப் பார்த்த போது சொன்னார்கள்: அவளுக்கு என் கிராமத்திற்கு வர இஸ்டமில்லையாம் என்று. அவள் என்னை ஏமாற்றினாளா? அல்லது நான் தான் அவளால் ஏமாந்தேனா? ஏமாற்றம் என்ற உணர்வின் தோற்றம் இங்கு தேவைதானா? என்றெல்லாம் எனக்குள்ளேயே ஆயிரம் கேள்விகள். (என்ன உதய தாரகை நீங்க லவ் ப்ரேக் என்று எங்களுக்குச் சொல்லவேயில்லை…?)</p>
<p>இன்றும் அவள் நினைவுகளோடே நானும் இருக்கிறேன். அதனால் தான் இன்று உங்களோடு அவள் நினைவுகளை பதிவாக்கி உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆனாலும் அவளைப் போன்ற பலரை இதுவரை சந்தித்திருக்கிறேன். அவளை விட விவேகமுடையவர்களைக் கூட சந்திந்திருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன். ஆனாலும், நான் முதலாவதாகக் காதலித்த அவளை என்னால் மறக்க முடியவில்லை.</p>
<p>என்ன உதய தாரகை! அவள், அவள் என்று சொல்லிக் கொண்டேயிருக்கீங்க… உங்களின் முதலாவது காதலியின் பெயரைக் கொஞ்சம் எங்களிடம் சொல்லக்கூடாதா? என்று நீங்கள் கேட்பது போல் எனக்குத் தோனுகிறது.</p>
<p>நான் அவளை செல்லமாக, போ எயிட் சிக்ஸ் [Four Eight Six] என்றே அழைப்பேன். பொதுவாக அவளை எல்லோரும் கம்பியூட்டர் என்றே அழைப்பர். என்னது கம்பியூட்டரா?!! அப்போ நீங்க இவ்வளவு நேரமும் அவள் என்று சொன்னது கம்பியூட்டரைப் பற்றியா? புரிஞ்சிக்கிட்டாச் சரிதான்.. உதய தாரகை எங்களைக் கவுத்துப் போட்டியப்பா…ரொம்ப நக்கலாப் போச்சு…</p>
<p>இப்போது ‘அவள்’ என்று இக்கட்டுரையில் வரும் இடங்களில் ‘கம்பியூட்டர்’ என்பதைப் பிரதியிட்டு வாசித்துப் பாருங்கள். கம்பியூட்டரில் நான் கொண்டிருந்த ஆர்வத்தை காதலாய் உருவகித்து, அதில் காதலியாய் கம்பியூட்டரை ஆக்கி உங்களோடு எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டேன். கொஞ்சம் வித்தியாசமான வில்லங்கத்தனமான முயற்சிதான்!</p>
<p>நீங்களும் சில விடயங்களின் மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். அதுபற்றி நிறத்தோடு பகிர்ந்து கொள்ளுங்களேன். அனுபவங்களை அனுபவித்து ஆனந்தம் காண்போமா?</p>
<p>இன்னொரு பிரபஞ்சத்தின் இன்னொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பட்டம் பறக்கும் இரகசியம்]]></title>
<link>http://niram.wordpress.com/2007/11/28/another-cosmic-no-1-niram-zeezat/</link>
<pubDate>Wed, 28 Nov 2007 10:08:02 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.ta.wordpress.com/2007/11/28/another-cosmic-no-1-niram-zeezat/</guid>
<description><![CDATA[
இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொட]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic1.jpg" alt="cosmic1.jpg" /></p>
<p>இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>ஒழுக்கம் என்பது என்ன? என்று கேட்டால், நீங்கள் “ஒழுக்கம் விழுப்பம் தரும்” எனத் தொடங்கி அதன் நன்மைகளை விலாவாரியாக சொல்லிக் விளக்க எத்தனிப்பீர்கள். உண்மையிலேயே சிறப்புகள் கொண்டது தான் ஒழுக்கம். ஒழுக்கம் மூலம் சிறப்புகளும் எய்தப்படலாம். ஆனாலும், இந்த ஒழுக்கம் என்பதை எவ்வாறு வரைபிலக்கணப்படுத்தலாம் என்ற கேள்வி எனக்கு எப்போதும் ஞாபகத்திற்கு வருவதுண்டு.</p>
