<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>ஆறு &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/ஆறு/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "ஆறு"</description>
	<pubDate>Tue, 14 Oct 2008 07:12:06 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[ஆறு]]></title>
<link>http://sanmargam.wordpress.com/?p=22</link>
<pubDate>Sat, 09 Aug 2008 15:55:29 +0000</pubDate>
<dc:creator>magudadheeban</dc:creator>
<guid>http://sanmargam.ta.wordpress.com/2008/08/09/%e0%ae%86%e0%ae%b1%e0%af%81/</guid>
<description><![CDATA[ஆறு

ஒவ்வொருவர்க்கும் ஒரு பார்வை இரு]]></description>
<content:encoded><![CDATA[<p><strong>ஆறு</p>
<p><img class="linked-image" src="http://i275.photobucket.com/albums/jj293/magudadheeban/nalvar.gif" border="0" alt="" /></p>
<p></strong>ஒவ்வொருவர்க்கும் ஒரு பார்வை இருக்கும்.<br />
ஒவ்வொரு கலர்க் கண்ணாடி் இருக்கும்.<br />
அதன் வழியேதான் அவர்கள் பார்ப்பார்கள்.<br />
மற்றதெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.</p>
<p>எங்கள் அலுவலகத்திற்குச் செல்பேசி இயந்திரங்கள்<br />
லாரியிலே வந்தன.</p>
<p>வந்த லாரிக்காரனுக்கு் முகவரி தெரியவில்லை.<br />
உள்ளூர் லோடுமேன் ஒருவனிடம் கொடுத்து<br />
என்னிடம் முகவரி கேட்டான்.</p>
<p>நானும் ஒரு ஐந்து நிமிடம் அவனிடம் பேசி அந்தத்<br />
தளவாடச் சாமான்களை<br />
எங்கே இறக்க வேணும் என்று<br />
அடையாளம் எல்லாம் காட்டிச் சொல்லிப் பார்த்தேன்<br />
அவனுக்கு விளங்கவே இல்லை. . .<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->உனக்கு ஜேஸ்மின் கிளினிக் தெரியுமா,<br />
அதை ஒட்டிய தெரு ?<!--colorc--></span></p>
<p><!--/colorc--></p>
<p>அவனுக்குத் தெரியவில்லை.<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->மவுன குரு மடாலயம் தெரியுமா,<br />
அதற்கு எதிர்த்த தெரு ?<!--colorc--></span></p>
<p><!--/colorc--></p>
<p>அதுவும் அவனுக்கு விளங்கவில்லை.<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->பத்திர ஆபீஸ் இருக்குமே அந்தத் தெரு ?<!--colorc--></span></p>
<p><!--/colorc--></p>
<p>அவன் குழம்பினான்.</p>
<p>கடைசியிலே ஒரு ஐடியா வந்தது.<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->அரசன் ஒயின்ஸ் கடைக்கு எதிர்த் தெரு.<!--colorc--></span></p>
<p><!--/colorc--></p>
<p>பளிச்செனப் புரிந்து கொண்டான் அவன்.</p>
<p>மனிதர்களிலே பல வகை, பல தரம்<br />
எல்லோர் அறிவும் ஒன்று போல் இல்லை.<br />
அவன் அறிவு எந்த அளவுக்கு இருக்கிறதோ<br />
அந்த அளவுக்கு நாம் கீழே இறங்கிச் சொல்ல வேண்டி இருக்கிறது.</p>
<p>சைவத்தையும், சன்மார்க்கத்தையும் பேசி<br />
விளங்க வைக்க முடியாததை<br />
பாண்டி முனியின் பேர் சொல்லிச்<br />
சிலருக்குப் புரிய வைத்து விட முடிகிறது.</p>
<p>அது அவர் அவர்கள் தராதரம்.</p>
<p>இந்து சமயம் சைவத்தைத் தன்னோடு<br />
அரவணைத்துக் கொண்டு ஒன்றெனச் சொன்ன போதும்<br />
சன்மார்க்கம் மட்டும் கொஞ்சம்<br />
தனித்தே காணப் படுகிறது.</p>
<p>எல்லோர்க்கும் இங்கே ஒரே மருந்து இல்லை.<br />
அனைவர்க்கும் இருப்பது ஒரே நோயும் இல்லை.</p>
