<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>அறிவு &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/அறிவு/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "அறிவு"</description>
	<pubDate>Sun, 07 Sep 2008 15:44:18 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[நல்ல கேள்வியைக் கேட்பது எப்படி?]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4105</link>
<pubDate>Wed, 02 Apr 2008 02:43:17 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.wordpress.com/?p=4105</guid>
<description><![CDATA[நிறைய கேள்வி பதில்கள் பதிவகங்களில் க]]></description>
<content:encoded><![CDATA[<p><font color="#0000ff"><i>நிறைய கேள்வி பதில்கள் பதிவகங்களில் கிடைக்கின்றன. இந்தப் பதிவின் இறுதியில் தற்காலத் தொகுப்பை பார்க்கலாம்.</i></font></p>
<p><font color="#0000ff"><i>கேள்வி எப்படி கேட்க வேண்டும் என்பதற்காக இந்தக் வலைக்குறிப்பு...</i></font></p>
<p>Mortgage crisis; sub prime loan பிரச்சினைகள் என்று ஏழு கடல், ஆறு மலைகளைத் தாண்டி அமெரிக்க கனவை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் புதுமணத் தம்பதியினர். வீடு வாங்கினார்கள். கொஞ்சம் சல்லிசாக கிடைக்கிறது என்பதற்காக மஞ்சக்கடிதாசு கொடுத்தவரின் பழைய வீட்டை அமுக்கிப் போடுகிறார்கள்.</p>
<p>ஹாலில் கோவிந்தா பிங்க் பல்லை இளிக்கிறது. அவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் விஸ்டாவின் இனிமையான வண்ணங்கள் மட்டுமே மனதுக்கு லகுவாக இருக்கும். மாற்ற முடிவெடுக்கிறார்கள்.</p>
<p>பக்கத்துவீட்டுக்காரன் ஆன என்னை அழைத்து, "உங்களுக்கும் இதே சைஸ் ஹால்தானே? இப்பத்தான் வெள்ளையடிச்சேன்னு சொல்றீங்க... எத்தனை டப்பா பெயிண்ட் வாங்கினீங்க?"</p>
<p>"ஏழு" என்றேன்.</p>
<p><a href="http://www.sulawines.com/">சூலா அமுது</a> கூட விருந்தோம்பாமால், துரத்திவிட்டு விடுகிறார்கள்.</p>
<p>ஹோம் டிப்போ சென்று ஏழு டப்பாவை வாங்கி, வேலையை ஜரூராக ஆரம்பிக்கிறார்கள். நான்காம் டப்பா முடிவதற்குள் ஹால் பளிச்சென்று தயார்.</p>
<p>கோபம் கலந்த குழப்பத்துடன் மாம்பழ மார்ட்டினி பருகும் ராத்திரியில் கதவு தட்டப்படுகிறது. "நீங்க சொன்ன பேச்சக் கேட்டதால், மூணு டப்பா வேஸ்டு!!" என்கிறார்கள்.</p>
<p>"ஓ... உங்களுக்கும் பாக்கி ஆயிடுச்சா!" என்று வழியனுப்பினேன்.</p>
<blockquote><p>கேள்வி வடிவமைப்பது ரொம்ப முக்கியமான விஷயம்.</p></blockquote>
<p><font color="#ff0000"><i>இனி பதிவுகள்... </i></font></p>
<ol>
<li><a href="http://tvpravi.blogspot.com/2008/03/blog-post_1070.html">தனித்திரு விழித்திரு பசித்திரு - செந்தழல் ரவி</a>: "முடியல முடியல் - கேள்வி பதில் பதிவு"</li>
<li><a href="http://vasanthamravi.blogspot.com/2008/03/blog-post_30.html">Vasantham Ravi வசந்தம் ரவி</a>: "வசந்தம் ரவி ரிடன்ஸ் - கேள்வி பதில் பதிவு"</li>
<li><a href="http://muduvaihidayath.blogspot.com/2008/03/blog-post_3448.html">முதுவை ஹிதாயத்: இஸ்லாம் கேள்வி-பதில்</a></li>