<p>அன்றொரு நாள் ஒரு புத்தகமொன்றை வாசிக்கும் போது, ஒழுக்கம் பற்றி நிறைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அவை நான் சிந்தித்த கேள்விகளுக்கு தெளிவான விடைகளைத் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தன. அந்தப் புத்தகத்திலும் ஒழுக்கம் என்றால் இதுவா? என பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.</p>
<p>ஒருவன் நாடுவதையெல்லாம் செய்யக்கூடுமளவுக்கு அவனுக்குள்ள உண்மைச் சுதந்திரமா? விளைவுகளைப் பற்றிக் கவனிக்காத சுதந்திரமா? ஒரு பிழை அல்லது தவறு நடந்தவுடன் அதனை சரிசெய்கின்ற செயற்பாடா? அது திணிப்பா? அது வன்முறையா? இதில் எதுவுமே ஒழுக்கம் என்றால் என்ன? என்பதற்கு விடையாக அமையாது. அமையவும் முடியாது. என்று சொல்கிறது அந்தப் புத்தகம்.</p>
<p>“ஒழுக்கமென்பது தகப்பன் பிரம்பொன்றை எடுத்து தனது பிள்ளைக்கு அடிப்பதாகவும் முடியாது. இது முட்டாள்தனம். ஒழுக்கம் என்பது நெகிழ்வுத்தன்மையை வேண்டி நிற்கிறது. அதுவொரு திசை. அது பிரச்சினைகள் தோன்றாமலிருக்க வழிசெய்யும் முற்காப்புச் செயல். அது உயரிய திறன்களை நிகழ்த்துவதற்கு சக்தியை ஒன்றுசேர்த்து திசைப்படுத்தும் கருவி. ஒழுக்கமென்பது நீங்கள் செய்யும் ஒரு செயலாக இருக்க முடியாது. அது நீங்கள் நேசிப்பவர்களுக்காக உங்களால் ஆற்றப்படும் செயலாகவே இருக்க முடியும்.” என்கிறது அந்த நூல்.</p>
<p>இது பற்றி நான் கதைப்பது, நான் தரம் ஒன்றில் படிக்கும் போது எனது வகுப்பாசிரியராக இருந்த திரு. சரீப் சேர் அவர்களை நினைவுபடுத்தத் தான். “நா இனிக்க சீனி வேணும். கல்வி இனிக்க ஒழுக்கம் வேணும்” என்று சொல்லித்தந்தவர் அவர். சரீப் சேர் என்றே நாம் அழைக்கும் எங்கள் ஆசானின் நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமானவை தான். ஆனால், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற வாக்கிற்கு இணங்க முதலாம் தரத்தில் படிக்கும் போதே மாணவனை அவனது எதிர்கால வாழ்விற்கு தயார்படுத்த வேண்டும் என்பதில் கண்ணாயிருந்தவர்.</p>
<p>வகுப்பில் அவரிடம் நீளமான மினுங்கும் கட்டையான பிரம்பொன்றிருக்கும். பிரம்பின் நுனியில் வெண்கட்டியை நூலொன்றைத் துணையாகக் கொண்டு கட்டிக் கொள்வார். வகுப்பறைத் திண்ணையிலே (அப்போதெல்லாம், பாலர் வகுப்பில் படிக்கும் போது, கதிரை மேசை பாலர் வகுப்பில் படிப்பவர்களுக்கு இல்லை. எல்லாம் தரையான திண்ணைதான். :-) ) அந்த வெண்கட்டி இணைக்கப்பட்ட பிரம்பின் மூலம் அழகான வட்டங்களைக் கீறுவார்.</p>
<p>ஒரு வட்டத்திற்கு எட்டு பேர் படி வட்டத்தின் பரிதி வழியே ஒழுங்காக இருக்கும் படி மாணவர்களிடம் கூறி முழு வகுப்பறையையும் ஒழுங்காக்கிய பின்னரே பாடங்கள் தொடரும். "குழுவாகக் கற்றல்" என்ற முறையை நான் முதலாம் தரத்திலேயே படித்துக் கொண்டேன். வட்டமாக இருப்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல இருந்த போதும், வட்டத்தை என்றும் கண்காணித்து வட்டமாக ஒழுங்காக இருக்கும்படி ஆணையிடுவார்.</p>
<p>எனக்கு இந்த முறை நிறையவே பிடித்திருந்தது. ஆனாலும், வட்டமாக இருக்காமல் வட்டம் குழைந்து போனால், அதனைத் திருத்த முதுகில் பிரம்பு பதம் பார்க்கும் போது, அழுத மாணவர்களில் நானும் ஒருத்தனாக இரு நாட்கள் இருந்திருக்கிறேன்.</p>