<p>ஒருவரது மருந்து இன்னொருவருக்கு ஒவ்வ மறுக்கிறது.<br />
இன்னொருத்தருக்கு விஷமாய்ப் போய் விடுகிறது.</p>
<p>இந்து மதம் மனிதரின் எல்லாத் தரங்களுக்கும்<br />
ஒவ்வொரு நெறிமுறையை,<br />
வழிபாட்டு முறையை<br />
வகுத்துத் தந்திருக்கிறது.</p>
<p>ஆடு, கிடா பலி தரும் போது<br />
சில சன்மார்க்கிகள்<br />
பலி இடுபவர்களின் காலிலே கூட<br />
விழுந்து,<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->' வேண்டாம் வேண்டாம், உயிர்க்கொலை . . .!'<!--colorc--></span></p>
<p><!--/colorc--><br />
என மன்றாடுவதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.</p>
<p>இது தேவையற்றது.<br />
சன்மார்க்கிகள் தங்கள் பிரசங்கங்களை<br />
தங்கள் சங்கங்களிலே வைத்துக் கொண்டால் போதும்.<br />
கருத்து தகுதியானவரைச் சென்றடையும்.</p>
<p>அதை விடுத்துக் கொல்லதே - என மன்றாடினால்<br />
பலிதரும் பூசாரி ஆத்தா சொன்னாள் என்று<br />
பட்டாக்கத்தியை உங்கள் பக்கம் திருப்ப எவ்வளவு நேரம் ஆகும்.?</p>
<p>அப்பவும் கூட, நீங்கள் தான்சன் மார்க்கிகள் ஆச்சே,<br />
அருள் தயவு என்றுதான் உச்சரிப்பீர்கள் தவிர<br />
எதிர்க்கவும் மாட்டீர்கள்<br />
ஓடவும் மாட்டீர்கள்.</p>
<p>அது அவர்கள் நெறி, அவர்கள் கோட்பாடு<br />
அதில் குறுக்கிட நாம் யார் ?</p>
<p>உயிர் கொலை மறுத்தல்<br />
புலை கொலை தவிர்த்தல் எல்லாம்<br />
தானாக உணர்ந்து வர வேண்டியது,<br />
இதை எல்லாம் கெஞ்சிச் செய்யவைக்க முடியாது.</p>
<p>அது அவர்கள் நிலை.<br />
அதற்கென்றே இந்து நெறி<br />
மாடன், காடன், கருப்புசாமி முதலிய தெய்வங்களை<br />
நியமித்திருக்கிறது.</p>
<p>என்றாவது ஓர் பிறவியில் அவர்கள் நெறிமாறி<br />
அன்பு வழி வருவர்,<br />
அது வரை என்ன அப்படி அவசரம் ?<br />
இதெல்லாம் பரிணாம்ப் படி வர காலங்கள் ஆகும்.<br />
திடுதிப் என்று மாற இது ஒன்றும் REVOLUTION இல்லை, EVOLUTION !</p>
<p>சைவ நெறி எப்பவும்<br />
தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டு வந்திருக்கிறது<br />
இற்றைக்குச் சைவ சமயம் என்று சொல்லிக் கொள்ளும்<br />
பெரும்பாலோர் அசைவர்கள்.</p>
<p><img class="linked-image" src="http://i275.photobucket.com/albums/jj293/magudadheeban/thevaram.gif" border="0" alt="" /></p>
<p>சைவ நெறி - பெயரிலேயே சைவம் இருக்கிறது.<br />
அது என்றைக்குமே புலை கொலையை ஏற்றதில்லை.<br />
சைவ நெறியாளர்கள் எனச் சொல்லிக் கொண்டு<br />
நெற்றில் முப்பட்டை அணிந்து கொண்டு<br />
நடத்தரையனை வழிபட்டேன்<br />
என்றால் அது விரயம்.</p>
<p>சிவனைத் தொழும் ஒரே காரணத்தால்<br />
அவர்கள் சைவர்கள் ஆகி விட முடியாது.<br />
புரிய வில்லையா,<br />
இது கொஞ்சம் விவேக் காமெடி மாதிரி. .<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->எனக்கு எஸ்.பி.யைத் தெரியும் . . ஆனா<br />
அவருக்கு என்னைத் தெரியாது<!--colorc--></span></p>
<p><!--/colorc--><br />
என்பது போல..</p>
<p>அனைத்து அக்கிரமமும பண்ணிவிட்டு<br />
அப்பா அரசே ! எனத்<br />
தொழுவதாற் பயனில்லை.<br />
தொழும் குரலும் அவனைச் சென்றடையாது.</p>
<p>நிறையப் பேர் இப்படித்தான் மயங்குகிறார்கள்.<br />
குரல் கொடுத்துவிட்ட நிம்மதி அவர்களுக்கு.</p>
<p>அது சென்றடைந்ததா என்று தெரியாது.</p>