<li>ரவிபிரகாஷ் - <a href="http://nraviprakash.blogspot.com/2008/03/blog-post_1557.html">ஏடாகூடம்: கற்பனைக் கேள்வி பதில்!</a> (கல்கி - 30.3.80)</li>
<li><a href="http://madippakkam.blogspot.com/2008/03/blog-post_26.html">:-): தானே கேள்வி தானே பதில் - அதிரடிப் பதிப்பு!!</a></li>
<li><a href="http://mutualfundsintamil.blogspot.com/2008/03/2-mutual-funds-q-part-2.html">பரஸ்பர நிதி: பரஸ்பர நிதி - கேள்வி பதில் 2 (Mutual Funds. Q&#38;A part 2)</a></li>
<li><a href="http://nagareekakomali.blogspot.com/2008/03/blog-post_22.html">நாகரீக கோமாளி: பதில்களற்ற  கேள்விகள்</a></li>
<li><a href="http://lookbible.blogspot.com/2008/03/blog-post_7653.html">தமிழ் பைபிள் பாருங்க: கிறிஸ்த்தவம் கேள்வி பதில்</a></li>
<li><a href="http://dondu.blogspot.com/2008/03/21032008.html">Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 21.03.2008</a></li>
<li><a href="http://aacharyahruthayam.blogspot.com/2008/03/2_19.html">ஆச்சார்ய ஹ்ருதயம்: குருவிடம் சில கேள்விகள் - 2</a></li>
<li><a href="http://kadugu.wordpress.com/2008/03/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/">கலைஞருக்கு சில கேள்விகள்… « கடுகு.காம் - Kadugu.Com</a></li>
<li><a href="http://idlyvadai.blogspot.com/2008/03/31-3-2008.html">IdlyVadai - இட்லிவடை: இட்லி வடை பதில்கள் 31-3-2008</a></li>
</ol>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இல்மும், இஸ்லாத்தின் மறுமலர்ச்சியும்]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=26</link>
<pubDate>Wed, 26 Mar 2008 22:50:30 +0000</pubDate>
<dc:creator>A Yunus</dc:creator>
<guid>http://iniyaislam.wordpress.com/?p=26</guid>
<description><![CDATA[&#8220;இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண]]></description>
<content:encoded><![CDATA[<h3><span style="color:#993366;">"இஸ்லாத்திற்கு புத்துயிர் தரும் எண்ணத்தோடு ஒருவன் இல்மைக் கற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் ஒருவனின் உயிர் பறிக்கப்பட்டால், சுவனத்தில் அவனுக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரு சிறு அளவிலான வித்தியாசமே தென்படும்."</span>,</h3>
<h3>என முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிவித்தனர்.</h3>
<h3>[அறிவிப்பாளர்: இமாம் அல் ஹஸன் அல் பஸரி, நூல்: திர்மிதி, எண்: 249]</h3>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[எதுக்குப் படிக்கிறோம்னு தெரியுமா?]]></title>
<link>http://technicalganesh.wordpress.com/2008/01/03/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%af%81/</link>
<pubDate>Thu, 03 Jan 2008 15:41:06 +0000</pubDate>
<dc:creator>கணேஷ்</dc:creator>
<guid>http://technicalganesh.wordpress.com/2008/01/03/%e0%ae%8e%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%af%81/</guid>
<description><![CDATA[