<p>ஆனாலும், சரீப் சேர் என்றாலே எங்கள் பாடசாலைக்கே அப்படி ஒரு பயம் என்று நான் தரம் நான்கில் பயிலும் போதே நன்குணர்ந்து கொண்டேன். சரீப் சேர் வருகிறார் என்றால் அந்த நிமிடமே நிஸப்தம் நிலவும். அச்சமயம் காகங்கள் கரைந்தால் அது மட்டுமே கேட்கும். ஒழுக்கம் பற்றி இயல்பாகச் சொன்னவர் அவர்.</p>
<p>ஒழுக்கமென்பது அன்பின் வெளிப்பாடு தான். சிலவேளைகளில் பாசமாக இருப்பதற்கும் நாம் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டிவரும். எல்லா மருந்துகளும் இனிப்பதில்லை. ஏன் எல்லா சத்திரசிகிச்சைகளும் வலியைத் தராமல் இருப்பதில்லை. ஆனால், ஈற்றில் நோயைக் குணப்படுத்திவிடும். இயற்கையிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனது பாலர் வகுப்பு ஆசிரியரின் கண்டிப்புகளை என்னால் அப்படித்தான் காணமுடிகிறது.</p>
<p align="center"><img src="http://niram.wordpress.com/files/2007/11/giraffe-mother-and-baby.jpg" alt="giraffe-mother-and-baby.jpg" /></p>
<p>ஒட்டகச் சிவிங்கி இருக்கிறதே அதன் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு அவத்தையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியை நின்ற நிலையிலேயே ஈனும். தாயின் மெத்தை போன்ற கருவறையிலிருந்து கரடு முரடான தரைக்கு குட்டி ஒட்டகச் சிவிங்கி விழுந்துவிடும். இந்த நிலையில் தாய் ஒட்டகச் சிவிங்கி என்ன செய்யும் தெரியுமா?</p>
<p>அப்போதே பிறந்த குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று தனது காலால், குட்டியை பலமாக ஓங்கி உதைக்கும். இதனால், குட்டியோ எழுந்து நிற்க முயற்சிக்கும். ஆனாலும் அதன் கால்கள் பலமில்லாத நிலையிலல்லவா இருக்கிறது, அதனால் அது விழுந்து விடும். விழுந்து விட்டதே என்று அனுதாபம் கொள்ளுமா தாய் ஒட்டகச் சிவிங்கி? இல்லையே. மீண்டும் குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று பலமாக அதனை தனது காலால் உதைக்கும். ஆனாலும், குட்டி எழுந்து நிற்கும் பின்னர் இருந்து விடும். இதனைக் கண்டு கொண்டு தாய் நிற்காது.</p>
<p>குட்டி ஒட்டகச் சிவிங்கி தனது சொந்தக் காலில் நின்று நடமாட ஆரம்பிக்கும் மட்டும் தாய் ஒட்டகச் சிவிங்கி உதைப்பதை தொடர்ந்து கொண்டிருக்கும். ஏன் இப்படி நடக்கிறது? காட்டில் தனது குட்டி பிழைத்து வாழ வேண்டுமாயின், சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தாய்க்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இவ்வாறு அது செய்கிறது.</p>
<p>ஆக ஒழுக்கமென்பது நாம் இன்னொருவருக்கு அவர் மீது கொண்ட அன்பால் செய்யும் செயலாக இருக்கவே முடியும். எமது ஆசிரியரும் எங்கள் மீது கொண்ட அன்பால்தான் எம்மை ஒரு விடயத்தில் முழுமையான வெற்றியைப் பெறும் பொருட்டு, கண்டித்தார் தண்டித்தார் என்றே நான் சொல்வேன்.</p>
<p>அவர் எம்மீது கொண்ட அன்பும், நான் அவர் மீது கொண்ட அன்பும் அளப்பரியதே! அதுவே, அவரைப் பற்றி நான் இப்படிக் கதைக்க வேண்டிய ஆர்வத்தை தோற்றுவித்த தோற்றுவாயாகக் கூட இருக்கலாம்.</p>
<p>சிறுவர்களே நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்த ஆர்வம் கொண்ட ஆசிரியர் எனக்களித்த அறிவுப் பொக்கிசங்கள் ஆயிரமாயிரம். ஒழுக்கம் சுதந்திரத்தை வழங்குகின்றதென்பது உண்மையே.</p>