<p>எல்லோர் மனத்தையும் புண்படுத்துவார்கள்.<br />
சீண்டி வேடிக்கை பார்ப்பார்கள்.<br />
பொறாமைப் படுவார்கள்.<br />
வாய் திறந்தால் வஞ்சகம் பிரவாகமாகப் பாயும்<br />
ஆனால் ஆலயம் செல்வார்க்ள, வணங்குவார்கள்.</p>
<p>ஆண்டவன் அருள் எங்கிருந்து கிட்டும்.?<br />
அவர்கள் குரல் கேடடாற் போதும்,<br />
காதிலே பஞ்சை வைத்து அடைத்துக் கொள்வான் இறைவன்</p>
<p>சைவர்களின் நிலை இப்படி என்றால்,<br />
சன்மார்க்கிகளும் அதே மாதிரிதான்.</p>
<p>சன்மார்க்கம் என்றால் விளங்கிக் கொள்ளாமலே<br />
சன்மார்க்கம் பேசுவார்கள்.<br />
சன்மார்க்கி என்றால் சாவை வென்றவன்.<br />
இறவாப் பெரு நெறியாளன்.<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும்<br />
தேவா நின் பேர்அருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்<br />
யாவர் உளர் சற்றே அறை !<!--colorc--></span></p>
<p><!--/colorc--></p>
<p>-என்று வள்ளல் பிரான் பாடுவதைப் பாருங்கள்.</p>
<p>அவர் காலத்திலேயே சாவை வென்ற மனிதன்<br />
அவரைத் தவிர யாரும் இருக்கவில்லையாம்.</p>
<p>இராமலிங்க வள்ளல் காலத்தில் அவரே சன்மார்க்கி.<br />
இந்தக் காலத்தில் எவன் இறப்பறுத்து இருக்கிறானோ அவனே சன்மார்க்கி.</p>
<p>யாரேனும் சன்மார்க்கி இருந்தால் சொல்லுங்கள்<br />
நானும் தெரிந்து கொள்கிறேன்.</p>
<p>சன்மார்க்கக் கொள்கைகள் ஒருசிலவற்றைப் பின்பற்றுவதால் மட்டுமே<br />
யாரும் சன்மார்க்கி ஆகி விட முடியாது.</p>
<p>புலை தவிர்த்து, வெள்ளையாடை தரித்துவிட்டால்<br />
சன் மார்க்கி ஆகி விட முடியுமா ?</p>
<p>எங்கள் பக்கத்து வீட்டுக் கொல்லையிலே<br />
அம்மா என்றழைக்குது ஒரு வெள்ளை நிறப் பசு,<br />
அது சன்மார்க்கியா?</p>
<p>சன்மார்க்கம் என்பது அருள் தயவால்<br />
மனித உயிர் மட்டும் அல்ல,<br />
எவ்வுயிரையும் ஒருமையாய் உன்னி உவப்பது . .</p>
<p>அப்படி உன்னும் போது எம்பெருமான்<br />
எங்கிருத்தாலும் சரி,<br />
கோகழி ஆண்டாலும் சரி,<br />
பொன்னம்பலத்தே நடனம் செய்தாலும் சரி,<br />
எல்லாவற்றையும் பாதியிலேயே போட்டது போட்டபடி விட்டுவிட்டு<br />
உங்கள் உள்ளத்தில் பேரொளிப் பிழம்பாக்க்<br />
குடி இருக்க ஓடோடி வரக் காத்திருக்கிறார்.</p>
<p>அப்படி அவர் உள்ளம் புகுந்தால் பிறப்பும் அறும்<br />
அத்தோடு இறப்பும் அறும்<br />
உடல் ஒளி வண்ணமாய் பொலியும்.<br />
இதுதான் சாவாக் கலை நெறி 1<br />
இதுதான் சன்மார்க்கம் !</p>
<p>இப்போது சொல்லுங்கள் உலகில் எங்கே எந்த சன்மார்க்கி<br />
இருக்கிறான் என்று ?</p>
<p>நாம் எல்லாம் எந்த நெறி ஆயினும் ஆகட்டும்<br />
எந்த மதம் ஆயினும் ஆகட்டும்<br />
அவர் அவர் தரத்திற்கு ஏற்ப<br />
அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம், அவ்வளவே.</p>
<p>தரம் என்று இங்கே நான் சொல்லுவது இதுதான்.<br />
பாண்டி முனிக்கு பலி தருபவன் LKG CLASS<br />
அய்யப்பன் கோவிருக்குப் போம்போது மட்டும்<br />
அசைவம் தவிர்ப்பவன் UKG CLASS</p>
<p>நெஞ்செல்லாம் வஞ்சகமும் சூதும்<br />
ஆனால் சுத்த சைவம்.<br />
முட்டை மட்டும் சாப்பிடலாமாம்,<br />
ஆரோ ஒரு ஆச்சாரியார் சொன்னாராம்<br />
இவர்கள் எல்லாம் PRIMARY SCHOOL.</p>
<p>இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்,<br />
யார் ஹை ஸ்கூல், யார் யார் காலேஜ படிப்பு படிக்கிறார்கள்<br />
