<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>அன்னை &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/அன்னை/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "அன்னை"</description>
	<pubDate>Sat, 11 Oct 2008 11:29:58 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[கவிதை : புரியவில்லையே அம்மா ]]></title>
<link>http://xavi.wordpress.com/?p=1084</link>
<pubDate>Fri, 22 Aug 2008 05:55:41 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2008/08/22/to_mother/</guid>
<description><![CDATA[
அம்மா..
வார்த்தைகள் பழகும் வரைக்கும்
]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone size-medium wp-image-1085" src="http://xavi.wordpress.com/files/2008/08/aa.jpg?w=235" alt="" width="235" height="300" /></p>
<p>அம்மா..<br />
வார்த்தைகள் பழகும் வரைக்கும்<br />
என் அழுகையை மொழிபெயர்த்து<br />
அமுதூட்டுவாய்.<br />
தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய்.</p>
<p>பாவாடைப் பருவத்தில்<br />
என் இடுப்பில்<br />
புடவை கட்டிவிட்டு<br />
உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய்<br />
சொல்லிச் சிரித்துக் கொண்டாய்.<br />
ஏனோ எனக்குப் புரியவில்லை.</p>
<p>அறிவுக்குள் காரணங்கள் விளங்காத<br />
ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில்<br />
பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது,<br />
பூப்பெய்தினேன் என்றுசொல்லிப்<br />
பூரித்தாய்.<br />
எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது.</p>
<p>அந்தி வந்து வாசல் தட்டும் முன்<br />
நான் வந்து சேரவேண்டுமென்று<br />
கோபக்குரலில் விளக்கினாய்<br />
முழுதாய் படராத இருட்டுபோல<br />
சில இடங்கள் புரியவேயில்லை.</p>
<p>பள்ளிக்கூடத்தின் பலகைகளில்<br />
தரவரிசையில் நான்<br />
தலைகாட்டியபோதெல்லாம்<br />
அடக்கமுடியா ஆனந்தத்தில் அணைத்துக் கொள்வாய்,<br />
அப்போதெல்லாம்<br />
தினம் தினம் தேர்வுகள் வராதா என்று யோசித்திருக்கிறேன்.</p>
<p>வலிகளின்<br />
இழைகளுக்குள் இறுக்கப்பட்டு<br />
நாகரீகம் கருதி கண்ணீர் இறுக்கி<br />
பகல் பொழுதுகள் முடிந்தபிறகெல்லாம்<br />
மண்ணில் விழுந்தழும் மழைமேகமாய்<br />
உன் மடியில் கவிழ்ந்தழுதிருக்கிறேன்.</p>
<p>என் கண்கள் துடைக்கும்<br />
உன் முந்தானை நுனி,<br />
என் வலிகள் பிய்த்தெறியும் உன் விரல் நுனி,<br />
இவைகளின் தைரியத்தில்,<br />
நான்<br />
அழுவதற்குக் கூட அச்சப்பட்டதில்லை.</p>
<p>ஆனால்,<br />
இன்று பயமாய் இருக்கிறது எனக்கு,</p>
<p>எப்போதும் சிரிக்கும்<br />
உன் கண்கள் முழுதும் கண்ணீர்,<br />
இறுக்கக் கட்டியிருக்கிறாய்<br />
உன் ஆறுதல்க் கரங்களை.<br />
உன் கால்களைக் கட்டிக்கொண்டு அழத்தோன்றுகிறது.</p>
<p>பாரமாய் என் கழுத்தில்<br />
புத்தம் புதுத் தாலி.</p>
<p>இப்போதும் கூட ஏதோ ஒன்று புரியவில்லை.<br />
ஆனால், என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை.</p>
<p>0</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[திருட வந்திருக்கிறேன்...]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=280</link>
<pubDate>Thu, 07 Aug 2008 18:52:34 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.ta.wordpress.com/2008/08/07/illuminat/</guid>
<description><![CDATA[
கவிஞர்களின் மது நான்,
காதலின் இரகசிய]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone" src="http://farm3.static.flickr.com/2141/2192074345_9aff79c8e4.jpg?v=0" alt="" width="437" height="438" /></p>
<p>கவிஞர்களின் மது நான்,<br />
காதலின் இரகசியம் நான்,<br />
அழகின் துயரம் நான்,<br />
எல்லையில்லாத<br />
பிரபஞ்சத்தின் மர்மம் நான்,<br />
என்னை காதலிப்பவர்கள்<br />
பாக்கியவான்கள்<br />
உண்மையின்  ஆன்மாவை<br />
நேசிப்பவர்கள்,<br />
மாமுனிவர்களும்<br />
பக்கீர்களும்<br />
புனிதர்களும்<br />
என் வழியில் நடந்தவர்களே..<br />
என் கடுஞ்சினத்திலும்,<br />
வெறுப்பிலும்<br />
மகா யுத்தங்கள் நடந்தன..<br />
கருப்பையில் இரத்தமாகவும்<br />
அதரங்களில் அமுதாகவும்<br />
உயிரூட்டும் அன்னை நான்தான்,<br />
உன்னை உனக்கு<br />
அறிமுகப்படுத்தும்<br />
சிந்தனை  நான்...<br />
காது கேளாதவனின்<br />
இசை நான்...<br />
என்னை தேடி நீங்கள்<br />
மலைகளில் அலைந்த போது<br />
நான்<br />
சேரிகளின் முற்றங்களில்<br />
மகிழ்ந்திருந்தேன்..<br />
மங்கள வாத்தியங்களும்,<br />
மந்திரங்களும்<br />
என் செவிகளை<br />
இரணமாக்கிவிட்டன..<br />
மனமொத்தவர்களின் சிரிப்பும்,<br />
மழழையின் பேச்சும்தான்<br />
என்னை மயக்குகிறது...<br />
உங்கள் உண்மைகளை<br />
நான் வெறுக்கிறேன்...<br />
நீங்கள் வெறுக்கும் பொய்<br />
நான்தான்...<br />
உங்களால் நேசிக்க முடியாத<br />