<p>ஒரு பெரிய மிட்டாய் பெட்டியிலுள்ள அனைத்து மிட்டாய்களையும் ஒரு குழந்தை ஒரு நாளிலேயே சாப்பிட்டால் அக்குழந்தைக்கு நோயேற்படக்கூடும். ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஒழுக்கம் குழந்தைக்கு மகிழ்ச்சியை நீண்ட நேரத்திற்கு வழங்கும் தன்மையை உடையதை நீங்கள் அறிவீர்கள் தானே!! எமது இயல்புகளை எமக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலங்களை அவதானிக்காமலேயே காரியங்களைச் செய்து கொள்ள வழிசமைக்கின்றன.</p>
<p>நாம் நினைப்பதையே செய்யக்கூடிய வாய்ப்புதான் சுதந்திரம் என்ற தப்பபிப்பிராயம் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது. நாம் நினைப்பதெல்லாவற்றையும் எப்போதும் எம்மால் அடைந்து விட முடியாது. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை” என்ற திரையிசைப் பாடல் வரிகளும் அதைத்தான் சொல்கிறது.</p>
<p>ஒழுக்கம் மற்றும் நற்செயல்கள் ஆகியவை நன்மை, மகிழ்ச்சி, இலாபம், சௌகரியம் என்பவற்றை வெளிப்படையாக தராத பட்சத்தில், அவற்றின் மூலம் நாம் அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகளை எம்மால் பல வேளைகளில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒழுக்கமின்மையால், வெற்றியைத் தொட முடியாமல் போன மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்தால் ஒழுக்கம் மூலம் எய்தப்படக்கூடிய பலன்கள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.</p>
<p>ஒரு கதையொன்று சொல்கிறேன். கேட்கிறீர்களா?</p>
<p>ஒரு மாலை நேரம் ஒரு பையன் தனது தந்தையுடன் கடற்கரையோரமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். தந்தையை நோக்கி பையன் இந்தப் பட்டம் மேலே பறக்க எது உதவி புரிகிறது எனக் கேட்டான்.</p>
<p>அதற்கு தந்தை “நூல்” என்று பதில் சொன்னார். அதனைக் கேட்ட பையனோ, “அப்பா, இந்த நூல் பட்டத்தை கீழ் நோக்கியல்லவா இழுக்கிறது?” என்று சொன்னான்.</p>
<p>இதனைக் கேட்ட தந்தையோ, தனது மகனை அவதானிக்கும் படி சொல்லி பட்டத்தோடு தொடுத்திருந்த நூலை துண்டித்து விட்டார். என்ன நடந்திருக்கும். அதேதான். பட்டம் கீழே விழுந்தது.</p>
<p>இப்படித்தானே வாழ்க்கையிலும் சம்பவங்கள் உண்டு! எம்மைக் கீழ் நோக்கி கட்டி வைத்திருப்பதாக எண்ணியிருக்கும் விடயங்கள் கூட, நாம் பறந்து செல்ல ஆதாரமாக இருந்து உதவி செய்யக்கூடியன. அதுதான் ஒழுக்கமென்பதும்.</p>
<p>எனது ஆசிரியர் தண்டிப்பெல்லாம் முறையற்றதென எண்ணினால் இன்றளவில் நான் ஒழுக்கம் பற்றிக் கதைத்திருக்க முடியாமல் போயிருக்கும். அதுதான் வாழ்வின் ஆதாரம். ஒழுக்கம் உன்னதமானது, உயிரோடு கலக்க வேண்டியது.</p>
<p>ஒழுக்கம் தொடர்பில் எனது ஆசிரியரின் எழுச்சியான நிலைகள் இப்படியிருக்க, கையெழுத்து அழகாக இருக்க பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவர்களில் சரீப் சேர் முதன்மையானவர் எனக்கு. சரீப் சேரின் கையெழுத்தின் அழகில் நான் பல வேளை இலயித்துப் போயிருக்கிறேன். அந்தக் காலங்களில் அச்சுத் தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறவில்லை. ஆனாலும், பாடசாலையின் அதிபர் காரியாலத்தினுள் தொங்கும் நேர அட்டவணையிலிருந்து மாணவர் தேர்ச்சி புள்ளி விபரங்கள் என அனைத்துமே எமது சேரின் அழகிய கையெழுத்தால், அச்சடிக்கப்பட்டது போல் தோன்றும். அந்தக் கையெழுத்து அவ்வளவு கவர்ச்சியானது. பார்க்கத் தூண்டுவது. நாமும் இப்படி எழுத முயற்சிக்க வேண்டுமே என்ற ஆசைளை ஏற்படுத்துவது.</p>