என்று உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.</p>
<p>சன் மார்க்கி மட்டும் P.Hd.,</p>
<p>நீங்க்ள எந்தத் தரத்தில் இருந்தாலும் சரி<br />
நமது இந்து மதம் எல்லாநிலைக்கும் இடம் கொடுத்திருக்கிறது<br />
ஆனால் ஒன்று மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்<br />
அடுத்த நிலைக்கு வரப் பாருங்கள்,</p>
<p>முடியவே முடியாது பெயிலாகிப் பெயிலாகி<br />
அதிலேயேதான் கிடப்பேன் என அழும்பு பண்ணினால்<br />
அது உங்கள் இஷ்டம் !<br />
<!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->காட்டுவழி தன்னில் ஒரு கூட்டம் போச்சு<br />
கார் இருளில் ஓர்உருவம் தெரியலாச்சு<br />
கூட்டத்தில் ரவுடி அதை முரடன் என்றான்<br />
குடித்தவனோ இல்லை அது மொந்தை என்றான்<br />
வாட்டமுடன் வாலிபனோ தலைவி என்றான்<br />
வரிமழலைக் குழந்தைகளோ பேய்பேய் என்றார்<br />
போட்டியிலே பொழுதெல்லாம் விடிஞ்சு போச்சு<br />
புளிய மரத் தூர் என்றே புரியலாச்சு !<!--colorc--></span></p>
<p><!--/colorc--><br />
பொருள் ஒன்று . .!<br />
ஆனால் ஒவ்வொருத்தருக்கும்<br />
அவர் அவர் வளர்ச்சிக்கும், நிலைக்கும் தக்கபடி<br />
எப்படி எப்படி மாறி மாறித் தோற்றம் அளிக்கிறது பாருங்கள் !</p>
<p>அதே மாதிரிதான் இப்போது ஒரு கேள்வி . .</p>
<p><!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->பன்னிரண்டு என்ற எண்ணின் சிறப்பு என்ன ?<!--colorc--></span><!--/colorc--></p>
<p>ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள்.</p>
<p>ஜோசியனைக் கேட்டால் பன்னிரண்டு இராசிகள் என்பான்<br />
தீர்த்தமாடுபவனோ, அதுவா மாமாங்கம் என்பான்<br />
முருக பக்தனோ கந்தப் பெருமானின் திருக் கரங்கள் என்பான்.<br />
மாணவன் சொல்வான் பன்னிரண்டு அங்குலம் ஒரு அடி.<br />
நீங்களும் ஏதாவது சொல்ல முயல்லாம்.</p>
<p>ஆனால் சைவர்கள் இருக்கிறார்களே,<br />
அவர்களிடம் கேட்டால் உடனே சொல்வார்கள்<br />
பன்னிரு திரு முறைகள் என . .</p>
<p>எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை,<br />
இந்தச் சைவர்கள் விடாப் பிடிவாதக் காரர்கள்<br />
வளர்ச்சி என்ற ஒன்று கிடையவே கிடையாது என வாதிப்பவர்கள்.</p>
<p>தெரியாமல்தான் கேட்கிறேன்,<br />
இந்த நம்பியாண்டார் நம்பி அவர் காலத்திலேயே<br />
சைவத்திருமுறைகளை வரன் முறைப் படுத்தித்<br />
தொகுத்தாலும் தொகுத்தார்,<br />
பன்னிரு திருமுறைகள் என . . .</p>
<p>கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்,<br />
இந்தச் சைவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்கள் !</p>
<p>என் கேள்வி எல்லாம் இதுதான் . .!<br />
ஏன், நம்பி யாண்டார் நம்பிக்கு அப்புறம் யாரும்<br />
சிவனடியார்களே பிறக்கவில்லையா ?<br />
பிறந்து எதுவுமே பாட வில்லையா ?</p>
<p>அருட் பனுவல்கள் எதுவுமே இந்த ஒரு ஆயிரம் வருஷகாலமாக<br />
உதயமாகவே இல்லையா ?</p>
<p>அவர் தொகுத்தால் தொகுத்ததுதானா?<br />
அப்புறம் சைவ சமய இலக்கியம் ஏன் வளரவே இல்லையா ?<br />
பன்னிரு திருமுறை ஏன் பதிமூன்று ஆகக் கூடாது ?<br />
இதென்ன வறட்டுப் பிடிவாதம் ?</p>
<p>இதே போல்தான் நாயன் மார்கள் எண்ணிக்கையும் !</p>
<p>பெரிய புராணத்திலே சேக்கிழார் வகைப் படுத்தி விட்டார் என்ற<br />
ஒரே காரணத்துக்காக வெறும் 63 மட்டுமே என<br />