உண்மைகளும் நான்தான்...<br />
என்னை பின்பற்றினால்<br />
பெருந்துயரடைவீர்கள்..<br />
சிலுவை சுமக்கவும்...<br />
கல்லடி படவும்..<br />
சுடப்படவும்<br />
நீ விருப்பமாயிருந்தால்..<br />
என்னை பின்பற்றாதே...<br />
நீ<br />
உன்னை நேசிக்க முடிந்தால்<br />
என்னை தொடராதே...<br />
நீ<br />
உன்னை வெறுத்தால்<br />
உலகத்தை நேசிப்பதாக<br />
பாவனை செய்..<br />
நீ<br />
உலகத்தை வெறுத்தால்<br />
உன்னை நேசிப்பதாக<br />
ஏமாற்று...<br />
என்னை<br />
ஏன் பின்பற்றுகிறாய்?<br />
உனது நடிப்பிற்கு<br />
என்னிடம் வசனங்கள் இல்லை...<br />
உன்னை நான்<br />
வெறுமையாக்கிவிடுவேன்..<br />
உன் மதிப்பில்லாத<br />
ஆபரணங்களை<br />
நான் திருட வந்திருக்கிறேன்...<br />
எனது அன்பு<br />
விஷம்<br />
உன்னால் பருக முடியும்<br />
ஆனால்<br />
நீ<br />
மரணத்தை வென்று விடுவாய்...<br />
விலகியிரு,<br />
மனிதர்களின் நாக்குதான்<br />
உன்<br />
காதுகளுக்கு தேன்,<br />
நான்<br />
ஏவாளுக்கு ஆப்பிள் கொடுத்த<br />
சர்ப்பம்...</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[இரவு குழந்தை,நீ தாலாட்டு!!! ]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=262</link>
<pubDate>Wed, 30 Jul 2008 18:06:08 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.ta.wordpress.com/2008/07/30/u_r_my_lullaby/</guid>
<description><![CDATA[
ஓயாமல் வீறிடும்
குழந்தை போல
இரவு,
தூக]]></description>
<content:encoded><![CDATA[<p><img class="alignnone" src="http://pro.corbis.com/images/42-16394133.jpg?size=572&#38;uid={b023f6c8-0fa6-4594-a354-2a483864c6bc}" alt="" width="375" height="252" /></p>
<p>ஓயாமல் வீறிடும்<br />
குழந்தை போல<br />
இரவு,<br />
தூக்கமின்றி<br />
என் ஜன்னலின் வழியே<br />
இருளாய் கசிந்தது...!<br />
ஓசையின்றி<br />
அதன் காதுகளில்<br />
உன் பெயரை சொன்னேன்..!<br />
விடியும் வரை<br />
எழுந்திருக்கவில்லை இரவு..!<br />
இரவு குழந்தை,<br />
நீ தாலாட்டு!!!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ அமைதியாக ஒரு யாசகன்...]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=238</link>
<pubDate>Sat, 14 Jun 2008 15:02:43 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.ta.wordpress.com/2008/06/14/dont-demand/</guid>
<description><![CDATA[
நான்
ஒரு யாசகன்,
அன்பை மட்டுமே
யாசகமா]]></description>
<content:encoded><![CDATA[<p><img style="vertical-align:text-top;" src="http://farm3.static.flickr.com/2296/2069233159_2ec562c055.jpg?v=0" alt="" width="348" height="254" /></p>
<p>நான்<br />
ஒரு யாசகன்,<br />
அன்பை மட்டுமே<br />
யாசகமாக<br />
பெறுகிறேன்!</p>
<p>இது<br />
என் குலத்தொழில்<br />
இல்லை;<br />
நான்<br />
கர்ண பரம்பரை;</p>
<p>என் அன்னைதான்<br />
இப்படி ஆக்கிவிட்டாள்;<br />
அளவில்லாமல்<br />
அன்பைக் கொடுத்தாள்!</p>
<p>அவளிடம்<br />
கேட்காமல் கிடைத்தது,<br />
இன்று<br />
கேட்டும் கிடைக்கவில்லை.</p>
<p>யாசகனுக்கு<br />
முகம் கிடையாது;<br />
முகமூடிதான்<br />
அவனுக்கும் அடையாளம்;</p>
<p>எனக்கு<br />
இரண்டுமே கிடையாது;</p>
<p>அடையாளமோ,<br />
அரிதாரமோ<br />
அவசியமற்றது;</p>
<p>எவர் கனவுகளிலும்<br />
நான்<br />
வருவதில்லை;<br />
எனக்கு<br />
கனவுகள் உண்டு;<br />
கவிதைகள் உண்டு!</p>
<p>என் தோள்களில்<br />
சிறகுகள் முளைக்கும்<br />
வேளையில்<br />
தாங்க முடியாத வலி;</p>
<p>பல காயங்களுக்கு<br />
நான்<br />
மருந்தாகியிருக்கிறேன்;<br />
என் வலிகளுக்கு<br />
நான் மாத்திரை<br />
கேட்பதில்லை!</p>
<p>எனக்காக,<br />
எனக்கு<br />
அழத்தெரியாது;<br />
என்<br />
பொம்மைகளுக்காக<br />
அழுதிருக்கிறேன்.</p>
<p>முளைவிடும்<br />
விதையைப்போல,<br />
வார்த்தைகளுக்குள்<br />
அழுந்திக்கிடக்கிறது<br />
என் தவம்;</p>
<p>எனக்கும்<br />
வானம்தான் கூரை;<br />
நதிதான் தண்ணீர்<br />
தருகிறது;</p>
<p>என் பச்சையங்கள்<br />
பசியாற்றுகிறது;<br />
பறவைகள் இசையும்;<br />
காற்று<br />
சுவாசமும் தருகிறது.</p>
<p>இந்த உலகம்<br />
இரண்டாவது தாய்;<br />
என்னை<br />
பெரும்  யாசகனாக்கியது.</p>
<p>என்னிடம்<br />
புன்னகைப்பவர்களுக்கு<br />
நான்<br />
பூச்செண்டு கொடுப்பேன்;</p>
<p>யாசகனின்<br />
பரிசு வாடிவிடும்;<br />
உங்கள் புன்னகையோ<br />
என்றுமே எனக்குள்<br />
பூத்துக்கொண்டிருக்கும்.</p>
<p>யாசகம் கேட்பது<br />
தவறுதான்;<br />
அமைதியாக இருந்திருந்தால்<br />
நீயே<br />
புன்னகைத்திருக்க கூடும்...</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[நேருக்கு நேர்!!!]]></title>
<link>http://sokkakiriya.wordpress.com/?p=231</link>
<pubDate>Wed, 11 Jun 2008 17:56:52 +0000</pubDate>