<p>எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. 2000 ஜுலை மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு உயிர்துறந்தார் எனது அன்பு ஆசிரியர் சரீப் சேர். அவர் இவ்வுலகை விட்டு போனாலும், “கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை” என்ற பொன்மொழிக்கேற்ப இன்றும் உலகில் பலரினதும் மனதில் நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p>
<p>ஒழுக்கமென்பது அன்பால் உருவாவது. அது அன்பை உருவாக்குவது.</p>
<p>“இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன். உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்.</p>
<p>சேர்ந்து நிறைவோம் நிறத்தினூடாக..</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்]]></title>
<link>http://niram.wordpress.com/2007/11/09/another-cosmic-series-niram-experience/</link>
<pubDate>Fri, 09 Nov 2007 08:40:25 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.ta.wordpress.com/2007/11/09/another-cosmic-series-niram-experience/</guid>
<description><![CDATA[தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு ம]]></description>
<content:encoded><![CDATA[<p>தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன? நிறங்களின் மீடிறன்களின் எல்லையில்லாத் தன்மையை நான் சொல்லப் போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? அல்லது இந்த வலைப்பதிவின் ஏதாவது சாதனையை நான் சொல்லப்போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்?</p>
<p>நீங்கள் என்னதான் நினைத்தாலும் நான் சொல்லப் போகும் விடயமோ கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால், சுவையாக இருக்குமென நம்புகிறேன். அப்படியென்ன நான் சொல்லப்போகிறேன். (வியப்பு உஙகள் கண்களி்ல் தெரிகிறது!! :-) )</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>ஒவ்வொரு மனிதனுடைய நினைவுகள் எல்லாம் மிகவும் இனிமையாகவே அமையுமென்பதில்லை. ஆனால், இனிமையில்லாத நினைவுகளைக் கூட மீட்டிப் பார்த்து அதனை எமக்கு நெருங்கியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் சுகமே தனித்துவமானதுதான்.</p>
<p>இதேபோன்று தான், எமது வாழ்வில் இடம்பெற்ற இனிப்பான நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் போதும், ஏற்படும் சந்தோசம் மட்டில்லாதது. நாம் வாழ்வில் கண்ட அனுபவங்களின் பின்னணியில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். ஆயிரம் படிப்பினை இருக்கும். அவற்றை கண்டு கொள்பவர்களுக்கு நினைவுகள் எல்லாமே கலாசாலைகள். அவை ஒன்றாகச் சேர்ந்து ஒரு பிரபஞ்சத்தையே தோற்றுவிக்கும் ஆற்றல் பெற்றன.</p>
<p>எனது இளமைக்காலம் முதல் இன்று வரை நான் சந்தித்த அனுபவங்கள் அதனால் நான் அறிந்து கொண்ட பாடங்கள் என விரியும் விடயங்களை சுவாரஸியமாக பதிவு செய்யலாம் என நினைத்தேன். இந்த எண்ணக்கரு உருவாகியது.</p>