நிறுத்திக் கொள்வது அபத்தம் !</p>
<p>அல்லது வேறு சிவனடியார்களே வரக் கூடாது<br />
இந்த சைவ சமய சாம்ராஜ்யம் இதற்கு மேல் வளரக் கூடாது<br />
என்கிற நலலெண்ணமா ?</p>
<p>இதே போல்தான் நம் தமிழர்கள் எல்லாத் துறையிலும் . .!<br />
சித்தர்கள் மொத்தம் பதினெட்டே பேர்,<br />
ஏன் பத்தொன்பதாக எவனும் வந்து விடக் கூடாது<br />
என்கிற தனக்கு மட்டுமே உரிமை என்கிற நினைப்பா ?</p>
<p>இப்படிக் குறுகலாகக் கணக்குப் ப்ண்ணிப் பண்ணியே<br />
வள்ளலாரை ஓரம் கட்டி விட்டார்கள் சைவர்கள் !<br />
இதுதான் நிசம், இதுதான் உண்மை !</p>
<p>வள்ளலாரின் அருட்பாடல்கள் மொத்தம் ஆறு திருமுறைகள் !</p>
<p>சைவம் சரியான படி புரிந்து கொள்ளப் பட்டிருக்குமேயானால்<br />
ஏற்கனவே உள்ள பன்னிரு திரு முறைகளோடு இந்த<br />
ஆறையும் சேர்த்து பதினெட்டுத் திரு முறைகள்<br />
ஆக்கி இருக்கலாம்தான்.</p>
<p>பதினெட்டு என்பது நமக்கு ஒன்றும் புதிது இல்லையே,<br />
மங்கலகரமான எண் ஆயிற்றே,<br />
பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள்,<br />
பதினெண் மேல்க் கணக்கு நூல்கள்,<br />
சில கோவில்களின் பதினெட்டுப் படிகள்,<br />
கீதையின் பதினெட்டு அதிகாரம்,<br />
மங்கலகரமான ஆடிப் பதினெட்டாம் பெருக்கு . . .<br />
இத்தியாதி இத்தியாதியாக எத்தனை பதினெட்டுக்கள் ?</p>
<p>ஆனால் வெறி, வெறி<br />
சைவ சமய வெறி, அப்படிச் செய்யமறுத்தது.<br />
வள்ளல் பிரானின் புரட்சிகரமான கருத்துக்கள்,<br />
வைதீகர்களின் மனத்தில் அச்சத்தை உண்டு பண்ணியது.</p>
<p>உள்ளம் உருக்கி நெக்கு விட வைக்கும் அவர்தம்<br />
ஒண்டமிழ்ப் பனுவல்களால் தேவாரமும், எங்கே<br />
திருவாசகமும் கோவிலில் பாடுவது நின்று போய் விடுமோ<br />
எனத் தேவையில்லாத கவலையும் அவர்கள் மனத்தில் குடி கொண்டது.</p>
<p>சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் அவர் சாடிய சாடல்,<br />
சாதி மத பேதங்களை எதிர்த்து அவர் உயர்த்திய அருட் பதாகை,<br />
எல்லாம் சேர்ந்து ஒரு வீணான பயத்தை தோற்றுவிக்க</p>
<p>அதனால் பிறந்ததுதான் அருட்பா - மருட்பா போர் !</p>
<p>வள்ளல்பிரானின் ஆறு திரு முறைகளும்<br />
சைவர்களின் துர்அதிஷ்ட்டம் பன்னிரண்டோடு சேர்த்து<br />
பதினெட்டு என எண்ணப் பட வில்லை.</p>
<p>சன்மார்க்கர்களின் அதிஷ்ட்டம் ஆறு திருமுறைகளும் தனித்தே நின்றன,<br />
வள்ளல்பிரான் தனித்திரு எனச் சொல்லிய வாசகம் போல . .!</p>
<p>நிசமான சன்மார்க்கி சமயத்தைப் பொய் என்பான்<br />
ஆனால் சைவத்தை துவேஷிக்க மாட்டான்.</p>
<p>அதே போல்தான் நிசமான சைவனும், இன்னும் மேலே ஏறி<br />
வரப் பார்ப்பான்<br />
அல்லாமல் எனக்கு இந்தக் கல்லாரிப் படிப்பான POST GRADUATION போதும்<br />
பி.ஹெச்.டி. ஆராய்ச்சிப் பட்டம் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லவும் மாட்டான்.</p>
<p>ஆனால் இரண்டுமே இரண்டு பேராலும்<br />
தவறாகவே புரிந்து கொள்ளப் பட்டன . .</p>
<p><img class="linked-image" src="http://i275.photobucket.com/albums/jj293/magudadheeban/vallal1.gif" border="0" alt="" /></p>
<p>சில சைவ சமய வெறியர்கள்<br />
யாழ்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்களைக்<br />
கொம்பு சீவித் தயார் படுத்தி முடுக்கிவிட்டுப்<br />
பம்மி வேடிக்கை பார்த்தனர்.</p>