<dc:creator>kannan824u</dc:creator>
<guid>http://sokkakiriya.ta.wordpress.com/2008/06/11/wind-love/</guid>
<description><![CDATA[
காற்றை
சந்திக்க புறப்பட்டேன்,
காதல் ]]></description>
<content:encoded><![CDATA[<p><img style="vertical-align:text-top;" src="http://farm1.static.flickr.com/82/206977898_4d753b0b30.jpg?v=1205789444" alt="" width="316" height="423" /></p>
<p>காற்றை<br />
சந்திக்க புறப்பட்டேன்,</p>
<p>காதல் போலத்தான்<br />
காற்றும்,<br />
உன்னைச் சுற்றியிருக்கும்<br />
உனக்குள்ளும் இருக்கும்!</p>
<p>தேடியலைய<br />
தேவையில்லை,<br />
உணர்வதுதான்<br />
உன் வேலை!</p>
<p>சாலையில் வந்தது<br />
எதிர் காற்று,<br />
பின் கீழ்க்காற்று,<br />
வடக்கிலிருந்து வீசிய<br />
வாடைக்காற்று,</p>
<p>இளமையில்<br />
மிதி வண்டியை,<br />
நடைவண்டியாகிய<br />
மேல்காற்று,</p>
<p>மார்கழியில்<br />
போர்வைக்குள் புகுந்த<br />
பனிக்காற்று,</p>
<p>புதுமணப் பூக்களை<br />
வாட வைக்கும்<br />
ஆடிக்காற்று,</p>
<p>சித்திரையில்<br />
கத்திரிக்கு பிறந்த<br />
அனல் காற்று,</p>
<p>ஜுனில்<br />
பள்ளிக்கு வந்த<br />
பூவிற்கு,<br />
செப்டம்பரில்<br />
கடிதம் கொடுக்கும்<br />
பருவக்காற்று,</p>
<p>கோபியரை<br />
கொள்ளை கொண்டது<br />
வேய்ங்குழலில் பூத்த<br />
கண்ணனின்<br />
காதல் காற்று,</p>
<p>அதிசயம்தான்,<br />
பங்குச் சந்தை<br />
தெரியாத<br />
வியாபாரக் காற்று,</p>
<p>பக்கம் நின்றாலே<br />
பதங்கமாவாய்,<br />
அவளின் மூச்சுக் காற்று,</p>
<p>ஐந்து நாள்<br />
அவசர வாழ்க்கையை,<br />
அரைமணி  நேர<br />
நிதானத்தில்<br />
கரைக்கும்<br />
கடற்கரை காற்று,</p>
<p>நிலாமுற்றத்தில்<br />
அன்னை மடியே<br />
சுகம்,<br />
வரும் தென்றல்<br />
ஒரு உயிரின்<br />
இரு பிரதிகளையும்<br />
வருடிவிட்டுப்போகும்,<br />
அது தெய்வீக காற்று,</p>
<p>காற்றின்<br />
பரிமாணங்களை<br />
புரியமுடியாது,<br />
தென்றலாய் கொஞ்சும்,<br />
சூறாவளியாய் சுழற்றும்,<br />
புயலாய் சீறும்,</p>
<p>காதலும் அதுபோலவே,</p>
<p>நீ<br />
மகிழ்வாய்,<br />
துயில்வாய்,<br />
துணுக்குருவாய்,<br />
துயரடைவாய்,</p>
<p>காதலும்,காற்றும்<br />
ஒருபோதும்<br />
ஓய்வதில்லை,<br />
ஓய்ந்தால்<br />
அப்போது<br />
உலகமில்லை!</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[தாயுள்ளம் - Mr. Mom]]></title>
<link>http://snapjudge.wordpress.com/?p=4131</link>
<pubDate>Wed, 09 Apr 2008 16:17:07 +0000</pubDate>
<dc:creator>bsubra</dc:creator>
<guid>http://snapjudge.com/2008/04/09/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-mr-mom/</guid>
<description><![CDATA[&#8220;I don&#8217;t think mothers are only female. I think mothering is a quality, a character trai]]></description>
<content:encoded><![CDATA[<p>"I don't think mothers are only female. I think mothering is a quality, a character trait. Mothering is about responsibility. There are plenty of men who are great, great mothers."<strong> - Sally Field</strong><em>, making very little sense in Ladies' Home Journal.</em></p>
<p><em>நன்றி</em>: <a href="http://www.boston.com/ae/celebrity/articles/2008/04/08/pavarotti_faked_finale/">Pavarotti faked finale - The Boston Globe</a></p>
<p><em>தொடர்புள்ள பதிவு</em>: <a href="http://thoughtsintamil.blogspot.com/2008/04/blog-post_04.html">எண்ணங்கள்: தாயுள்ளம்</a></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அன்னை.]]></title>
<link>http://sivanes.wordpress.com/2007/03/31/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/</link>
<pubDate>Sat, 31 Mar 2007 17:01:08 +0000</pubDate>
<dc:creator>sivanes</dc:creator>
<guid>http://sivanes.ta.wordpress.com/2007/03/31/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/</guid>
<description><![CDATA[பத்துமாதம்   கருவறையில்..
பக்குவமாய் ]]></description>
<content:encoded><![CDATA[<p>பத்துமாதம்   கருவறையில்..<br />
பக்குவமாய்   பாதுகாத்து.<br />
பத்தியங்கள்   பல  இருந்து.<br />
ஈன்ற   கணப்பொழுதில்<br />
ஏற்பட்ட   வலி  மறந்து.<br />
தான்   பசி  இருந்து<br />
தன்னுயிர்  உள்ளவரை..<br />
உள்ளன்போடு  அரவணைக்கும்.<br />
தாய்க்கு   நிகர்..<br />
தரணியிலே    யாருமுண்டோ…?</p>
<p>…சிவனேஸ்…</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[அன்னை மனம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2007/01/30/annai1/</link>
<pubDate>Tue, 30 Jan 2007 10:22:45 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2007/01/30/annai1/</guid>
<description><![CDATA[ 
அன்னை சொல்கிறார்.