இளம் வயதினரின் நூலக நாட்டம் அதிகமாக ]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://www.eximiousbooks.com/exb455/images/books.jpg" alt="நூலகம்" height="358" width="349" /></p>
<p>இளம் வயதினரின் நூலக நாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது! அதுவும் பதினெட்டு வயது முதல் 30 வயது வரை இந்த நாட்டம் அதிகமாக இருந்து பின் படிப்படியாகக் குறைந்து விடுகிறதென்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது! இதற்குக் காரணம் வேலைக்கு தேர்வாகும் நோக்கத்துடனும், தங்களின் கல்வி சம்பந்தமான சிறுதிட்டங்களுக்கும் முழுமையாக அவர்கள் நூல்நிலையங்களை நாடுவதாகத் தெரிகிறது. மேலும் இணைய சேவைகளுக்காகவும் நூலங்களுக்குச் செல்கிறவர்களும் பாதிக்குமேல் உண்டு.</p>
<p>உண்மையிலேயே உலக அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் நூலகம் செல்வார்கள் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடிகிறதா...?</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பட்டம் பறக்கும் இரகசியம்]]></title>
<link>http://niram.wordpress.com/2007/11/28/another-cosmic-no-1-niram-zeezat/</link>
<pubDate>Wed, 28 Nov 2007 10:08:02 +0000</pubDate>
<dc:creator>உதய தாரகை</dc:creator>
<guid>http://niram.wordpress.com/2007/11/28/another-cosmic-no-1-niram-zeezat/</guid>
<description><![CDATA[
இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொட]]></description>
<content:encoded><![CDATA[<p><img src="http://niram.wordpress.com/files/2007/11/cosmic1.jpg" alt="cosmic1.jpg" /></p>
<p>இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.</p>
<p><!--more தொடர்ந்து படிக்க... --></p>
<p>ஒழுக்கம் என்பது என்ன? என்று கேட்டால், நீங்கள் “ஒழுக்கம் விழுப்பம் தரும்” எனத் தொடங்கி அதன் நன்மைகளை விலாவாரியாக சொல்லிக் விளக்க எத்தனிப்பீர்கள். உண்மையிலேயே சிறப்புகள் கொண்டது தான் ஒழுக்கம். ஒழுக்கம் மூலம் சிறப்புகளும் எய்தப்படலாம். ஆனாலும், இந்த ஒழுக்கம் என்பதை எவ்வாறு வரைபிலக்கணப்படுத்தலாம் என்ற கேள்வி எனக்கு எப்போதும் ஞாபகத்திற்கு வருவதுண்டு.</p>
<p>அன்றொரு நாள் ஒரு புத்தகமொன்றை வாசிக்கும் போது, ஒழுக்கம் பற்றி நிறைய விடயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அவை நான் சிந்தித்த கேள்விகளுக்கு தெளிவான விடைகளைத் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தன. அந்தப் புத்தகத்திலும் ஒழுக்கம் என்றால் இதுவா? என பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.</p>
<p>ஒருவன் நாடுவதையெல்லாம் செய்யக்கூடுமளவுக்கு அவனுக்குள்ள உண்மைச் சுதந்திரமா? விளைவுகளைப் பற்றிக் கவனிக்காத சுதந்திரமா? ஒரு பிழை அல்லது தவறு நடந்தவுடன் அதனை சரிசெய்கின்ற செயற்பாடா? அது திணிப்பா? அது வன்முறையா? இதில் எதுவுமே ஒழுக்கம் என்றால் என்ன? என்பதற்கு விடையாக அமையாது. அமையவும் முடியாது. என்று சொல்கிறது அந்தப் புத்தகம்.</p>