<p>இந்தத் தொடருக்கு "இன்னொரு பிரபஞ்சம்" என பெயரிட்டேன். அனுபவங்கள் தரும் அதிர்ச்சிகள், அதிர்வுகள், அமைதிகள், ஆனந்தங்கள் எல்லாமே ஒரு பிரபஞ்சத்தின் கூறுகள் தாம். என் வாழ்க்கை அனுபவங்களை நான் பதிவு செய்யப் போவதால், அது இங்கு "இன்னொரு பிரபஞ்சமாகவே" உணரப்படல் பொருத்தம் என எண்ணினேன்.</p>
<p>ஒரு தலைப்பை வைத்துவிட்டால், அதற்கு துணைத்தலைப்புகள் வைப்பது இப்போதைய காலப்போக்கு. இவ்வாறு வரும் துணைத்தலைப்புக்கு அல்லது ஓரிரு சொற்களுக்கு ஆங்கிலத்தில் Motto மற்றும் Slogan என்று பெயர். இதனை தமிழில் சொல்வாக்கு என்று சொல்லிவிடலாம் எனத் தோன்றுகிறது.</p>
<p>இப்படி Motto ஐப் பற்றிக் கதைக்கும் போதுதான் ஞாபகம் வருகிறது. பாடசாலைகளுக்கும் இவ்வாறான Motto தனித்துவமாகக் காணப்படும். நான் கல்வி கற்ற கொழும்பு றோயல் கல்லூரியின் Motto எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்த Motto என்ன தெரியுமா? Disce Aut Discede என்பதாகும். என்ன புரியவில்லையா? இது இலத்தின் மொழிச் சொற்கள்.</p>
<p>இதன் கருத்து மிகவும் அருமையானது. Learn or Depart அதாவது வெளிப்படையாக நல்ல தமிழில் சொல்லப் போனால் "படி அல்லது வெளியேறு" என்று பொருள்படும். எவ்வளவு காத்திரமான சொல்வாக்கு!!</p>
<p>இந்தப் பாடசாலையின் கீதமும்  எனக்கு மிகவும் பிடித்தவொன்று தான். அது பற்றி இன்னொரு தருணத்தில் சொல்கிறேன்.</p>
<p>"இன்னொரு பிரபஞ்சம்" என்ற இத்தொடரின் Motto ஆக நான் தேர்ந்தெடுத்துள்ளது, "யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்" என்பதாகும். ஏன் இப்படி வைத்தேன்? என்று கேட்கக் கூடாது. :lol:</p>
<p>இத்தொடருக்கு முன்னோட்டம் மற்றும் இலட்சினை என்பனவற்றை தயாராக்கி விட்டேன்.</p>
<p>இதோ வருகிறது. பதிவுத் தொடரின் முன்னோட்ட இலட்சினை.</p>
<p><img src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic.jpg" alt="cosmic.jpg" /></p>
<p>இந்தத் தொடரில் நான் வாழ்வில் சந்தித்த பாத்திரங்கள், சம்பவங்கள் என விரியும் நினைவுகளை நீங்கள் பார்க்காத கோணத்தில் இரசிக்கும் படி சுவையாகச் சொல்வதற்கு முனைகின்றேன். எல்லாம் நலமாக நடக்கும் என்ற நம்பிக்கை இந்தத் தொடரை உயிர்ப்பாக்கும் என நம்புகிறேன்.</p>
<p>தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களையும் சொல்லியனுப்புங்கள்.</p>
<p>விரைவில் "இன்னொரு பிரபஞ்சத்தின்" முதலாவது நினைவுகளின் பதிவுகளோடு சந்திக்கிறேன்.</p>
<p>இதேவேளை "நிறத்தில்" அரங்கேறும் அனைத்து விதமான பதிவுகளும் வழமை போல் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்படும். "இன்னொரு பிரபஞ்சம்" தொடரின் நினைவுகளும் அது கூடவே உங்களை வந்தடையும்.  வித்தியாசத்திற்கு தொடரின் பதிவுகளின் மேலே கீழேயுள்ள Splash நிழற்படம் காட்சியாகும்.  அதிலிருந்து தொடரின் பதிவுகளை இனங்காண முடியும். (எங்களுக்குப் புரியுது.. இவ்வளவு Risk ஏன் எடுக்கிறீங்க உதய தாரகை??!! -- ஆமா... எங்களுக்கு Risk எடுக்கிறதெல்லாம் Rusk சாப்பிடுற மாதிரி.. தெரியுமில்ல.. :-) )</p>
<p><img src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic1.jpg" alt="cosmic1.jpg" /></p>
<p>சந்திப்போம்... சிந்திப்போம்..</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