பட்டினியின் எல்லை]]></description>
<content:encoded><![CDATA[<p> <img width="99" src="http://farm1.static.flickr.com/138/374335952_7bdd4ea7ef.jpg" height="148" style="width:99px;height:148px;" /></p>
<p>அன்னை சொல்கிறார்.</p>
<p>பட்டினியின் எல்லையை<br />
நம்மில் பலர்<br />
கண்டிருக்கமாட்டோம்.</p>
<p>பசியின் கண்ணீரோடு<br />
நம் பலரின் கண்களுக்கு<br />
பரிச்சயம் இருக்காது.</p>
<p>உங்கள் பணி வீதியில் கிடக்கிறது.<br />
நீங்களோ<br />
வானம் பார்த்து நடக்கிறீர்கள்.</p>
<p>நான் பார்த்தேன்,</p>
<p>ஒருமுறை<br />
அழுக்கு வீதியின்<br />
ஓரத்தில்<br />
ஓர் ஏழைச்சிறுமியைக் கண்டேன்.</p>
<p>அவள் கண்களில்<br />
பட்டினியின் பரிதாபப் பார்வை<br />
ஆயிரம் கண்களோடு<br />
விழித்துக் கிடந்தது.</p>
<p>வாழ்வின்<br />
முதல் பக்கத்தில் நிற்கும் சிறுமி.<br />
வலியில்<br />
கடைசிக் கட்டத்தையும்<br />
தோளில் சுமக்கும் துயரம்<br />
இதயத்தைத் தாக்க<br />
ரொட்டி ஒன்றை கொடுத்தேன்.</p>
<p>அந்தச் சிறுமி,<br />
அதை<br />
வேக வேகமாய் வாங்கி<br />
மெல்ல மெல்ல<br />
தின்னத் துவங்கினாள்.</p>
<p>அவள் கண்கள் முழுதும்<br />
ஓர்<br />
பேரரசைப் பிடித்த<br />
சக்கரவர்த்தியின் சந்தோசம்.</p>
<p>அவளை அரவணைத்துக் கொண்டே<br />
நான் கேட்டேன்,<br />
ரொட்டியை<br />
விரைவாய் தின்றால்<br />
விரைவிலேயே பசி போய் விடுமே ?</p>
<p>சிறுமி<br />
கலவரத்துடன் பதிலளித்தாள்.</p>
<p>ரொட்டி தீர்ந்து விட்டால்<br />
மீண்டும் பசிக்குமோ<br />
என<br />
பயமாய் இருக்கிறது.</p>
<p><font size="2" color="#0000ff" face="Helv">- 'அன்னை' நூலிலிருந்து</font></p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[சேவியர் இலக்கியத்துக்கு ஒரு அளவு கோல் - கவிஞர். காசி ஆனந்தன்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/10/03/annai/</link>
<pubDate>Tue, 03 Oct 2006 12:26:29 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/10/03/annai/</guid>
<description><![CDATA[கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எனது &#8216;அ]]></description>
<content:encoded><![CDATA[<p><span style="font-size:12pt;color:blue;font-family:'Times New Roman';">கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எனது 'அன்னை' நூலுக்காக அளித்த முன்னுரை</span> </p>
<p><img width="188" src="http://static.flickr.com/92/259698792_7d48fddaf3.jpg" height="240" /><br />
கண்காட்சியில் இருந்த தனது அன்னை தெரசா ஓவியத்தின் கீழ் எழுதி வைக்க இரண்டு மூன்று சொற்கள் தேவை என்றார் ஓவியர் புகழேந்தி. 'தாய்மை என்பது கருப்பையில் அல்ல' என்று எழுதிக் கொடுத்தேன்.</p>
<p>உலகத் தாயாக வாழ்ந்த அன்னை தெரேசா இப்போது இலக்கியர் சேவியரின் சொல்லோவியமாய் உருப்பெற்றிருக்கிறார்.</p>
<p>முத்துக்களாய் உதிரும் சேவியரின் எழுத்துக்களில் பைபிள் முகம் காட்டுகிறது.</p>
<p>சொற்களின் சொரிவு<br />
நயம் கொஞ்சும் பைபிள் நடை</p>
<p>இது<br />
அன்னை தெரசா வரலாறல்ல - அன்னை தெரேசா இலக்கியம்.</p>
<p>ராகங்கள் ஒன்று கூடி<br />
ஓர்<br />
புல்லாங்குழலைப் புனைந்தன</p>
<p>தெரேசா அன்னை எப்படி உருவானாள் என்பதை சேவியர் விளக்கும் தேன் வரிகள் இவை.</p>
<p>இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கிருத்துவ பெண் துறவிகள் ஆற்றிய மாந்தநேய அருட்பணிகளால் உருவாக்கப்பட்ட இனிய புல்லாங்குழல் தெரேசா அன்னை என்கிறார் சேவியர்.</p>
<p>இளம் அகவையிலேயே மாந்த நேயம் அன்னையின் இன்னுயிர் ஆயிற்று.</p>
<p>சேவியர் சொல்கிறார்</p>
<p>தெரேசாவின்<br />
நித்திரைகளிலெல்லாம்<br />
இயேசு<br />
ஏழைச்சிறுவர்களாய்<br />
தெரிந்தார்.</p>
<p>உலக மாந்தர் மீது அன்னை தெரேசா வைத்த பாசம் - குடும்பச் சுவர் தாண்ட உயரிய மாந்த நேயமாய் விரிகிறது.</p>
<p>'உலகத்தைக்<br />
குடும்பமாய்ப் பார்த்தபின்<br />
அன்னைக்கு<br />
குடும்பம்<br />
உலகமாய் இருக்கவில்லை'</p>
<p>என்கிறார் சேவியர்.</p>
<p>அன்னையின் பேரன்பை ஆசைதீர அள்ளிப் பொழிகிறது சேவியர் தமிழ்.</p>
<p>அழகு அல்ல அன்பு தான் அன்னையின் உலகம் என்கிறார்</p>
<p>'அருவித் தண்ணீர்<br />
அழகாய் விழும்<br />
குவளைத் தண்ணீரே<br />
தாகம் தீர்க்கும்'</p>
<p>அன்பைப் பற்றிய சேவியரின் எழுத்துக்கள் நெஞ்சை அசைக்கின்றன.</p>
<p>உங்கள் அன்பு<br />
குறைவு படப் போவதில்லை.</p>
<p>எத்தனை நுரையீரல்கள்<br />
சுவாசித்தாலும்<br />
காற்று வற்றிப் போவதில்லை.</p>
<p>இலக்கியர் சேவியர் பேரன்பின் ஒளி கொட்டும் தெரேசா நிலவைத் தமிழ் நெஞ்சங்களில் இருத்துகிறார்.</p>
<p>பாதையோர ஏழையைப்<br />