<p>“ஒழுக்கமென்பது தகப்பன் பிரம்பொன்றை எடுத்து தனது பிள்ளைக்கு அடிப்பதாகவும் முடியாது. இது முட்டாள்தனம். ஒழுக்கம் என்பது நெகிழ்வுத்தன்மையை வேண்டி நிற்கிறது. அதுவொரு திசை. அது பிரச்சினைகள் தோன்றாமலிருக்க வழிசெய்யும் முற்காப்புச் செயல். அது உயரிய திறன்களை நிகழ்த்துவதற்கு சக்தியை ஒன்றுசேர்த்து திசைப்படுத்தும் கருவி. ஒழுக்கமென்பது நீங்கள் செய்யும் ஒரு செயலாக இருக்க முடியாது. அது நீங்கள் நேசிப்பவர்களுக்காக உங்களால் ஆற்றப்படும் செயலாகவே இருக்க முடியும்.” என்கிறது அந்த நூல்.</p>
<p>இது பற்றி நான் கதைப்பது, நான் தரம் ஒன்றில் படிக்கும் போது எனது வகுப்பாசிரியராக இருந்த திரு. சரீப் சேர் அவர்களை நினைவுபடுத்தத் தான். “நா இனிக்க சீனி வேணும். கல்வி இனிக்க ஒழுக்கம் வேணும்” என்று சொல்லித்தந்தவர் அவர். சரீப் சேர் என்றே நாம் அழைக்கும் எங்கள் ஆசானின் நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமானவை தான். ஆனால், “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?” என்ற வாக்கிற்கு இணங்க முதலாம் தரத்தில் படிக்கும் போதே மாணவனை அவனது எதிர்கால வாழ்விற்கு தயார்படுத்த வேண்டும் என்பதில் கண்ணாயிருந்தவர்.</p>
<p>வகுப்பில் அவரிடம் நீளமான மினுங்கும் கட்டையான பிரம்பொன்றிருக்கும். பிரம்பின் நுனியில் வெண்கட்டியை நூலொன்றைத் துணையாகக் கொண்டு கட்டிக் கொள்வார். வகுப்பறைத் திண்ணையிலே (அப்போதெல்லாம், பாலர் வகுப்பில் படிக்கும் போது, கதிரை மேசை பாலர் வகுப்பில் படிப்பவர்களுக்கு இல்லை. எல்லாம் தரையான திண்ணைதான். :-) ) அந்த வெண்கட்டி இணைக்கப்பட்ட பிரம்பின் மூலம் அழகான வட்டங்களைக் கீறுவார்.</p>
<p>ஒரு வட்டத்திற்கு எட்டு பேர் படி வட்டத்தின் பரிதி வழியே ஒழுங்காக இருக்கும் படி மாணவர்களிடம் கூறி முழு வகுப்பறையையும் ஒழுங்காக்கிய பின்னரே பாடங்கள் தொடரும். "குழுவாகக் கற்றல்" என்ற முறையை நான் முதலாம் தரத்திலேயே படித்துக் கொண்டேன். வட்டமாக இருப்பது அவ்வளவு இலேசுபட்ட காரியமல்ல இருந்த போதும், வட்டத்தை என்றும் கண்காணித்து வட்டமாக ஒழுங்காக இருக்கும்படி ஆணையிடுவார்.</p>
<p>எனக்கு இந்த முறை நிறையவே பிடித்திருந்தது. ஆனாலும், வட்டமாக இருக்காமல் வட்டம் குழைந்து போனால், அதனைத் திருத்த முதுகில் பிரம்பு பதம் பார்க்கும் போது, அழுத மாணவர்களில் நானும் ஒருத்தனாக இரு நாட்கள் இருந்திருக்கிறேன்.</p>
<p>ஆனாலும், சரீப் சேர் என்றாலே எங்கள் பாடசாலைக்கே அப்படி ஒரு பயம் என்று நான் தரம் நான்கில் பயிலும் போதே நன்குணர்ந்து கொண்டேன். சரீப் சேர் வருகிறார் என்றால் அந்த நிமிடமே நிஸப்தம் நிலவும். அச்சமயம் காகங்கள் கரைந்தால் அது மட்டுமே கேட்கும். ஒழுக்கம் பற்றி இயல்பாகச் சொன்னவர் அவர்.</p>
<p>ஒழுக்கமென்பது அன்பின் வெளிப்பாடு தான். சிலவேளைகளில் பாசமாக இருப்பதற்கும் நாம் கசப்பான விடயங்களைச் செய்ய வேண்டிவரும். எல்லா மருந்துகளும் இனிப்பதில்லை. ஏன் எல்லா சத்திரசிகிச்சைகளும் வலியைத் தராமல் இருப்பதில்லை. ஆனால், ஈற்றில் நோயைக் குணப்படுத்திவிடும். இயற்கையிடமிருந்து நாம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனது பாலர் வகுப்பு ஆசிரியரின் கண்டிப்புகளை என்னால் அப்படித்தான் காணமுடிகிறது.</p>
<p align="center"><img src="http://niram.wordpress.com/files/2007/11/giraffe-mother-and-baby.jpg" alt="giraffe-mother-and-baby.jpg" /></p>
