<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="wordpress.com" -->
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	>

<channel>
	<title>அத்-தபரி &amp;laquo; WordPress.com Tag Feed</title>
	<link>http://wordpress.com/tag/அத்-தபரி/</link>
	<description>Feed of posts on WordPress.com tagged "அத்-தபரி"</description>
	<pubDate>Mon, 13 Oct 2008 23:40:44 +0000</pubDate>

	<generator>http://wordpress.com/tags/</generator>
	<language>en</language>

<item>
<title><![CDATA[குர்'ஆன் வசனங்களின் ஆற்றலைப் பற்றி...]]></title>
<link>http://iniyaislam.wordpress.com/?p=12</link>
<pubDate>Fri, 14 Mar 2008 18:14:53 +0000</pubDate>
<dc:creator>Umm_Omar</dc:creator>
<guid>http://iniyaislam.ta.wordpress.com/2008/03/14/%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/</guid>
<description><![CDATA[ஒரு தடவை அல் வாலித் பின் அல் முகிராஹ் ]]></description>
<content:encoded><![CDATA[<h3>ஒரு தடவை அல் வாலித் பின் அல் முகிராஹ் (பல கடவுள்களை வணங்குபவராக இருந்தார்) முஹம்மது நபியவர்களை கண்டு செல்ல வந்தார். வந்தவரிடத்தில் முஹம்மது நபியவர்கள் குர்'ஆனை ஓதிக் காட்டினார். குர்'ஆன் வசனங்களைக் கேட்டவுடன், அல் வாலிதின் மனம் இளகியதும், மென்மையானதும் போல் ஆயிற்று. இதைப் பற்றி அபு ஜஹலிற்கு தெரிய வந்தது. உடனே அபு ஜஹல் அல் வாலிதிடம் வந்தான்.</h3>
<h3>அபு ஜஹல் : " மக்களெல்லாம் உனக்காக நிதி வசூல் செய்கிறார்களே, உனக்கு தெரியுமா?"</h3>
<h3>அல் வாலித்: "ஏன்? எதற்காக?"</h3>
<h3>அபு ஜஹல் : "உனக்கு தருவதற்காகவே...நீதான் உணவில்லையென்று முஹம்மதின் உணவை வாங்க முஹம்மதிடம் சென்றாயாமே..."</h3>
<h3>அல் வாலித்: "குறைஷிகளின் அத்தனை ஆண்பிள்ளைகளைக் காட்டிலும் நான்தான் அதிக பொருட் செல்வம் கொண்டவன் என எல்லோருக்கும் தெரியும்"</h3>
<h3>அபு ஜஹல் : "அப்படியென்றால், முஹம்மதைப் பற்றி ஏதாவது கூறு(தீமையானதாக‌), உன் சமூகம் திருப்தி பெறும் பொருட்டு"</h3>
<h3>அல் வாலித்: "நான் என்ன கூற வேண்டும் என்கிறாய்? கவிதைகளைப் பற்றியோ அல்லது காவியங்களைப் பற்றியோ, ஏன் ஜின்களைப் பற்றி கூட என்னை விட அறிந்தவர் வேறு எவருமிலர். ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஹம்மது ஓதும் எந்த வசனமும் இதனை ஒத்ததில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக, முஹம்மதின் பேச்சில் இன்சுவையும் உள்ளது, கவர்ச்சியும் உள்ளது.அந்த வசனங்களின் உயர்மட்டம் ‍பயன் தரக் கூடியதாகவும், அதன் கீழ்மட்டம் பொங்கிடும் அருளை தரக் கூடியதாகவும் உள்ளது. அது பெரும் அதிகாரம் கொண்டதாகவும், அதன் மேல் யாரும் அதிகாரம் கொண்டாட இயலாத‌தாகவும் உள்ளது, அதன் கீழ் வரும் எதனையும் நொறுக்கிடும் ஆற்றல் கொண்டதாகவும் உள்ளது"</h3>
<h3>['அல் முஸ்தத்ரக்' என்னும் நூலில்(2/506-507) இமாம் அல் ஹாகிமாலும், 'ஜாமி'யல்'பயான்' என்னும் நூலில்(29/156) இமாம் அத் தபரியாலும் பதியப்பட்டு உள்ளது = ஆதாரபூர்வமானது]</h3>
]]></content:encoded>
</item>

</channel>
</rss>