பார்த்தால்<br />
ஆகாயம் பார்த்து<br />
அகன்று போகாதே...</p>
<p>குறைந்த பட்சம்<br />
ஓர்<br />
புன்னகையைக் கொடுத்துப் போ</p>
<p>அன்னை - சேவியர் இலக்கியத்துக்கு ஓர் அளவுகோல்</p>
<p>எழுத்து நடையே அவர் எழில்<br />
சொற்களின் புனைவு அல்ல - சொற்களின் பொழிவு</p>
<p>நெஞ்சில் இறங்கும் தமிழ்</p>
<p>இலக்கியர் சேவியரையும், அருவி பதிப்பகத்தாரையும் இனிது வாழ்த்துகிறேன்</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[பூக்கள் புன்னகைத்த பால்யம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/05/19/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%af/</link>
<pubDate>Fri, 19 May 2006 05:47:41 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/05/19/annai_5/</guid>
<description><![CDATA[பால்ய காலம்
ஆக்னஸுக்கும்
நட்புகளையு]]></description>
<content:encoded><![CDATA[<p>பால்ய காலம்<br />
ஆக்னஸுக்கும்<br />
நட்புகளையும், சிரிப்புகளையும்<br />
மட்டுமே<br />
சம்பாதித்துத் தந்தது.</p>
<p>பெரிய வீடு<br />
தோட்டத்துப் பூக்களைத்<br />
தொட்டுக் கொண்டு துணையிருக்கும்<br />
தென்றல்.</p>
<p>எப்போதும்<br />
நிம்மதியைத் தர<br />
சம்மதிக்கும் சுற்றம்<br />
என<br />
ஆக்னஸ் ஆனந்தத்தில் தான்<br />
மையம் கொண்டிருந்தாள்.</p>
<p>வயதுக்கு மீறாத<br />
மழலைத்தனம் முகத்தில் மிளிர,<br />
உள்ளுக்குள் மட்டும்<br />
வயதுக்கு மீறிய<br />
பக்தியும், பணிவும்.</p>
<p>குயில் ஒன்று<br />
புல்லாங்குழல் பயில்வதாய்<br />
பாடல் பயின்றாள்.<br />
ஆலய பாடல் குழுக்களில்<br />
பாடினாள்.</p>
<p>ஆண்டவனுக்காய் பாடுவதில்<br />
மனம் முழுதும்<br />
ஆன்மீகப் பூக்கள்<br />
ஆனந்தமாய் முளைத்தன.</p>
<p>திரு இருதய ஆலயம்<br />
அவளுடைய<br />
ஆரம்பக் கல்வியை<br />
ஆரம்பித்து வைத்தது.</p>
<p>கல்வியில்<br />
முதல் தரம் வாங்கினாள்<br />
கடமைகளின்<br />
கால்களும் உடைபடாமல்<br />
காத்துக் கொண்டாள் !.</p>
<p>ஊருக்குச் நல்ல பிள்ளையாய்<br />
வீட்டுக்குச் செல்லப்பிள்ளையாய்<br />
துளிர்க்கும் போதே<br />
வாசனை அளித்தாள்.</p>
<p>அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில்<br />
ஓர் ஏழை விதவை<br />
விலக்க இயலா வறுமையுடனும்<br />
இருட்டில் தவழும்<br />
ஏழு குழந்தைகளுடனும்<br />
குடிசை வீடொன்றில்<br />
குடியிருந்தாள்.</p>
<p>அவள் வீட்டைவிட்டு<br />
வெளிச்சம் வெளியேறி<br />
வெகு நாட்களாகியிருந்தது.<br />
வறுமை<br />
உள்புகுந்தும்<br />
வருடங்களாகியிருந்தது.</p>
<p>ஆக்னஸின் தாய்<br />
அந்த வீட்டை<br />
தன் இரண்டாம் குடும்பமாய்<br />
பாவித்தாள்,<br />
ஆக்னஸோ<br />
அவ் வீட்டிற்கு உதவுவதில்<br />
எட்டாம் குழந்தையானாள்</p>
<p>பூவோடு சேர்ந்த<br />
பூ,<br />
இருமடங்கு வாசம் வீசியது.</p>
<p>ஆக்னஸிற்கு<br />
ஒன்பது வயதான போது<br />
அவர்கள் குடும்பத்தை<br />
ஓர்<br />
முரட்டுப் புயல்<br />
முட்டிக் கவிழ்த்தது.</p>
<p>துயர அலை ஒன்று<br />
உயரமாய் வந்து<br />
கரையில் விளையாடிய அவர்களை<br />
கண்ணீருக்குள்<br />
மூழ்கடித்தது.</p>
<p>ஆக்னஸின் தந்தையை<br />
மரணம் வந்து சந்தித்து.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[புறம் புறக்கணிக்கப்படுகிறது]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/04/27/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%/</link>
<pubDate>Thu, 27 Apr 2006 13:07:28 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/04/27/annai_4/</guid>
<description><![CDATA[ஒரு முறை
வீட்டில் அமர்ந்து
தோழிகளோடு]]></description>
<content:encoded><![CDATA[<p>ஒரு முறை<br />
வீட்டில் அமர்ந்து<br />
தோழிகளோடு<br />
பேசிக் கொண்டிருந்தாள்<br />
ஆக்னஸ்</p>
<p>அதில் ஒரு தோழி<br />
அங்கில்லாத ஒருத்தியைப் பற்றி<br />
அவதூறை<br />
அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.</p>
<p>தாய் சென்று<br />
அறையில் எரிந்துகொண்டிருந்த<br />
விளக்கை அணைத்தாள்.</p>
<p>ஆக்னஸ் வியந்தாள்.<br />
எரியும் விளக்கை<br />
ஏனம்மா அணைக்கிறீர்கள் ?</p>
<p>மின்சாரத்தை<br />
மிச்சப்படுத்தவா ?<br />
௾ல்லை<br />
எங்களைக் கொச்சைப்படுத்தவா ?</p>
<p>புறணி பேசும் இடத்தில்<br />
வெளிச்சம் எதற்கு ?<br />
குருட்டுச் செயல்களுக்கு<br />
இருட்டே வெளிச்சம்<br />
தாய் பதிலுரைத்தாள்.</p>
<p>ஆக்னஸின் பஞ்சு நெஞ்சம்<br />
பற்றிக் கொண்டது.<br />
இன்னொரு செய்தியைக்<br />
கற்றுக் கொண்டது. </p>