<p>ஒட்டகச் சிவிங்கி இருக்கிறதே அதன் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு அவத்தையில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே இருக்கின்றன. ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியை நின்ற நிலையிலேயே ஈனும். தாயின் மெத்தை போன்ற கருவறையிலிருந்து கரடு முரடான தரைக்கு குட்டி ஒட்டகச் சிவிங்கி விழுந்துவிடும். இந்த நிலையில் தாய் ஒட்டகச் சிவிங்கி என்ன செய்யும் தெரியுமா?</p>
<p>அப்போதே பிறந்த குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று தனது காலால், குட்டியை பலமாக ஓங்கி உதைக்கும். இதனால், குட்டியோ எழுந்து நிற்க முயற்சிக்கும். ஆனாலும் அதன் கால்கள் பலமில்லாத நிலையிலல்லவா இருக்கிறது, அதனால் அது விழுந்து விடும். விழுந்து விட்டதே என்று அனுதாபம் கொள்ளுமா தாய் ஒட்டகச் சிவிங்கி? இல்லையே. மீண்டும் குட்டி ஒட்டகச் சிவிங்கியின் பின்னால் சென்று பலமாக அதனை தனது காலால் உதைக்கும். ஆனாலும், குட்டி எழுந்து நிற்கும் பின்னர் இருந்து விடும். இதனைக் கண்டு கொண்டு தாய் நிற்காது.</p>
<p>குட்டி ஒட்டகச் சிவிங்கி தனது சொந்தக் காலில் நின்று நடமாட ஆரம்பிக்கும் மட்டும் தாய் ஒட்டகச் சிவிங்கி உதைப்பதை தொடர்ந்து கொண்டிருக்கும். ஏன் இப்படி நடக்கிறது? காட்டில் தனது குட்டி பிழைத்து வாழ வேண்டுமாயின், சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தாய்க்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே இவ்வாறு அது செய்கிறது.</p>
<p>ஆக ஒழுக்கமென்பது நாம் இன்னொருவருக்கு அவர் மீது கொண்ட அன்பால் செய்யும் செயலாக இருக்கவே முடியும். எமது ஆசிரியரும் எங்கள் மீது கொண்ட அன்பால்தான் எம்மை ஒரு விடயத்தில் முழுமையான வெற்றியைப் பெறும் பொருட்டு, கண்டித்தார் தண்டித்தார் என்றே நான் சொல்வேன்.</p>
<p>அவர் எம்மீது கொண்ட அன்பும், நான் அவர் மீது கொண்ட அன்பும் அளப்பரியதே! அதுவே, அவரைப் பற்றி நான் இப்படிக் கதைக்க வேண்டிய ஆர்வத்தை தோற்றுவித்த தோற்றுவாயாகக் கூட இருக்கலாம்.</p>
<p>சிறுவர்களே நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்து அவர்களை நல்வழிப்படுத்த ஆர்வம் கொண்ட ஆசிரியர் எனக்களித்த அறிவுப் பொக்கிசங்கள் ஆயிரமாயிரம். ஒழுக்கம் சுதந்திரத்தை வழங்குகின்றதென்பது உண்மையே.</p>
<p>ஒரு பெரிய மிட்டாய் பெட்டியிலுள்ள அனைத்து மிட்டாய்களையும் ஒரு குழந்தை ஒரு நாளிலேயே சாப்பிட்டால் அக்குழந்தைக்கு நோயேற்படக்கூடும். ஆனாலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மிட்டாய்களைச் சாப்பிட வேண்டுமென்ற ஒழுக்கம் குழந்தைக்கு மகிழ்ச்சியை நீண்ட நேரத்திற்கு வழங்கும் தன்மையை உடையதை நீங்கள் அறிவீர்கள் தானே!! எமது இயல்புகளை எமக்கு ஏற்படக்கூடிய பிரதிகூலங்களை அவதானிக்காமலேயே காரியங்களைச் செய்து கொள்ள வழிசமைக்கின்றன.</p>
<p>நாம் நினைப்பதையே செய்யக்கூடிய வாய்ப்புதான் சுதந்திரம் என்ற தப்பபிப்பிராயம் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது. நாம் நினைப்பதெல்லாவற்றையும் எப்போதும் எம்மால் அடைந்து விட முடியாது. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி எங்குமில்லை” என்ற திரையிசைப் பாடல் வரிகளும் அதைத்தான் சொல்கிறது.</p>