<p>கோர்ட் கூடி இருந்ததையும், வாதியான ஆறுமுக நாவலர் உட்பட<br />
உள்ளே எல்லோரும் அமர்ந்திருக்கும் போது,<br />
பிரதி வாதியான இராமலிங்க வள்ளல் உள்ளே கம்பீரமாக நுழைந்ததையும்,<br />
அது கண்டு ஆறுமுக நாவலர் எழுந்து நின்று மரியாதை செய்த்தையும்,<br />
இந்த நடப்புக்களை அவதானித்த நீதிபதி,</p>
<p><!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->நீங்கள் ஏன் எழுந்து நின்றீர்கள் ? <!--colorc--></span><!--/colorc--><br />
- என வாதியாகிய ஆ.மு.நாவரைக் கேட்க</p>
<p><!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->அவர் பெரியவர்,<br />
அதனால் எழுந்து நின்றேன் <!--colorc--></span><!--/colorc-->- எனப் பதில் இறுக்க,</p>
<p>அவர் பெரியவர்தான் என்றால் அவர் பாடியதும்<br />
அருட்பாதான் என நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்ததையும்</p>
<p>என்ன காரணம் தொட்டு எழுதாமல் விட்டார்<br />
இங்கே நமது நிலா முற்ற நாவலர்<br />
என்று எனக்குப் புரியவில்லை. . .</p>
<p>அதே சமயம் எப்போதோ நடந்து முடிந்த இந்தக் கதையை<br />
முப்பது ஆண்டுகளுக்கும் மேல் அடுத்த நூற்றாண்டில்<br />
கதிரைவேற்பிள்ளையை உசுப்பி விட்டு<br />
சான்றுகளை எல்லாம் காட்டி ஜெயித்ததாகச் சொல்வது<br />
எதை நிலை நிறுத்த என்றும் புரியவில்லை.</p>
<p>பல்லவநாட்டுக் கல்வெட்டிலே மகேந்திர வர்மன் வென்றான் எனவும்<br />
சளுக்கிய நாட்டுக் கல்வெட்டிலே புலிகேசி வென்றான் எனவும்<br />
உள்ள கதை போல<br />
இந்த அருட்பா - மருட்பா போரானது அதற்கு அப்புறமும்<br />
மறைமலை அடிகள் காலம் வரை நடந்தது</p>
<p>முடிந்து போய் விட்டது என நினைத்திருந்த எனக்கு<br />
இப்போது நிலா முற்றத்து ஆன்மீகப் பகுதியிலே<br />
நமது நாவலர் துவந்த யுத்தமாய் துவேஷித்து<br />
ஆநிரை கவரும் படலமாக அரங்கேற்றம் செய்திருப்பது<br />
மிகுந்த வேதனையையே அளிக்கிறது.</p>
<p>பதிலுக்கு நான் சைவத்தை நிந்தித்தேன் என்றால்<br />
அது நான் ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கும் பாதை !</p>
<p>நல்ல ரோடான சன்மார்க்கம் அதோ தெரிகிறது என்று<br />
இருக்கும் பாதையில் முள்ளா கொட்ட முடியும் ?</p>
<p>என் கண்ணை என் கைகளா குத்த முடியும் ?</p>
<p>முடியாது நாவலரே முடியாது.</p>
<p>சைவத்தின் பெருமையை நீங்கள் சொல்லுங்கள் !<br />
இரண்டின் பெருமையையும் நான் சொல்கிறேன் !<br />
திரும்பவும் சொல்கிறேன்,<br />
நமக்குள் தர்க்கமோ சண்டையோ வேண்டாம் !</p>
<p>அது அண்ணன் - தம்பி அடிப்பது போல் ஆகி விடும்.</p>
<p>வள்ளல் பிரான் மரணமிலாப் பெருவாழ்வில் நிற்பவர்<br />
மருட்பா போரில் இதுவரை ஈடு பட்ட எவரும்</p>
<p>சாவை வென்றதில்லை.</p>
<p>அவரை நிந்திப்பதற்குச்<br />
செத்துப் போன எந்தப் பிண்டங்களுக்கும்<br />
அருகதை இருந்ததில்லை.<br />
சன்மார்க்கம் செய்த நல்ல காலம்<br />
அருட்பாவின் ஆறு திரு முறைகளும் தனித்தே நின்றன.</p>
<p><img class="linked-image" src="http://i275.photobucket.com/albums/jj293/magudadheeban/river.gif" border="0" alt="" /></p>
<p>ஆறு என்றால் நதி . .</p>
<p>கம்பன் சொல்கிறான் கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று . . .</p>
<p><!--coloro:#0000FF--><span style="color:#0000ff;"><!--/coloro-->சவியுறத் தெளிந்து தண் என்று<br />
ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்<br />
கவிஎனக் கிடந்த கோதா<br />
வரியினை வீரர் கண்டார் . . .<!--colorc--></span><!--/colorc--></p>
<p>சவி - என்றால் பிரகாசம்<br />
சான்றோர் கவி எப்படி இருக்கும் ?<br />
ஒளி ஒரு கோடிப் பிரகாசமாகக்<br />
குளிர்ச்சியாக ஒழுங்காக இருக்குமாம் . . .!</p>
<p>அந்தக் கவிதை போல் தெளிந்த ஆறு கோதாவரி<br />
இதை இராமன் பார்த்தானாம்.</p>
<p>இந்த ஆறாம் திருமுறை - அதாவது - தெளிந்த ந்தியாக உள்ள<br />
ஆறாம் திருமுறை உங்களை நிச்சயம்<br />
அந்த அருட் பெருங் கடலில் கொண்டு போய்ச் சேர்க்கும்.</p>
<p>பாதியிலே வற்றும் ஆறு அல்ல இது.<br />
சோதிக் கடலிலே சேர்ந்து<br />
உங்களையும் சேர்ப்பித்துச் சுற்றும் ஆறு</p>
<p>இந்த ஆறு மற்ற ஆறுகளை விட வித்தியாசமானதுதான்</p>
<p>எல்லோரும் விழித்துக் கொள்ளுங்கள்</p>
<p>விழித்திருப்போர் பயணப்படவென்றே<br />
தனித்திருக்கும் ஆறு இது . .</p>
<p>இந்த ஆறு திரு முறைப் பாடல்களையும்<br />
நீங்கள் நீங்கள் உங்களைக் கடைத்தேற்றும்<br />
நதி எனக் கொண்டாலும் சரி<br />
வழி எனப் பொருள் கொண்டாலும் சரி,</p>
<p>வாழ்த்துக்களுடன்,<br />
அடுத்த கட்டுரையில் சில நாட்கள் சென்று சந்திக்கிறேன் . . .</p>
<p><!--coloro:#FF8C00--><span style="color:#ff8c00;"><!--/coloro--><a title="நிலா முற்றம்" href="http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9318&#38;st=0#entry133828" target="_blank">-<strong>magudadheeban</strong><!--colorc--></a></span><!--/colorc--><a title="நிலா முற்றம்" href="http://www.thamilworld.com/forum/index.php?showtopic=9318&#38;st=0#entry133828" target="_blank"> </a></p>
<p><!--coloro:#FF8C00--></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4199</link>
<pubDate>Thu, 01 May 2008 20:18:40 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.com/2008/05/01/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa/</guid>
<description><![CDATA[
நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: ]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/south-asia-sharing-india-pakistan-china-rain.jpg"><img class="alignright alignnone size-medium wp-image-4197" style="float:right;" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/south-asia-sharing-india-pakistan-china-rain.jpg?w=233" alt="Economist" width="233" height="300" /></a></p>
<blockquote><p><em>நன்றி</em>: <a href="http://www.economist.com/world/international/displayStory.cfm?story_id=11293778&#38;fsrc=nwlptwfree">Rivers and conflict &#124; Streams of blood, or streams of peace &#124; Economist.com</a>: "Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together"</p></blockquote>
<ul>
<li>உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை - <strong><span style="color:#0000ff;">263</span></strong></li>
<li>கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக <strong><span style="color:#0000ff;">400 </span></strong>ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.</li>