<p>&#60; தொடரும்...&#62;</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஒரு துளி விஷம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/04/27/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Thu, 27 Apr 2006 13:06:44 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/04/27/annai_3/</guid>
<description><![CDATA[ஒரு முறை
ஆக்னஸின் நண்பர் கூட்டத்தில்]]></description>
<content:encoded><![CDATA[<p>ஒரு முறை<br />
ஆக்னஸின் நண்பர் கூட்டத்தில்<br />
ஒரு<br />
தீய சிந்தனைத் தோழி இருப்பதை<br />
தாய் கண்டாள்.</p>
<p>அதை<br />
மகளுக்குப் புரியவைக்க<br />
அன்னை ஓர்<br />
நடைமுறை விளக்கம் கொடுத்தாள்.</p>
<p>அன்னை<br />
ஆக்னஸை அழைத்தாள்.</p>
<p>ஆக்னஸ் வந்தாள்<br />
மேகம் கண்ட தோகை போல<br />
அவள் விழிகள் விரிந்தன.</p>
<p>அவளுக்கு முன்னால்<br />
ஒரு கூடை நிறைய<br />
ஆப்பிள் பழங்கள் பளபளத்தன.</p>
<p>அன்னையின் கையில்<br />
ஓர்<br />
அழுகிய பழம்.</p>
<p>அந்த அழுகிய பழத்தை<br />
நல்ல பழங்களுக்கு நடுவே<br />
கூடையில் வைத்தாள் தாய்.</p>
<p>ஆக்னஸ் குழம்பினாள்.<br />
பூமாலையில் யாரேனும்<br />
கருவாடு வைத்துக் <br />
கட்டுவார்களா ?<br />
கெட்டதைக் கீழே விட்டு விடலாமே<br />
என்றாள்.</p>
<p>பரவாயில்லை.<br />
இதை<br />
உன் அறையில் பாதுகாத்து வை<br />
நான்<br />
பார்க்கச் சொல்லும் வரை<br />
திறந்து பார்க்காதே.</p>
<p>ஆக்னஸ்<br />
அன்னை சொல் தட்டியதில்லை.<br />
தட்டவில்லை.</p>
<p>அலையாடல்களுக்கெல்லாம்<br />
தலையாட்டும் நாணலாய்<br />
இருந்தாள் அவள்.</p>
<p>சில நாட்களுக்குப் பின்<br />
ஆக்னஸ் அழைக்கப்பட்டாள்<br />
கூடையை எடுத்து வா.<br />
அன்னை சொன்னாள்.</p>
<p>ஆக்னஸ் எடுத்துவந்த<br />
கூடையில்<br />
ஆப்பிள்கள் எல்லாம்<br />
அழுகிப் போயிருந்தன !</p>
<p>சில நாட்களுக்கு முன்னால்<br />
அழகிய நிலை.<br />
இப்போது அழுகிய நிலை.</p>
<p>முத்தாய் இருந்தது<br />
சொத்தையாய் ஆனதால்<br />
ஆக்னஸ் வருந்தினாள்.<br />
வெளியே கொட்டு என்றாள்<br />
அன்னை<br />
கொட்டினாள் ஆக்னஸ்</p>
<p>தாய் கவலைப்படவில்லை.<br />
எதிர்பார்ப்பு நிறைவேறிய<br />
நிம்மதியில்<br />
பேச ஆரம்பித்தாள்.</p>
<p>பார்,<br />
ஒரு<br />
கெட்டுப் போன ஆப்பிள்<br />
ஒரு கூடை ஆப்பிளையும்<br />
கெட்டுப் போக வைத்து விட்டது !</p>
<p>ஒரு கூடை<br />
ஆப்பிள்கள் சேர்ந்து<br />
ஒரு கெட்டுப் போன ஆப்பிளை<br />
நல்ல ஆப்பிளாக்க முடியவில்லை.</p>
<p>இப்படித் தான்<br />
நட்பும்.</p>
<p>ஒரு துளி தானே என்று<br />
விஷத்தை யாரும்<br />
விரும்பிப் பருகுவதில்லை.</p>
<p>கொஞ்சம் தானே<br />
என்று யாரும்<br />
கெட்டுப் போன உணவை<br />
கேட்டு உண்பதில்லை.</p>
<p>நட்பும் அப்படியே,<br />
நல்ல மலர்கள் தான்<br />
நல்ல வாசம் வீசும்.</p>
<p>ஒரு மலரின் கெட்டவாசம்<br />
மிச்ச மலர்களின்<br />
சொர்க்க வாசனையையும்<br />
செயலிழக்கச் செய்து விடும்.</p>
<p>தீய நட்பு<br />
தூய உள்ளங்களையும்<br />
துருப்பிடிக்க வைக்கும்<br />
கீழ்ப்படிதலுள்ள மனங்களையும்<br />
கீழ்த்தரமானதைச் செய்ய வைக்கும்.</p>
<p>எனவே<br />
நட்பைத் தெரிந்தெடுப்பதில்<br />
நுட்பம் தேவை.</p>
<p>ஆக்னஸின் கண்கள் விரிந்தன.</p>
<p>ஏவாளின் கண்களைத் திறந்த<br />
ஏதேன் பழம் போல,<br />
ஆக்னஸின் கண்களை<br />
ஆப்பிள் பழம்<br />
திறந்தது.</p>
<p>உள்ளுக்குள்<br />
அன்னை சொன்ன பாடம்<br />
உறைத்தது.<br />
இதயக் கோப்பையில்<br />
தெளிவின் ஒளி நிறைந்தது.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[ஐந்தில் வளைகிறது]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/04/27/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/</link>
<pubDate>Thu, 27 Apr 2006 13:01:28 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/04/27/annai_2/</guid>
<description><![CDATA[ஆக்னஸின் பெற்றோர்
பிள்ளைகளின் மனதில]]></description>
<content:encoded><![CDATA[<p>ஆக்னஸின் பெற்றோர்<br />
பிள்ளைகளின் மனதில்<br />
அன்பின் அஸ்திவாரத்தை<br />
ஆழமாய்த் தோண்டினர்.</p>
<p>நற்செயல்கள்<br />
விளம்பரங்களுக்கானதல்ல,<br />
விளம்பரங்களுக்காய்<br />
வெளி வருவது நற்செயல் அல்ல.</p>
<p>நீ<br />
செய்யும் நற்செயல்<br />
கடலில் வீசப்பட்ட கல் போல<br />
கரைப் பார்வைக்கு<br />
மறைந்தே இருக்கட்டும்.<br />
கடலுக்கும் உனக்குமான<br />
ரகசிய ஒப்பந்தமாய்<br />
நற்செயல்கள் நிறைவேறட்டும்.</p>
<p>பிறரோடு பகிர்ந்து கொள்ளாத<br />
எதையும்<br />
நீ தனியாய்<br />
சொந்தமாக்கக் கூடாது.</p>
<p>இவையெல்லாம்<br />
அந்த<br />
அறிவுரை அலைகள்<br />
நிறுத்திச் சென்ற<br />
சில துளிகள்.</p>
<p>ஆக்னஸின் அன்னையும் தந்தையும்<br />