<p>ஒழுக்கம் மற்றும் நற்செயல்கள் ஆகியவை நன்மை, மகிழ்ச்சி, இலாபம், சௌகரியம் என்பவற்றை வெளிப்படையாக தராத பட்சத்தில், அவற்றின் மூலம் நாம் அடைந்து கொள்ளக்கூடிய நன்மைகளை எம்மால் பல வேளைகளில் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒழுக்கமின்மையால், வெற்றியைத் தொட முடியாமல் போன மக்களின் வாழ்க்கையைக் கூர்ந்து அவதானித்தால் ஒழுக்கம் மூலம் எய்தப்படக்கூடிய பலன்கள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.</p>
<p>ஒரு கதையொன்று சொல்கிறேன். கேட்கிறீர்களா?</p>
<p>ஒரு மாலை நேரம் ஒரு பையன் தனது தந்தையுடன் கடற்கரையோரமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். தந்தையை நோக்கி பையன் இந்தப் பட்டம் மேலே பறக்க எது உதவி புரிகிறது எனக் கேட்டான்.</p>
<p>அதற்கு தந்தை “நூல்” என்று பதில் சொன்னார். அதனைக் கேட்ட பையனோ, “அப்பா, இந்த நூல் பட்டத்தை கீழ் நோக்கியல்லவா இழுக்கிறது?” என்று சொன்னான்.</p>
<p>இதனைக் கேட்ட தந்தையோ, தனது மகனை அவதானிக்கும் படி சொல்லி பட்டத்தோடு தொடுத்திருந்த நூலை துண்டித்து விட்டார். என்ன நடந்திருக்கும். அதேதான். பட்டம் கீழே விழுந்தது.</p>
<p>இப்படித்தானே வாழ்க்கையிலும் சம்பவங்கள் உண்டு! எம்மைக் கீழ் நோக்கி கட்டி வைத்திருப்பதாக எண்ணியிருக்கும் விடயங்கள் கூட, நாம் பறந்து செல்ல ஆதாரமாக இருந்து உதவி செய்யக்கூடியன. அதுதான் ஒழுக்கமென்பதும்.</p>
<p>எனது ஆசிரியர் தண்டிப்பெல்லாம் முறையற்றதென எண்ணினால் இன்றளவில் நான் ஒழுக்கம் பற்றிக் கதைத்திருக்க முடியாமல் போயிருக்கும். அதுதான் வாழ்வின் ஆதாரம். ஒழுக்கம் உன்னதமானது, உயிரோடு கலக்க வேண்டியது.</p>
<p>ஒழுக்கம் தொடர்பில் எனது ஆசிரியரின் எழுச்சியான நிலைகள் இப்படியிருக்க, கையெழுத்து அழகாக இருக்க பயிற்சிகள் சொல்லிக் கொடுத்தவர்களில் சரீப் சேர் முதன்மையானவர் எனக்கு. சரீப் சேரின் கையெழுத்தின் அழகில் நான் பல வேளை இலயித்துப் போயிருக்கிறேன். அந்தக் காலங்களில் அச்சுத் தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறவில்லை. ஆனாலும், பாடசாலையின் அதிபர் காரியாலத்தினுள் தொங்கும் நேர அட்டவணையிலிருந்து மாணவர் தேர்ச்சி புள்ளி விபரங்கள் என அனைத்துமே எமது சேரின் அழகிய கையெழுத்தால், அச்சடிக்கப்பட்டது போல் தோன்றும். அந்தக் கையெழுத்து அவ்வளவு கவர்ச்சியானது. பார்க்கத் தூண்டுவது. நாமும் இப்படி எழுத முயற்சிக்க வேண்டுமே என்ற ஆசைளை ஏற்படுத்துவது.</p>
<p>எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. 2000 ஜுலை மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தை விட்டு உயிர்துறந்தார் எனது அன்பு ஆசிரியர் சரீப் சேர். அவர் இவ்வுலகை விட்டு போனாலும், “கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை” என்ற பொன்மொழிக்கேற்ப இன்றும் உலகில் பலரினதும் மனதில் நல்லாசானாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</p>
<p>ஒழுக்கமென்பது அன்பால் உருவாவது. அது அன்பை உருவாக்குவது.</p>
