<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>ஆயத்தப்-பொடி &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/ஆயத்தப்-பொடி/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "ஆயத்தப்-பொடி"</description>
	<pubDate>Sat, 30 Aug 2008 00:58:57 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[ஊறுகாய்ப் பொடி]]></title>
<link>http://mykitchenpitch.wordpress.com/2007/12/24/urugaai-podi/</link>
<pubDate>Mon, 24 Dec 2007 03:38:41 +0000</pubDate>
<dc:creator>Jayashree Govindarajan</dc:creator>
<guid>http://mykitchenpitch.wordpress.com/2007/12/24/urugaai-podi/</guid>
<description><![CDATA[திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பர]]></description>
<content:encoded><![CDATA[<p>திருமணம், ஹோட்டல் போன்ற இடங்களில் பரிமாறப்படும் ஊறுகாய்கள் சுவையாக இருக்கும். ஆனால் அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது. அதிகம் அடுப்பில் கொதிக்க வைக்காமல், அதிகம் எண்ணெய் விடாமல் தயாரிப்பதால் சீக்கிரம் கெட்டுவிடலாம். ஆனால் மொத்தமாகச் செய்து அதிக நாள்களுக்கு வைத்துக் கொள்ளும்போது சேர்க்க வேண்டிய அதிக எண்ணெய், அதன்பொருட்டு நாம் சேர்க்கும் அதிக உப்பு, காரம் இவை இல்லாததாலேயே உடலுக்கு இவை அவ்வளவு மோசமில்லை. :) புதிதாகத் தயாரித்ததைத் தான் உபயோகிக்கிறோம் என்ற மனத் திருப்தி.</p>
<p>ஆவக்காய், வடுமாங்காய் போன்ற வருடாந்திரத்துக்கான பிரத்யேகங்கள் ஒருபுறம் இருக்கட்டும். மாற்றாக இன்னொரு ஊறுகாயை  அதுபோல் நாமும் அவ்வப்போது ஒருவாரம் பத்து நாள்களுக்கு மட்டும் வருமளவு கொஞ்சமாகத் தயாரித்து உபயோகிப்பது நல்லது. இரண்டே இரண்டு எலுமிச்சம் பழம் இருந்தால்கூட அதை உடனடி ஊறுகாய் போடுகிற வகை நான். இதனால் அடிப்படைக் காயை விதவிதமாக மாற்றி, போரடிக்காமல் செய்யலாம். விரும்புபவர்கள் இந்தப் பொடியை தயாரித்துவைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் எந்த ஊறுகாயும் செய்துவிடலாம்.</p>
<p><strong><em><font color="#0000ff">தேவையான பொருள்கள்:</font></em></strong></p>
<p>காய்ந்த மிளகாய் - 100 கிராம்<br />
கடுகு - 25 கிராம்<br />
வெந்தயம் - 25 கிராம்</p>
<p><strong><em><font color="#0000ff">செய்முறை:</font></em></strong></p>
<ul>
<li>
<div>காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயத்தை நன்கு வெயிலில் காயவைத்து அல்லது அப்படிச் செய்ய வசதியில்லாதவர்கள் லேசாக வாணலியில் வறுத்து, நைசாகப் பொடித்துவைத்துக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைத்தும் தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம்.</div>
</li>
</ul>
<p>*விரும்பினால் விரளி மஞ்சளையும் இதனுடனேயே சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சாம்பார்ப் பொடி]]></title>
<link>http://mykitchenpitch.wordpress.com/2007/01/08/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/</link>
<pubDate>Mon, 08 Jan 2007 14:14:37 +0000</pubDate>
<dc:creator>Jayashree Govindarajan</dc:creator>
<guid>http://mykitchenpitch.wordpress.com/2007/01/08/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf/</guid>
<description><![CDATA[சாம்பார், குழம்பு, கறிவகைகள் சிலவற்ற]]></description>
<content:encoded><![CDATA[<p><em><font color="#008000">சாம்பார், குழம்பு, கறிவகைகள் சிலவற்றிற்கும் இந்தப் பொடியைப் பயன்படுத்தலாம்.</font></em></p>
<p><font color="#0000ff"><em><strong>தேவையான பொருள்கள்:</strong></em></font></p>
<p>காய்ந்த மிளகாய் -  300 கிராம்<br />
தனியா - 3 கப்<br />
துவரம் பருப்பு - 1  1/2கப்<br />
கடலைப் பருப்பு -  1  1/2 கப்<br />
மிளகு - 1 கப்<br />
சீரகம் - 1/2 கப்<br />
வெந்தயம் -  3 டீஸ்பூன்<br />
கடுகு - 2 டீஸ்பூன்<br />
பெருங்காயம் -  50 கிராம் கட்டி<br />
விரளி மஞ்சள் - 10</p>
<p><a href="http://www.flickr.com/photos/jsri/2100294073/" title="sambar podi by Jayashree Govindarajan, on Flickr"><img width="500" src="http://farm3.static.flickr.com/2049/2100294073_1561f3b9d2.jpg" alt="sambar podi" height="448" /></a></p>
<p><font color="#0000ff"><em><strong>செய்முறை:</strong></em></font></p>
<ul>
<li>விரளி மஞ்சளை சிறு சிறு துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். வெயில் இல்லாத காலங்களில்/இடங்களில் லேசாக வாணலியில் வறுத்துக் கொள்ளலாம். ஈரப்பதம் இருந்தால் மிக்ஸியில் அரைக்க வராது; பொடி சீக்கிரம் கெட்டுவிடும்.</li>
<li>தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு இவற்றை தனித் தனியாக எண்ணை விடாமல் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.</li>
<li>கட்டிப் பெருங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணையில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.</li>
<li>கடைசியில் மிளகாயை சிட்டிகை உப்பு(வறுக்கும்போது கமறாமல் இருக்க) சேர்த்து வறுக்கவும்.</li>
<li>எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்து, காற்றுப் புகாத பாட்டிலில்/டப்பாவில் எடுத்துவைக்கவும்.</li>
</ul>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