ஒற்றுமையின்<br />
ஓடையில் நீந்திய மீன்கள்.</p>
<p>என்றும்<br />
வழக்கிடும் வழக்கத்தைக்<br />
கொண்டிருந்ததில்லை.</p>
<p>அவர்களின் வாழ்க்கையே<br />
ஆக்னஸிற்கு<br />
முன்னால் செல்லும்<br />
விளக்குத் தூண் ஆனது.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[மனித வடிவில் மனிதம்]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/04/27/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
<pubDate>Thu, 27 Apr 2006 11:48:24 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/04/27/annai_1/</guid>
<description><![CDATA[ஆகஸ்ட் 26,1910
வரலாறு
தன் மேல் கொட்டப்பட்]]></description>
<content:encoded><![CDATA[<p>ஆகஸ்ட் 26,1910</p>
<p>வரலாறு<br />
தன் மேல் கொட்டப்பட்ட<br />
தூசுகளைத் தட்டி விட்டு<br />
இந்த நாளை<br />
ஓர்<br />
மயிலிறகால் எழுதியது.</p>
<p>இது தான்<br />
அன்னை தெரசா என்று<br />
அகில உலகமும்<br />
அன்போடு அழைக்கும்<br />
ஆக்னஸ்<br />
அவனியில் அவதரித்த நாள்.</p>
<p>தீக்குழியில் தாமரைகள்<br />
பூப்பதில்லை,<br />
அவை<br />
தடாகத்தின் ஆழத்தில் தான்<br />
பாதங்களைப் பதிக்கும்.</p>
<p>விதைகள் பதர்களானால்<br />
விளைச்சல் இருப்பதில்லை.<br />
ஆக்னஸ்<br />
நல்ல<br />
நிலத்தில் விதைக்கப்பட்டவள்.</p>
<p>அவள் தந்தை<br />
நிக்கோலா,<br />
தாய் டிரானஃபைல்,<br />
இருவரும்<br />
வாழ்வின் அடித்தளத்தை<br />
மண்ணில் கட்டாமல்<br />
மனித நேயத்தில் கட்டியிருந்தார்கள்.</p>
<p>கத்தோலிக்கத் திருச்சபை<br />
அவர்களின்<br />
பணி வாழ்வை நன்றாக<br />
பக்குவப் படுத்தியிருந்தது.</p>
<p>பிறந்த<br />
மறு நாளே ஆக்னசுக்கு<br />
திருமுழுக்கு தரப்பட்டது.<br />
கிறிஸ்தவ மதத்துக்குள் நுழையும்<br />
ஆன்மீக அனுமதி அது.</p>
<p>லாசர்<br />
அகதா,<br />
இருவரும் ஆக்னஸின்<br />
உடன்பிறந்தோர்.</p>
<p>ஆக்னஸின்<br />
தந்தையோ, தாயோ,<br />
ஏழைகள் தங்கள்<br />
வாசல் தீண்டி வரும் வரை<br />
காத்திருப்பதில்லை,<br />
அவர்களின்<br />
வீடு தேடிச் சென்று<br />
வழங்குவதையே<br />
வழக்கமாக்கிக் கொண்டார்கள்.</p>
<p>ஆக்னஸ்<br />
அன்னையிடம்<br />
தாய்ப்பாசத்தோடு<br />
தரணிப் பாசமும் கற்றாள்,</p>
<p>தந்தையிடமிருந்து<br />
பொருள்களை விட<br />
அதிகமாய்<br />
மதிப்பீடுகள் பெற்றாள்.</p>
<p>இறை நம்பிக்கையில்<br />
இணைந்து,<br />
நம்பிக்கை எல்லாம்<br />
இறையில் வைத்தாள்.</p>
<p>குடும்பம்,<br />
அவளுக்கு முதல் ஆலயம்.<br />
ஆலயம்<br />
அவளுக்கு முதல் குடும்பம்<br />
என்றானது.</p>
<p>தினசரி காலை<br />
ஆலய வழிபாடு,<br />
அவளுக்கு<br />
அத்தியாவசியத் தேவையானது.</p>
<p>குடும்பம்<br />
அதற்குக் கூட்டு நின்றது.</p>
<p>தத்தித் தத்தி<br />
நடக்கத் துவங்கியபோதே,<br />
பகிர்தலில் பரிமளித்தாள்,<br />
சுய நலம் எனும்<br />
புலி நகம்<br />
தன்னைத் தீண்ட<br />
அவள் சம்மதம் தரவில்லை.</p>
<p>குடும்பம்<br />
ஆக்னஸின் மனநிலங்களில்<br />
வைக்கோல் வளர்க்காமல்<br />
கதிரை மட்டுமே<br />
கொத்துக் கொத்தாய் வளர்த்தது.</p>
<p>ஆக்னஸ்,<br />
பால் பற்கள் விழும் முன்<br />
இறைவன் பால் விழுந்தாள்.</p>
<p>ஆக்னஸிற்கு<br />
ஐந்து வயது தாண்டிய பின்<br />
ஒரு பொழுதில்<br />
நற்கருணை வடிவில்<br />
இயேசுவை ஏற்றுக் கொண்டாள்.</p>
<p>அது<br />
அவள் மனதுக்குள்<br />
அணை கட்டி வைத்திருந்த<br />
ஆன்மீக ஆறுகளை எல்லாம்<br />
ஆக்ரோஷமாய்ப்  பாய வைத்தது.</p>
]]></content:encoded>
</item>
<item>
<title><![CDATA[முன்னுரை]]></title>
<link>http://xavi.wordpress.com/2006/04/27/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%b0%e0%af%88-3/</link>
<pubDate>Thu, 27 Apr 2006 11:09:52 +0000</pubDate>
<dc:creator>சேவியர்</dc:creator>
<guid>http://xavi.ta.wordpress.com/2006/04/27/annai_munnurai/</guid>
<description><![CDATA[வாழ்க்கை ஒவ்வொரு மனிதனையும் தனக்குள]]></description>
<content:encoded><![CDATA[<p>வாழ்க்கை ஒவ்வொரு மனிதனையும் தனக்குள்ளேயும் வெளியேயும் இரண்டு பாகமாகப் பிரிக்கிறது. ஒன்று வயிற்றுக்கான வாழ்வு, மற்றது மனசுக்கான வாழ்வு. மனம் சார்ந்த வாழ்வு மனிதனின் சிந்தனைகளை,கற்பனைகளை, எதிர்பார்ப்புகளை எல்லாம் வானளாவ விரிக்கிறது.<br />
சமூகத்தின் அந்தஸ்து, தனிப்பட்ட ரசனைகளின் நீள அகலம் இவையெல்லாம் மனம் சார்ந்த வாழ்வின் எதிர்பார்ப்புகளாக விரிகின்றன.</p>
<p>வயிறு சார்ந்த வாழ்வுக்கு இலட்சியங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள் எல்லாம் ஒன்றே. உணவு. உயிரை உள்ளுக்குள் பிடித்து வைப்பதற்காகவும், பாதத்தை அடுத்த அடிக்கு எடுத்து வைப்பதற்காகவும் உடல் தேடும் இலட்சியபீடம் உணவு.</p>