<p>“இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் இன்னொரு பதிவில் சந்திக்கிறேன். உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்கள்.</p>
<p>சேர்ந்து நிறைவோம் நிறத்தினூடாக..</p>
<p>- உதய தாரகை</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இரட்டை ரோஜா]]></title>
<link>http://arull.wordpress.com/2007/08/04/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be/</link>
<pubDate>Sat, 04 Aug 2007 23:04:37 +0000</pubDate>
<dc:creator>jeevagv</dc:creator>
<guid>http://arull.wordpress.com/2007/08/04/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be/</guid>
<description><![CDATA[
பச்சை வெளிதனில்
பகலவன் அருளினில்
அச]]></description>
<content:encoded><![CDATA[<p><a href="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RrTljcP0HtI/AAAAAAAAAeg/CmKauNwoJGI/s1600-h/IMG_0914.JPG"><img src="http://bp3.blogger.com/_KnBZDR_WpFM/RrTljcP0HtI/AAAAAAAAAeg/CmKauNwoJGI/s400/IMG_0914.JPG" style="display:block;text-align:center;margin:0 auto 10px;" border="0" /></a></p>
<p>பச்சை வெளிதனில்<br />
பகலவன் அருளினில்<br />
அச்சம் இல்லாமல்<br />
நித்தம் மலரும்<br />
ரோஜா மலரும்</p>
<p>என்னைப் பார்த்து சொன்னது<br />
அருளின்றி மலராது அகம்<br />
அதனாலே நீசெய் தவம்<br />
உன் அறிவே சிவம்<br />
அதை நீநாடு தினம், என்று!</p>
<p>ஆன்றோர் வாக்கின் துணையில்<br />
அம்புலி புனை பெருமான்<br />
என்னுள்ளே என்னுள்ளே<br />
எங்கிருக்கிறான் எனத்தேடி<br />
எங்கும் இருக்கிறான்<br />
என அறியும் நாள் எந்நாளோ?</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மச்சு பிச்சு]]></title>
<link>http://sivaramang.wordpress.com/2007/07/09/%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/</link>
<pubDate>Mon, 09 Jul 2007 09:01:17 +0000</pubDate>
<dc:creator>sivaramang</dc:creator>
<guid>http://sivaramang.wordpress.com/2007/07/09/%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81/</guid>
<description><![CDATA[&#8230;என்பது &#8220;அச்சு பிச்சு&#8221; போன்ற ஏதோ]]></description>
<content:encoded><![CDATA[<p><font size="2">...என்பது <font size="2" face="Arial">"</font><font size="2">அச்சு பிச்சு</font><font size="2" face="Arial">" </font><font size="2">போன்ற ஏதோவொரு அக்ரஹார வழக்கு அல்ல</font><font size="2" face="Arial">. </font><font size="2">அது பெருவில் உள்ள</font><font size="2" face="Arial"> </font><font size="2">புதிய உலக அதிசயங்களில் ஒன்று</font><font size="2" face="Arial">.</font></font></p>
<p><font size="2"><font size="2" face="Arial"><strong><font color="#0000ff"><a href="http://en.wikipedia.org/wiki/Machu_Picchu">Machu_Picchu</a></font></strong></font></font><font size="2"> </font></p>
<p><font size="2"><font size="2"><a target="_blank" href="http://upload.wikimedia.org/wikipedia/commons/8/88/Peru_Machu_Picchu_Sunset.jpg">புகைப்படம் </a></font><font size="2"> </font></font></p>