<li>பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 <span style="color:#ff0000;"><strong>வன்சம்பவங்கள் </strong></span>நிகழ்ந்துள்ளன.</li>
<li>இந்த முப்பத்தேழில், 30 சண்டை <span style="color:#ff0000;"><strong>இஸ்ரேலுக்கும் </strong></span>அண்டை நாடுகளுக்கும் நடுவில் மூண்டிருக்கிறது. ஜோர்டான் நதியின் மேற்பாகம் எவருக்கு சொந்தம்?</li>
<li><span style="color:#008000;">எண்ணெயும் </span><span style="color:#800080;">வைரமும்</span>தான் தற்போதைக்கு சர்வாதிகாரிகளின் விருப்பமாக உள்ளன. கோங்கோ (Congo), அங்கோலா (Angola) போன்ற கொடுங்கோல் ஆட்சிநாயகர்களுக்கு தண்ணீரைக் <span style="color:#0000ff;"><strong>கடத்துவது </strong></span>கஷ்டமான காரியம்.</li>
<li>தமிழகப் புலவர்களுக்கு பிடித்த பாடுபொருளான <span style="color:#ff0000;"><strong>சஹாரா </strong></span>பாலைவனத்திற்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் நைல், நைஜர், வோல்டா, ஜம்பேசி எல்லாமே ஆபத்தான பகுதிகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.</li>
<li><a href="http://snapjudge.wordpress.com/files/2008/05/africa-river-issues-sharing-water-crisis-deals-accord.jpg"><img class="alignright alignnone size-medium wp-image-4198" style="float:right;" src="http://snapjudge.wordpress.com/files/2008/05/africa-river-issues-sharing-water-crisis-deals-accord.jpg?w=187" alt="Global Worldwide water relations" width="187" height="300" /></a>ஆனால், உலக வங்கியை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போல் அல்லாமல் <span style="color:#ff0000;"><strong>சீனா </strong></span>தன்னிச்சையாக நதிகளை தடுத்தாட்கொண்டு, அணையெழுப்பி, திசைதிருப்பி, இயற்கையை சுதந்திரமாக கட்டுப்படுத்துகின்றது.</li>
<li>ருசியாவின் ஆப் (Ob) நதியோடு இணையும் இர்திஷ் (Irtysh) நதியை நிறுத்துவதாகட்டும்; <span style="color:#0000ff;"><strong>கஜக்ஸ்தானின் </strong></span>பல்காஷ் (Balkhash) ஏரியை நிரப்பும் இலி (Ili) நதியாகட்டும்... யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. (<em>கஜக்ஸ்தான் மக்கள்தொகை: 15 மில்./சைனா: 1300 மில்.</em>)</li>
<li>இதே ரீதியில் உலகம் <span style="color:#ff0000;"><strong>வெம்மை </strong></span>அடைந்து கொண்டிருந்தால் மௌரிடானியா (Mauritania), மாலி, எத்தியிப்போ போன்ற நாடுகளில் தனிநாடு கேட்டுப் போராடுபவர்களின் <span style="color:#ff0000;"><strong>பிரிவினைவாதம் </strong></span>வலுப்பட்டு கலகம் வெடிக்கலாம். ஆப்பிரிக்காவின் <span style="color:#ff0000;"><strong>மக்கள் பெருக்கமும் </strong></span>இந்த இனப் போராட்டத்திற்கும் நன்னீர் பற்றாக்குறைக்கும் தூபம் போட்டு சாமரம் வீசுகின்றன.</li>
<li><strong><span style="color:#0000ff;">நேபாளத்தில் </span></strong>சமீபத்தில் நடந்த மாவோயிச வெற்றிக்கும், முன்னுமொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் <span style="color:#0000ff;"><strong>தாலிபான் </strong></span>வளர்ந்ததற்கும் கூட வறட்சிதான் காரணம்.</li>
</ul>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