<p>இதுவே அடிப்படை. பட்டினியின் தொட்டிலில் கிடந்துகொண்டே யாரும் ரசனைச் சமையல்களைப் பரிமாறுதல் சாத்தியமில்லை. அடுத்தசுவாசத்துக்கான காற்றை எந்தக் கீழ்திசைத் தென்றல் கொண்டு வரும் என்று அறியாத நுரையீரல்கள், மூச்சு முட்டிக் கொண்டே எத்தனை நேரம் தான் சிற்பம் கொத்த முடியும் ?</p>
<p>சமுதாயத்தில் பாதிபேர் வளர்ச்சிகளுக்காக ஓடிக்கொண்டிருக்க, மீதி பேர் சாலையோரங்களிலும், சாக்கடை ஓரங்களிலும் கிழிந்து போனவற்றை மட்டுமே சொந்தமாய்க் கொண்டு வயிற்றுக்கான கவலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கவனித்துச் செல்ல ஆட்கள்இல்லை. அனாதைகள், முதியோர்கள், நோயாளிகள் எல்லாம் மனுக்குலத்தின் அழுக்குகளாக, சமுதாயத்தின் தேவையற்ற முதுகுச் சுமைகளாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில் தான் அன்னை தெரசா வருகிறார்.</p>
<p>ஒவ்வொரு ஜீவனிலும் இறைவனைக் காணுங்கள். ஒவ்வொரு நோயாளியின் புண் துடைப்பதில் ஆன்மீகத்தைப் பண்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அனாதையை அரவணைப்பதிலும் ஆண்டவனை அறிந்து கொள்ளுங்கள். கைவிடப்பட்ட முதியோரை ஆதரிப்பதில் ஆண்டவனை அணிந்து கொள்ளுங்கள். ஆன்மீகம் என்பது வாசித்துச் சொல்வதல்ல, வாழ்ந்து சொல்வது. என அன்னை சொன்ன ஆன்மீகக் சிந்தனைகளுக்குள் மனிதநேயமே இறை தரிசனம்என்னும் தத்துவம் வெளிப்படையாய் இருந்தது. வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் மேலும் பல சிந்தனைவாதிகளை நமக்குக்காட்டக் கூடும், சொல்லிவிட்டுக் கடந்து போகாமல் வாழ்ந்து காட்டியவர் பட்டியலில் இருக்கிறார் அன்னை.</p>
<p>யாரும் நெருங்க மறுக்கும் மனிதர்களை அரவணைக்கிறார். வீதியோர வறியவனையும், வானளாவ புகழில் இருக்கும் செல்வந்தனையும் ஒரே போல பாவிக்கிறார். அதற்கு அன்னை சொல்லும் விளக்கம், "அனைவரிலும் இருப்பவன் ஒருவன்.  இறைவன்".</p>
<p>ஏழைகளைப் புறக்கணிக்க மனிதன் கண்ட வழி 'ஆண்டவன் சாபம்' எனும் வார்த்தை. ஏழை ஏழையாய் இருப்பது அவனுடைய சாபம் என்றும், பணக்காரன் பணக்காரனாய் இருப்பது அவனுக்கு  ஆண்டவன் தந்த அதிகப்படியான வரம் என்றும் தப்பித்தல் உளறல்களால் மனிதனை மனிதன் மறுதலித்துக் கொண்டிருந்தபோது தான் அன்னை தொழுநோயாளியையும் தொடுங்கள் என்று அதிர்ச்சிப் பணியை ஆரம்பிக்கிறார்.</p>
<p>காசை விட அதிகம் தேவையானது கருணையே, பணத்தை விடப் புன்னகையை அதிகமாய் செலவிடுங்கள் என்கிறாள் அன்னை. கடந்துசெல்லும்போது ஒரு வறியவனையோ, முதியவனையோ பார்த்தால் ஒரு புன்னகை கொடுத்து விட்டுப் போவதில் என்ன குறைவு வந்து விடப் போகிறது என்று அன்னை கேட்பதில் அர்த்தம் இருக்கிறது அல்லவா ?.</p>
<p>அன்னை தெரசாவின் பணி மதம் சார்ந்த பணியாக இருக்கவில்லை. ஒரு இந்து நல்ல இந்துவாக வேண்டும், ஒரு மு?லிம் நல்ல முஸ்லிமாக வேண்டும், ஒரு கிறிஸ்தவன் நல்ல கிறிஸ்தவனாக வேண்டும் இதுவே நான்  விரும்புவது, என அன்னை சொல்வதில் ஓர் அழுத்தமான உண்மை இருக்கிறது. நல்ல மதவாதி ஆண்டவன் பணிகளைச் செய்வான், ஆண்டவன் பணி என்பது அன்பு என்ற ஒன்றே.</p>
<p>தேசம் கடந்து வாசம் வீசிய அந்த மனித மலர் நம்மைப் பார்த்து சொல்வதெல்லாம் ஒன்று தான். கவனியுங்கள். வானக் கனவுகளை விட பூமிப்பாதைகளை கவனியுங்கள். நம் விரல் தீண்டலுக்காய், நம் ஒரு தோழமைப் புன்னகைக்காய், நாம் நல்கப் போகும் ஒரு சிறு உதவிக்காய் காத்திருக்கிறார்கள் நம்மைச் சுற்றிலும் மனிதர்கள். வீட்டு சன்னலைத் திறந்து பாருங்கள். காற்று வருவதை மட்டும் கண்மூடிக் கவனிக்காமல் சாலையில் தெரியும் மனிதர்களையும் கவனியுங்கள். அந்த இடத்தில் நாம் இருந்தால் நம் எதிர்பார்ப்புகள் எதுவாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள் அதுவே பணி வாழ்வின் அடிப்படை.</p>
<p>கண்திறந்துக் கவனித்தால், அன்னை பணிசெய்த கல்கத்தா வீதிகள் எங்கும் கண்டுபிடிக்கப் படலாம். அவர்களுக்காய் இறப்பது நடைமுறை சாத்தியமில்லை தான், ஆனால் சிலவற்றைத் துறக்கலாமே.</p>
<p>புன்னகையை விட அழகிய கவிதையை யாரும் எழுதிவிட முடியாது. புன்னகை எனும் கவிதையை யார் வேண்டுமானாலும் எழுதிவிட முடியும். எழுதுங்களேன்...</p>
<p>மனித நேயம் நிறைக்காத வாழ்க்கை அதன் அர்த்தம் இழக்கிறது. புன்னகை இறைக்கும் இதயங்களில் தான் வாழ்வின் மொத்தமும் இருக்கிறது.</p>
<p>இந்த கவிதை நூல், அன்னையின் வாழ்க்கையை எளிமையாகச் சொல்கிறது. இதைப் படித்துவிட்டு யாரேனும் என்னைக் கவனித்தால், நான் தோற்றுப் போய்விட்டதாகக் கருதிக் கொள்கிறேன். இதைப் படித்த யாரேனும் ஏழை வீதியைக் கவனிப்பதையே வெற்றி என பெற்றுக் கொள்கிறேன்.</p>
<p>அன்புடன்</p>
<p>சேவியர்</p>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