<p><font size="2"> </font><font size="2"><font size="2"><a href="http://www.ibnlive.com/photogallery/inside/421.html#)">புதிய உலக அதியசங்கள்</a></font></font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பயம்!]]></title>
<link>http://sivaramang.wordpress.com/2007/06/12/hippopotomonstrosesquippedaliophobia/</link>
<pubDate>Tue, 12 Jun 2007 13:17:13 +0000</pubDate>
<dc:creator>sivaramang</dc:creator>
<guid>http://sivaramang.wordpress.com/2007/06/12/hippopotomonstrosesquippedaliophobia/</guid>
<description><![CDATA[&#8220;Hippopotomonstrosesquippedaliophobia&#8221; என்றால் பெரிய வார]]></description>
<content:encoded><![CDATA[<p align="left">"Hippopotomonstrosesquippedaliophobia" என்றால் பெரிய வார்த்தைகளைக்கண்டு ஏற்படும் பயம் என்பதைக்குறிக்கும் ஆங்கில சொல்லாம்.  (....is the fear of long words).</p>
<p align="left">&#160;</p>
<p align="left"> நிஜமாவே பயமாதான் இருக்கு.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சன் நிறுவனத்தின் 'சுட்டி டிவி' பற்றிய உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...]]></title>
<link>http://tamilpoll.wordpress.com/2007/05/01/%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/</link>
<pubDate>Tue, 01 May 2007 06:30:44 +0000</pubDate>
<dc:creator>tamilpoll</dc:creator>
<guid>http://tamilpoll.wordpress.com/2007/05/01/%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/</guid>
<description><![CDATA[சன் நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய தொலை]]></description>
<content:encoded><![CDATA[<p>சன் நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய தொலைக்காட்சியை விரிவுப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சுட்டி டிவி என ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே Cartoon Network என்ற ஆங்கில அலைவரிசை குழந்தைகளுக்கென தொடங்கப்பட்டது. சன் நிறுவனமும் ஏற்கனவே தன்னுடைய "சன் டிவி"யில் மைடியர் பூதம் என்ற தொடரின் மூலம் பல குழந்தைகளை தன்வசம் படுத்தியிருந்தது. இப்பொழுது குழந்தைகளுக்கென ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இது சிறுவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. எனவே சன் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி பற்றி உங்களுடைய <a href="http://tamilpoll.com/2007/05/01/%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/">கருத்தை பதிவுசெய்யவும்......</a></p>
<p><a href="http://tamilpoll.com/2007/05/01/%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/" title="சுட்டி டிவி பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே பதியவும்">பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்...</a></p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
